திருப்பூரில் வட இந்தியர்கள் கொள்ளை என்று பரவும் வீடியோ உண்மையா?

இந்தியா | India சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’திருப்பூரில் வட இந்தியர்கள் கொள்ளை – சிசிடிவி காட்சி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Twitter Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வீடியோ எங்கே எடுக்கப்பட்டது என்பது தொடர்பாக நாம் நீண்ட நேரம் தகவல் தேடியும் இதுபற்றி உரிய விவிரம் கிடைக்கவில்லை. எனவே, நாம் நேரடியாக தமிழ்நாடு காவல்துறையினரிடம் விளக்கம் பெற தீர்மானித்தோம்.

தமிழ்நாடு டிஜிபி அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது, இதுபற்றி ஏற்கனவே விளக்கம் அளித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருப்பதாக, தெரிவித்தனர். அவர்களின் ட்வீட் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Archived Link 

எனவே, வேறு எங்கேயோ நிகழ்ந்த சம்பவத்தை உண்மை போல எடுத்து, தமிழகத்துடன் தொடர்புபடுத்தி வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:திருப்பூரில் வட இந்தியர்கள் கொள்ளை என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: False