தமிழ்நாடு முழுக்க பால்வாடிகள் முன்பாக போராட்டம் நடத்துவோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளதாகக் கூறி ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவுகிறது. இதுபற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா எனக் கேட்டிருந்தார்.

இந்த நியூஸ் கார்டை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்வதையும் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில், குழந்தைகளை வைத்து, மோடியின் ஆட்சியை விமர்சித்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இதன்பேரில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக.,வினர் மற்றும் அக்கட்சி ஆதரவாளர்கள் பலரும் சமூக வலைதளங்களின் வழியே தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் தலையிட வேண்டும் எனவும் பாஜக.,வினர் வலியுறுத்தியுள்ளனர்.

அதேசமயம், பாஜக.,வினர் இப்படி குழந்தைகளின் நிகழ்ச்சிக்கு எல்லாம் மல்லுக்கட்டிக் கொண்டு கருத்து சுதந்திரம் பாடம் நடத்துவதாகக் கூறி எதிர்க்கட்சி ஆதரவாளர்கள், அண்ணாமலை உள்ளிட்டோரை கேலி செய்தும் தகவல் பகிர்கிறார்கள்.

அப்படி நகைச்சுவை நோக்கில் பகிரப்படும் போலியான செய்திதான் மேற்கண்ட செய்தியும். உண்மையில், அப்படியான நியூஸ் கார்டு எதையும் ABP Nadu ஊடகம் வெளியிடவில்லை. இதுபற்றி அந்த ஊடகத்தின் நிர்வாகி ஒருவர் ட்விட்டரில் விளக்கம் அளித்து பதிவிட்டுள்ளார். அதனை கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

Archived Link

இதேபோல, பாஜக தரப்பிலும் இது போலியான செய்தி என விளக்கம் தரப்பட்டுள்ளது.

எனவே, மேற்கண்ட நியூஸ் கார்டில் உள்ளது போலியான செய்தி என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:தமிழ்நாடு முழுக்க பால்வாடிகள் முன்பாக போராட்டம் நடத்துவோம் என்று அண்ணாமலை கூறவில்லை!

Fact Check By: Pankaj Iyer

Result: False