வாகா எல்லையில் பறக்கும் மிகப்பெரிய இந்திய தேசியக் கொடி என்று பரவும் வதந்தி!

பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில் பறக்கவிடப்பட்ட மிகப்பெரிய தேசியக் கொடி என்று கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மிகப் பெரிய தேசியக் கொடியை ஏற்றும் நிகழ்ச்சி வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வாகா எல்லையில் புதிய இந்திய தேசியக் கொடி 360 அடி உயரத்தில் : செலவு ரூ 3.5 கோடி. 55 டன் எஃகு கொண்டு உறுதியான […]

Continue Reading

கேரள மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் பசுக்கள்- வீடியோ உண்மையா?

கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பசுக்கள் அடித்துச் செல்லப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 1.39 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை பகிர்ந்துள்ளனர். ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதில் ஏராளமான பசுக்கள் அடித்துச் செல்லப்படுகின்றன. சில வெள்ள நீரில் நீந்தியபடியும் செல்கின்றன. நிலைத் தகவலில், “கேரளாவில் பெய்த கனமழையால் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட […]

Continue Reading

குஜராத் மாநிலத்தில் உள்ள டிரான்ஸ்ஃபார்மர் புகைப்படமா இது?

குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி என்று மின்சார டிரான்ஸ்ஃபார்மர் ஒன்றின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மரக் கிளைகளை வைத்து முட்டுக்கொடுக்கப்பட்ட மின்சார டிரான்ஸ்ஃபார்மரின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதன் மீது “வளர்ச்சியோ வளர்ச்சி… குஜராத்தில்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தை S.A.Rafiq என்பவர் 2020 ஆகஸ்ட் 30ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: குஜராத் மின்சார […]

Continue Reading

மூட்டை முடிச்சுகளுடன் மக்கள்; மோடி ஆட்சிக் காலத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதா?

பிரதமர் மோடியின் ஆட்சியில், ஆபத்துக் காலத்தில் செல்லும் மனிதர்கள் என்று மூட்டை முடிச்சுகளோடு குடும்பம் குடும்பமாக மக்கள் செல்லும் படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தலையில் மிகப்பெரிய சுமையுடன், கையில் குழந்தைகளுடன் பலரும் கால்நடையாக வரும் புகைப்படம் மற்றும் பிரதமர் மோடி மயிலுக்கு உணவு அளிக்கும் புகைப்படம் ஒன்று சேர்த்துப் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆபத்து காலத்தில் […]

Continue Reading

கொரோனா காலத்தில் போட்டோஷூட் நடத்திய மோடி என்று பகிரப்படும் பழைய படம்!

நாடே கொரோனா ஊரடங்கால் அவதியுறும் நிலையில் பிரதமர் மோடி போட்டோ ஷூட் நடத்தினார் என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரதமர் மோடியின் சில புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “நாடே கொரோனோ ஊரடங்கால் நாசமாகி, கிடைக்கையில் இவனுக்கு போட்டோஷூட் ஒரு கேடா..? இரக்கமற்ற அரக்க மிருகத்தனம் குணம் கொண்ட ஒருவனுக்குத்தான் இது போல செய்ய தோன்றும்” என்று […]

Continue Reading

தமிழ்நாடு கல்வித்தரம் பற்றி ரமேஷ் போக்ரியால் விமர்சித்ததாக பரவும் வதந்தி!

நீட், ஜெ.இ.இ தேர்வை ரத்து செய்தால் தமிழகத்தில் உருவானது போல தரமற்ற மருத்துவர்கள், பொறியாளர்கள் உருவாகிவிடுவார்கள் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இணைய ஊடகம் ஒன்றின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மாணவர்கள் கோரிக்கைகளை ஏற்று நீட், ஜெ.இ.இ தேர்வுகளை ரத்து செய்தால் தேசம் முழுவதும் தமிழ்நாட்டில் சென்ற […]

Continue Reading

தந்தை பெரியார் படத்துக்கு மரியாதை செலுத்திய மோடி; புகைப்படம் உண்மையா?

