
தனித் தமிழ்த்தேசியம் கேட்டு, டெல்லியில் மிக விரைவில் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்று சீமான் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
சீமான் புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “உண்ணாவிரதப் போராட்டம். தனித் தமிழ்தேசியம் கேட்டு, டெல்லியில் மிகவிரைவில் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு” என்று இருந்தது.
இந்த நியூஸ் கார்டை S.m. Hidayathullah என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 அக்டோபர் 21ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சீமான் தொடர்பாக சமீப நாட்களில் போலியான நியூஸ் கார்டுகள் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டதும் போலியானது என்பதை பார்த்ததுமே நம்மால் அடையாளம் தெரிந்துகொள்ள முடிந்தது. இந்த நியூஸ் கார்டில் உள்ள தமிழ் ஃபாண்ட் வழக்கமாக புதிய தலைமுறை வெளியிடும் நியூஸ் கார்டுடன் ஒத்துப்போகவில்லை. பின்னணி வாட்டர் மார்க் லோகோ வித்தியாசமாக இருந்தது, பின்னணி டிசைனும் இல்லை. இவை எல்லாம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்வதற்கான ஆய்வை நடத்தினோம்.

முதலில் புதிய தலைமுறை அக்டோபர் 21ம் தேதி வெளியிட்ட நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அதில், சீமான் தொடர்பான எந்த ஒரு நியூஸ் கார்டும் இல்லை. எனவே, புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சரவணனைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்தார்.
தனித் தமிழ்த் தேசியம் கோரி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக சீமான் ஏதும் அறிவிப்பை வெளியிட்டாரா என்று பார்த்தோம். கடைசியாக அக்டோபர் 20ம் தேதி சீமான் அறிக்கை வெளியாகி இருந்தது. அதுவும் இலங்கையைச் சேர்ந்த நாமல் ராஜபக்சேவை சிறப்பு விருந்தினராக இந்திய அரசு அழைத்திருப்பதற்குக் கண்டனம் தெரிவித்து வெளியிடப்பட்டதாகும். சீமானின் ட்விட்டர் பக்கத்திலும் அந்த அறிக்கைதான் வெளியாகி இருந்தது.
அசல் பதிவைக் காண: Archive 1 I Archive 2
இதன் மூலம் தனித் தமிழ்த்தேசியம் கேட்டு சீமான் டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்ததாக பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தனித் தமிழ் தேசியம் கேட்டு டெல்லியில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக சீமான் அறிவித்தது போன்று பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:தனித் தமிழ்த்தேசியம் கேட்டு உண்ணாவிரதம் இருக்கப்போவதாக சீமான் அறிவித்தாரா?
Fact Check By: Chendur PandianResult: False
