பாத யாத்திரை மேற்கொள்ளும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பயன்படுத்தும் வாகனத்தில் எதற்காக இரட்டை படுக்கை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive

தந்தி டிவி வெளியிட்டது போன்று சீமான் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "அண்ணாமலை தனியாகதானே நடைபயணம் செல்கிறார். அந்த பேருந்தில் ஒற்றைப் படுக்கை போதுமே, இரட்டை படுக்கை எதற்கு? - நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை Kovai Harish @KovaiHarish என்ற டிவிட்டர் ஐடி கொண்டவர் 2023 ஜூலை 29ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து நடைப்பயணம் தொடங்கினார். அவர் பயன்படுத்துவதற்காக பிரசார வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் உட்புற தோற்றம் என்று உள் அலங்காரம் மாற்றப்பட்ட, புதுப்பிக்கப்பட்ட டெம்போ டிராவலர் மாடல் புகைப்படங்களைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இது தவறான தகவல் என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் அந்த புகைப்படம் மற்றும் சீமான் புகைப்படத்தை சேர்த்து புதிய தலைமுறை நியூஸ் கார்டு வெளியிட்டதாகப் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த நியூஸ் கார்டின் டிசைன் மற்றும் தமிழ் ஃபாண்ட் வித்தியாசமாக உள்ளதால் இது பற்றி ஆய்வு செய்தோம்.

முதலில் இப்படி ஏதேனும் கருத்தை சீமான் வெளியிட்டுள்ளாரா என்று தேடிப் பார்த்தோம். சீமான் அப்படி கூறியதாக எந்த செய்தியும் இல்லை. அவரது பேட்டி வீடியோவை பார்த்தோம். அதில் சீமான் அப்படி கருத்து எதையும் கூறவில்லை என்பது தெளிவானது.

இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிடவில்லை என்பதை உறுதி செய்ய, முதலில் அந்த ஊடகம் வெளியிட்ட நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த ஒரு நியூஸ் கார்டையும் புதிய தலைமுறை வெளியிடவில்லை என்பது உறுதியானது. அதே நேரத்தில் அண்ணாமலை நடைப்பயணம் தொடர்பாக சீமான் தெரிவித்த கருத்து அடிப்படையில் நியூஸ் கார்டு ஒன்று வெளியாகி இருந்தது.

Archive

அதில், "அண்ணாமலை மேற்கொள்ளும் நடைப்பயணம் பழைய மாடல்; நடைபயணத்தால் அவரது உடல் நலம் சீராகும். பத்தாண்டு காலம் நாட்டை ஆண்டு குட்டிச்சுவராக்கிவிட்டு நடைப்பயணம் செய்தால் எதுவும் நடக்காது" என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்துகொள்ள, இதை புதிய தலைமுறை ஊடக நிர்வாகிக்கு அனுப்பினோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் அண்ணாமலை நடைப்பயணம் பேருந்தில் இரட்டைப் படுக்கை எதற்கு என்று சீமான் கேட்டதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

அண்ணாமலை நடைபயணத்துக்கு பயன்படுத்தும் வாகனத்தில் எதற்கு இரட்டை படுக்கை என்று சீமான் கேட்டதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அண்ணாமலை நடைபயண பேருந்தில் இரட்டை படுக்கை ஏன் என்று சீமான் கேள்வி எழுப்பினாரா?

Written By: Chendur Pandian

Result: False