தந்தை பெரியார் படத்துக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தியது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தந்தை பெரியார் படத்துக்கு மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்துவது போன்ற படத்தை வைத்து பதிவை உருவாக்கி உள்ளனர். அதில், “அய்யா தந்தை பெரியாரே இனிமே தமிழ்நாட்டிலே உங்களை விட்டா எங்களுக்கு வேறுநாதி இல்லை. ராமரை, மொழி, மதம் வெச்சி எல்லாம் கதறி […]

Continue Reading

காந்தியையும், அவரை சுட்ட கோட்சேவையும் கும்பிடும் மோடி?- புது விதமாக பரவும் வதந்தி

மகாத்மா காந்தியையும், அவரை கொன்ற கோட்சேவையும் பிரதமர் மோடி கும்பிடுகிறார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link காந்தி சிலை மற்றும் சாவர்க்கர் படத்தை பிரதமர் மோடி வணங்கும் புகைப்படங்கள் ஒன்றாக சேர்த்துப் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இப்ப சொல்லுங்க, இவங்களுக்கு நம்ம ஊர்ல என்ன பெயர் சொல்லுவாங்க…? இங்கே மகாத்மா காந்திக்கும் ஒரு கும்பிடு, சுட்டு கொன்ற கோட்சேவுக்கும் […]

Continue Reading

சாலையில் சிலம்பம் சுழற்றிய இந்த பாட்டி தமிழகத்தைச் சேர்ந்தவரா?

சில மாதங்களுக்கு முன்பு சாலையில் சிலம்பம் சுழற்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பாட்டிக்கு வட இந்தியாவில் மதிப்பு கிடைத்துள்ளது, என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த பாட்டி தமிழகத்தைச் சேர்ந்தவரா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சிலம்பம் சுழற்றும் பாட்டியின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழ்நாட்டு பாட்டி சிறிது நாட்களுக்கு முன் ரோட்டில் காட்ட பட்ட திறமை சேர வேண்டிய இடத்துல சேர்ந்துருச்சி.. ஆனா […]

Continue Reading

கடோத்கஜன் எலும்பு கண்டெடுக்கப்பட்டதாக பரவும் வதந்தி!

மகாபாரத போரில் உயிரிழந்த கடோத்கஜன் எலும்பு குருஷேத்ரத்தில் கண்டெடுக்கப்பட்டது என்று ஒரு வதந்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். வதந்தியின் விவரம்: Facebook Link Archived Link மிகப்பெரிய எலும்பை அகழாய்வில் கண்டெடுத்தது போன்ற படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “குருக்ஷேத்திரத்தில் கண்டெடுக்கப்பட்ட 18 அடி உயர அஸ்தி பஞ்சரம் இது பீமரின் மகன் கடோத்கஜன் என்று எண்ணப்படுகிறது, டிஸ்கவரி சானல் இதை ஒளிபரப்பு செய்தது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.  இந்த […]

Continue Reading

வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷனை பா.ஜ.க தொண்டர்கள் மீண்டும் தாக்கியதாக பரவும் வதந்தி!

உச்ச நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை எதிர்கொண்டு வரும் பிரஷாந்த் பூஷனை பா.ஜ.க குண்டர்கள் தாக்கியதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 டைம்ஸ் நவ் ஊடகம் வெளியிட்ட பிரஷாந்த் பூஷன் தாக்கப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் இன்று பிஜேபி குண்டர்களால் தாக்கப்பட்டார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த வீடியோ பதிவை Manoharan Karthik என்பவர் […]

Continue Reading

2019-ல் இந்திய தேசிய கீதம் வாசித்த அமெரிக்க ராணுவம்; விதவிதமாக பரவும் வதந்தி!

இந்திய தேசிய கீதத்தை அமெரிக்க ராணுவ வீரர்கள் இசைத்ததை வைத்து சமூக ஊடகங்களில் விதவிதமான வதந்திகள் பரவி வருகின்றன. தகவலின் விவரம்: Facebook Link 1 Archived Link 1 Facebook Link 2 Archived Link 2 அமெரிக்க ராணுவம் முதன்முறையாக இந்திய தேசிய கீதத்தை வாசிக்கிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதே வீடியோ கடந்த ஆண்டு, அமெரிக்காவுக்கு மோடி வருவதையொட்டி அமெரிக்க ராணுவ வீரர்கள் இந்திய தேசிய கீதத்தை […]

Continue Reading

ஆஞ்சநேயர் கோயிலில் இயேசு, மேரி படத்தை வைத்து பூஜை செய்ய வற்புறுத்திய கர்நாடக எஸ்.பி?

