மு.க.ஸ்டாலின் தொகுதியில் தேங்கி நிற்கும் மழைநீர் என்று பரவும் வீடியோ உண்மையா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் மழை நீர் தேங்கி நிற்கிறது என்று ஒரு வீடியோ மற்றும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்அப் சாட்பாட் எண்ணுக்கு வீடியோ மற்றும் புகைப்படம் ஒன்றை அனுப்பி, இது உண்மையா என்று கேட்டிருந்தார். வீடியோவில் ஒரு முதியவர் தூய தமிழில் பேசுகிறார். கொளத்தூர் என்று வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. புகைப்படத்தில் “முரசொலி பேப்பரின் பொய் செய்தி  […]

Continue Reading

மோர்பி பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அண்ணாமலை நன்றி கூறினாரா?

குஜராத் மாநிலம் மோர்பியில் தொங்குபாலம் விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி கூறினார் என்று ஒரு விஷம பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவின் தமிழாக்கம் பகிரப்பட்டுள்ளது. அதில், “குஜராத் மோர்பியில் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களுக்கும், குடும்பத்தாருக்கும் என் மனமார்ந்த […]

Continue Reading

அண்ணாமலையை புறக்கணிக்கிறோம் என்று தந்தி டிவி அறிவித்ததா?

பத்திரிகையாளர்களை அவமதிக்கும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்பைப் புறக்கணிக்கிறோம் என தந்தி டிவி அறிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அண்ணாமலை புகைப்படத்துடன் தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை அவமதிக்கும் தமிழ் நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்பை இனி தந்தி தொலைக்காட்சி […]

Continue Reading

ஐஎஸ்ஐஎஸ் நடத்தும் Movies Junction வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர வேண்டாம் என்று பரவும் தகவல் உண்மையா?

‘’Movies Junction என்ற பெயரில் ஐஎஸ்ஐஎஸ் நடத்தும் வாட்ஸ்ஆப் குரூப்பில் யாரும் சேர வேண்டாம்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இந்த தகவலை வாசகர் ஒருவர் நமக்கு +91 9049053770 என்ற வாட்ஸ்ஆப் சாட்பாட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் ஆய்வை தொடங்கினோம்.   உண்மை அறிவோம்: குறிப்பட்ட தகவல் உண்மையா என நாம் தகவல் தேடியபோது, இது ஒரு அடிப்படை ஆதாரமற்ற […]

Continue Reading

பிரதமர் பதவியேற்ற பிறகு இஸ்கான் கோயில் சென்று ரிஷி சுனக் வழிபட்டாரா?

‘’பிரதமர் பதவியேற்ற பின் இஸ்கான் கோயில் சென்று வழிபட்ட ரிஷி சுனக்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link  அக்டோபர் 26, 2022 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. ‘’இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற பின் இஸ்கான் ஆலயம் சென்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டார் ரிஷி சுனக்… 😍,’’ என்று இந்த […]

Continue Reading

பிரதமர் அலுவலகத்திற்குள் நுழையும் முன்பாக ரிஷி சுனக் விளக்கேற்றி வழிபட்டாரா?

இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பேற்கச் சென்ற போது அலுவலகத்தில் நுழையும் முன்பு விளக்கேற்றி வழிபட்டார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இங்கிலாந்து பிரதமராக நியமிக்கப்பட்ட ரிஷி சுனக், வீடு/அலுவலக வாசல் முன்பு விளக்கேற்றும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மோடி பிரதமர் ஆனவுடன் பார்லிமென்ட் முன்பு கீழ் விழுந்து வணங்கினார். ரிஷி சுனக் அலுவலகம் […]

Continue Reading

‘இந்தியாவின் லீ குவான் யூ’ மோடி என சிங்கப்பூர் பத்திரிகை செய்தி வெளியிட்டதா?

