பெற்றோர் அனுமதி இன்றி திருமணம் செய்தால் சொத்துரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் சொன்னதா?

‘’பெற்றோர் அனுமதி இன்றி திருமணம் செய்தால் சொத்துரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் அதிரடி,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில் பாலிமர் டிவியின் பெயரில் வெளியான நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர்.  உண்மை அறிவோம்:மேற்கண்ட செய்தி பார்க்க உண்மை போலவே இருப்பதால், இதுபற்றி ஃபேஸ்புக்கில் வேறு யாரேனும் தகவல் பகிர்ந்துள்ளனரா என விவரம் […]

Continue Reading

சீனாவை எதிர்த்து இந்திய ராணுவத்துடன் இணைந்த இஸ்ரேல் ராணுவம்?- ஃபேஸ்புக் வதந்தி

சீனாவை எதிர்த்து இந்திய ராணுவத்துடன் இஸ்ரேல் ராணுவம் இணைந்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பதிவு பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அயல் நாட்டு ராணுவ வீரர்கள் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ராணுவத்துடன் இணைந்தது….. இஸ்ரேல் ராணுவம்….. பாரத் மாதகி ஜெய்….” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Bharath Bharath என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2020 மே 27ம் தேதி […]

Continue Reading

மாஸ்க் இன்றி கூடிய கூட்டம்… லாக் டவுன் காலத்தில் எடுக்கப்பட்ட வீடியோவா?

மாஸ்க் இன்றி, சமூக இடைவெளி இன்றி கூடிய மிகப்பெரிய கூட்டம் என்று சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 சாலையில் இளைஞர்கள் திரண்டு நிற்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. இது எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் அந்த வீடியோவில் இல்லை. நிலைத் தகவலில், “மாஸ்க்காவது சமூக விலகலாவது பசி வந்தா பத்தும்பறக்கும்.பிஜேபியால் இந்தியாவின் ஒட்டு […]

Continue Reading

மோடி அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கப்பட்ட ராணுவ வாகனமா இது?

மோடி அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கப்பட்ட உடனடி பாலம் அமைக்கும் ராணுவ வாகனம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ராணுவ டேங்க் போன்ற வாகனங்கள் ஆற்றுக்குள் சென்று பாலம் போன்ற அமைப்பை ஏற்படுத்துகின்றன. அவற்றின் மீது ராணுவ வாகனங்கள் பயணிக்கின்றன. எந்த இடத்திலும் இந்திய ராணுவத் தளவாடம் என்பதற்கான அடையாளம் […]

Continue Reading

உ.பி செல்லாமல் வழி தவறி ஒடிஷா வந்த ரயில்; ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

மராட்டியத்திலிருந்து கோரக்பூர் செல்ல வேண்டிய ரயில் தடம் மாறி ஒடிஷா வந்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ரயில் படத்துடன் கூடிய புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “மராட்டியத்திலிருந்து கோரக்பூர் செல்ல வேண்டிய ரயில் தடம் மாறி ஒரிசா சென்று விட்டது. இந்த மாதிரி கூத்துலாம் எங்காவது நாம பார்த்திருப்போமா… டிஜிட்டல் இந்தியா ஹே” என்று […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் தலித் என்பதால் பெண் வியாபாரி தாக்கப்பட்டாரா?

உ.பி-யில் தலித் என்பதாலேயே வியாபாரம் செய்த பெண் ஒருவர் தாக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 போலீசார் முன்னிலையில் பெண் ஒருவரை அடிக்கும் வீடியோ காட்சி பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தலித் பெண் வியாபாரம் செய்தால் உங்களுக்கு என்ன பிரச்சனை. அவர்களும் இந்துக்கள் இல்லயா, #பூணுல் மட்டும்தான் #இந்துக்களா காவிநாயே. உபியில் அரங்கேறிய சம்பவம்” என்று […]

Continue Reading

சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்று சிபிஎம் கட்சி கூறியதா?

