‘கட்டில் ஆம்புலன்ஸ்’- இந்த வீடியோ குஜராத் மாநிலத்தில் எடுக்கப்பட்டதா?

‘’குஜராத்தில் கட்டிலில் சுமந்து செல்லப்படும் நோயாளி- வித்தியாசமான ஆம்புலன்ஸ் சேவை,’’ என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது பலரும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் இந்த தகவலை உண்மை என நம்பி பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived […]

Continue Reading

மோடி எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் கடிகார நேரம் 4:20 என்று இருந்ததா?

பிரதமர் மோடி ரயில் நிலையத்திற்குச் சென்ற போது, ரயில் நிலைய டிஜிட்டல் கடிகாரத்தில் 4:20 என்று இருந்தது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி ரயில் நிலையத்தில் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அவருக்கு பின்னால் இருக்கும் டிஜிட்டல் கடிகாரத்தில் நேரம் 4:20 என்று காட்டப்பட்டது போன்று இருந்தது. “கண்ணில் பட்டது” என்று குறிப்பிட்டு இந்த புகைப்படத்தை […]

Continue Reading

இந்துக்களிடம் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறினாரா?

ரஜினிகாந்த் ஏ.ஆர்.ரஹ்மானுடன் தர்காவுக்கு சென்றது மிகப்பெரிய தவறு, இதற்காக இந்துக்களிடம் ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் தர்கா சென்று வழிபாடு செய்த புகைப்படம் மற்றும் அர்ஜூன் சம்பத் படத்தை ஒன்று சேர்த்து நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “காவியை அவமதிக்காதீர்கள் ரஜினி… தர்காவுக்கு பச்சை துண்டு அணிந்து […]

Continue Reading

அண்ணாமலை அலுவலகத்தில் மோடி, நட்டா படங்களுடன் நித்தியானந்தா புகைப்படமும் இருந்ததா?

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நிர்வாகிகளைச் சந்தித்த இடத்தில் பாஜக முன்னோடிகள் புகைப்படத்துடன் நித்தியானந்தா படமும் மாட்டப்பட்டிருந்ததாக சிலர் புகைப்படத்தைப் பகிர்ந்து வருகின்றனர். அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகள் இருக்கும் புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பாஜக முன்னோடிகள் மற்றும் பிரதமர் மோடி, நட்டா ஆகியோர் புகைப்படங்களுடன் பிரபல சாமியார் நித்தியானந்தா படமும் இருப்பதாக வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. அந்த […]

Continue Reading

உ.பி-யில் 101 அடி உயர காமராஜர் சிலையை யோகி ஆதித்யநாத் திறக்கிறாரா?

உத்தரப்பிரதேசத்தில் 101 அடி உயர காமராஜர் சிலையை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் திறக்கிறார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காமராஜர் சிலை புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதனுடன், “நாளை உபி யில் யோகி ஜி அரசால் திறக்க பட உள்ள 101 அடி காமராஜர் சிலை… இது வரை 200 […]

Continue Reading

அத்துமீறிய சீன ராணுவத்தை இந்திய வீரர்கள் தடுக்கும் இந்த வீடியோ 2022ல் எடுக்கப்பட்டதா?

இந்தியாவின் அருணாசலப்பிரதேச எல்லையில் அத்துமீறி நுழைய முயன்ற சீன ராணுவ வீரர்களை இந்திய ராணுவ வீரர்கள் விரட்டி அடித்த காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சீன ராணுவ வீரரை இந்திய ராணுவத்தினர் சிறைபிடித்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அடித்து விரட்டி விட்டோம் சீன ராணுவத்தை அத்துமீறி எவன் என் எல்லையில் மிதித்தாள் இதுதான் […]

Continue Reading

இந்தியா – சீனா ராணுவத்துக்கு இடையே மோதல் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