சிங்கப்பூரை வளர்ச்சியின் உச்சிக்கு கொண்டு சென்ற முன்னாள் அதிபர் லீ குவான் யூ போல இந்தியாவில் பிரதமர் மோடி பிறப்பெடுத்துள்ளார் என சிங்கப்பூர் பத்திரிகை செய்தி வெளியிட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வாசகர் ஒருவர் நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்அப் சாட் பாட் எண்ணுக்குப் புகைப்பட பதிவு அனுப்பி, இது உண்மையா என்று கேள்வி […]

Continue Reading

இந்தியாவுக்கு மன்மோகன் சிங் போன்ற ஒரு பிரதமர் தேவை என்று ரிஷி சுனக் கருத்து கூறினாரா?

‘’தற்போதைய சூழலில் இந்தியாவுக்கு மன்மோகன் சிங் போன்ற ஒரு பிரதமர் தேவை,’’ என்று ரிஷி சுனக் கூறியதாகக் குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவலின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:   இந்த தகவலை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் வழியே (9049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார்.  இதுபற்றி விவரம் தேடியபோது, ஃபேஸ்புக்கிலும் இதனை பலர் ஷேர் செய்வதைக் கண்டோம்.  Facebook Claim Link I Archived Link  உண்மை […]

Continue Reading

பாரீஸ் நகரில் இஸ்லாமியர்கள் தொழுகை என பரவும் வீடியோ உண்மையா?

பாரீஸ் நகரின் சாலைகளில் இஸ்லாமியர்கள் தொழுகை செய்தார்கள் என்றும் இதைப் பார்த்து இந்துக்கள் விழித்துக்கொள்ள வேண்டும் என்றும் ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் நம்முடைய வாட்ஸ்அப் சாட்பாட் எண்ணுக்கு இஸ்லாமியர்கள் தொழுகை செய்யும் வீடியோ மற்றும் தகவலை அனுப்பி இது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதில், “இதைப் பார்த்தாவது விழித்துக் கொள்ளுங்கள் இந்துக்களே🙏* This is Paris […]

Continue Reading

நாங்கள் என்ன தேவிடியன் ஸ்டாக்ஸா என்று எச்.ராஜா கேட்டாரா?

‘’நாங்கள் என்ன தேவிடியன் ஸ்டாக்ஸா,’’ என்று எச். ராஜா கேள்வி கேட்டதாக, ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049044263) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றில் பலரும் ஷேர் செய்வதைக் கண்டோம். Twitter Claim Link I Archived Link  உண்மை அறிவோம்: குறிப்பிட்ட […]

Continue Reading

தீபாவளிக்கு மாட்டிறைச்சி வாங்கும் மக்கள் என்று சன் நியூஸ் வெளியிட்ட செய்தியால் குழப்பம்!

தீபாவளியன்று பொது மக்கள் வரிசையில் நின்று மாட்டிறைச்சி வாங்கிச் சென்றனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு புகைப்படம் ஒன்றை அனுப்பி இது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். சன் டிவி வெளியிட்ட நியூஸ் கார்டு போல இருந்தது. அதில், “வரிசையில் நின்று மாட்டிறைச்சி வாங்கி செல்லும் மக்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

ஆர்எஸ்எஸ், மோடி பற்றி அமெரிக்க நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதா?

மோடி மற்றும் குஜராத் கலவரம் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது என்றும், ஐம்பது பக்கம் கொண்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது என்றும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக ஒருவர் பேசும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில் Howdy Modi, Houston, TX எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “*மோடி* குஜராத்தில் செய்த படுகொலையையும், நடப்பில் […]

Continue Reading

கர்நாடகா மாநிலத்தில் கடல்கன்னி நடமாட்டம் என்று பரவும் வீடியோவால் பரபரப்பு…

‘’கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டிணா பகுதியில் ஓடும் ஆற்றில் கடல்கன்னி நடமாட்டம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்த வீடியோவை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி ‘’கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டிணா, மைசூர் பகுதியில் கடல்கன்னி ஆற்றில் நடமாடுகிறது,’’ என்று ஒரு தகவல் பரவுகிறது என்றும், இது  உண்மையா என்றும் சந்தேகம் கேட்டிருந்தார்.  உண்மை அறிவோம்:  குறிப்பிட்ட வீடியோ தொடர்பாக ஏதேனும் செய்தி […]

Continue Reading

பிரதமர் மோடி டாய்லெட் சென்றபோது 37 புகைப்படங்கள் எடுத்தாரா?

