தமிழ்நாடு மக்களுக்கு ஏன் உதவ வேண்டும்?- அண்ணாமலை பெயரில் பரவும் வதந்தி…

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’பாஜகவுக்கு ஓட்டு போடாததால் தமிழ்நாடு மக்களுக்கு நல்லது செய்ய மாட்டோம்,’’ என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார் என்று ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

பாலிமர் நியூஸ் சேனல் லோகோவுடன் பகிரப்படும் இந்த நியூஸ் கார்டை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
தமிழ்நாடு அரசியல் களத்தில் நாள்தோறும் அண்ணாமலையை குறிப்பிட்டு, பலவிதமான வதந்திகள் பகிரப்படுகின்றன. அவை பற்றி நாமும் அவ்வப்போது உண்மை கண்டறிந்து, கட்டுரை வெளியிட்டு வருகிறோம்.

Fact Crescendo Tamil Link 1

Fact Crescendo Tamil Link 2

Fact Crescendo Tamil Link 3

இந்த வரிசையில் பகிரப்படும் மற்றொரு போலிச் செய்திதான் மேற்கண்ட நியூஸ் கார்டும். இதுபற்றி நாம் பாலிமர் நியூஸ் தொலைக்காட்சியின் டிஜிட்டல் பிரிவை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். இந்த நியூஸ் கார்டை பார்வையிட்ட அவர்கள், ‘’இது போலியான செய்தி; நாங்கள் வெளியிடவில்லை,’’ என்றனர்.

எனவே, அண்ணாமலை பெயரில் பரவும் மேற்கண்ட நியூஸ் கார்டை பாலிமர் தொலைக்காட்சி வெளியிடவில்லை என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:தமிழ்நாடு மக்களுக்கு ஏன் உதவ வேண்டும்?- அண்ணாமலை பெயரில் பரவும் வதந்தி…

Fact Check By: Pankaj Iyer 

Result: False