அருணாச்சல பிரதேசத்தில் இந்திய – சீன படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராணுவ வீரர்கள் கைகளால் அடித்துக்கொள்ளும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அருணாச்சல் பிரதேசத்தில் இந்திய, சீன வீரர்களுக்கு இடையே கடும் மோதல்.. டிசம்பர் 9 அன்று தவாங் மோதலில் 300க்கும் மேற்பட்ட சீன ராணுவ வீரர்களும், சுமார் […]

Continue Reading

டாஸ்மாக் கடை செல்ல இலவச பஸ் பாஸ் கேட்ட விவசாயி; 2018 செய்தியை தற்போது பரப்பும் நெட்டிசன்கள்!

தி.மு.க ஆட்சியில் ஒருவர் மது அருந்த டாஸ்மாக் கடைக்கு சென்று வர தனக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுத்ததாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தினகரன் நாளிதழ் வெளியிட்ட செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “உள்ளூரில் கடை இல்லாததால் டாஸ்மாக் கடைக்கு சென்று வர இலவச பஸ் பாஸ் […]

Continue Reading

‘சபரிமலையில் மோடி வருகை’ என்று பகிரப்படும் கேரள ஆளுநர் வீடியோ!

சபரி மலைக்கு பிரதமர் மோடி வந்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தெளிவில்லாத வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. வீடியோவில் இருப்பது கேரள மாநில ஆளுநர் போல இருந்தது. ஆனால் நிலைத் தகவலில், “சபரிமலையில் பிரதமர் நரேந்திர மோடி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Balu Subramaniam என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்டவர் 2022 டிசம்பர் 6ம் […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் திறந்து வைக்க உள்ள பாலம் இதுவா?

‘உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் திறந்து வைக்க உள்ள பாலத்தின் புகைப்படம்,’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link  ‘’உத்திரபிரதேசத்தில் நாளை திறக்க உள்ள பாலம். யோகிடா.🔥🔥’’ என்று குறிப்பிட்டு மேற்கண்ட பதிவை KarthikGnath420 என்ற ட்விட்டர் ஐடி கடந்த நவம்பர் 30, 2022 அன்று ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதனை வாசகர் ஒருவர் உண்மையா, என்று நம்மிடம் […]

Continue Reading

மோடி தொடங்கிவைத்த வந்தே பாரத் ரயில் பெட்டியில் கசியும் தண்ணீர்?- வைரல் வீடியோ உண்மையா?

‘’மோடி தொடங்கிவைத்த வந்தே பாரத் ரயிலில் தண்ணீர் ஒழுகும் பரிதாபம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Claim Tweet Link I Archived Link உண்மை அறிவோம்: மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், சென்னை பெரம்பூரில் உள்ள ICF தொழிற்சாலையில், வந்தே பாரத் என்ற பெயரில் வர்த்தக பயன்பாட்டுக்கான அதிவேக ரயில்களை இந்திய ரயில்வே தயாரித்து வருகிறது. இந்த ரயில்களை நாடு முழுவதும் முக்கியமான 6 […]

Continue Reading

அண்ணாமலைக்கு கல்தா என பரவும் நியூஸ் கார்டை தினமலர் வெளியிட்டதா?

அண்ணாமலைக்கு கல்தா; ஆதரவு நடிகைக்கு ஸ்வீட் தா என்று தினமலர் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தினமலர் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அண்ணாமலைக்கு கல்தா; ஆதரவு நடிகைக்கு ஸ்வீட் தா! கட்சி நிர்வாகிகளுக்கு எதிரான தொடர் பாலியல் குற்றச்சாட்டுகள், சீனியர் நிர்வாகிகளுடனான மோதல் போக்கு, தன்னிச்சையான நடவடிக்கைகளால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுமாறு […]

Continue Reading

‘குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் தற்கொலை செய்துகொள்வேன்’ என்று செந்தில்வேல் கூறினாரா?

