400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய மலர்களின் படமா இது?

சதுரகிரி மலையில் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் காணக்கிடைக்காத அரிய பூக்கள் என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சில மலர்களின் புகைப்படங்களுடன் ஸ்கிரீன்ஷாட் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “கல்லுப்பட்டி சதுரகிரி மலையில்… 400ஆண்டுகளுக்கு ஒரு முறைப் பூத்திடும் மஹாமேரு புஷ்பம்! பூ காணக்கிடைக்காத அரிய பூ ஆகையால் முடிந்த வரை அடுத்தவர்கள் பார்த்திட உதவுங்கள்” […]

Continue Reading

கன்னியாகுமரி நித்திரவிளை பகுதியில் 20.10.2022 அன்று முன்னறிவிப்பு இன்றி மின் விநியோகம் நிறுத்தப்பட்டதா?

கன்னியாகுமரி நித்திரவிளை பகுதியில் 20.10.2022 அன்று முன் அறிவிப்பின்றி மின் விநியோகம் நிறுத்தப்பட்டதாகக் கூறி ஒரு செய்தி பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link l Archived Link இந்த செய்தியில் ‘கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியில் தொடர் மின் வெட்டு காலை 8 மணிக்கு துண்டிக்கப்பட்ட நிலையில் மக்கள் அவதி,’ என்று எழுதியுள்ளனர். 20.10.2022 அன்று இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றி வாசகர் ஒருவர் சந்தேகம் கேட்டிருந்தார்.  […]

Continue Reading

அருணாச்சல பிரதேசத்தில் மூங்கிலில் கட்டப்பட்ட விமானநிலையமா?

மூங்கில் உள் அலங்காரம் செய்யப்பட்ட விமானநிலையம் அருணாசலப்பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரம்மாண்ட கட்டிடம் ஒன்றின் உள்அலங்கார வடிவமைப்பை அங்கு பணி புரியும் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை குமுதம் ஃபேஸ்புக் பக்கம் 2022 நவம்பர் 9ம் தேதி பகிர்ந்துள்ளது. நிலைத் தகவலில், “ஃபுல்லா மூங்கில்ல விமான நிலையம் (இடம்: […]

Continue Reading

சிருங்கேரி சங்கராச்சாரியார் ராகுல் காந்திக்கு ஆசி வழங்க மறுத்தாரா?

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சிருங்கேரி சாரதா பீட சங்கராச்சாரியார் ஆசி வழங்க மறுத்துவிட்டார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவு வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்குப் புகைப்படம் மற்றும் ஆங்கிலத்தில் தகவல் ஒன்றை அனுப்பி அது சரியா என்று கேட்டிருந்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கர்நாடக முன்னாள் முதல்வர் […]

Continue Reading

சிவகார்த்திகேயன் மீது பிரின்ஸ் பட நடிகை புகார் அளித்தாரா?

நடிகர் சிவ கார்த்திகேயன் மீது பிரின்ஸ் பட நடிகை புகார் அளித்தார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஃபேஸ்புக், ட்விட்டரில் நக்கீரன் வெளியிட்டது போன்று ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதில், “பிரின்ஸ் பட நடிகை புகார்! பிரின்ஸ் படபிடிப்பு நடக்கும்போது நடிகர் சிவகார்த்திகேயன் தன்னிடம் தவறாக நடந்துகொண்டார் என பிரின்ஸ் […]

Continue Reading

திபெத் நாட்டில் தரையிறங்கிய மேகக்கூட்டம் என்று பகிரப்படும் வதந்தி!

‘’திபெத் நாட்டில் தரையிறங்கிய மேகக்கூட்டம் சாலையில் படர்ந்த அதிசயம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். உண்மை அறிவோம்: குறிப்பிட்ட வீடியோவை நாம் மீண்டும் ஒருமுறை பார்த்தபோது, அதில், மேகக்கூட்டம் போன்றில்லாமல், எதோ காற்று மாசு (புகைமூட்டம்) போல […]

Continue Reading

விமானத்தின் மீது தமிழில் பெயரை எழுதுவோம் என்று விமான நிறுவனம் அறிவித்ததா?