‘’சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை அனுமதிக்க மறுத்து போராட்டம் அறிவித்துள்ள கேரள கம்யூனிஸ்ட் கட்சி,’’ எனும் தலைப்பில் பகிரப்பட்டு வரும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link ‘’இந்தியாவிற்குள் தொழில் தொடங்க வரும் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்க மறுத்து கேரள கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதையொட்டி, மே 22ம் தேதி போராட்டம் கூட அறிவித்துள்ளது,’’ என்று மேற்கண்ட ஃபேஸ்புக் […]

Continue Reading

மஹா ராணா பிரதாப் பயன்படுத்திய போர் வாளா இது? – ஃபேஸ்புக் வதந்தி

மஹா ராணா பிரதாப் என்ற மன்னர் பயன்படுத்திய வாள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பழங்கால வாள் ஒன்றின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “நம் பூர்வ மண்ணின் மைந்தர் சக்கரவர்த்தி  மஹாராணா பிரதாப் போர்க்களத்தில் பயன்படுத்திய 50 கிலோ எடைகொண்ட  போர் வாள். நம்மால் வாளை தூக்கக்கூட முடியாது வாளை சுழற்றி சண்டையிடுவது என்பது நினைத்து கூட […]

Continue Reading

புலம்பெயர் தொழிலாளர்கள் மோடி உருவபொம்மையை செருப்பால் அடித்தார்களா?

சொந்த ஊர் திரும்பிய வடஇந்தியர்கள் மோடியின் உருவ பொம்மையை செருப்பால் அடித்ததாக, ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 மோடி உருவ பொம்மையை சுற்றி அமர்ந்து பெண்கள் செருப்பால் அடிக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “விழித்துகொண்ட ஊருக்கு போன வடக்கன் லடுக்கிகள்…” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த வீடியோவை, Anbarasu Natarajan என்பவர் 2020 மே […]

Continue Reading

மேற்கு வங்கத்தில் மோடியை நோக்கி சௌகிதார் சோர் ஹே கோஷம் எழுப்பப்பட்டதா?

மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடியை எதிர்த்து சௌகிதார் சோர் ஹே கோஷம் எழுப்பப்பட்டதாக, சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ஆம்பன் புயல் பாதிப்பை பார்வையிட சென்ற பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி உள்ளிட்டவர்கள் ஹெலிகாப்டரில் ஏறச் செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஹெலிபேட் அமைக்கப்பட்ட இடத்தில் திரண்டிருந்தவர்கள் சௌகிதார் சோர் ஹே அதாவது காவல்காரன் ஒரு […]

Continue Reading

அயோத்தி ராமர் கோவில் கட்டும் இடத்தில் கிடைத்த சிவலிங்கமா இது?

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் இடத்தில் கிடைத்த சிவ லிங்கம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சங்கிலியால் கட்டி தூக்கப்படும் சிவலிங்கம் ஒன்றின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “ராமர் கோவில் அஸ்திவாரம் தோண்டறப்பொ கிடைச்ச சிவலிங்கம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Chandra Sekkar என்பவர் 2020 மே 24ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் […]

Continue Reading

திருச்சி விமான நிலையம் தமிழக அரசுக்குச் சொந்தமானதா? உண்மை அறிவோம்!

‘’திருச்சி விமான நிலையம் தமிழக அரசுக்குச் சொந்தமானது,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். அதில் கிடைத்த தகவல்களை கீழே இணைத்துள்ளோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link  இந்த பதிவை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளது போல உண்மையில், திருச்சி விமான நிலையம் தனியாருக்குச் சொந்தமானதா என்ற சந்தேகத்தில் தகவல் தேட தொடங்கினோம்.  இதன்படி, […]

Continue Reading

கரையை கடந்த ஆம்பன் புயல் என்று கூறி பகிரப்படும் பழைய வீடியோ!

மேற்கு வங்க மாநிலம் திகாவில் பலத்த சூறைக்காற்றுடன் கரையைக் கடந்த ஆம்பன் புயல் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ஒன் இந்தியா தமிழின் ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், பெட்டிக்கடை போல தென்படும் ஒரு சிறிய கட்டிடம் புயல் காற்றில் நொருங்கி விழுகிறது. மே 20, 2020 அன்று இந்த வீடியோ […]

Continue Reading

மோடிக்கு வணக்கம் சொன்ன மம்தா பானர்ஜி- முழு உண்மை இதோ!

