FactCheck: பாஜகவினர் தடவியது பற்றி குஷ்பு கருத்து: விஷமத்தனமான வதந்தி…
‘’பாஜகவினர் என்னைத் தடவியதில் தவறில்லை என்று கூறிய குஷ்பு,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் தகவல் ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இது பார்க்க அசலானதாக இருந்ததால், பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
கடந்த அக்டோபர் 13, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், புதிய தலைமுறை ஊடகத்தின் பெயரில் குஷ்பு பற்றி ஒரு நியூஸ் கார்டு வெளியிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அந்த நியூஸ் கார்டில், ‘’ஒரு கட்சியில் இருக்கும்போது வேறு கட்சியினர் தடவியிருந்தால் தான் தவறு. பாஜகவினர் தடவியதில் தவறில்லை - குஷ்பு,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கடந்த ஒரு வாரமாக, ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் என எங்கு பார்த்தாலும் நடிகை குஷ்பு, பாஜகவில் இணைந்தது தொடர்பாக, காரசாரமான விமர்சனங்களும், அவரை பற்றி தவறான தகவல்களும் பகிரப்படுகின்றன. நாமும் இதுபற்றி நிறைய தகவல்களை சரிபார்த்து, அவற்றின் உண்மைத்தன்மையை வெளியிட்டு வருகிறோம்.
குறிப்பாக, நடிகை குஷ்புவை செய்தியாளர்கள் முன்னிலையில் பாஜக உறுப்பினர் ஒருவர் கை வைத்து தடவியதாக ஒரு வதந்தி பலராலும் வைரலாக பகிரப்படுகிறது. ‘’அப்படி யாரும் செய்யவில்லை. குஷ்புவின் உடன்பிறந்த சகோதரர்தான் அவரிடம் பேசுவதற்காக தோளில் கைவைத்தார்,’’ என்று நாமும் ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டிருந்தோம். அந்த கட்டுரையை படிக்க கீழே லிங்க் தரப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாகவே மேற்கண்ட நியூஸ் கார்டு புதிய தலைமுறை வெளியிட்டதாகக் கூறி பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இது பார்ப்பதற்கு உண்மை போலவே இருப்பதால், ஐயத்தின் பேரில் புதிய தலைமுறை டிஜிட்டல் ஹெட் மனோஜை தொடர்பு கொண்டு, விளக்கம் கேட்டோம்.
இந்த நியூஸ் கார்டை பார்வையிட்ட அவர், ‘’அக்டோபர் 12, 2020 அன்றைய தேதியில் இப்படி எந்த தரக்குறைவான செய்தியையும் நாங்கள் வெளியிடவில்லை. இது போலியான செய்தி,’’ எனக் கூறினார்.
இதற்கடுத்தப்படியாக, புதிய தலைமுறையின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், குறிப்பிட்ட நாளன்று (அக்டோபர் 12, 2020) குஷ்பு பற்றி வேறு ஏதேனும் நியூஸ் கார்டு வெளியிடப்பட்டுள்ளதா என தகவல் தேடினோம். அப்போது, கீழ்க்கண்ட தகவல் கிடைத்தது. அதாவது, குஷ்பு, பாஜகவில் இணைந்தது பற்றி தமிழக அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்று பேசியதாக, புதிய தலைமுறை செய்தி வெளியிட்டுள்ளது.
எனவே, அரசியல் உள்நோக்கத்துடன், சிலர் வேண்டுமென்றே இந்த போலிச் செய்தியை தயாரித்து பகிர்ந்துள்ளதாக, உறுதி செய்யப்படுகிறது. போலிச் செய்தியையும், அசல் செய்தியையும் ஒப்பீடு செய்து, கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக, ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Title:பாஜகவினர் தடவியது பற்றி குஷ்பு கருத்து: விஷமத்தனமான வதந்தி…
Fact Check By: Pankaj IyerResult: Altered