விமானத்தில் தங்கள் நிறுவனத்தின் பெயரை தமிழில் எழுத உள்ளதாக ரயானி ஏர் அறிவித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive விமானத்தின் மீது Rayani Air என்று ஆங்கிலத்திலும் ரயானி ஏர் எனத் தமிழிலும் எழுதப்பட்டிருப்பதாக ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதனுடன், “உலகிலேயே முதல் முறையாக விமானத்தில் தமிழ் எழுத்து. மலேசியா விமான நிறுவனம் ரயானி ஏர் […]

Continue Reading

வீட்டைவிட்டு ஓடி வந்து ரயிலில் டிக்கெட் இல்லாமல் சிக்கினாரா இன்ஃபோசிஸ் சுதா மூர்த்தி?

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சுதா மூர்த்தி, தன் இளம் வயதில் வீட்டைவிட்டு ஓடி வந்து, டிக்கெட் இல்லாமல் ரயலில் பயணம் செய்து, டிடிஇ-யிடம் சிக்கினார் என்றும், பின்னர் படித்து உயர்ந்த இடத்தை அடைந்தார் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இன்ஃபோசிஸ் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவரான நாராணயமூர்த்தியின் மனைவியும், இன்ஃபோசிஸ் பவுண்டேஷன் தலைவருமான சுதா மூர்த்தியின் புகைப்படத்துடன் பதிவு […]

Continue Reading

மேம்பால ரயிலில் இருந்து தண்ணீர் கொட்டும் வீடியோ சென்னையில் எடுக்கப்பட்டதா?

சென்னையில் மேம்பாலம் ஒன்றில் வாகனம் செல்லும் போது மழை நீர் அருவி போல கீழே சாலையில் நிற்பவர்கள் மீது கொட்டியது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மேம்பாலம் ஒன்றில் பஸ் போன்ற வாகனம் ஒன்று செல்கிறது. அப்போது மேம்பாலத்தில் தேங்கியிருந்த மழை நீர் அந்த வாகனத்தில் சக்கரத்தில் பட்டு கீழே கொட்டுகிறது. கீழே சாலையில் வாகனவோட்டிகள், […]

Continue Reading

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்பட டீசரை உண்மை சம்பவம் போல பரப்பும் விஷமிகள்!

கேரளாவில் மதம் மாறி ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த ஷாலினி உன்னி கிருஷ்ணன் என்ற பெண் ஐஎஸ் பயங்கரவாதிகள் பற்றி வீடியோ வெளியிட்டார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து தற்போது ஆப்கானிஸ்தான் சிறையில் இருப்பதாக கூறி பெண் ஒருவர் பேசுவது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கேரளாவில் மதம் […]

Continue Reading

மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ அலுவலகம் முன்பு தண்ணீர் தேங்கிய படம் 2022ல் எடுக்கப்பட்டதா?

மு.க.ஸ்டாலின் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி அலுவலகம் தண்ணீரில் மூழ்கியதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மழை நீரில் மூழ்கியிருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மழைநீர் வடிகால் 4000 கோடி பேக்கேஜ். 10 வருஷமா சட்டமன்ற உறுப்பினர் இப்போ முதலமைச்சர். அவர் தொகுதி  அலுவலகத்தின் நிலைமை நேற்றுவரை… இதில் […]

Continue Reading

மு.க.ஸ்டாலின் தொகுதியில் தேங்கி நிற்கும் மழைநீர் என்று பரவும் வீடியோ உண்மையா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் மழை நீர் தேங்கி நிற்கிறது என்று ஒரு வீடியோ மற்றும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்அப் சாட்பாட் எண்ணுக்கு வீடியோ மற்றும் புகைப்படம் ஒன்றை அனுப்பி, இது உண்மையா என்று கேட்டிருந்தார். வீடியோவில் ஒரு முதியவர் தூய தமிழில் பேசுகிறார். கொளத்தூர் என்று வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. புகைப்படத்தில் “முரசொலி பேப்பரின் பொய் செய்தி  […]

Continue Reading

மோர்பி பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அண்ணாமலை நன்றி கூறினாரா?