‘’குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்று செந்தில்வேல் சவால்,’’ என சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+91 9049044263) அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். இதே ட்வீட் ஸ்கிரின்ஷாட்டை பலரும் ஃபேஸ்புக்கில் உண்மையென நம்பி பகிர்வதைக் கண்டோம்.  Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:மேற்கண்ட பதிவுகளில் கூறுவது போல, குஜராத் தேர்தலில் […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலை என்று பகிரப்படும் வீடியோ உண்மையா?

உத்தரப் பிரதேசத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலை, என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.தகவலின் விவரம்: Claim Tweet Link I Archived Link உண்மை அறிவோம்: மேற்கண்ட வீடியோவை நன்கு உற்று பார்த்தால், அதில், சீன மொழியில் ஒரு லோகோ இருப்பது தெரிகிறது.  இதன்படி, APP என சீன மொழியில் எழுதப்பட்டுள்ளதன் அடிப்படையிலும், ரிவர்ஸ் இமேஜ் முறையிலும் தொடர்ந்து தகவல் தேடியபோது, இது சீனாவில் எடுக்கப்பட்ட வீடியோ […]

Continue Reading

ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் செய்ததா?

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் தமிழர்களின் பொழுதுபோக்கை விட இந்து மதத்தினர் தெய்வமாக வணங்கும் பசு மற்றும் காளை மாடுகளின் நலன்தான் முக்கியம் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “குறிப்பிட்ட ஒரு மாநில மக்களின் பொழுதுபோக்கை […]

Continue Reading

‘அரசு ஊழியர்களுக்கு சோறு போடுவது டாஸ்மாக்தான்’ என்று செந்தில் பாலாஜி கூறினாரா?

‘’அரசு ஊழியர்களுக்கு சோறு போடுவது டாஸ்மாக்தான் என்று திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் ஒரு நியூஸ் கார்டு வைரலாகப் பரவுகிறது. இதுபற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  இதனை வாசகர் ஒருவர் +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என கேட்டிருந்தார். இதன்பேரில் நாம் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக்கில் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.  Facebook Claim Link I Archived […]

Continue Reading

குஜராத்தில் தேர்தல் நடந்த முறை என்று பரவும் மேற்கு வங்க வீடியோ!

குஜராத்தில் வாக்கு இயந்திரத்தைக் கூட பார்க்க அனுமதிக்காமல் பணியாளர்களே வாக்களித்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வாக்குப்பதிவு மையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், வாக்களிக்க வரும் நபர்களை வாக்களிக்க அனுமதிக்காமல், வாக்குச் சாவடியில் இருக்கும் நபர் ஒருவர் வாக்குகளை பதிவு செய்கிறார். நிலைத் தகவலில், “குஜராத்தில் தேர்தல் நடந்த முறை. வாக்காளரை, வாக்கு இயந்திரத்தை […]

Continue Reading

குலாப் ஜாமுனில் சிறுநீர் கழித்த வட இந்தியர் என்று பரவும் வீடியோ; உண்மை என்ன?

பாத்திரம் நிறைய உள்ள குலாப் ஜாமுனில் வட இந்தியர் ஒருவர் சிறுநீர் கழித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாத்திரம் நிறைய உள்ள குலாப் ஜாமுனில் ஒருவர் சிறுநீர் கழிப்பது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த நபரின் முதுகில் “வடக்கன்” என்று எடிட் செய்து எழுதப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வேற ஒன்னுல குலோப்ஜாமுள இனிப்பு கூடிருச்சாம்… […]

Continue Reading

ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சீட்டுக்கட்டு விளையாடுவது பற்றிய பாடம்- உண்மை என்ன?

6-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சீட்டுக்கட்டு விளையாட்டு பற்றிய பாடம்- உண்மை என்ன? ‘’6ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ரம்மி விளையாடுவது எப்படி என்ற தலைப்பில் பாடம் இடம்பெற்றுள்ளது,’’ என குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Linkஇதனை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பி, அதன் நம்பகத்தன்மை பற்றி சந்தேகம் கேட்டிருந்தார். 01/12/2022 அன்று பதிவிடப்பட்டுள்ள […]

Continue Reading

சூதாட்டம் என்பது இந்து மதத்தின் அங்கம் என்று அண்ணாமலை கூறினாரா?