பிரதமர் மோடி கழிப்பறை சென்றுவிட்டு, 37 புகைப்படங்கள் எடுத்து விளம்பரம் செய்கிறார் என்று கூறி ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இந்த படத்தை வாசகர்கள் சிலர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+91 9049044263 & +91 9049053770) அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தனர்.  இதே படத்தை பலரும் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்வதையும் கண்டோம்.  Claim Link  l Archived Link  உண்மை அறிவோம்: இந்த […]

Continue Reading

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வீடியோவை திமுக ஆட்சியில் நிகழ்ந்தது போல பரப்புவதால் சர்ச்சை!

‘’திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதுபற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Twitter Claim Link I Archived Link   உண்மை அறிவோம்: குறிப்பட்ட வீடியோவில், 22.05.2018 என்றும் FCI Roundana என்றும் எழுதப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. இதன்மூலமாக, கடந்த 2018ம் ஆண்டு இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டதாக, எளிதல் உறுதி செய்ய முடிகிறது.  அடுத்தப்படியாக, இந்த வீடியோ எங்கே எடுக்கப்பட்டது என […]

Continue Reading

தாடி வளர்த்த ராகுல் காந்தி என்று கேலியாகப் பரவும் புகைப்படம் உண்மையா?

இந்திய ஒற்றுமை பயணத்தில் நடந்தால் தாடிதான் வளருமே தவிர கட்சி வளராது என்று ராகுல் காந்தி தாடி மீசையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மிகவும் அதிகமாகத் தாடி, மீசை மற்றும் தலைமுடி வளர்ந்த நிலையில் ராகுல் காந்தி இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நடந்து நடந்து தாடி தான் வளருமே தவிர கட்சியோ???ஓட்டோ […]

Continue Reading

அதிமுக உண்ணாவிரதப் போராட்டத்தில் பிரியாணி வழங்கப்பட்டது என்று பரவும் செய்தி உண்மையா?

அ.தி.மு.க உண்ணாவிரதப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்குப் பிரியாணி வரவழைக்கப்பட்டது என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக-வினர் போராட்டத்தில் ஈடுபட்ட புகைப்படத்துடன் மாலை மலர் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “போராட்டத்தில் கைது ஆன எடப்பாடி ஆட்களுக்கு “யா மொய்தீன்” கடையில் இருந்து பிரியாணி […]

Continue Reading

குண்டூரில் நாக தெய்வத்தின் கோயிலை இஸ்லாமியர்கள் இடித்தார்களா?

குண்டூரில் நாகதெய்வ கோவிலை இஸ்லாமியர்கள் இடித்தார்கள் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நாகம், பிறை – நட்சத்திரம் உள்ள ஒரு சுவர் வளைவை இஸ்லாமியர்கள் இடிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “குண்டூரில் நடந்தது.😱 நாளை உங்கள் ஊரில். . . இது எள்ளுண்டி நா வுரியில் நடக்கிறது இந்த காணொளி சிறுபான்மையினர் பெரும்பான்மையாகவோ அல்லது […]

Continue Reading

மோடி பெயரை கெடுக்க திமுக மற்றும் காங்கிரஸ் நிர்பந்தம் கொடுத்தனர் என்று அய்யாக்கண்ணு கூறினாரா?