குஜராத் மாநிலம் மோர்பியில் தொங்குபாலம் விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி கூறினார் என்று ஒரு விஷம பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவின் தமிழாக்கம் பகிரப்பட்டுள்ளது. அதில், “குஜராத் மோர்பியில் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களுக்கும், குடும்பத்தாருக்கும் என் மனமார்ந்த […]

Continue Reading

அண்ணாமலையை புறக்கணிக்கிறோம் என்று தந்தி டிவி அறிவித்ததா?

பத்திரிகையாளர்களை அவமதிக்கும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்பைப் புறக்கணிக்கிறோம் என தந்தி டிவி அறிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அண்ணாமலை புகைப்படத்துடன் தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை அவமதிக்கும் தமிழ் நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்பை இனி தந்தி தொலைக்காட்சி […]

Continue Reading

ஐஎஸ்ஐஎஸ் நடத்தும் Movies Junction வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர வேண்டாம் என்று பரவும் தகவல் உண்மையா?

‘’Movies Junction என்ற பெயரில் ஐஎஸ்ஐஎஸ் நடத்தும் வாட்ஸ்ஆப் குரூப்பில் யாரும் சேர வேண்டாம்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இந்த தகவலை வாசகர் ஒருவர் நமக்கு +91 9049053770 என்ற வாட்ஸ்ஆப் சாட்பாட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் ஆய்வை தொடங்கினோம்.   உண்மை அறிவோம்: குறிப்பட்ட தகவல் உண்மையா என நாம் தகவல் தேடியபோது, இது ஒரு அடிப்படை ஆதாரமற்ற […]

Continue Reading

பிரதமர் பதவியேற்ற பிறகு இஸ்கான் கோயில் சென்று ரிஷி சுனக் வழிபட்டாரா?

‘’பிரதமர் பதவியேற்ற பின் இஸ்கான் கோயில் சென்று வழிபட்ட ரிஷி சுனக்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link  அக்டோபர் 26, 2022 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. ‘’இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற பின் இஸ்கான் ஆலயம் சென்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டார் ரிஷி சுனக்… 😍,’’ என்று இந்த […]

Continue Reading

இந்தியாவுக்கு மன்மோகன் சிங் போன்ற ஒரு பிரதமர் தேவை என்று ரிஷி சுனக் கருத்து கூறினாரா?

‘’தற்போதைய சூழலில் இந்தியாவுக்கு மன்மோகன் சிங் போன்ற ஒரு பிரதமர் தேவை,’’ என்று ரிஷி சுனக் கூறியதாகக் குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவலின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:   இந்த தகவலை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் வழியே (9049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார்.  இதுபற்றி விவரம் தேடியபோது, ஃபேஸ்புக்கிலும் இதனை பலர் ஷேர் செய்வதைக் கண்டோம்.  Facebook Claim Link I Archived Link  உண்மை […]

Continue Reading

நாங்கள் என்ன தேவிடியன் ஸ்டாக்ஸா என்று எச்.ராஜா கேட்டாரா?

‘’நாங்கள் என்ன தேவிடியன் ஸ்டாக்ஸா,’’ என்று எச். ராஜா கேள்வி கேட்டதாக, ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049044263) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றில் பலரும் ஷேர் செய்வதைக் கண்டோம். Twitter Claim Link I Archived Link  உண்மை அறிவோம்: குறிப்பிட்ட […]

Continue Reading

தீபாவளி இரவில் இந்தியா என்று நாசா செயற்கைக்கோள் படம் வெளியிட்டதா?

