
‘’நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக், ஹரி நாடாரின் பனங்காட்டுப் படை கட்சியில் இணைந்துவிட்டார்,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Twitter Claim Link I Archived Link
ட்விட்டரில் சவுக்கு சங்கர் என்பவர் இந்த தகவலை ஷேர் செய்திருக்கிறார். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வாசகர் ஒருவர் ட்விட்டரில் நம்மை டேக் செய்து, இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மையை சரிபார்க்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார்.

Twitter Post Link I Archived Link
அதன் பேரிலேயே நாம் ஆய்வு மேற்கொண்டோம். குறிப்பிட்ட புகைப்படத்தை, ஹரி நாடாரும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவருடன் புகைப்படத்தில் இருப்பவர் ராக்கெட் ராஜா என்பவர் ஆவார்.
இந்த பதிவுக்கு விளக்கம் அளித்து, இடும்பாவனம் கார்த்திக் பதிவு ஒன்றை வெளியிட்டதையும் கண்டோம்.
இதன்படி, ஹரி நாடாருடன் ராக்கெட் ராஜா இருக்கும் புகைப்படத்தை எடுத்து, எடிட் செய்து, ஹரி நாடார் கட்சியில் இடும்பாவனம் கார்த்திக் இணைந்துவிட்டதாகக் கூறி வதந்தி பகிர்ந்துள்ளனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:நாம் தமிழர் கட்சி நிர்வாகி குறித்து பகிரப்படும் போலியான புகைப்படம்…
Fact Check By: Pankaj IyerResult: Altered