சூதாட்டம் என்பது மகாபாரத காலத்தில் இருந்து இந்து மதத்தின் அங்கம். அதை ஒழிப்பது இந்து கலாச்சாரத்தை அழிக்கும் முயற்சி என்று அண்ணாமலை கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சூதாட்டம் என்பது மஹாபாரத காலத்திலிருந்தே ஹிந்து மதத்தின் ஒரு அங்கம். ஆன்லைன் சூதாட்டங்களை முறைப்படுத்தலாமே […]

Continue Reading

குஜராத்தில் வாக்கு கேட்டுச் சென்ற காங்கிரஸ் கட்சியினரை எருமை முட்டியதா?

குஜராத்தில் வாக்கு கேட்டுச் சென்ற காங்கிரஸ் கட்சியினர் மீது எருமை மாடுகள் முட்டியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: எருமை மாடுகள் கூட்டமாக இருக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அவற்றின் முன்னாள் காங்கிரஸ் கொடியுடன் மூன்று பேர் நிற்கின்றனர். திடீரென்று எருமை மாடு ஒன்று வேகமாக ஓடிவந்து முட்ட முயற்சிக்கிறது. நிலைத் தகவலில், “காங்கிரஸ் நிர்வாகிகள் குஜராத்தில் ஓட்டு கேட்க சென்றபோது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை […]

Continue Reading

FlFA 2022 உலக கோப்பை தொடருக்கு இந்திய அணியை அனுப்பக்கூடாது என்று மோடி உத்தரவிட்டாரா?

‘’கத்தாரில் நடைபெறும் FlFA 2022 உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணியை அனுப்பக்கூடாது என்று மோடி உத்தரவு,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவுகிறது. இதுபற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், தகவல் தேடியபோது, ஏராளமானோர் இதை ஃபேஸ்புக்கில் பகிர்வதைக் கண்டோம்.  உண்மை அறிவோம்: குறிப்பிட்ட தகவல் உண்மையா என்று பார்த்தால், இல்லை என்பதே பதில். ஆம். இது மோடிக்கு […]

Continue Reading

பாஜக நிர்வாகி கேசவ விநாயகம் தவறே செய்தாலும் தண்டிக்க முடியாது என்று அண்ணாமலை கூறினாரா?

தமிழ்நாடு பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் தவறே செய்தாலும் அவரைத் தண்டிக்கும் தகுதி தனக்கில்லை என்று அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் புகைப்படங்களுடன் ஏபிபி நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கமலாலயம் என்கிற ஹஸ்தினாபுரத்தின் […]

Continue Reading

மின் கட்டணம் – ஆதார் இணைப்பு அறிவிப்பை மின் வாரியம் திரும்பப் பெற்றதா?

மின் கட்டணம் செலுத்த ஆதார் எண்ணைக் கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பை மின் வாரியம் திரும்பப் பெற்றது என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்குத் தினமலர் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டை அனுப்பி இது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்த நியூஸ் கார்டில், “மின் கட்டணம் செலுத்த ‘ஆதார்’ […]

Continue Reading

ராமாயணம் டிவி சீரியல் பாடலைப் பாடும் அமெரிக்க குழந்தைகள் என்று பரவும் வீடியோ உண்மையா? 

‘’ராமாயணம் டிவி சீரியல் பாடலைப் பாடும் அமெரிக்க குழந்தைகள்’’, என்று பரவும் வீடியோ பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049053770) வழியே அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். இதே தகவல் ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றிலும் பகிரப்படுகிறது. Facebook Claim Link l Archived Link  2020ம் ஆண்டு முதலாகவே, இந்த வீடியோ பகிரப்படுவதைக் கண்டோம்.   Sharechat Link I Archived Link  உண்மை அறிவோம்:  குறிப்பிட்ட வீடியோவின் ஒரு […]

Continue Reading

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இளையராஜாவை சந்தித்தாரா? 

