குடியுரிமையை நிரூபிக்காவிட்டால் தடுப்பு முகாம் உறுதி: ஜெயக்குமார் பெயரில் வதந்தி

அரசியல் தமிழகம்

‘’குடியுரிமை நிரூபிக்க முடியவில்லை எனில் தடுப்பு முகாமில் அடைக்கப்படுவார்கள்,’’ என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link 

Muruganantham Ramasamy 

என்பவர் Shankar A. என்பவருடன் இணைந்து மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்துள்ளார்.

ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சி பெயரில் பிப்ரவரி 17, 2020ம் தேதியிடப்பட்ட ஒரு நியூஸ் கார்டை இதில் பகிர்ந்து, அதன் மேலே, ‘’ அவ்ளோதான் நாம நீட்டி முழக்கிட்டிருந்ததை மெயின்ரோடு சொட்ட சுருக்கமா நறுக்குனு சொல்ட்டான்..!,’’ என்று எழுதியுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்ய தொடங்கியுள்ளனர்.

உண்மை அறிவோம்:
தமிழகத்தில் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து சமூக ஊடகங்களில் பலரும் காரசாரமான தகவல்களை பகிர்வது வழக்கமாக உள்ளது. இதில் பல தகவல்கள் வதந்தியாக உள்ளன. ஆனால், இதுபற்றி எதுவும் புரியாமல் வதந்திகளையும் உண்மை என நம்பி பலரும் பகிர்வதால், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களை பயன்படுத்தும் சாமானிய மக்கள் தினமும் பதட்டமான மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர். அப்படியான வதந்திதான் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவிலும் பகிரப்பட்டுள்ளது.

ஆம், தமிழக அமைச்சர் ஜெயக்குமார் பற்றி ஜெயா பிளஸ் தொலைக்காட்சி, அதன் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் (@jayapluschannel) பிப்ரவரி 17, 2020 தேதியில் வெளியிட்ட செய்தி வேறொன்றாக உள்ளது.

Jaya Plus facebook post linkArchived Link

எனவே, தமிழக அமைச்சர் ஜெயக்குமார் சட்டமன்ற கூட்டத்தில் பேசியது பற்றி ஜெயா பிளஸ் தொலைக்காட்சி பிப்ரவரி 17, 2020-ல் வெளியிட்ட நியூஸ் கார்டை எடுத்து, தங்களது சுய அரசியல் கருத்துக்கு ஏற்ப அதனை எடிட் செய்து மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் வெளியிட்டு, வாசகர்களை குழப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:குடியுரிமையை நிரூபிக்காவிட்டால் தடுப்பு முகாம் உறுதி: ஜெயக்குமார் பெயரில் வதந்தி

Fact Check By: Pankaj Iyer 

Result: False