‘’மோடியை மதிக்காத மம்தா பானர்ஜி, எவ்ளோ கெஞ்சியும் வணக்கம் வைக்கல,’’ என்ற தலைப்பில் வித விதமாக பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவுகளின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதேபோன்ற தகவலை மேலும் பகிர்ந்து வருகின்றனர். சிலர் இதுதொடர்பான வீடியோ கூட பகிர்வதைக் காண முடிகிறது.  Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: மேற்கு வங்கம் மாநிலத்தில் ஆம்பன் புயல் கோர தாண்டவமாடியது. இதனால், அங்கு […]

Continue Reading

சாலையில் வரிசையாக சரிந்து கிடக்கும் லாரிகள்; ஆம்பன் புயல் காரணமா?

120 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு வங்கத்தை தாக்கிய ஆம்பன் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு என்று வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 1.16 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரிகள் சரிந்து கிடக்கின்றன. வீடியோவில், லாரி இயக்கப்படும் சப்தம் மட்டுமே கேட்கிறது. இது எங்கே […]

Continue Reading

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளித்த சீக்கியர்கள்: புகைப்படம் உண்மையா?

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சீக்கியர்கள் மருத்துவ சிகிச்சை அளித்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாலை ஓரமாக ஏழை மக்களுக்கு சீக்கியர்கள் சிகிச்சை அளிக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “போற்றுதலுக்குரிய புகைப்படம். ஆயிரக்கணக்கான தூரங்கள் நடந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சீக்கியர்கள் செய்யும் அவசிய சேவை” என்று குறிப்பிட்டுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து […]

Continue Reading

ராகுல் காந்தி சந்தித்தது புலம்பெயர் தொழிலாளர்கள் இல்லை என்று பகிரப்படும் வதந்தி!

வெளிமாநில தொழிலாளர்களை ராகுல் காந்தி சந்தித்ததாக வெளியான படத்தில் உள்ளவர் உண்மையில் வெளிமாநில தொழிலாளர் இல்லை… ஷூட்டிங் முடிந்து அவர் காரில் புறப்பட்ட போது எடுத்த படம் என்று சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ராகுல் காந்தி புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்த புகைப்படமும் அவர் சந்தித்த தொழிலாளர்கள் காரில் புறப்பட்டு சென்ற படமும் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வெளிமாநில தொழிலாளர் […]

Continue Reading

குடிநீர் குழாயில் தண்ணீர் குடித்ததால் தலித் பெண் தாக்கப்பட்டாரா?- ஃபேஸ்புக் வதந்தி

இந்தியாவில் குடிநீர் குழாயில் தண்ணீர் குடித்ததற்காக தலித் பெண் தாக்கப்பட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தலையில் மிகப்பெரிய வெட்டுக் காயத்துடன், முகம் முழுக்க ரத்தம் வடிந்தபடி உள்ள பெண்ணின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “இந்தியா, இந்து மதத்தால் அழிந்துவிடும். குடிநீர் குழாயில் தண்ணீர் குடித்ததற்காக தலித் பெண் தாக்கப்பட்டுள்ளார். இடம் – முபாரக்பூர்” என்று குறிப்பிட்டு ஒரு […]

Continue Reading

பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்ட நபர்களை கண்டுகொள்ளாத உத்தவ் தாக்கரே!- உண்மை என்ன?

மகாராஷ்டிராவில் வடாலா ரயில் நிலையத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷம் எழுப்பப்பட்டதாகவும் இதை மகாராஷ்டிராவின் சிவசேனா முதல்வர் உத்தவ் தாக்கரே கண்டுகொள்ளவில்லை என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ரயில் நிலையத்தில் அரசியல் தலைவர் போல உள்ள ஒருவர் தன்னுடைய குழுவினருடன் நடந்து செல்கிறார். ரயில் ஏற நின்றிருந்த சிலர் ஜிந்தாபாத் என்று குரல் […]

Continue Reading

புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பேருந்துகள்- புகைப்படம் உண்மையா?