தீபாளி திருநாளில் இந்தியா ஒளிரும் காட்சி என்று செயற்கைக்கோளிலிருந்து எடுக்கப்பட்ட படத்தை நாசா வெளியிட்டதாகவும் தற்போது காஷ்மீரிலும் கூட தீபாவளி கொண்டாடி வருவதை அந்த வரைபடம் காட்டுவதாகவும் சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்தியா ஒளிர்வது போன்று செயற்கைக்கோள் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியாவில் தீபாவளி கொண்டாடப்படும் அழகை சற்றுமுன் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தனது […]

Continue Reading

கர்நாடகா மாநிலத்தில் கடல்கன்னி நடமாட்டம் என்று பரவும் வீடியோவால் பரபரப்பு…

‘’கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டிணா பகுதியில் ஓடும் ஆற்றில் கடல்கன்னி நடமாட்டம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்த வீடியோவை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி ‘’கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டிணா, மைசூர் பகுதியில் கடல்கன்னி ஆற்றில் நடமாடுகிறது,’’ என்று ஒரு தகவல் பரவுகிறது என்றும், இது  உண்மையா என்றும் சந்தேகம் கேட்டிருந்தார்.  உண்மை அறிவோம்:  குறிப்பிட்ட வீடியோ தொடர்பாக ஏதேனும் செய்தி […]

Continue Reading

பிரதமர் மோடி டாய்லெட் சென்றபோது 37 புகைப்படங்கள் எடுத்தாரா?

பிரதமர் மோடி கழிப்பறை சென்றுவிட்டு, 37 புகைப்படங்கள் எடுத்து விளம்பரம் செய்கிறார் என்று கூறி ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இந்த படத்தை வாசகர்கள் சிலர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+91 9049044263 & +91 9049053770) அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தனர்.  இதே படத்தை பலரும் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்வதையும் கண்டோம்.  Claim Link  l Archived Link  உண்மை அறிவோம்: இந்த […]

Continue Reading

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வீடியோவை திமுக ஆட்சியில் நிகழ்ந்தது போல பரப்புவதால் சர்ச்சை!

‘’திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதுபற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Twitter Claim Link I Archived Link   உண்மை அறிவோம்: குறிப்பட்ட வீடியோவில், 22.05.2018 என்றும் FCI Roundana என்றும் எழுதப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. இதன்மூலமாக, கடந்த 2018ம் ஆண்டு இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டதாக, எளிதல் உறுதி செய்ய முடிகிறது.  அடுத்தப்படியாக, இந்த வீடியோ எங்கே எடுக்கப்பட்டது என […]

Continue Reading

தாடி வளர்த்த ராகுல் காந்தி என்று கேலியாகப் பரவும் புகைப்படம் உண்மையா?

இந்திய ஒற்றுமை பயணத்தில் நடந்தால் தாடிதான் வளருமே தவிர கட்சி வளராது என்று ராகுல் காந்தி தாடி மீசையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மிகவும் அதிகமாகத் தாடி, மீசை மற்றும் தலைமுடி வளர்ந்த நிலையில் ராகுல் காந்தி இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நடந்து நடந்து தாடி தான் வளருமே தவிர கட்சியோ???ஓட்டோ […]

Continue Reading

அதிமுக உண்ணாவிரதப் போராட்டத்தில் பிரியாணி வழங்கப்பட்டது என்று பரவும் செய்தி உண்மையா?

அ.தி.மு.க உண்ணாவிரதப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்குப் பிரியாணி வரவழைக்கப்பட்டது என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக-வினர் போராட்டத்தில் ஈடுபட்ட புகைப்படத்துடன் மாலை மலர் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “போராட்டத்தில் கைது ஆன எடப்பாடி ஆட்களுக்கு “யா மொய்தீன்” கடையில் இருந்து பிரியாணி […]

Continue Reading

குண்டூரில் நாக தெய்வத்தின் கோயிலை இஸ்லாமியர்கள் இடித்தார்களா?

