
சி.ஏ.ஏ சட்டத்தை திசை திருப்ப, மாஸ்டர் படம் வெளிவருவதைத் தவிர்க்கவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாக, ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

நியூஸ் 7 தமிழ் பிரேக்கிங் நியூஸ் கார்டு ஷேர் செய்யப்பட்டதை ஸ்கிரீன் ஷாட் எடுத்தது போன்ற படம் பகிரப்பட்டுள்ளது. அதில், சிஏஏ சட்டத்தை திசை திருப்பவே வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று மோடி அறிவித்துள்ளார். அனைத்து மக்களும் வெளியே வாருங்கள் – தேசதந்தை சந்திரசேகர்” என்று உள்ளது.
அதன் மேல் பகுதியில், “மோடிக்கு பயந்து வீட்டில் முடங்கிக் கிடப்பது முட்டாள்தனம். எனவே அனைவரும் வெளியே வர வேண்டும். என் மகனின் மாஸ்டர் படம் வெளிவரும் சமயத்தில் சதி நடக்கிறது – சந்திரசேகர் அய்யா” என்று உள்ளது.
இந்த பதிவை Vairam Mohan என்பவர் 2020 மார்ச் 28 அன்று பகிர்ந்துள்ளார். நிலைத் தகவலில், “இவனை எல்லாம் இப்படி பேச வைத்து வேடிக்கை பார்க்கும் அரசு என்ன அரசோ” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் பற்றி அவ்வப்போது சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த நியூஸ் கார்டு போலியானது என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த நியூஸ் கார்டை நியூஸ் 7 பல ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தியது. அதன்பிறகு பல டிசைன்களை அது மாற்றிவிட்டது. ஆனாலும் பழைய டிசைனை வைத்து பலரும் தொடர்ந்து வதந்தி பரப்பி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக நடிகர் விஜய்யின் அப்பாவின் பெயரை ‘தேசதந்தை சந்திரசேகர்’ என்று குறிப்பிட்டுள்ளதன் மூலம் யாரோ கிண்டலுக்கு இதை வெளியிட்டுள்ளது தெரிகிறது. ஆனால், இதை உண்மை என்று நம்பி, கூடுதலாக மாஸ்டர் படம் வெளியாவதால் சதி என தகவலை சேர்த்து பலரும் பகிர்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. オンラインカジノ クレジットカード

தற்போது நியூஸ் 7 தமிழ் வெளியிடும் பிரேக்கிங் நியூஸ் கார்டையும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டையும் ஒப்பிட்டுப் பார்த்தோம். இரண்டுக்கும் நியூஸ்7 தமிழ் என்ற பெயரைத் தவிர வேறு எந்த ஒற்றுமையும் இல்லை.
இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்ய இதை நியூஸ் 7 தமிழ் ஆன்லைன் – சமூக ஊடக பிரிவுக்கு அனுப்பி வைத்தோம். அதற்கு அவர்கள், “இது போலியானது” என்று உறுதி செய்தனர்.
கொரோனா பாதிப்பு, ஊரடங்கு உத்தரவு பற்றி எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து ஏதும் கூறியுள்ளாரா என்று கூகுளில் தேடினோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. இதன் அடிப்படையில், மாஸ்டர் படம் வெளியாகும் சமயத்தில் ஊரடங்கு என்று சதி நடக்கிறது என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாக பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:மாஸ்டர் படம் வெளிவருவதைத் தடுக்கவே ஊரடங்கு என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
