
‘’எச். ராஜாவை மாமா என்றுதான் அழைப்பேன் – அண்ணாமலை,’’ என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதே தகவலை பலரும் உண்மை போல பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
கர்நாடகாவைச் சேர்ந்த அண்ணாமலை என்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி, ஆகஸ்ட் 25, 2020 அன்று பாஜகவில் இணைந்தார்.

இந்நிலையில், அவரை பற்றி விமர்சித்து சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக, வித விதமான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் மேலே நாம் கண்ட நியூஸ் கார்டும்.
இவர்கள் பகிர்ந்து வரும் நியூஸ் கார்டு பார்ப்பதற்கு புதிய தலைமுறை வெளியிட்டதைப் போன்றே உள்ளது. நேற்று அண்ணாமலை பற்றிய செய்திகளை ஊடகங்களும் வெளியிட்டு வந்ததால், இந்த நியூஸ் கார்டு உண்மையா, பொய்யா என்ற குழப்பம் ஏற்படுகிறது.

எனவே, புதிய தலைமுறை ஊடகத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் சென்று, இப்படி எதுவும் நியூஸ் கார்டு வெளியிடப்பட்டதா என்று தகவல் தேடினோம். அப்போது, இதன் உண்மையான நியூஸ் கார்டு காண கிடைத்தது. அதில் இடம்பெற்றிருந்த விவரம் முற்றிலும் வேறு ஒன்றாகும்.

எனவே, அரசியல் உள்நோக்கத்தின் அடிப்படையில் வேண்டுமென்றே சிலர் அண்ணாமலை பற்றி போலி நியூஸ் கார்டு உருவாக்கி, அதனை புதிய தலைமுறை பெயரில் பகிர்ந்து வருவதாக, சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட செய்தி தவறானது என்று நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை காண நேரிட்டால் +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Title:முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, எச்.ராஜாவை மாமா என்று கூறினாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