‘’மோடியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும்படி திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் நிர்பந்தம் கொடுத்தனர்,’’ என்று அய்யாக்கண்ணு தெரிவித்ததாகக் குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்படும் செய்தி பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 மற்றும் +919049053770) அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தனர். இந்த செய்தியை ஃபேஸ்புக்கில் பலர் உண்மை போல பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்: தலைநகர் டெல்லியில் […]

Continue Reading

விசாரணை கமிஷன் அறிக்கை வீண் என்று அண்ணாமலை கூறினாரா?

ஜெயலலிதா மரணம் மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையங்கள் அளித்த அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் விசாரணை வீண் என்று அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive தினமலர் நாளிதழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “விசாரணை அறிக்கை வீண். நீதிபதிகளே ஊழலில் திளைக்கும் போது ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய ஆணையம் மட்டும் எப்படி சரியான அறிக்கையை […]

Continue Reading

மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கவில்லை என்று செந்தில்பாலாஜி கூறிய பிறகும் பரவும் வதந்தி!

தீபாவளிக்கு ரூ.600 கோடிக்கு மது விற்பனை செய்ய வேண்டும் என்று டாஸ்மாக் இலக்கு நிர்ணயித்தது என்று பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் டாஸ்மாக் கடை புகைப்படங்களை ஒன்று சேர்த்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தீபாவளி பண்டிகைக்கு விடியல்_டாஸ்மாக் கடைகளில் ரூ.600 கோடிக்கு மது விற்க ஏற்பாடு* டாஸ்மாக் கடைகளில் 10 நாட்களுக்குத் […]

Continue Reading

ராகுல் காந்தி நடத்தும் யாத்திரையில் கடல் போல திரண்ட மக்கள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’ராகுல் காந்தி நடத்தும் யாத்திரையில் கேமிராவில் படம்பிடிக்க முடியாத அளவுக்கு கடல் போல திரண்ட மக்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட புகைப்படத்தை நாம் கூகுள் உதவியுடன் ரிவர்ஸ் இமேஜ் முறையில் தேடியபோது, இதேபோன்ற புகைப்படம் 2020ம் ஆண்டிலேயே ஒரு ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டிருப்பதாக, விவரம் கிடைத்தது. அந்த லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது. எனினும், […]

Continue Reading

Explainer: ஆவின் தயாரிப்புகளில் டால்டா கலக்கப்படுகிறதா?

‘’ஆவின் தயாரிப்புகளில் நெய்க்குப் பதிலாக டால்டா கலக்கப்படுகிறது,’’ என்று பகிரப்படும் செய்தி பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Archived Link இந்த ட்விட்டர் பதிவில் தினமலர் நாளிதழ் பெயருடன் உள்ள நியூஸ்கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். உண்மை அறிவோம்: ஆவின் தயாரிக்கும் பால் மற்றும் பால் சார்ந்த தயாரிப்புகள், இனிப்பு வகைகள் தமிழக மக்களிடையே பிரபலம். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், ஆவின் தயாரிக்கும் இனிப்புகளில் நெய்க்கு பதிலாக, வனஸ்பதி எனப்படும் டால்டா சேர்க்கப்படுவதாகக் […]

Continue Reading

ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் 41.55 ரூபாய் வரியை தமிழ்நாடு அரசு வசூலிக்கிறதா?

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.41.55ஐ தமிழ்நாடு அரசு வரியாக வசூலிக்கிறது என்பது போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெட்ரோல் நிலையத்தில் அறிவிப்புப் பலகை வைத்திருப்பது போன்று எடிட் செய்யப்பட்ட புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “ அடிப்படை விலை 35.50 மத்திய அரசு வரி 19.50 மாநில அரசு வரி 41.55 விநியோகஸ்தர் 6.50 மொத்தம் 103.05.  […]

Continue Reading

பாஜக குறைந்தது 6 முறை ஆட்சியில் அமர்வது அவசியம் என்று சர்வதேச நீதிபதி கூறினாரா?

