
‘’பனையூரில் பதுங்கிக் கொண்ட விஜய்,’’ என்று நடிகர் சூரி கண்டனம் தெரிவித்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’பேரழிவோ, பெருந்துயரமோ, ஒரு அரசியல் கட்சி அன்றாடம் எப்போதும் மக்களுடன் நிற்க வேண்டும்! ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்சி அதன் அலுவலகத்துக்கு பூட்டு போட்டுவிட்டுது, அதன் தலைவரோ பனையூரில் பதுங்கிக் கொண்டார் – நடிகர் சூரி,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது அடிப்படை ஆதாரமின்றி, வெளியிடப்பட்ட செய்தி என்று தெரியவந்தது. இவ்வாறு எந்த ஊடகத்திலும் செய்தி வெளியாகாத நிலையில், தவெக தொண்டர்கள் மற்றும் விஜயை குறிவைத்து, சமூக வலைதளங்களில் இவ்வாறு அரசியல் உள்நோக்கத்துடன் தகவல் பகிரப்படுகிறது.
உடனடியாக, நடிகர் சூரி மேற்கண்ட செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். X வலைதளத்தில் ஒருவர் இவ்வாறு வதந்தி பரப்பவே, அவருக்கு பதில் கூறி, நடிகர் சூரி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபர் குறிப்பிட்ட X வலைதள பதிவை நீக்கிவிட்டார். அதேசமயம், உண்மை தெரியாமல், பலரும் இந்த வதந்தியை ஷேர் செய்து வருகின்றனர்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல், அரசியல் உள்நோக்கத்துடன் பகிரப்படும் ஒரு வதந்தி, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram
Title:பனையூரில் பதுங்கிய விஜய் என்று நடிகர் சூரி கண்டனம் தெரிவித்தாரா?
Fact Check By: Pankaj IyerResult: False