குண்டூரில் நாகதெய்வ கோவிலை இஸ்லாமியர்கள் இடித்தார்கள் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நாகம், பிறை – நட்சத்திரம் உள்ள ஒரு சுவர் வளைவை இஸ்லாமியர்கள் இடிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “குண்டூரில் நடந்தது.😱 நாளை உங்கள் ஊரில். . . இது எள்ளுண்டி நா வுரியில் நடக்கிறது இந்த காணொளி சிறுபான்மையினர் பெரும்பான்மையாகவோ அல்லது […]

Continue Reading

மோடி பெயரை கெடுக்க திமுக மற்றும் காங்கிரஸ் நிர்பந்தம் கொடுத்தனர் என்று அய்யாக்கண்ணு கூறினாரா?

‘’மோடியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும்படி திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் நிர்பந்தம் கொடுத்தனர்,’’ என்று அய்யாக்கண்ணு தெரிவித்ததாகக் குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்படும் செய்தி பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 மற்றும் +919049053770) அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தனர். இந்த செய்தியை ஃபேஸ்புக்கில் பலர் உண்மை போல பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்: தலைநகர் டெல்லியில் […]

Continue Reading

விசாரணை கமிஷன் அறிக்கை வீண் என்று அண்ணாமலை கூறினாரா?

ஜெயலலிதா மரணம் மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையங்கள் அளித்த அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் விசாரணை வீண் என்று அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive தினமலர் நாளிதழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “விசாரணை அறிக்கை வீண். நீதிபதிகளே ஊழலில் திளைக்கும் போது ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய ஆணையம் மட்டும் எப்படி சரியான அறிக்கையை […]

Continue Reading

மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கவில்லை என்று செந்தில்பாலாஜி கூறிய பிறகும் பரவும் வதந்தி!

தீபாவளிக்கு ரூ.600 கோடிக்கு மது விற்பனை செய்ய வேண்டும் என்று டாஸ்மாக் இலக்கு நிர்ணயித்தது என்று பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் டாஸ்மாக் கடை புகைப்படங்களை ஒன்று சேர்த்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தீபாவளி பண்டிகைக்கு விடியல்_டாஸ்மாக் கடைகளில் ரூ.600 கோடிக்கு மது விற்க ஏற்பாடு* டாஸ்மாக் கடைகளில் 10 நாட்களுக்குத் […]

Continue Reading

ராகுல் காந்தி நடத்தும் யாத்திரையில் கடல் போல திரண்ட மக்கள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’ராகுல் காந்தி நடத்தும் யாத்திரையில் கேமிராவில் படம்பிடிக்க முடியாத அளவுக்கு கடல் போல திரண்ட மக்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட புகைப்படத்தை நாம் கூகுள் உதவியுடன் ரிவர்ஸ் இமேஜ் முறையில் தேடியபோது, இதேபோன்ற புகைப்படம் 2020ம் ஆண்டிலேயே ஒரு ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டிருப்பதாக, விவரம் கிடைத்தது. அந்த லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது. எனினும், […]

Continue Reading

Explainer: ஆவின் தயாரிப்புகளில் டால்டா கலக்கப்படுகிறதா?

‘’ஆவின் தயாரிப்புகளில் நெய்க்குப் பதிலாக டால்டா கலக்கப்படுகிறது,’’ என்று பகிரப்படும் செய்தி பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Archived Link இந்த ட்விட்டர் பதிவில் தினமலர் நாளிதழ் பெயருடன் உள்ள நியூஸ்கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். உண்மை அறிவோம்: ஆவின் தயாரிக்கும் பால் மற்றும் பால் சார்ந்த தயாரிப்புகள், இனிப்பு வகைகள் தமிழக மக்களிடையே பிரபலம். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், ஆவின் தயாரிக்கும் இனிப்புகளில் நெய்க்கு பதிலாக, வனஸ்பதி எனப்படும் டால்டா சேர்க்கப்படுவதாகக் […]

Continue Reading

ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் 41.55 ரூபாய் வரியை தமிழ்நாடு அரசு வசூலிக்கிறதா?