உத்தரப்பிரதேச தொழிலாளர்களுக்காக பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பஸ்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாலையோரம் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகள் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது ரயில் அல்ல! புலம்பெயர்ந்த உ.பி தொழிலாளிகளுக்காக இளம் இந்திரா பிரியங்கா காந்தி அவர்கள் அனுப்பிய பேருந்துகள்! ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, பலரும் ஷேர் செய்து வருகின்றனர். […]

Continue Reading

சிவில் சர்வீஸ் மெயின் தேர்வில் கர்நாடக பஸ் கண்டக்டர் வெற்றி என பரவும் வதந்தி

கர்நாடகாவில் அரசு பஸ் கண்டக்டர் ஒருவர் சிவில் சர்வீஸ் மெயின் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நடத்துனர் ஒருவரின் படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “பெங்களூரு அரசு பேருந்தில் கண்டக்டராக இருந்த மது என்பவர் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிக்கான யுபிஎஸ்சி மெயின் தேர்வில் தேர்ச்சி. கண்டக்டராக இருந்தவர் கலெக்டராகும் தேர்வில் வெற்றி.. சாதாரண […]

Continue Reading

மோடி உருவ பொம்மையை எரிக்கும் வெளிநாட்டினர்!- ஃபேஸ்புக் தகவல் உண்மையா?

மோடியின் உருவ பொம்மையை வெளிநாட்டினர் எரிப்பதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Facebook Link 2 Archived link 1 Archived link 2 மோடியின் உருவபொம்மை எரிக்கப்படும் வீடியோ ஒன்றை Iŋterŋatiioŋal Ƿwįƞçǯzx என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்ட நபர் 2020 மே 15ம் தேதி ஷேர் செய்திருந்தார். இதன் அசல் பதிவு, Alawdeen Shaikalawdeen என்பவரால் 2019ம் ஆண்டு […]

Continue Reading

இனி கைலாஷ் யாத்திரை செல்ல சீனாவின் அனுமதி தேவையில்லை?- ஃபேஸ்புக்கில் பரவும் உளறல்

இனி கைலாஷ் யாத்திரை செல்ல சீனாவின் அனுமதி தேவையில்லை என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கைலாஷ் மானசரோவர் புகைப்படத்துடன் கூடிய பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “இனி கைலாஷ் யாத்திரை செல்ல சீன அனுமதி தேவையில்லை… டெல்லியில் இருந்து கைலாஷ் மானஸ்ரோவர் இனி 750 கிலோமீட்டர் மட்டுமே. இந்துக்களின் கனவுத்திட்டத்தை நனவாக்கியது இந்திய இராணுவம். ஹெலிகாப்டரில் பாட்டன் டேங்கிகளையும், பீரங்கிகளையும் […]

Continue Reading

கைக்குழந்தை உடன் ரயில் பெட்டிகள் இடையே பயணிக்கும் பெண்– வீடியோ உண்மையா?

‘’மோடியின் செயல்பாடுகளால் ரயில் பெட்டிகள் இணைப்பு கம்பிகள் மீது கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் அமர்ந்து செல்கிறார்,’’ என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ரயில் பெட்டிகள் இணைப்புப் பகுதி மீது கைக்குழந்தையுடன் அமர்ந்து பயணிக்கும் பெண்மணியின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியாவின் செயல்பாடுகள் உலகத்தையே திரும்பப் பார்க்க வைத்துள்ளது. மோடியின் செயல்பாடுகளை உலகமே பாராட்டுகிறது […]

Continue Reading

கொரோனா ஊரடங்கு; சாலையில் நடந்து சென்றதால் காயமடைந்தவரா இந்த பெண்?

ஊரடங்கு காரணமாக சாலையில் நடந்து சென்றதால் பாதங்கள் கிழிந்ததாக ஒரு மூதாட்டியின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கிழிந்த தன்னுடைய பாதங்களைக் காட்டும் மூதாட்டியின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “ஆட்சியாளர்களே கொஞ்சமாவது இரக்கம் வரவில்லையா…. நடந்து நடந்து கால்கள் பிய்ந்தது தான் மிச்சம். . வீடு வரவில்லை…” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Abdul Rahman என்பவர் மே 14ம் தேதி பகிர்ந்துள்ளார். […]

Continue Reading

கொரோனா ஊரடங்கு; இந்த வயதான நபர் நடந்தே சொந்த ஊர் செல்கிறாரா?

‘’கொரோனா ஊரடங்கு காரணமாக எந்த போக்குவரத்து வசதியும் இன்றி சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் நபர்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்:  இதனை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே நமக்கு அனுப்பி உண்மைத்தன்மை பற்றி பரிசோதிக்கும்படி கேட்டுக் கொண்டார். அதன்பேரில் தகவல் தேட தொடங்கினோம்.  Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:வயதான முதியவர் தனது குடும்பத்தினருடன் கண்ணீர் மல்க […]

Continue Reading

மும்பையில் இருந்து மேற்கு வங்கம் சென்ற தொழிலாளர்கள் ரயில் வீடியோ உண்மையா?