கர்நாடகாவில் ஆஞ்சநேயர் கோவில் கருவறையில் இயேசு மற்றும் மேரியின் படத்தை வைத்து பூஜை செய்ய பெண் எஸ்.பி ஒருவர் வற்புறுத்தியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பெண் போலீஸ் அதிகாரி மற்றும் கோயிலில் கருவறை விக்ரகத்தின் கீழ் இயேசு படம் இருக்கும் புகைப்படங்கள் ஒன்றாக வைத்து கொலாஜ் செய்யப்பட்டு பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “ஆஞ்சநேயர் கோவில் கருவறையில் ஏசு […]

Continue Reading

குழாய்க்குள் வசிக்கும் மக்கள்; இந்த புகைப்படம் இந்தியாவில் எடுக்கப்படவில்லை!

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று வீட்டைவிட்டு வெளியே வராத டிஜிட்டல் இந்தியா மக்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது எங்கே எடுக்கப்பட்டது என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அடுக்கி வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய குழாய்களுக்குள் வசிக்கும் மக்கள் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பிரதமரின் வேண்டுகோளை ஏற்று வீட்டைவிட்டு வெளியில் வராத இந்தியக் குடிமக்கள்.டிஜிட்டல் இந்தியா” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த பதிவை Raviganesh Veera என்பவர் […]

Continue Reading

சகதியில் அமர்ந்திருக்கும் பள்ளிக் குழந்தைகள்; உ.பி-யில் எடுத்த படமா இது?

உத்தரப்பிரதேசத்தில் பள்ளி ஒன்றில் போதுமான வசதிகள் இல்லாத காரணத்தால் குழந்தைகள் சகதியில் அமர்ந்திருக்கிறார்கள் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link குழந்தைகள் சகதியில் அமர்ந்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “3000 கோடி ரூபாய்க்கு சிலை வைத்த ஆட்சியாளர்களின் ஆளுமை? உ.பியில் ஒரு பள்ளிக்கூடத்தின் நிலையை பாரீர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Maya G என்பவர் 2020 ஆகஸ்ட் […]

Continue Reading

கம்பியில் தொங்கியபடி ஆற்றைக் கடக்கும் குழந்தைகள்; இந்த படம் உத்தரகாண்டில் எடுத்ததா?

குழந்தைகள் கம்பி ஒன்றில் தொங்கியபடி ஆற்றைக் கடக்கும் படம் உத்தரகாண்ட் மாநிலத்தில் எடுக்கப்பட்டது என்று பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கம்பியில் தொங்கியபடி ஆற்றைக் கடக்கும் குழந்தைகள் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பள்ளி செல்லும் குழந்தைகள் நிலை பாரிர். உத்தரகண்டு மாநிலம்… பாலம் கட்ட வேண்டாம் கோயில் கட்டினால் போதும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த பதிவை Madhavan Madhavan […]

Continue Reading

கச்சத் தீவை இலங்கைக்கு வழங்கியபோது கருணாநிதி, வைகோ எதிர்க்கவில்லையா?

கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கும் போது கருணாநிதி, வைகோ எதிர்க்கவில்லை என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் மறைந்த பா.ஜ.க தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “நன்றிகெட்ட தமிழா தெரிந்துகொள். இந்திராகாந்தி கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த போது அதை கருணாநிதியோ, எம்ஜிஆரோ, வைகோவோ எதிர்க்கவில்லை. பாராளுமன்றத்திலேயே கடுமையாக எதிர்த்தவர் வாஜ்பாய். கச்சத்தீவு […]

Continue Reading

காஷ்மீர் லால் சவுக்கில் இந்திய தேசியக் கொடி பறந்ததாகப் பகிரப்படும் வதந்தி!

‘’காஷ்மீர் லால் சவுக்கில் சுதந்திர தினத்தன்று இந்திய தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், இரு வேறு கொடிகள் பறப்பது போன்ற புகைப்படங்கள் இரண்டை இணைத்து, அதன் மேலே, ‘’ மோடி ஆட்சிக்கு முன் நமது காஷ்மிரில் பாக்கிஸ்தான் கொடி மோடி ஆட்சிக்கு பின் நமது காஷ்மீரில் நமது இந்திய […]

Continue Reading

புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்தவர் பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே என்று பரவும் வதந்தி!

புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்த பா.ஜ.க எம்.பி நிஷிகாந்தின் எம்.பி.ஏ சான்றிதழ் போலியானது என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. நிஷிகாந்த் தூபே மீதான குற்றச்சாட்டு நீண்டகாலமாக உள்ளது. இந்த நிலையில் அவர் கல்விக் கொள்கையை வடிவமைத்தாரா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே படத்துடன் கூடிய பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “இவர் பெயர் ரிஷிகாந்த் துபே, ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க.நாடாளுமன்ற உறுப்பினர். […]

Continue Reading

99 ஆண்டுகளுக்கு ஒரு முறை இமய மலையில் பூக்கும் சிவலிங்கப் பூ இதுவா!

இமயமலைப் பிரதேசத்தில் 99 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் சிவலிங்கப்பூ என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பெரிய அளவிலான மொக்கு (மொட்டு) போன்ற மலரின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதன் மீது, “சிவலிங்கப் பூ இமயமலைப் பிரதேசத்தில் 99 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பூக்குமாம்! இதைப் பார்ப்பதே புண்ணியம்! நன்றாகப் பார்த்து தரிசனம் செய்து கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு பகிரவும். […]

Continue Reading

கொரோனா விதிமுறையை மீறி நடந்த ஊர்வலமா இது?

கொரோனா காலத்தில் இஸ்லாமிய பண்டிகைகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதித்துவிட்டு, இந்து மத ஊர்வலம் நடந்ததாகக் கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 காவிக் கொடியோடு செல்லும் ஊர்வலத்தில் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. ஊர்வலத்தில் செல்பவர்கள் உற்சாகமாக நடனமாடிக்கொண்டு செல்கின்றனர். நிலைத் தகவலில் “ரம்ஜான்,பக்ரீத்க்கு மூன்று பேருக்கு மேல கூடி தொழுக கூடாதுனு ஒவ்வொரு பள்ளிவாசல்ளையும் […]

Continue Reading

ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றனரா?

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றார்கள் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மூன்று பெண்கள் அம்மா ஒருவருக்கு இனிப்பு ஊட்டும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ராஜஸ்தான் மாநிலத்தில் ஆதரவு அற்ற நிலையிலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த #தலித் #பெண்கள் மூன்று பேர் IAS தேர்வில் வெற்றி […]

Continue Reading

இது ஜபல்பூர் நர்மதா நீர்வீழ்ச்சி கிடையாது!

‘’இது ஜபல்பூர் நர்மதா நீர்வீழ்ச்சி,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் வீடியோ ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link ஆகஸ்ட், 2, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், நீர்வீழ்ச்சி ஒன்று தொடர்பான வீடியோவை பகிர்ந்து, அதன் மேலே, ‘’அமெரிக்காவின் நயாகரா நீர் வீழ்ச்சி தான் அழகு என்று கூறுபவர்களுக்கு.. மத்தியபிரதேசம் ஜகல்பூர் நர்மதை நீர்வீழ்ச்சி 👍👍👌👇👇,’’ என்று குறிப்பிட்டுள்ளனர். இதனைப் பலரும் […]

Continue Reading

கொரோனாவால் உயிரிழந்த டாக்டர் ஆயிஷா; போலி ட்விட்டர் அக்கவுண்ட் சர்ச்சை!

கொரோனா பாதிப்பு காரணமாக இளம் பெண் மருத்துவர் பலியாகிவிட்டதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link டாக்டர் ஆயிஷா என்ற பெயரில் ட்விட் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘’எனக்கு கோவிட் 19 பாதிப்பு உள்ளது. எனக்கு இன்னும் சில நேரத்தில் வெண்டிலேட்டர் பொருத்தப்பட உள்ளது, என்னுடைய சிரிப்பை நினைவு கூறுங்கள். உயிரைப் பறிக்கும் கொரோனா வைரசில் இருந்து பாதுகாப்பாக இருங்கள்” என்ற வகையில் […]

Continue Reading

ஆந்திராவில் மனைவியின் நினைவாக சிலிக்கான் மெழுகு சிலை வடித்த கணவன்?– ஃபேஸ்புக் குழப்பம்