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.41.55ஐ தமிழ்நாடு அரசு வரியாக வசூலிக்கிறது என்பது போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெட்ரோல் நிலையத்தில் அறிவிப்புப் பலகை வைத்திருப்பது போன்று எடிட் செய்யப்பட்ட புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “ அடிப்படை விலை 35.50 மத்திய அரசு வரி 19.50 மாநில அரசு வரி 41.55 விநியோகஸ்தர் 6.50 மொத்தம் 103.05.  […]

Continue Reading

பாஜக குறைந்தது 6 முறை ஆட்சியில் அமர்வது அவசியம் என்று சர்வதேச நீதிபதி கூறினாரா?

600 ஆண்டுகால அவமானங்களையும் 70 ஆண்டுகால சீர்கேடுகளையும் துடைத்தெறிய 6 முறையாவது பாஜக ஆட்சியில் அமர வேண்டும் என்று சர்வதேச நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி மற்றும் வெளிநாட்டைச் சார்ந்த ஒருவர் புகைப்படங்களை வைத்து புகைப்பட பதிவை உருவாக்கியுள்ளனர். மோடியின் புகைப்படத்துக்குக் கீழ், “600 ஆண்டு […]

Continue Reading

உச்ச நீதிமன்றத்தை விமர்சித்து பிரசாந்த் பூஷன் ட்விட்டரில் பகிர்ந்த கார்ட்டூன் இதுவா?

‘’உச்ச நீதிமன்றத்தை விமர்சித்து பிரசாந்த் பூஷன் ட்விட்டரில் வெளியிட்ட கார்ட்டூன்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link குறிப்பிட்ட ஸ்கிரின்ஷாட்டை நமக்கு வாசகர் ஒருவர் 9049053770 என்ற வாட்ஸ்ஆப் சாட்போட் எண் வழியே அனுப்பி, உண்மையா என கேட்டிருந்தார். உண்மை அறிவோம்:இந்த கார்ட்டூனில் அமெரிக்காவில் செயல்படும் ரிபப்ளிக் கட்சியின் சின்னம் (யானை) இடம்பெற்றுள்ளதை […]

Continue Reading

ஒரே ஆண்டில் வாகன பராமரிப்புக்கு ரூ.51.64 கோடி செலவு என்று தி.மு.க அரசு கணக்கு காட்டியதா?

தி.மு.க அரசு அமைந்த பிறகு மதுரை மாநகராட்சியில் வாகன பராமரிப்புக்கு என்று ரூ.51.64 கோடி செலவு செய்யப்பட்டது போன்று பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜூனியர் விகடன் வெளியிட்ட நியூஸ் கார்டை வைத்து பதிவிடப்பட்டுள்ளது. அதில், “வாகன ரிப்பேர் செலவு ரூ.51.64 கோடி… மிரள வைக்கும் மதுரை மாநகராட்சி கணக்கு!” என்று இருந்தது. நிலைத் தகவலில், “வாகன ரிப்பேர் […]

Continue Reading

டெல்லியை தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் பலர் புத்தமதம் தழுவினர் என்று கதிர் நியூஸ் கூறியதா?

‘’டெல்லியை தொடர்ந்து உத்தரப் பிரதேசத்திலும் நேற்று பலர் புத்தமதத்திற்கு மாறினர் – கதிர் நியூஸ் ,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். இதே செய்தியை பலரும் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்வதை கண்டோம்.  Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்: குறிப்பிட்ட செய்தியை கதிர் நியூஸ் வெளியிடவில்லை. இதுபற்றி நாம் […]

Continue Reading

4ஜி செல்போன் உற்பத்தியை நிறுத்த மத்திய அரசு உத்தரவா?

