
‘’தாமரை சின்னத்தில் கூட போட்டியிட தயார்,’’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாகக் குறிப்பிட்டு ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (+91 9049044263, +91 9049053770) அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் பலர் இதனை உண்மை போல பகிர்வதைக் கண்டோம்.
Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
அஇஅதிமுக.,வின் தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேசமயம், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா போன்றோர் தங்களது கட்டுப்பாட்டில்தான் அக்கட்சி உள்ளதாகக் கூறி வருகின்றனர்.
இதுதொடர்பாக ஏராளமான வதந்திகள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. அவை பற்றி நாமும் ஆய்வுக்கட்டுரை வெளியிட்டு வருகிறோம்.
Fact Crescendo Tamil Link 1 I Fact Crescendo Tamil Link 2 I Fact Crescendo Tamil Link 3
அந்த வரிசையில் பகிரப்படும் மற்றொரு வதந்திதான் மேற்கண்ட நியூஸ் கார்டும். உண்மையில், இதனை ஜூனியர் விகடன் வெளியிடவில்லை. இவ்வாறு எடப்பாடி பழனிசாமியும் பேசவில்லை. இதுபற்றி நாம் ஜூனியர் விகடன் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி மற்றும் அதிமுக ஐடி பிரிவு தரப்பிலும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:தாமரை சின்னத்தில் கூட போட்டியிட தயார் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?
Fact Check By: Fact Crescendo TeamResult: False