600 ஆண்டுகால அவமானங்களையும் 70 ஆண்டுகால சீர்கேடுகளையும் துடைத்தெறிய 6 முறையாவது பாஜக ஆட்சியில் அமர வேண்டும் என்று சர்வதேச நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி மற்றும் வெளிநாட்டைச் சார்ந்த ஒருவர் புகைப்படங்களை வைத்து புகைப்பட பதிவை உருவாக்கியுள்ளனர். மோடியின் புகைப்படத்துக்குக் கீழ், “600 ஆண்டு […]

Continue Reading

ஒரே ஆண்டில் வாகன பராமரிப்புக்கு ரூ.51.64 கோடி செலவு என்று தி.மு.க அரசு கணக்கு காட்டியதா?

தி.மு.க அரசு அமைந்த பிறகு மதுரை மாநகராட்சியில் வாகன பராமரிப்புக்கு என்று ரூ.51.64 கோடி செலவு செய்யப்பட்டது போன்று பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜூனியர் விகடன் வெளியிட்ட நியூஸ் கார்டை வைத்து பதிவிடப்பட்டுள்ளது. அதில், “வாகன ரிப்பேர் செலவு ரூ.51.64 கோடி… மிரள வைக்கும் மதுரை மாநகராட்சி கணக்கு!” என்று இருந்தது. நிலைத் தகவலில், “வாகன ரிப்பேர் […]

Continue Reading

டெல்லியை தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் பலர் புத்தமதம் தழுவினர் என்று கதிர் நியூஸ் கூறியதா?

‘’டெல்லியை தொடர்ந்து உத்தரப் பிரதேசத்திலும் நேற்று பலர் புத்தமதத்திற்கு மாறினர் – கதிர் நியூஸ் ,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். இதே செய்தியை பலரும் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்வதை கண்டோம்.  Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்: குறிப்பிட்ட செய்தியை கதிர் நியூஸ் வெளியிடவில்லை. இதுபற்றி நாம் […]

Continue Reading

4ஜி செல்போன் உற்பத்தியை நிறுத்த மத்திய அரசு உத்தரவா?

4ஜி செல்போன்களின் உற்பத்தியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்தியாவில் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ள 4ஜி செல்போன்களின் உற்பத்தியை நிறுத்துமாறு செல்போன் உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது என்று சத்யம் டிவி செய்தி வெளியிட்டுள்ளது. நிலைத் தகவலில், “4ஜி செல்போன்களின் உற்பத்தியை உடனடியாக […]

Continue Reading

ஜேசிபி பக்கெட் பொருத்தப்பட்ட புதிய வந்தே பாரத் ரயில் என பரவும் போலியான புகைப்படம்!

வந்தே பாரத் ரயிலில் புதிய தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டுள்ளது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வந்தே பாரத் ரயிலின் முன்புறத்தில் ஜேசிபி இயந்திரத்தில் உள்ள பக்கெட் அமைப்பு பொருத்தப்பட்டது போன்று படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விரைவில் ஜப்பான் முதலீட்டில் ., உத்தரபிரதேசத்தில் நிறுவப்படவுள்ள புதிய தொழில்நுட்பம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த படத்தை Praveen Chitti என்ற […]

Continue Reading

முக்குலத்தோருக்கு முக்கியத்துவம் தர வேண்டாம் என்று மோடியை அண்ணாமலை கேட்டுக்கொண்டாரா?

‘’முக்குலத்தோரை கண்டுகொள்ள வேண்டாம் என்று அண்ணாமலை சொன்னதால், தேவர் ஜெயந்தியில் பங்கேற்கும் திட்டத்தை மோடி கைவிட்டுவிட்டார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேட்டது. தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்: அக்டோபர் 30ம் தேதி நடைபெற உள்ள தேவர் ஜெயந்தியில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக ஒரு செய்தி ஊடகங்களில் வெளியிடப்பட்டது. அத்துடன் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டப்படும் […]

Continue Reading

டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் சபரீசனின் உதவியாளரை சிபிஐ கைது செய்ததா?