மும்பையிலிருந்து மேற்கு வங்கம் சென்ற ரயில் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ரயில் இன்ஜின் முழுக்க பயணிகள் தொங்கியபடி செல்லும் ரயில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளனர். 2.15 நிமிடம் இந்த வீடியோ செல்கிறது. வீடியோவில், “மும்பையில் இருந்து மேற்கு வங்கம் சென்ற ரயில், 10-5-2020” என குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில் டிஜிட்டல் […]

Continue Reading

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மீட்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டதா?

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் மீட்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டுவிட்டது என்று சமூக ஊடகங்களில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இந்தியக் கொடியின் நிறம் அடிக்கப்படுவது போன்ற வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கூகுள் மேப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு எல்லை கோட்டை (loc) எடுத்து விட்டது. இனி ஒரே #காஷ்மீர் […]

Continue Reading

ஏர் இந்தியா விமானத்தை திருப்பி அனுப்பியதா கத்தார் அரசு?

‘’ஏர் இந்தியா விமானத்தை திருப்பி அனுப்பிய கத்தார் அரசு, அசிங்கப்பட்ட மோடி,’’ எனும் தலைப்பில் ஷேர் செய்யப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link  Facebook Claim Link Archived Link இதேபோல, மேலும் சில ஃபேஸ்புக் பதிவுகளும் பகிரப்படுகின்றன.  Facebook Claim Link Archived Link இதே செய்தியை நமது வாசகர் ஒருவரும் வாட்ஸ்ஆப் மூலமாக அனுப்பி விளக்கம் கேட்டிருந்தார்.  […]

Continue Reading

இந்த சம்பவம் குஜராத்தில் நிகழவில்லை; முழு விவரம் இதோ!

‘’நோயாளி முன்னே புகை பிடிக்கும் குஜராத் அரசு மருத்துவர்,’’ என்ற தலைப்பில் ஷேர் செய்யப்படும் ஒரு பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  மேற்குறிப்பிட்ட தகவலை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே நமக்கு அனுப்பி வைத்தார். இந்த தகவல் வாட்ஸ்ஆப்பில் அதிகம் பகிரப்படுவதாகவும், இதன் நம்பகத்தன்மை பற்றி பரிசோதிக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.  இதே தகவலை ஃபேஸ்புக்கில் யாரேனும் பகிர்ந்துள்ளனரா என விவரம் தேடியபோது, சிலர் இதனை பகிர்ந்திருந்ததைக் […]

Continue Reading

அமித்ஷாவுக்கு புற்றுநோயா? ஃபேஸ்புக் வதந்தி

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எலும்பு புற்றுநோய் என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. மதம் சார்ந்த கருத்துக்களுடன் “Chondrosarcoma என்பது நாய்களுக்கு வரும் எலும்பு புற்றுநோய். அரிதாகத்தான் மனிதர்களுக்கு வருமாம். அதுவும் இடுப்பு எலும்பில் வந்தால் கடுமையான வேதனை இருக்குமாம். அமெரிக்கா-டெக்சாசில் உள்ள எம்.டி ஆண்டர்சன் கேன்சர் மருத்துவமனையில் அப்பாயின்ட்மென்ட் கிடைத்தும் […]

Continue Reading

பீகாரில் மூன்று பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சாதி காரணமா?

பீகாரில் சாதிய வன்கொடுமை காரணமாக மூன்று பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வரைலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பெண்களுக்கு மொட்டை போடுவது, தட்டில் எதையோ அருந்தச் செய்வது உள்ளிட்ட புகைப்படங்களை கொலாஜாக பகிர்ந்துள்ளனர். அவற்றின் மேல் மற்றும் கீழ் பகுதியில் போட்டோஷாப் முறையில் டைப் செய்துள்ளனர். அதில், “சாதிய வன்கொடுமை. பீகாரில் மூன்று பெண்களுக்கு மொட்டையடித்து மனித […]

Continue Reading

பாபா ராம்தேவ் கொரோனா நிவாரணம் கொடுத்ததால் ரூ.2212 கோடி கடன் தள்ளுபடியா? -உண்மை அறிவோம்