ஆந்திராவில் விபத்தில் இறந்த மனைவியின் நினைவாக அவரது மெழுகு சிலையை அமைத்து வீடு கிரகப்பிரவேசம் செய்த கணவன் என்று சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கர்நாடக மாநிலத்தில் மனைவியின் மெழுகு சிலையை உருவாக்கிய ஶ்ரீனிவாஸ் குப்தா குடும்ப புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆந்திர மாநிலத்தில் ஓர் அருமையான மனிதர் தன் மனைவியை மெழுகுச் சிலையாக வடித்து தன் இல்ல […]

Continue Reading

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த கேப்டன் தீபக் சதே பாடிய பாடல் என்று பரவும் வீடியோ!

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த ஏர் இந்தியா விமானி தீபக் சதே கடைசியாக பாடிய பாடல் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த பைலட் கேப்டன் தீபக் சதே போன்று தோற்றம் அளிக்கும் ஒருவர் பாடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கேப்டன் தீபக் சதே அவர்கள், தன்னை […]

Continue Reading

அயோத்தி அருகே பாபர் மருத்துவமனை கட்டப்படுகிறதா?- ஃபேஸ்புக் வதந்தி

அயோத்தியில் அரசு வழங்கியுள்ள ஐந்து ஏக்கர் நிலத்தில் மசூதி கட்டப்படுவதற்கு பதில் மருத்துவமனை கட்டப்பட உள்ளது என்று ஒரு படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரம்மாண்ட மருத்துவமனையின் படம் பகிரப்பட்டுள்ளது. அதில் பாபர் மசூதி என்று உள்ளது. நிலைத் தகவலில், “இலவச சேவையோடு உருவாகப்போகிறது பாபர் மருத்துவமனை…! நீதிமன்றத்தின் ஆனையின்படி வஃக்பு வாரியதிற்கு கிடைக்கும் 5 ஏக்கர் நிலத்தில் […]

Continue Reading

கொரோனா பரப்பும் வகையில் மோடி ஊர்வலம் சென்றாரா?

பிரதமர் மோடி கொரோனாவைப் பரப்பும் வகையில் கூட்டமாக சென்றார் என்று சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 மோடி கார் ஒன்றில் மக்கள் திரளுக்கு நடுவே செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கொரனாவை நமது பிரதமர் மோடியே தலைமையேற்று பரப்பி செல்லும் காட்சி. புல்லரிக்குது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவை Sumathy Anbarasu […]

Continue Reading

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா; மகிழ்ச்சியில் மோடி: புகைப்படம் உண்மையா?

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா மகிழ்ச்சியில் பிரதமர் மோடி திளைத்த போது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மோடி ஹெலிகாப்டரில் இருந்து இங்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி மட்டற்ற மகிழ்ச்சியில் திளைத்தது போது… உலகத்திலேயே நோய் தோற்றுப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இந்தியா.. அதிக […]

Continue Reading

ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா என்று பரவும் வதந்தி!

ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கிய ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா என்று செய்தி ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் தகவல் பரவி வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Article Link Archived Link ராமர் கோவில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு இன்று கொரோனா என்று Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. 2020 ஆகஸ்ட் 5ம் தேதி […]

Continue Reading

அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்ற கூட்டமா இது?

அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டும் விழாவையொட்டி கூடிய கூட்டம் எனக் கூறி பழைய புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link G P Sai Kumar என்பவர் பகிர்ந்திருந்த பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வெளியிட்டுள்ளனர். அதில், காவி கொடியோடு ஊர்வலம் செல்லும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. மேலும், “இன்று அயோத்தியில் கூடிய கூட்டம்… கொரோனா பரவலுக்கு ஊரடங்குக்கு முன்பு தில்லியில் கூடிய தப்லீக் ஜமாத் […]

Continue Reading

ராஜஸ்தானில் சாதி வெறி காரணமாக தலித் நபரை தாக்கி சிறுநீர் குடிக்க வைத்தனரா!

