
‘’கத்தாரில் நடைபெறும் FlFA 2022 உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணியை அனுப்பக்கூடாது என்று மோடி உத்தரவு,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவுகிறது. இதுபற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், தகவல் தேடியபோது, ஏராளமானோர் இதை ஃபேஸ்புக்கில் பகிர்வதைக் கண்டோம்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட தகவல் உண்மையா என்று பார்த்தால், இல்லை என்பதே பதில். ஆம். இது மோடிக்கு முரட்டுத்தனமாக முட்டுக் கொடுக்கும் வகையில் உள்ளது. அடிப்படை உண்மை கூட தெரியாமல், இப்படியெல்லாம் சிலர் பகிர்வதைக் பார்க்கையில் வேடிக்கையாக உள்ளது.
உண்மையில், மோடி இப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. மேலும், இந்திய கால்பந்து சம்மேளனம் மீது ஃபிஃபா ஏற்கனவே தடை விதித்து, பின்னர் நீக்கியது. இந்தியா பல ஆண்டுகளாகவே, உலகக் கோப்பை தொடரில் விளையாட பகிரத முயற்சியெடுத்து வருகிறது. ஆனால், எதுவும் பலன் அளிக்கவில்லை.
இந்த சூழலில், எந்த உண்மையும் தெரியாமல், இவ்வாறு மோடி சொன்னதால்தான், இந்திய கால்பந்து அணி கத்தாரில் நடைபெறும் ஃபிஃபா 2022 உலகக் கோப்பை தொடரில் விளையாடவில்லை என்று தவறான தகவலை பகிர்வதாகச் சந்தேகமின்றி உறுத செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:FlFA 2022 உலக கோப்பை தொடருக்கு இந்திய அணியை அனுப்பக்கூடாது என்று மோடி உத்தரவிட்டாரா?
Fact Check By: Fact Crescendo TeamResult: False
