
‘’மு.க.ஸ்டாலினுக்கு முடி வெட்டிய தருமபுரி மக்களவை தொகுதி உறுப்பினர் செந்தில்,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
உண்மை அறிவோம்:
தமிழ்நாட்டில் தற்போது தேர்தல் பரபரப்பு நிலவுகிறது. இதையொட்டி, திமுக, அதிமுக கட்சிகள் பிரசாரத்தை தொடங்கியுள்ளதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில்தான், மேற்கண்ட புகைப்படம் தருமபுரி மக்களவை தொகுதி உறுப்பினர் செந்தில் மற்றும் மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
உண்மையில், இது எடிட் செய்யப்பட்டதாகும். உண்மையான புகைப்படத்தை, தருமபுரி எம்.பி. செந்தில், அவரது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதனை கீழே இணைத்துள்ளோம்.
எனவே, செந்தில், தருமபுரி தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தபோது எடுத்த புகைப்படத்தை எடிட் செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:தருமபுரி தொகுதி எம்.பி செந்தில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முடி வெட்டியதாக பரவும் வதந்தி
Fact Check By: Pankaj IyerResult: Altered