ராஜஸ்தானில் சாதி வெறி காரணமாக தலித் பிரிவைச் சேர்ந்த ஒருவர் தாக்கப்பட்டு, சிறுநீர் குடிக்க கட்டாயப்படுத்தி சித்ரவதை செய்யப்பட்டதாக, சமூக ஊடகங்களில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived link 1 Archived link 2 மரத்தில் ஒருவர் கட்டப்பட்டுள்ளார். அவருக்கு மது பாட்டிலில் எதையோ குடிக்க கொடுக்கின்றனர். நிலைத் தகவலில், “ராஜஸ்தானில் தலித் ஒடுக்குமுறை உச்சத்தில் உள்ளது. சிலர் சாதிக் கும்பலில் ஒரு தலித்தை […]

Continue Reading

மோடிக்காக ரூ.8458 கோடி கொடுத்து வாங்கப்படும் விமானத்தின் படமா இது?

மோடிக்காக 8458 கோடி ரூபாய் செலவில் வாங்கப்படும் விமானத்தின் படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சொகுசு விமானத்தின் உட்புறப் பகுதி படம் பகிரப்பட்டுள்ளது. அதன் மேல், “இது 5 ஸ்டார் ஹோட்டல் அல்ல… மோடிக்காக வாங்கப்படும் புதிய விமானம்! பிரதமருக்காகத் தயாராகும் வான்வெளி வீடு ரூ.8,458 கோடி செலவில் நவீன விமானம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  நிலைத் தகவலில், […]

Continue Reading

காளஹஸ்தியில் நிஜ நாகத்துக்கு தீபாராதனை செய்யப்பட்டதா?

காளஹஸ்தியில் நிஜ நாகத்துக்கு தீபாராதனை நடந்ததாகக் கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 கோவில் கருவறைக்கு அருகில் ஒருவர் பாம்பை பிடித்தபடி நிற்க, அர்ச்சகர் அதற்கு பூஜை செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளனர். வீடியோவில் காளஹஸ்தியில் நிஜ நாகத்துக்கு தீபாராதனை என எழுதப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவை Panu Mathi என்பவர் Senthil Ganesh Rajalakshmi […]

Continue Reading

அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை விழா ஸ்பெயினில் தொடங்கியதா?

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதையொட்டி ஸ்பெயினில் உள்ள இந்துக்கள் விழா கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர், என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1  Archived Link 2 வெளிநாட்டில் காவி கொடியோடு பேண்ட் வாத்தியம் முழங்க ஊர்வலம் செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஸ்பெயினில் அயோத்தி ராமர் கோயிலுக்கான பூமி பூஜா தொடக்கம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Siva […]

Continue Reading

ராமர் கோயில் பூமி பூஜையில் ராஜீவ் காந்தி கலந்துகொண்டாரா?

‘’ராமர் கோயில் பூமி பூஜையில் ராஜீவ் காந்தி கலந்துகொண்டார்,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், இந்து மத சன்னியாசிகள் சிலருடன் ராஜீவ் காந்தி நிற்கும் புகைப்படத்தை இணைத்து, அதன் மேலே, ‘’ ராமர் கோவில் பூமி பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருப்பதாக இணையத்தில் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், முன்னாள் இந்திய பிரதமர் […]

Continue Reading

ரஃபேல் விமானத்துக்கு எரிபொருள் நிரப்பும் காட்சி- தவறான வீடியோ!

ரஃபேல் போர் விமானத்துக்கு எரிபொருள் நிரப்பும் வீடியோ, என்று கூறி சில விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link எரிபொருள் டேங்கர் விமானத்தில் இருந்து மற்றொரு விமானத்துக்கு எரிபொருள் நிரப்பப்படும் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பூமியில் இருந்து 30000அடி உயரத்தில் ரஃபேல் விமானத்திற்கு எரிபொருள் நிரப்பப்படும் காட்சி….!” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை நமது […]

Continue Reading

அஸ்ஸாமில் பால் கொடுத்த பசுவை தாயாக நினைத்து பழகும் சிறுத்தை!- ஃபேஸ்புக் வதந்தி

அஸ்ஸாமில் பால் கொடுத்து வளர்த்த பசுவை தாயாக சிறுத்தை ஒன்று கருதி அதனுடன் பழகி வருகிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பசுவோடு சிறுத்தை ஒன்று அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “அஸ்ஸாமில் ஒரு கிராமத்தில் ஒருவர் பசுமாடு ஒன்றை வாங்கி வந்துள்ளார். இரவில் நாய்கள் குரைத்துள்ளன. கிராமத்தினர் ஊரடங்கை சாக்காக வைத்து திருடர்கள் வருகிறார்களோ என்று […]

Continue Reading

மத்திய அரசு ராமாயண தபால் தலையை 2020 ஜூலையில் வெளியிட்டதா?

