
‘’ஜெயலலிதா கையில் குற்றவாளி என எழுதப்பட்ட போஸ்டர்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப்பில் அனுப்பி உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும தகவல் தேடியபோது பலரும் இதனை உண்மை என நம்பி ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்வதைக் கண்டோம்.
Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
கடந்த 2013ம் ஆண்டு காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை இந்திய அரசிதழில் வெளியிட உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இதையேற்று, நடுவர் மன்ற தீர்ப்பை, பிப்ரவரி, 19, 2013ல் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இதனை அஇஅதிமுக., மற்றும் தனது தனிப்பட்ட சாதனையாக, அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா பெருமிதம் பொங்க குறிப்பிட்டிருந்தார்.
BBC Tamil Link I TheHinduBusinessLine Link
அரசிதழில் வெளியான காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை ஜெயலலிதா கையில் பிடித்தபடி இருக்கும் புகைப்படமும் அதையொட்டி, ஊடகங்களில் வெளியிடப்பட்டது. இதுபற்றி தமிழ்நாடு அரசும், கையேடு வெளியிட்டிருக்கிறது.

இந்த புகைப்படத்தையே தற்போது எடிட் செய்து, மேற்கண்ட வகையில் வதந்தி பரப்பி வருகின்றனர் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:ஜெயலலிதா கையில் குற்றவாளி என எழுதப்பட்ட போஸ்டர்- உண்மை என்ன?
Fact Check By: Pankaj IyerResult: Altered
