
‘’பெட்ரோல், கேஸ் விலை உயர்வை ஆதரித்து பீகாரில் பாஜக.,வினர் ஆர்ப்பாட்டம்,’’ என்று கூறி பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா எனக் கேட்டிருந்தார்.
இதனை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக்கில் பகிர்வதையும் கண்டோம்.
Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட நியூஸ் கார்டு உண்மையா என நியூஸ்7 தமிழ் ஊடகத்தின் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சுகிதாவை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். அவர், ‘’இது எங்களது பெயரில் பகிரப்படும் போலியான செய்தி,’’ என்றார்.
இதேபோல, பீகாரில் ஏதேனும் சமீபத்தில் எரிபொருள் விலை உயர்வை ஆதரித்து பாஜக சார்பாக, எதுவும் போராட்டம் நடந்ததா என விவரம் தேடினோம். ஆனால், அப்படி எதுவும் கிடைக்கவில்லை.
எனவே, இந்த செய்தி போலியான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:எரிபொருள் விலை உயர்வை ஆதரித்து பாஜக போராட்டமா?- நியூஸ்7 தமிழ் பெயரில் வதந்தி!
Fact Check By: Pankaj IyerResult: False