டெல்லியில் மதுபான வரி முறைகேடு வழக்கில் ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் உதவியாளர் அபிஷேக் கைது செய்யப்பட்டார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தி.மு.க தலைவராக இருந்த மு.கருணாநிதி மறைவின் போது ஸ்டாலின் அழுத வீடியோவை வைத்து பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை மற்றும் மருமகன் சபரீசனின் தனி உதவியாளர் அபிஷேக் […]

Continue Reading

மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை சூட்டுகிறார் மோடி என தந்தி டிவி செய்தி வெளியிட்டதா?

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைப்பதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட உள்ளார் என தந்தி டிவி செய்தி வெளியிட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கதேவர் பெயர் ஆணை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!!! […]

Continue Reading

சிங்கப்பூர் ஹோட்டல் படத்தை குஜராத் மருத்துவமனை என்று வதந்தி பரப்பும் விஷமிகள்!

சிங்கப்பூரின் மெரினா பே சாண்ட்ஸ் (Marina Bay Sands) ஹோட்டல் புகைப்படத்தை, குஜராத்தில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை என்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு ஃபேஸ்புக் லிங்க் ஒன்றை அனுப்பியிருந்தார். அந்த லிங்க்கை திறந்து பார்த்த போது, சிங்கப்பூரின் புகழ்பெற்ற ஹோட்டல் ஒன்றின் புகைப்படம் இருந்தது. நிலைத் […]

Continue Reading

வந்தே பாரத் ரயில் சக்கரம் தட்டையாக மாறியது என்று பரவும் வதந்தி!

வந்தே பாரத் ரயில் சக்கரம் சரியான முறையில் தயாரிக்காத காரணத்தால் பாரம் தாங்காமல் தட்டையானது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரயில் சக்கரம் தட்டையாக இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டயர் பஞ்சர் ஆகும்போது லோடு தாங்காம கார் அல்லது லாரி மாதிரி வாகனங்களின் ரிம் சப்பையாகும். எத்தனையோ விதமான ரயில் விபத்துகளைப் பாத்திருப்போம். […]

Continue Reading

கிரிக்கெட் விளையாடி கீழே விழுந்த திமுக எம்.பி செந்தில் என்று பரவும் வீடியோ உண்மையா?

தர்மபுரி தி.மு.க எம்.பி செந்தில்குமார் கிரிக்கெட் விளையாடி கீழே விழுந்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கிரிக்கெட் விளையாடும் நபர் ஒருவர் பந்தை அடிக்க முயற்சி செய்து கீழே விழும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தர்மபுரி எம்பியின் அபாரமான பேட்டிங்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Vinoth Kumar என்ற ஃபேஸ்புக் ஐடி […]

Continue Reading

அமெரிக்காவில் எந்த ஒரு நாட்டு அமைச்சருக்கும் கிடைக்காத சிறப்பான வரவேற்பு ஜெய்சங்கருக்கு கிடைத்ததா?

அமெரிக்காவின் பென்டகனில் உள்ள ராணுவ தலைமையகத்தில் வேறு எந்த ஒரு நாட்டுத் தலைவருக்கும் கிடைக்காத சிறப்பான வரவேற்பு இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கிடைத்துள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அமெரிக்காவில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “புதிய சக்திவாய்ந்த இந்தியாவின் […]

Continue Reading

RAPID FACT CHECK: அண்ணாமலை ரூ. 5000 கோடி விவகாரம்; கழுகார் எக்ஸ்க்ளூசிவ் என பரவும் வதந்தி!

மத்திய அமைச்சர் ஒருவருக்காக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ரூ.5000 கோடியை வெளிநாட்டில் முதலீடு செய்யச் சென்றுள்ளார் என்று ஜூனியர் விகடன் இதழில் செய்தி வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜூனியர் விகடன் இதழின் ஒரு பகுதியை புகைப்படமாக எடுத்து பதிவிட்டுள்ளனர். கழுகார் எக்ஸ்க்ளூசிவ் என்று பெட்டி செய்தியாக உள்ளது. அதில், “மத்திய அமைச்சரவையின் […]

Continue Reading

FactCheck: இங்கிலாந்தில் முஸ்லீம்கள் இந்து கோயிலுக்கு தீ வைத்தனரா?