பாபா ராம்தேவ் கொரோனா நிவாரண நிதியாக ரூ.25 கோடி அளித்ததால், அவருடைய கடன் ரூ.2212 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பாபா ராம்தேவ், மோடியுடன் ராம்தேவ் இருக்கும் படங்களை வைத்து புகைப்பட பதிவு ஒன்றைத் தயாரித்துள்ளனர். அதில், நேற்று: பாபா ராம்தேவ் கொரோனா நிவாரணமாக 25 கோடி நிதியுதவி. இன்று: பாபா […]

Continue Reading

மசூதிக்குள் சாராய ஊரல் போட்ட இஸ்லாமியர்கள்?- ஃபேஸ்புக் விஷமம்!

கேரளாவில் மசூதிக்குள் கள்ளச்சாராய ஊரல் போட்ட இஸ்லாமியர்கள் கைது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரஷர் குக்கர், பிளாஸ்டிக் டப்பா, அடுப்பு ஆகியவற்றுடன் போலீசார் நிற்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கேரளா காஸர்கோட்டில் மசூதிக்குள் கள்ள சாராயம் ஊரல் போட்ட டப்லீசை வெளுத்து வாங்கிய கேரள காக்கிகள்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவைத் தமிழக இந்துக்கள் […]

Continue Reading

அயோத்தியில் பசி காரணமாக சாது மரணம் அடைந்தாரா?- ஃபேஸ்புக் வதந்தி

அயோத்தியில் பசி காரணமாக வயதான சாமியார் ஒருவர் உயிரிழந்ததாக சமூக ஊடகங்களில் ஒரு படம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link வயதான பெரியவர் ஒருவர் இறந்து கிடக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அயோத்தியில் பசியால் மரணமடைந்த சாது. மத்தபடி அடிச்சி கொன்னா மட்டும்தான் குற்றம். பசில செத்தா பிரச்சனை இல்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Anas Bin Asraf என்பவர் 2020 […]

Continue Reading

கேரள அரசு கொடுத்த உணவைத் தூக்கி எறிந்த வட இந்திய தொழிலாளர்கள்… ஃபேஸ்புக் வீடியோ உண்மையா?

சொந்த ஊர் திரும்பும் வட இந்தியர்கள் ரயில் ஏறிய நிலையில் கேரள அரசு கொடுத்த உணவைத் தூக்கி வீசியதாக ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ஒரு நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை பகிர்ந்துள்ளனர். அதில், ரயில் நிலையத்தை ரயில் கடக்கிறது. நடைமேடையில் உணவு பொட்டலங்கள் சிதறிக் கிடக்கின்றன. ரயிலில் உள்ளவர்கள் போராட்டக் குரல் […]

Continue Reading

உ.பி வருமான வரித்துறை துணை கமிஷனர் வீட்டில் புதிய ரூபாய் நோட்டுகள் சிக்கியதா?

உ.பி-யில் வருமான வரித்துறை துணை கமிஷனர் வீட்டில் நடந்த சோதனையில் சிக்கிய புதிய ரூபாய் நோட்டுக்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link புதிய இரண்டாயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுக் கட்டுக்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உபி வருமான வரித்துறை துணை கமிஷ்னர் வீட்டில் நடந்த சோதனையில் சிக்கிய புதிய ரூபாய் நோட்டுகள்..!! பாஜக […]

Continue Reading

இந்திய தேசிய கீதம் பாடிய அமெரிக்கர்கள்? வைரல் தகவலின் முழு விவரம்!

கொரோனாவைக் குணப்படுத்த ஹைட்ராக்ஸிகுரோரோகுயின் மாத்திரை வழங்கிய இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்க அமெரிக்க மாணவர்கள் ஒன்றிணைந்து இந்திய தேசிய கீதத்தை பாடியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 வெளிநாட்டினர் இந்திய தேசிய கீதம் பாடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில், ஹைட்ரோக்சி குளோரோகுயின் மாத்திரை வழங்கிய இந்தியாவுக்கு நன்றி கூறும் வகையில் மாணவர்கள் பாடியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் […]

Continue Reading

சூரத்தில் இருந்து நடந்து சென்ற குடும்பம் தற்கொலை செய்துகொண்டதா?- ஃபேஸ்புக் வதந்தி

