
‘’ கங்கை ஆற்றில் புல்லட் ரயில் விட்ட உத்தரப் பிரதேச மாநில அரசு’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
Tweet Claim Link l Archived Link
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட ட்விட்டர் பதிவை பலரும் உண்மையிலேயே பாஜக ஆதரவாளர்கள் அதிலும் குறிப்பாக, அண்ணாமலை ஆதரவாளர்கள்தான் வெளியிட்டிருப்பதாக நினைத்து, கமெண்ட் பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால், இந்த பதிவை வெளியிட்ட ட்விட்டர் ஐடி உண்மையான பாஜக ஆதரவாளர் இல்லை. வேண்டுமென்றே பாஜக.,வை கேலி செய்யும் நோக்கில் திமுக ஆதரவாளர்களால் தொடங்கப்பட்டதாகும்.

எனவே, பாஜக ஆதரவாளர் போல தன்னை காட்டிக் கொண்டு, வேண்டுமென்றே தவறான தகவலை உண்மை போல பரப்பி, மற்றவர்களையும் குழப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
ஏற்கனவே மேற்கண்ட ட்விட்டர் ஐடி இதுபோன்ற சில வதந்திகளை பகிர்ந்துள்ளது. அதுபற்றி நாமும் ஃபேக்ட்செக் செய்துள்ளோம். அந்த லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:கங்கை ஆற்றில் புல்லட் ரயில் விட்ட உத்தரப் பிரதேச மாநில அரசு என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…
Written By: Fact Crescendo TeamResult: False