இங்கிலாந்தில் இந்துக் கோவில் ஒன்று இஸ்லாமியர்களால் தீவைத்து எரிக்கப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கடை ஒன்று தீப்பிடித்து எரியும் காட்சி பகிரப்பட்டுள்ளது. கடைக்கு முன்பாக சிலர் சண்டை போட்டுக்கொள்கின்றனர். நிலைத் தகவலில், “இங்கிலாந்தின் பர்மிங்காம் கோவில் முஸ்லிம்களால் எரிக்கப்பட்டது. இந்துக்கள் தாக்கப்பட்டனர். இங்கிலாந்து காவல்துறை செயலற்றது* *இந்தியாவில் மதவெறி தொடர்ந்தால், சகிப்புத்தன்மையுள்ள இந்துக்கள் என்று […]

Continue Reading

ரூ.5000 கோடி கடத்திய அண்ணாமலை என ஜூ.வி அட்டைப்படம் வெளியிட்டதா?

அண்ணாமலை கடத்திச் சென்ற ரூ.5000 கோடி யாருடைய பணம் என்று ஜூனியர் விகடனில் வெளியிட்டது போன்று அட்டைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு ஃபேஸ்புக் லிங்க் ஒன்றை அனுப்பி அது உண்மையா என்று கேட்டிருந்தார். அந்த லிங்கை திறந்து பார்த்தோம். அதில் ஜூனியர் விகடன் […]

Continue Reading

இந்தோ- சீனப் போரில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் புகைப்படம் உண்மையா?

இந்தோ – சீன பேரில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ் வீரர்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட் பாட் எண்ணுக்கு ஒரு புகைப்படத்தை அனுப்பி, அது உண்மையா என்று கேட்டிருந்தார். சீக்கிய ராணுவ வீரர்களின் புகைப்படம் அது. அதற்கு கீழ் தமிழில், “1965 சீனாவுடனான யுத்தத்தின் போது போர் முனையில் ஸ்வயம்சேவகர்கள்” என்று […]

Continue Reading

தரையில் படுத்து மோடியை புகைப்படம் எடுத்த நபர் என்று பரவும் படம் உண்மையா?

பிரதமர் மோடி நடந்து செல்கையில், வருக்கு பக்கவாட்டில் புகைப்பட கலைஞர் ஒருவர் படுத்திருந்து புகைப்படம் எடுப்பது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புகைப்பட கலைஞர் ஒருவர் தரையில் படுத்து மோடியை புகைப்படம் எடுப்பது போன்ற படத்தை பயன்படுத்தி புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “மாப்பிள்ளை, இந்த கேமரா மேன் படுகிற பாட்டை பார்த்தால் பாவமா இருக்குடா, […]

Continue Reading

ராகுல் காந்தி பேரணியில் பாகிஸ்தான் கொடி பயன்படுத்தப்பட்டதா?

ராகுல் காந்தி பேரணியில் பாகிஸ்தான் கொடி கொண்டுவரப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் பேரணியாக வரும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “இராகுல் காந்தி பாதையாத்திரையில் பாக்கிஸ்தான் கொடி 😥😥 அடுத்த பிரிவினை கண்டிப்பாக உண்டு ஹிந்து சொந்தங்கள் எல்லாம் போருக்கு தாயார் ஆகுங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை […]

Continue Reading

ஆ.ராசா மன்னிப்பு கேட்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று மன்னை ஜீயர் அறிவித்தாரா?

