‘’பாஜகவுக்கு ஓட்டு போடாததால் தமிழ்நாடு மக்களுக்கு நல்லது செய்ய மாட்டோம்,’’ என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார் என்று ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

பாலிமர் நியூஸ் சேனல் லோகோவுடன் பகிரப்படும் இந்த நியூஸ் கார்டை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
தமிழ்நாடு அரசியல் களத்தில் நாள்தோறும் அண்ணாமலையை குறிப்பிட்டு, பலவிதமான வதந்திகள் பகிரப்படுகின்றன. அவை பற்றி நாமும் அவ்வப்போது உண்மை கண்டறிந்து, கட்டுரை வெளியிட்டு வருகிறோம்.

Fact Crescendo Tamil Link 1

Fact Crescendo Tamil Link 2

Fact Crescendo Tamil Link 3

இந்த வரிசையில் பகிரப்படும் மற்றொரு போலிச் செய்திதான் மேற்கண்ட நியூஸ் கார்டும். இதுபற்றி நாம் பாலிமர் நியூஸ் தொலைக்காட்சியின் டிஜிட்டல் பிரிவை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். இந்த நியூஸ் கார்டை பார்வையிட்ட அவர்கள், ‘’இது போலியான செய்தி; நாங்கள் வெளியிடவில்லை,’’ என்றனர்.

எனவே, அண்ணாமலை பெயரில் பரவும் மேற்கண்ட நியூஸ் கார்டை பாலிமர் தொலைக்காட்சி வெளியிடவில்லை என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:தமிழ்நாடு மக்களுக்கு ஏன் உதவ வேண்டும்?- அண்ணாமலை பெயரில் பரவும் வதந்தி…

Fact Check By: Pankaj Iyer

Result: False