
உத்தரப் பிரதேசத்தில் பெரியார் சிலையை திறந்து வைத்த யோகி ஆதித்யநாத் என்று கூறி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link
சாமியார் என நினைத்து, உத்தரப் பிரதேசத்தில் பெரியார் சிலையை யோகி ஆதித்யநாத் திறந்து வைத்துள்ளார் என்று குறிப்பிட்டு, பலரும் இந்த புகைப்படத்தை ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் ட்ரோல் செய்யும் நோக்கில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் ஹிந்து மகா சபை சார்ந்த தீவிர இந்து மதச் செயற்பாட்டாளராக இருந்தவர் மகந்த் திக்விஜய் நாத். இவர் பலமுறை தனது அதி தீவிர இந்துத்துவ கருத்துகளுக்காக சிறை தண்டனை அனுபவித்திருக்கிறார். கடந்த 1969ம் ஆண்டில் இறந்த இவருக்கு, உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோரக்பூரில் அம்மாநில அரசு சார்பாக, சிலை நிறுவ திட்டமிடப்பட்டது.
இதற்கான பணிகள் முடிந்து, கடந்த ஜனவரி 7, 2022 அன்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சிலையை நேரில் திறந்து வைத்தார்.
எனவே, மகந்த் திக்விஜய் நாத் உருவச் சிலை திறப்பு நிகழ்வை பெரியாருடன் ஒப்பிட்டு வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:உத்தரப் பிரதேசத்தில் பெரியார் சிலையை யோகி ஆதித்யநாத் திறந்து வைத்தாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