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ள நிலையில் 2020 ஜூலை 25ம் தேதி ராமாயண காட்சிகள் தபால் தலையை வெளியிட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ராமாயண காட்சிகள் ஸ்டாம் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இன்று மத்திய அரசால் வெளியிடப்பட்ட புனித நூல் ராமாயண ஸ்டாம்ப்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Kumar Kumar […]

Continue Reading

சத்யராஜ் மகள் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இதுவா?

‘’பகுத்தறிவு பேசும் சத்யராஜின் மகள் திருமணம் பிராமணர் மந்திரம் ஓத நடந்தது,’’ என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link திருமணம் ஒன்றின் படங்கள் கொலாஜ் செய்யப்பட்டு பகிரப்பட்டுள்ளது. அதின் மீது, “பெரியார் மண்ணு, தேங்காய் பண்ணு என்று வீரவசனம் பேசுற பகுத்தறிவு பகலவன் சத்யராஜ், தன் மகள் திருமணத்தை பிராமணர் தாலி மந்திரம் ஓத நடத்திய அற்புத தருணம். பகுத்தறிவு […]

Continue Reading

காவி உடுத்தி பூணூல் அணிந்து வந்த பாதிரியார்! – ஃபேஸ்புக் வதந்தி

பாதிரியார் ஒருவர் காவி உடை உடுத்தி, பூணூல் அணிந்து மதமாற்ற நடவடிக்கையில் இறங்கியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Archived Link 1 Facebook Link 2 Archived Link 2 காவி உடுத்தி பூணூல் அணிந்த ஒருவர் மைக் பிடித்து பேசுகிறார். அருகில் கிறிஸ்தவ பாதிரியார் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். படத்தின் மீது “காவி உடுத்தி பூணூல் அணிந்த பாதிரியார். […]

Continue Reading

சபரிமலை ஐயப்பன் மாலை போட்டு ஏமாற்றும் கிறிஸ்தவர்கள்? முழு விவரம் இதோ!

சபரிமலை யாத்திரிகர்கள் போல ஐயப்பன் மாலை போட்டு கிறிஸ்தவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஐயப்ப பக்தர்கள் முழங்கால் படியிட்டு வழிபாடு நடத்தும் புகைப்படம் மற்றும் அவர்களுடன் பாதிரியார் ஒருவர் பேசும் படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “இவர்கள் எல்லாம் சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் தவறு. இதுகள் எல்லாம் […]

Continue Reading

இஸ்லாமிய புனித பயணத்திற்கு மகளை வழியனுப்பினாரா சுப்பிரமணியன் சாமி?

இஸ்லாமிய புனித பயணம் செல்லும் தன்னுடைய மகளை வழியனுப்ப வந்த சுப்பிரமணியன் சுவாமி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இஸ்லாமிய பெண்களுடன் சுப்பிரமணியன் சுவாமி இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அந்த படத்தின் மீது “வெச்சான் பாருங்க ட்விஸ்ட். உம்ராவுக்கு போகும் தன் மகளை வழியனுப்ப வந்த சுப்பிரமணிய சுவாமி” என எழுதப்பட்டுள்ளது. இந்த பதிவை அ.இல.சிந்தா என்பவர் […]

Continue Reading

ஷூ பாலிஷ் செய்யும் சிறுவன் அரசு பொதுத் தேர்வில் 93% மதிப்பெண் பெற்றது உண்மையா?

அரசு பொதுத் தேர்வில் ஷூ பாலிஷ் செய்யும் சிறுவன் ஒருவன் 500க்கு 465 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் படம் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் பற்றி ஆய்வு நடத்தினோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ‘ஷூ பாலிஷ் செய்யும் சிறுவன் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பகலில் 12 மணி நேர மக்களின் அழுக்கான ஷூக்களை பாலிஷ் செய்த #C _ ravidas.. இரவில் படித்தது, 465 of 500 […]

Continue Reading

மூன்று நிமிடத்திற்கு மேல் காத்திருந்தால் சுங்கச் சாவடி கட்டணம் கிடையாதா?