‘’ கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இளையராஜாவை சந்தித்து எளிமையான முறையில் புகைப்படம் எடுத்துக் கொண்டார்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Tweet Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: குறிப்பிட்ட புகைப்படம் கடந்த 2017ம் ஆண்டு இளையராஜா தனது 74வது பிறந்த நாளில், ரசிகர்களுடன் நடத்திய சந்திப்பு ஒன்றில் எடுக்கப்பட்டதாகும். இந்த நிகழ்ச்சியின் வீடியோ ஒன்று கீழே தரப்பட்டுள்ளது. இதுபற்றி ஊடகங்களிலும் […]

Continue Reading

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு கழித்து இப்போதுதான் அருணாச்சலில் விமான நிலையம் அமைக்கப்பட்டதா?

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகு, இப்போதுதான் அருணாச்சல பிரதேசத்தில் விமான நிலையம் அமைக்கப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அருணாச்சல பிரதேசத்தின் வரைபடம் மற்றும் விமானநிலையத்தின் விமான ஓடுபாதை ஆகிய படங்களை வைத்து பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கழித்து #அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் முதல் கிரீன்ஃபீல்ட் […]

Continue Reading

பாஜக தலைமை அலுவலகம் கமலாலயம் முன் ஆணுறை வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டதா?

‘’பாஜக தலைமை அலுவலகம் கமலாலயம் முன் ஆணுறை வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டது,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Claim Tweet Link l Archived Link உண்மை அறிவோம்: பாஜக.,வை சேர்ந்த திருச்சி சூர்யா சிவா மற்றும் டெய்சி ஆகியோர் ஃபோன் மூலமாக ஒருவரை ஒருவர் ஆபாசமாக திட்டிக்கொண்ட ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. FactCrescendo Tamil Link […]

Continue Reading

சிறந்த அக்கா – தம்பிக்கான போட்டி நடத்தப்படும் என்று அண்ணாமலை அறிவித்தாரா?

டெய்சி – சூர்யா பெயரில் சிறந்த அக்கா – தம்பிக்கான போட்டி நடத்தப்படும், கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்படும் என்று அண்ணாமலை அறிவித்ததாக சில நையாண்டி நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று சில நியூஸ் கார்டுகளை நெட்டிசன்கள் சிலர் பகிர்ந்து வருகின்றனர். ஒரு நியூஸ் கார்டில், “டெய்சி-சூர்யா பெயரில் சிறந்த அக்கா-தம்பிக்கான போட்டி. டெய்சி சரண் – […]

Continue Reading

பாஜக.,வில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று காயத்ரி ரகுராம் கூறினாரா?

‘’ பாஜக.,வில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை,’’ என்று காயத்ரி ரகுராம் கூறியதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: பாஜக.,வைச் சேர்ந்த திருச்சி சூர்யா சிவா மற்றும் டெய்சி ஆகியோர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, சில ஆடியோ பதிவுகள் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், இதற்கு காயத்ரி ரகுராமை காரணம் காட்டி, மாநில […]

Continue Reading

பிராமணர்களுக்கு எதிரானவர் அண்ணாமலை என்று காயத்ரி ரகுராம் கூறினாரா?

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பிராமணர்களுக்கு எதிரானவர் என்று காயத்ரி ரகுராம் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காயத்ரி ரகுராம் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பிராமணர்களுக்கு எதிரானவர் அண்ணாமலை! பாஜகவில் பிராமணர்கள் யாரும் முக்கியப் பொறுப்புக்கு வரக்கூடாது என நினைக்கிறார் அண்ணாமலை. எந்த […]

Continue Reading

பாஜக நிர்வாகிகள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆதாரம் உள்ளது என காயத்ரி ரகுராம் கூறினாரா?

