இங்கிலாந்தில் பென்னி குயிக் சிலை; தமிழ்நாடு அரசின் முடிவை அண்ணாமலை எதிர்த்தாரா?

இந்தியா | India சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’இங்கிலாந்தில் பென்னி குயிக் சிலை நிறுவ தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதற்கு, அண்ணாமலை எதிர்ப்பு ,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, வாசகர் ஒருவர் உண்மையா என கேட்டிருந்தார். எனவே, ஆய்வு செய்ய தொடங்கினோம்.

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
தமிழ்நாட்டின் தென் மாநிலங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையை நிறுவியவர் கர்னல் ஜான் பென்னிகுயிக். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அரசு நிதி போதாமையால், தனது சொந்தப் பணத்தை செலவு செய்து, அந்த அணையை நிறுவியதால், பென்னிகுயிக் மீது தேனி, மதுரை பகுதி மக்கள் பெரும் மரியாதை வைத்துள்ளனர். அவரது அரிய சேவையை கவுரவிக்கும் வகையில், இங்கிலாந்தில் உள்ள கேம்பர்ளி நகரில் அவரது பிறந்த ஊரில் சிலை அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு (திமுக) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Hindu Tamil Link

இந்த அறிவிப்பை எதிர்த்து அண்ணாமலை பேசியதாகக் குறிப்பிட்டு மேற்கண்ட வகையில் போலியான செய்தியை சிலர் பகிர்ந்து வருகின்றனர். இதுபற்றி அண்ணாமலை மற்றும் கதிர் நியூஸ் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Archived Link

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:இங்கிலாந்தில் பென்னி குயிக் சிலை; தமிழ்நாடு அரசின் முடிவை அண்ணாமலை எதிர்த்தாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False