
‘’2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை முதல்வர் வேட்பாளராக நின்றால், அவருக்காக அதிமுக உழைக்கும்,’’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக, ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+91 9049044263) அனுப்பி உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், தகவல் தேடியபோது பலரும் உண்மை என நம்பி, ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்டவற்றில் பகிர்ந்து வருகின்றனர்.

Twitter Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட நியூஸ் கார்டை நியூஸ் 7 தமிழ் ஊடகம் வெளியிட்டதா என அவர்களது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் தகவல் தேடினோம். ஆனால், எதுவும் காணக் கிடைக்கவில்லை.
இதையடுத்து, நேரடியாக உறுதி செய்யும் பொருட்டு, நியூஸ் 7 தமிழ் ஊடகத்தின் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சுகிதாவை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். அவர், ‘’இது எங்களது பெயரில் பகிரப்படும் போலியான செய்தி. இப்படி நாங்கள் எதுவும் வெளியிடவில்லை,’’ என்றார்.
அடுத்தப்படியாக, இப்படி ஏதேனும் செய்தி ஊடகங்களில் வெளியாகியுள்ளதா என விவரம் தேடினோம். ஆனால், அப்படியான செய்தி எதுவும் காணக் கிடைக்கவில்லை. எனவே, எடப்பாடி பழனிசாமியை கேலி செய்யும் நோக்கில் பகிரப்படும் போலிச் செய்தி இது என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:2026 தேர்தலில் அண்ணாமலை முதல்வராக வர அதிமுக உழைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
