‘’டி20 உலகக் கோப்பையை வைத்துக் கொண்டு, பாபர் அசாமை பார்த்து பழித்துக் காட்டிய ரோகித் சர்மா’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ரோகித் சர்மா தனது கையில் டி20 உலகக் கோப்பையை வைத்துக் கொண்டு, பஸ் கண்ணாடி வழியே பாபர் அசாமை பார்த்து, பழித்துக் காட்டுவது போன்று காட்சி உள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கடந்த ஜூன் 29, 2024 அன்று நடைபெற்ற டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

இந்நிலையில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையை தனது கையில் வைத்துக் கொண்டு, பஸ் கண்ணாடி வழியே பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை பார்த்து, பழித்துக் காட்டியதாகக் குறிப்பிட்டு, மேற்கண்ட புகைப்படத்தை சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

எனவே, இந்த புகைப்படத்தை கூகுளில் பதிவேற்றி, ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இதுதொடர்பான உண்மையான புகைப்பட ஆதாரங்கள் கிடைத்தன.

Inside Sport Tweet l CricTracker Tweet l News 9 Live Link

இதில் ஒரு புகைப்படத்தை எடுத்து, பாபர் அசாம் பஸ் ஜன்னலுக்கு வெளியே நிற்பது போன்று எடிட் செய்து, தகவல் பரப்புகின்றனர் என்று தெளிவாகிறது.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் எடிட் செய்யப்பட்ட ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:பாபர் அசாமை பார்த்து ரோகித் சர்மா பழித்துக் காட்டினாரா?

Fact Check By: Fact Crescendo Team

Result: Altered