அத்துமீறிய பாஜக நிர்வாகிகள் தொடர்பான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளது என்று காயத்ரி ரகுராம் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காயத்ரி ரகுராம் புகைப்படத்துடன் ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அத்து மீறிய நிர்வாகிகள்; பகீர் ஆதாரங்களுடன் காயத்ரி ரகுராம். கட்சிக்குள் பெண்களுக்கு எதிராக நடைபெறும் அத்துமீறல்களை வெளிக்கொண்டு வருவதற்காகவே […]

Continue Reading

ஆகாசப் புளுகர் அண்ணாமலை என்று காயத்ரி ரகுராம் பேட்டி அளித்தாரா?

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகாசப் புளுகர் என்று நடிகை காயத்ரி ரகுராம் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “ஆகாசப் புளுகர் அண்ணாமலை! உண்மையைப் பேசியதால் தான் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளேன். உண்மையைப் பேசுபவர்களுக்கு அங்கு […]

Continue Reading

பாஜக.,வினர் மீது குஜராத் மக்கள் தாக்குதல் நடத்தினார்களா?

குஜராத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய வந்த பா.ஜ.க-வினர் மீது பொது மக்கள் தாக்குதல் நடத்தினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆட்டோவில் பிரசாரம் செய்து வரும் பா.ஜ.க-வினர் மீது சிலர் தாக்குதல் நடத்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நான் உருவாக்கிய குஜராத் என திரு மோடி அவர்கள் பெருமைப்படப் பேசிய குஜராத்தில் மக்கள் பாஜகவுக்கு […]

Continue Reading

பிரதமர் மோடி தமிழை தேசிய மொழியாக அறிவித்தாரா?

‘’ காசி தமிழ் சங்கமத்தில் பிரதமர் மோடி தமிழை தேசிய மொழியாக அறிவித்தார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (9049053770) வழியே அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார்.  Twitter Claim Link l Archived Link  உண்மை அறிவோம்:காசி எனப்படும் தற்போதைய வாரணாசியில் பாஜக முன்முயற்சியில், ‘காசி தமிழ் சங்கமம்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதனை மோடி […]

Continue Reading

குஜராத்தில் பா.ஜ.க வேட்பாளருக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதா?

குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில், தேர்தல் பிரசாரத்தின் போது பாஜக வேட்பாளர் ஒருவருக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Facebook I Archive தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பாஜக வேட்பாளர் ஒருவருக்கு செருப்பு மாலை அணிவிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “குஜராத்தில் பஜாக வேட்பாளர்களுக்கு சிறப்பான வரவேற்பு” […]

Continue Reading

துபாயில் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த நபருக்கு மரண தண்டனை தரப்பட்டதா?

துபாய் நாட்டில் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த நபருக்கு, அடுத்த 15 நிமிடத்தில் மரண தண்டனை பொதுமக்கள் முன்னிலையில் தரப்பட்டது, என்று கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770)  அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். இதன்பேரில், தகவல் தேடியபோது, இந்த வீடியோ செய்தி கடந்த 2018ம் ஆண்டு முதலே பகிரப்பட்டு வருவதைக் […]

Continue Reading

திராவிடர் கழகம் நடத்திய சூரிய கிரகண விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்ப்பிணி பெண் மரணமா?

‘’ திராவிடர் கழகம் நடத்திய சூரிய கிரகண மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்ப்பிணி பெண் மரணம்,’’ என்று கூறி பகிரப்படும் ஒரு செய்தியின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link l Archived Link  உண்மை அறிவோம்:  குறிப்பிட்ட செய்தியின் நம்பகத்தன்மை பற்றி திராவிடர் கழகம் சார்பாக, வழக்கறிஞர் குமாரதேவன், ‘’இது மிகவும் தவறான தகவல். அப்படி எதுவும் நடைபெறவில்லை. இதுபற்றி திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடு விடுதலையில் […]

Continue Reading

குஜராத் பா.ஜ.க கூட்டத்தில் மது விநியோகிக்கப்பட்டது என்று பரவும் வீடியோ உண்மையா?

குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில், தொண்டர்களுக்கு மது விநியோகிக்கப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பா.ஜ.க தொப்பி அணிந்த ஒருவர் மற்றவர்களுக்கு கிளாஸில் மது ஊற்றிக் கொடுக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் மேற்படி பாஜக கூட்டத்தில்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Senthil […]

Continue Reading

மோடி தமிழ்நாடு வந்தால் நானே நேரில் வரவேற்பேன் என்று சீமான் கூறினாரா?

‘’பிரதமர் மோடி தமிழகம் வந்தால் நானே அவரை நேரில் வரவேற்பேன் என்று சீமான் பேச்சு,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்டவற்றில் இது பகிரப்படுவதைக் கண்டோம்.  Claim Tweet Link l Archived Link  உண்மை அறிவோம்:  […]

Continue Reading

தி.மு.க அமைச்சர்களுக்கு வணக்கம் கூறாமல் மோடி தவிர்த்தாரா?

தனக்கு வணக்கம் தெரிவித்த தமிழக அமைச்சர்களுக்கு பதில் வணக்கம் கூறுவதை மோடி தவிர்த்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காந்திகிராம நிகர்நிலை பல்கலைக் கழக விழாவில் பங்கேற்க மோடி வரும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அப்போது, தமிழக அமைச்சர் கீதா ஜீவன் வணக்கம் கூற மோடி கடந்து செல்வது போன்று காட்சி உள்ளது. நிலைத் தகவலில், “மங்குனிகளுக்கு […]

Continue Reading

கால்பந்தாட்ட வீராங்கனை மரணம்; பா.ஜ.க நிர்வாகியிடம் விசாரணை என்று பரவும் போலி நியூஸ் கார்டுகள்!

மருத்துவர்களின் தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவை இரண்டு நாட்களுக்கு முன்பு பா.ஜ.க நிர்வாகி அமர் பிரசாத் சந்தித்தார் என்றும் அவரை போலீஸ் விசாரித்து வருகிறது என்றும் நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறன. அவை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பா.ஜ.க நிர்வாக அமர் பிரசாத் ரெட்டி புகைப்படத்துடன் புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பாஜக பிரமுகரிடம் […]

Continue Reading

பத்திரிகையாளர்களை சந்திக்காதவர் என்று மோடியை விமர்சித்தாரா மேயர் பிரியா?

பத்திரிகையாளர்களை சந்திக்காத மோடி என்று பிரதமரை சென்னை மாநகராட்சி மேயல் பிரியா விமர்சித்தார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பத்திரிகையாளர்களை சந்திக்காத மோடி! சென்னை மாநகராட்சியில் மழை நீர் வடிகால் பணிகள் சிறப்பாக நடைபெறுவதால், அதை தாங்கிக்கொள்ள முடியாத பாஜகவினர், நான் பேசும்போது […]

Continue Reading

கன்னியாகுமரி நித்திரவிளை பகுதியில் 20.10.2022 அன்று முன்னறிவிப்பு இன்றி மின் விநியோகம் நிறுத்தப்பட்டதா?

கன்னியாகுமரி நித்திரவிளை பகுதியில் 20.10.2022 அன்று முன் அறிவிப்பின்றி மின் விநியோகம் நிறுத்தப்பட்டதாகக் கூறி ஒரு செய்தி பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link l Archived Link இந்த செய்தியில் ‘கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியில் தொடர் மின் வெட்டு காலை 8 மணிக்கு துண்டிக்கப்பட்ட நிலையில் மக்கள் அவதி,’ என்று எழுதியுள்ளனர். 20.10.2022 அன்று இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றி வாசகர் ஒருவர் சந்தேகம் கேட்டிருந்தார்.  […]

Continue Reading

சிருங்கேரி சங்கராச்சாரியார் ராகுல் காந்திக்கு ஆசி வழங்க மறுத்தாரா?