4ஜி செல்போன்களின் உற்பத்தியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்தியாவில் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ள 4ஜி செல்போன்களின் உற்பத்தியை நிறுத்துமாறு செல்போன் உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது என்று சத்யம் டிவி செய்தி வெளியிட்டுள்ளது. நிலைத் தகவலில், “4ஜி செல்போன்களின் உற்பத்தியை உடனடியாக […]

Continue Reading

ஜேசிபி பக்கெட் பொருத்தப்பட்ட புதிய வந்தே பாரத் ரயில் என பரவும் போலியான புகைப்படம்!

வந்தே பாரத் ரயிலில் புதிய தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டுள்ளது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வந்தே பாரத் ரயிலின் முன்புறத்தில் ஜேசிபி இயந்திரத்தில் உள்ள பக்கெட் அமைப்பு பொருத்தப்பட்டது போன்று படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விரைவில் ஜப்பான் முதலீட்டில் ., உத்தரபிரதேசத்தில் நிறுவப்படவுள்ள புதிய தொழில்நுட்பம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த படத்தை Praveen Chitti என்ற […]

Continue Reading

முக்குலத்தோருக்கு முக்கியத்துவம் தர வேண்டாம் என்று மோடியை அண்ணாமலை கேட்டுக்கொண்டாரா?

‘’முக்குலத்தோரை கண்டுகொள்ள வேண்டாம் என்று அண்ணாமலை சொன்னதால், தேவர் ஜெயந்தியில் பங்கேற்கும் திட்டத்தை மோடி கைவிட்டுவிட்டார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேட்டது. தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்: அக்டோபர் 30ம் தேதி நடைபெற உள்ள தேவர் ஜெயந்தியில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக ஒரு செய்தி ஊடகங்களில் வெளியிடப்பட்டது. அத்துடன் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டப்படும் […]

Continue Reading

டேவிட் மில்லரின் மகள் திடீர் மரணமா? அவசர கதியில் பகிரப்படும் வதந்தியால் சர்ச்சை…

‘’தென்னாப்ரிக்க கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லரின் மகள் திடீர் மரணம்,’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:  குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவிற்கு, ‘’ தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லர் மகள் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்,’’ என்று தலைப்பிட்டுள்ளனர். இதன்மூலமாக, வாசகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த பதிவு உள்ளதை உணரலாம். அந்த பதிவு […]

Continue Reading

டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் சபரீசனின் உதவியாளரை சிபிஐ கைது செய்ததா?

டெல்லியில் மதுபான வரி முறைகேடு வழக்கில் ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் உதவியாளர் அபிஷேக் கைது செய்யப்பட்டார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தி.மு.க தலைவராக இருந்த மு.கருணாநிதி மறைவின் போது ஸ்டாலின் அழுத வீடியோவை வைத்து பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை மற்றும் மருமகன் சபரீசனின் தனி உதவியாளர் அபிஷேக் […]

Continue Reading

மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை சூட்டுகிறார் மோடி என தந்தி டிவி செய்தி வெளியிட்டதா?

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைப்பதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட உள்ளார் என தந்தி டிவி செய்தி வெளியிட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கதேவர் பெயர் ஆணை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!!! […]

Continue Reading

சிங்கப்பூர் ஹோட்டல் படத்தை குஜராத் மருத்துவமனை என்று வதந்தி பரப்பும் விஷமிகள்!

சிங்கப்பூரின் மெரினா பே சாண்ட்ஸ் (Marina Bay Sands) ஹோட்டல் புகைப்படத்தை, குஜராத்தில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை என்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு ஃபேஸ்புக் லிங்க் ஒன்றை அனுப்பியிருந்தார். அந்த லிங்க்கை திறந்து பார்த்த போது, சிங்கப்பூரின் புகழ்பெற்ற ஹோட்டல் ஒன்றின் புகைப்படம் இருந்தது. நிலைத் […]

Continue Reading

இளைஞர்கள் காதில் ஏர் ஹாரன் அடித்து தண்டனை கொடுத்தது பீகாரிலா… மத்திய பிரதேசத்திலா?