கொரோனா ஊரடங்கு காரணமாக சூரத்திலிருந்து நடந்து சென்ற குடும்பம் ஒன்று பசி கொடுமை தாங்க முடியாமல் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஏப்ரல் 6, 2020 அன்று இரா.செல்வ குமார் என்பவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருந்த பதிவை சரவணன் என்பவர் 2020 மே 2ம் தேதி ஷேர் செய்துள்ளார். குடும்பமே தற்கொலை செய்துகொண்ட […]

Continue Reading

ஜாய் ஆலூக்காஸ் அதிபர் துபாயில் தற்கொலை செய்துகொண்டாரா?- ஃபேஸ்புக் வதந்தி

ஜாய் ஆலூக்காஸ் அதிபர் தற்கொலை செய்து கொண்டதாக பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஜாய் ஆலூக்காஸ் அதிபர் அரக்கல் துபாயில் தற்கொலை செய்துகொண்டார் என்று செய்தித்தாள் ஒன்றில் வந்த செய்தி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. Sadiq Basha என்பவர் 2020 ஏப்ரல் 30ம் தேதி இந்த செய்தியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். Facebook Link Archived Link அதேபோல், ஜாய் […]

Continue Reading

இது ரிஷி கபூர் சாகும் முன்பாக எடுத்த வீடியோ இல்லை!

‘’ரிஷி கபூர் சாகும் முன்பு எடுத்த கடைசி வீடியோ,’’ என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்படும் ஒரு வீடியோவைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதேபோன்ற தகவலை பலரும் வைரலாக ஷேர் செய்து வருவதைக் காண முடிகிறது.  Facebook Claim Link 1 Archived Link Facebook Claim Link 2 Archived Link உண்மை அறிவோம்: பாலிவுட் நடிகர் ரிஷி […]

Continue Reading

சமூக இடைவெளியை பின்பற்றும் மிசோரம் மார்க்கெட்: புகைப்படம் உண்மையா?

மிசோரம் மாநிலத்தில் சமூக இடைவெளி சிறப்பாக கடைப்பிடிக்கப்படுகிறது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அழகாக இடைவெளி விட்டு காய்கறி உள்ளிட்ட பொருட்களை சாலையில் விற்க ஏற்பாடு செய்யப்பட்ட படங்களை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “மிசோரம் என்ற பகுதியும் நம்ம நாட்லதான் இருக்கு. எவ்வளவு அழகாக சமூக இடைவெளியை பின்பற்றி அனைவருக்கும் முன் உதாரணமாக இருக்கிறார்கள் இந்த மக்கள். பார்க்கவே […]

Continue Reading

இஸ்லாமியருக்கு அடைக்கலம் கொடுத்த இந்து பெண்ணை ஆர்எஸ்எஸ் தாக்கியதாக பரவும் வதந்தி!

இஸ்லாமிய குடும்பத்துக்கு அடைக்கலம் கொடுத்த இந்து பெண்ணை ஆர்.எஸ்.எஸ் காவி வெறியர்கள் தாக்கியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பெண்மணி ஒருவர் உணவு அருந்துகிறார், அவர் அருகில் மற்றொரு பெண்மணி நிற்கும் புகைப்படத்தையும், நிற்கும் பெண்மணியைப் போல உள்ளவர் முகத்தில் ரத்தக் காயம் உள்ள படத்தையும் பகிர்ந்துள்ளனர். அந்த படத்தின் மீது, “முஸ்லிம் குடும்பத்துக்கு அடைக்கலம் கொடுத்த இந்து […]

Continue Reading

கோதுமை மாவு பாக்கெட்டில் பணம் வைத்துக் கொடுத்தாரா அமீர்கான்?

கோதுமை மாவு பாக்கெட்டில் பணம் வைத்து இந்தி நடிகர் அமீர் கான் வழங்கியதாக பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நடிகர் அமீர் கான், மாவு பாக்கெட்டில் பணம் இருக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஒவ்வொரு மாவு பாக்கெட்டுக்குள்ளும் 15000 ரூபாய் ஏழைகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி. டில்லியில் ஏழைகள் வாழ்கிற பகுதிக்கு -23/04/2020- இரவில் ஒரு லாரி வந்தது. […]

Continue Reading

கேரளாவில் பூஜை செய்த பெண்ணை தாக்கிய கிறிஸ்தவ மிஷனரிகள்? உண்மை இதோ!