‘’ஆ.ராசா மன்னிப்பு கேட்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்,’’ என்று மன்னை ஜீயர் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் வாசகர் ஒருவர் புகைப்படம் ஒன்றை அனுப்பி, இது உண்மையா என்று கேட்டிருந்தார். மன்னை ஜீயர் புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டிருந்தது. அதில், “சாகும் வரை உண்ணாவிரதம் ! ஆ.ராசா மன்னிப்பு கேட்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் – மன்னை […]

Continue Reading

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை அனுமதிக்காவிட்டால் நிர்வாண போராட்டம் நடத்துவோம் என்று பாஜக அறிவித்ததா?

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்குத் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காவிட்டால், நிர்வாண போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கதிர் என்ற ஊடகம் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “RSS சார்பில் அம்மண போராட்டம் நடைபெறும். ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி தராவிட்டால், […]

Continue Reading

மோடியை எதிர்கொள்ள முடியாததால் சீன அதிபர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டாரா?

பிரதமர் மோடியை எதிர்கொள்ள முடியாததால்தான் சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஆகியோரின் படங்களை ஒன்று சேர்த்துப் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “வணக்கம் நண்பர்களே சீன அதிபர் ஜீ ஜிங்பிங் வீட்டு காவலில் வைக்கபட்டது உண்மை தான். காரணம் […]

Continue Reading

பிஎஃப்ஐ தடை காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு உயரும் என நட்டா கூறினாரா?

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட இயக்கங்கள் தடை செய்யப்பட்டுவிட்டதால் இந்திய ரூபாயின் மதிப்பு உயரும் என்று ஜே.பி.நட்டா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மாலை மலர் நாளிதழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்திய பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருந்த PFI உள்ளிட்ட இயக்கங்கள் தடை செய்யப்பட்டுவிட்டதால் இனி வரும் […]

Continue Reading

மோடி எங்களை உள்ளே விடவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

பிரதமர் மோடி எங்களை உள்ளே விடவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாகக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:சமீபத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லி சென்றிருந்தார். அப்போது, தந்தி டிவி வெளியிட்ட செய்தி விவரம் கீழே தரப்பட்டுள்ளது. இந்த நியூஸ்கார்டை எடிட் செய்து, மோடி எங்களை உள்ளே விடவில்லை, அதனால், அவரை சந்திக்க முடியவில்ல […]

Continue Reading

RAPID FACT CHECK: எஸ்.டி.பி.ஐ கட்சியினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் என்று பரவும் பழைய படம்!

எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ கைப்பற்றிய ஆயுதங்கள் என்று சில பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மேசை முழுக்க வாள்களை போலீசார் அடுக்கிவைத்துப் பார்வையிடும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதனுடன், “இந்த ஆயுதங்கள் எல்லாம் யாருக்காக, யாரிடமிருந்துன்னு நெனச்சீங்க மக்களே? நேற்று NIA வால் கைது செய்யப்பட்ட SDPI-யினரிடமிருந்தாம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை மதுரை தல்லாகுளம் […]

Continue Reading

பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்ட அமுல்யாவுடன் ராகுல் போட்டோ எடுத்தாரா?

பாகிஸ்தான் வாழ்க என்று கோஷம் எழுப்பிய மாணவி அமுல்யா லியோனா இந்திய ஒற்றுமை பயணத்தில் ராகுல் காந்தியை சந்தித்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியுடன் இளம் பெண் ஒருவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வைத்து வீடியோ பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஓவைசி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் அமுல்யா என்ற […]

Continue Reading

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் பீஃப் பிரியாணி மசாலா விற்கிறதா?

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் பதஞ்சலி பீஃப் பிரியாணி என்ற பெயரில் மசாலாவை விற்பதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: twitter.com I Archive ராம்தேவ் பீஃப் பிரியாணி என்று மசாலா பாக்கெட் ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. பதஞ்சலி நிறுவனத்தின் வெளியீடு என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மாட்டுக்கறி வைத்திருந்தான் என எத்தனை மனிதர்களை அடித்தே கொலை செய்தீர்கள் […]

Continue Reading