
‘’மு.க.ஸ்டாலினை பார்த்து, பசுக்களுக்கு உரிமைத் தொகை வழங்கத் தயாரா என்று கேட்ட எல்.முருகன்,’’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வைரலாக பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இதில், News J ஊடகத்தின் லோகோ இடம்பெற்றுள்ள நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அந்த கார்டில், ‘’குடும்பத் தலைவிக்கு உரிமைத் தொகை வழங்குவதற்கு பதிலாக இந்துக்களின் தாயான பசுவிற்கு வழங்கத் தயாரா – ஸ்டாலினுக்கு எல்.முருகன் கேள்வி,’’ என்று எழுதியுள்ளனர்.
இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
இந்த நியூஸ் கார்டு உண்மையா என்று நாம், நியூஸ் ஜே தரப்பில் விசாரித்தோம். அவர்கள், ‘’இது போலியானது, எங்களது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலேயே உண்மையான நியூஸ் கார்டை நீங்கள் தேடிக் கண்டுபிடிக்கலாம்,’’ என தெரிவித்தனர்.
இதன்படி, நாமும் அவர்களது ஃபேஸ்புக் பக்கம் (NewsJTamil) சென்று தகவல் தேடினோம். மார்ச் 08, 2021 அன்று குறிப்பிட்ட நியூஸ் கார்டை பகிர்ந்திருந்தனர். ஆனால், அதில் இருந்த தகவல் வேறு ஒன்றாக இருந்தது.
எனவே, எல்.முருகன் பேசியது வேறு ஒன்றாக இருக்க, அதனை எடிட் செய்து, அவர் பசுக்களுக்கு உரிமைத் தொகை கேட்டார் என்பது போன்ற போலியான தகவலை சேர்த்து, வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:பசுக்களுக்கு உரிமைத் தொகை வழங்கத் தயாரா என்று எல்.முருகன் கேட்டாரா?
Fact Check By: Pankaj IyerResult: Altered

I apologize for sharing this believing it to be true