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சிருங்கேரி சாரதா பீட சங்கராச்சாரியார் ஆசி வழங்க மறுத்துவிட்டார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவு வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்குப் புகைப்படம் மற்றும் ஆங்கிலத்தில் தகவல் ஒன்றை அனுப்பி அது சரியா என்று கேட்டிருந்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கர்நாடக முன்னாள் முதல்வர் […]

Continue Reading

திபெத் நாட்டில் தரையிறங்கிய மேகக்கூட்டம் என்று பகிரப்படும் வதந்தி!

‘’திபெத் நாட்டில் தரையிறங்கிய மேகக்கூட்டம் சாலையில் படர்ந்த அதிசயம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். உண்மை அறிவோம்: குறிப்பிட்ட வீடியோவை நாம் மீண்டும் ஒருமுறை பார்த்தபோது, அதில், மேகக்கூட்டம் போன்றில்லாமல், எதோ காற்று மாசு (புகைமூட்டம்) போல […]

Continue Reading

மேம்பால ரயிலில் இருந்து தண்ணீர் கொட்டும் வீடியோ சென்னையில் எடுக்கப்பட்டதா?

சென்னையில் மேம்பாலம் ஒன்றில் வாகனம் செல்லும் போது மழை நீர் அருவி போல கீழே சாலையில் நிற்பவர்கள் மீது கொட்டியது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மேம்பாலம் ஒன்றில் பஸ் போன்ற வாகனம் ஒன்று செல்கிறது. அப்போது மேம்பாலத்தில் தேங்கியிருந்த மழை நீர் அந்த வாகனத்தில் சக்கரத்தில் பட்டு கீழே கொட்டுகிறது. கீழே சாலையில் வாகனவோட்டிகள், […]

Continue Reading

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்பட டீசரை உண்மை சம்பவம் போல பரப்பும் விஷமிகள்!

கேரளாவில் மதம் மாறி ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த ஷாலினி உன்னி கிருஷ்ணன் என்ற பெண் ஐஎஸ் பயங்கரவாதிகள் பற்றி வீடியோ வெளியிட்டார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து தற்போது ஆப்கானிஸ்தான் சிறையில் இருப்பதாக கூறி பெண் ஒருவர் பேசுவது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கேரளாவில் மதம் […]

Continue Reading

மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ அலுவலகம் முன்பு தண்ணீர் தேங்கிய படம் 2022ல் எடுக்கப்பட்டதா?

மு.க.ஸ்டாலின் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி அலுவலகம் தண்ணீரில் மூழ்கியதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மழை நீரில் மூழ்கியிருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மழைநீர் வடிகால் 4000 கோடி பேக்கேஜ். 10 வருஷமா சட்டமன்ற உறுப்பினர் இப்போ முதலமைச்சர். அவர் தொகுதி  அலுவலகத்தின் நிலைமை நேற்றுவரை… இதில் […]

Continue Reading

மு.க.ஸ்டாலின் தொகுதியில் தேங்கி நிற்கும் மழைநீர் என்று பரவும் வீடியோ உண்மையா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் மழை நீர் தேங்கி நிற்கிறது என்று ஒரு வீடியோ மற்றும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்அப் சாட்பாட் எண்ணுக்கு வீடியோ மற்றும் புகைப்படம் ஒன்றை அனுப்பி, இது உண்மையா என்று கேட்டிருந்தார். வீடியோவில் ஒரு முதியவர் தூய தமிழில் பேசுகிறார். கொளத்தூர் என்று வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. புகைப்படத்தில் “முரசொலி பேப்பரின் பொய் செய்தி  […]

Continue Reading