கேரளாவில் பரசுராம ஜெயந்தியைக் கொண்டாடிய தலித் பழங்குடியின பெண்ணை கிறிஸ்தவ மிஷனரிகள் தாக்கியதாக படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மூதாட்டி ஒருவரின் முகத்தில் ரத்தம் வடியும் புகைப்படம், கிருஷ்ணர் சாமி சிலை தரையில் உடைத்து வீசப்பட்டிருக்கும் படங்களைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், கேரளா, தலித் பழங்குடியின மூதாட்டி பரசுராம ஜெயந்தியை முன்னிட்டு இன்று பூஜை செய்த காரணத்தால் […]

Continue Reading

செவிலியரை இஸ்லாமியர் காலில் விழ வைத்த ஆந்திர எம்.எல்.ஏ?

ஆந்திராவில் டெல்லியில் நடந்த இஸ்லாமிய மாநாட்டுக்கு சென்று வந்தவர் காலில் செவிலியர் ஒருவரை எம்.எல்.ஏ விழ வைத்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இஸ்லாமியர் ஒருவர் காலை செவிலியர் ஒருவர் தொடுவது போன்ற படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்ட மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் செவிலியர் இவர். இவரை கர்னூல் தொகுதி எம்எல்ஏ மிரட்டி […]

Continue Reading

மாலத்தீவு முன்னாள் அதிபர் மடியில் சோனியா அமர்ந்திருக்கும் படம் உண்மையா!

சோனியா காந்தி மாலத்தீவு முன்னாள் அதிபர் மடியில் அமர்ந்திருப்பது போன்று போட்டோஷாப் செய்யப்பட்ட அநாகரீகமாக  படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். வதந்தியின் விவரம்: Facebook Link Archived Link மாலத்திவு முன்னாள் அதிபர் மாமூன் மடியில் சோனியா காந்தி நெருக்கமாக அமர்ந்திருப்பது போன்று எடிட் செய்யப்பட்ட படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “ஒவ்வொன்றாக அம்பலம் ஏறுகிறது அன்டானியோ மைனோவின் விஷமங்கள்.. கொரானா லாக்டௌன் ‘நல்லது’…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. […]

Continue Reading

மகாராஷ்டிராவில் சாதுக்களை கொன்றவர்களை போலீசார் அடித்து கைது செய்தனரா?

மகாராஷ்டிர மாநிலத்தில் சாதுக்களை அடித்து கொலை செய்த வன்முறை கும்பலை போலீசார் அடித்து கைது செய்தனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 2 நிமிடம் 10 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோவை பகிர்ந்துள்ளது. அதில் இளைஞர்கள், முதியவர்கள் என பலரையும் போலீசார் அடித்து விரட்டுகின்றனர். பார்க்க பலர் இஸ்லாமியர்கள் போல உள்ளனர். வீடு புகுந்தும் […]

Continue Reading

பசி தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட குடும்பம்; ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

ஊரடங்கு நேரத்தில் பசி கொடுமை காரணமாக உத்தரப்பிரதேசத்தில் ஐந்து பேர் தற்கொலை செய்துகொண்டதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தினரின் படம் ஒன்றை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “மோடியின் ஏழைகளை ஒழிக்கும் திட்டம் துவங்கிவிட்டது (பசியின் கொடுமையால் உத்தரப்பிரதேசத்தில் 5 பேரும் தற்கொலை செய்து கொண்டனர்)” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை தமிழன் மு.செ. பாலா […]

Continue Reading

மகாராஷ்டிராவில் சாதுக்களைக் கொன்ற இஸ்லாமியர்கள் என்று பரவும் தகவல் உண்மையா?

மகாராஷ்டிராவில் சாதுக்கள் மற்றும் கார் டிரைவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு மத சாயம் பூசும் வகையில் பல பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மகாராஷ்டிராவில் கிராம மக்களால் கொடூரமான முறையில் சாதுக்கள் அடித்து கொல்லப்படும் வீடியோ மற்றும் கொல்லப்பட்டவர்களின் படங்களை பகிர்ந்துள்ளனர். நிலைத்தகவலில், “மும்பை ….. பாலகர் மாவட்டம் காசாபகுதியில் தனது குருநாதர் மரணத்திற்கு சென்று கொண்டிருந்த இந்து சாதுக்களை […]

Continue Reading