‘’3 நிமிடத்திற்கு மேல் காத்திருந்தால் சுங்கச்சாவடி கட்டணம் கிடையாது,’’ என்று கூறி கடந்த சில ஆண்டுகளாகவே பகிரப்படும் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், கடந்த 2017ம் ஆண்டு ஜூலையில் பகிரப்பட்ட பதிவை மெமரீஸ் முறையில் ஜூலை 19, 2020 அன்று மறுபகிர்வு செய்துள்ளனர். இதனை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப்பில் அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். எனவே, இந்த செய்தி எப்படி […]

Continue Reading

ரிஷிகேஷில் உள்ள முருகன் கோயிலா இது?

ரிஷிகேஷில் உள்ள முருகன் கோயில் கொடி மரத்தின் மீது மயில் அமர்ந்ததாகக் கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 கோவில் கொடி மரணத்தின் மீது மயில் ஒன்று பறந்து வந்து அமர்கிறது. நிலைத் தகவலில், “திரு முருகன் கோவில் (ரிஷிகேஷ் உத்தரகண்ட்)” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை RSS TAMILNADU ☑ என்ற ஃபேஸ்புக் […]

Continue Reading

திருப்பதி தேவஸ்தான தலைவரின் மனைவி பைபிள் வைத்திருந்தாரா? முழு விவரம் இதோ!

திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி கிறிஸ்தவர், அவரது மனைவி பைபிள் வைத்திருந்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகனுக்கு அவரது தாயார் முத்தம் கொடுப்பது போன்ற படத்தை பகிர்ந்துள்ளனர். அருகில் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி உள்ளார். கையில் பைபிள் வைத்தபடி ஒருவர் உள்ளார். அந்த படத்துடன் பதிவு ஒன்று உள்ளது. அதில், […]

Continue Reading

மழை நீர் தேங்கிய மருத்துவமனை புகைப்படம் பீகாரில் எடுக்கப்பட்டது இல்லை!

பீகார் மருத்துவமனை வார்டுக்கு உள்ளே தண்ணீர் தேங்கி நிற்கும் புகைப்படம் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மருத்துவமனை வார்டுக்குள் தண்ணீர் தேங்கி நிற்கும் புகைப்படம், டாக்டர் ஒருவர் டிரை சைக்கிளில் வெள்ளத்துக்கு இடையே அழைத்துச் செல்லப்படும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பீகார் அரசு மருத்துவமனையின் அவலநிலையை பாருங்கள்..!!! மருத்துவர்கள், மருத்துவமனை எங்கும் சாக்கடை நீரால் நிரம்பி […]

Continue Reading

பீகாரில் ரூ.264 கோடியில் கட்டிய பாலம் 29 நாளில் விழுந்ததா?

பீகாரில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சியில் ரூ.264 கோடியில் கட்டப்பட்ட பாலம் 29 நாளில் இடிந்து விழுந்தது என்று குறிப்பிட்டு ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சமீபத்தில் பீகாரில் பாலம் இடிந்து விழுந்ததாக செய்திகள் வெளியானது. அந்த புகைப்படத்துடன் மோடி படத்தை இணைத்து பதிவிட்டுள்ளனர். படத்தின் மீது, “பீகாரில் பாஜக கூட்டணி மெகா ஊழல். ரூ.264 கோடியில் கட்டி […]

Continue Reading

ஊடகங்கள் நடுநிலை தவறி நடக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் போலி ட்வீட்!

ஊடகங்கள் நடுநிலை தவறி நடப்பதாக பேச்சு அடிபடுகிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு ட்வீட் ஸ்கிரீன்ஷாட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று வாசகர்கள் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து அது பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஸ்டாலின் ட்வீட் செய்தது போன்ற ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “சில நாட்களாக சமூக வலைதளங்களில், ஊடகங்கள் நடுநிலை தவறி நடப்பதாக பேச்சு அடிப்படுகிறது. இந்நிலையில் தமிழ் நாட்டிலேயே கலைஞர் தொலைக்காட்சி […]

Continue Reading