பீகாரில் நவராத்திரி விழாவின் போது ஏர் ஹார்ன் மூலம் பொது மக்களுக்கு தொல்லை கொடுத்த இளைஞர்களுக்கு அதே ஏர் ஹார்னை அவர்கள் காதில் அடித்து தண்டனை கொடுத்த போலீஸ் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இளைஞர்கள் சிலரின் காதில் போலீஸ் அதிகாரி ஒருவர் இளைஞர்கள் சிலர் காதில் ஏர் ஹார்ன் வைத்து ஒலி எழுப்பும் வீடியோ […]

Continue Reading

வந்தே பாரத் ரயில் சக்கரம் தட்டையாக மாறியது என்று பரவும் வதந்தி!

வந்தே பாரத் ரயில் சக்கரம் சரியான முறையில் தயாரிக்காத காரணத்தால் பாரம் தாங்காமல் தட்டையானது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரயில் சக்கரம் தட்டையாக இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டயர் பஞ்சர் ஆகும்போது லோடு தாங்காம கார் அல்லது லாரி மாதிரி வாகனங்களின் ரிம் சப்பையாகும். எத்தனையோ விதமான ரயில் விபத்துகளைப் பாத்திருப்போம். […]

Continue Reading

கிரிக்கெட் விளையாடி கீழே விழுந்த திமுக எம்.பி செந்தில் என்று பரவும் வீடியோ உண்மையா?

தர்மபுரி தி.மு.க எம்.பி செந்தில்குமார் கிரிக்கெட் விளையாடி கீழே விழுந்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கிரிக்கெட் விளையாடும் நபர் ஒருவர் பந்தை அடிக்க முயற்சி செய்து கீழே விழும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தர்மபுரி எம்பியின் அபாரமான பேட்டிங்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Vinoth Kumar என்ற ஃபேஸ்புக் ஐடி […]

Continue Reading

மு.க.ஸ்டாலினை கேலி செய்து சன் நியூஸ் இந்த செய்தியை வெளியிட்டதா?

‘’மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டார் – The dictator படத்தின் காட்சியை இணைத்து செய்தி வெளியிட்ட சன் நியூஸ்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:கேலி செய்யும் நோக்கில் இந்த டெம்ப்ளே தயாரிக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்படுகிறது. ஆனால், இதனை பலர் உண்மை போலவே நம்பி பகிர்வதால், நாமும் குழப்பமடைய வேண்டியுள்ளது. உண்மையில், இப்படி […]

Continue Reading

மலேசிய அருங்காட்சியகத்தில் குந்தவை ஓவியம்?- நையாண்டிப் பதிவால் குழப்பம்!

பழைய புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து இதுதான் குந்தவையின் ஓவியம் என்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். நையாண்டிக்குப் போடப்பட்ட பதிவை பலரும் உண்மையானது போலப் பகிர்ந்து வரவே அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பட்டுப் புடவை மற்றும் ஏராளமான நகை அணிந்த பெண்ணின் கருப்பு வெள்ளை புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மலேசிய நாட்டிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருக்கும் சோழ இளவரசி குந்தவையின் […]

Continue Reading

ராமேஸ்வரம் முதல் கேதார்நாத் வரை ஒரே நேர்க்கோட்டில் சிவாலயங்கள் அமைந்துள்ளனவா?

ராமேஸ்வரம் முதல் வட இந்தியாவில் உள்ள கேதார்நாத் வரை எட்டு முக்கிய சிவாலயங்கள் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளது என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்திய வரைபடத்தில் நேர்க்கோடு வரைந்து அவற்றில் முக்கிய சிவாலயங்கள் சிவலிங்கம் போன்று அடையாளப்படுத்திக் காட்டப்பட்டுள்ள படத்தை வைத்துப் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. “ராமேஸ்வரம் முதல் கேதார்நாத் வரை ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும் முக்கிய […]

Continue Reading

RAPID FACT CHECK: அண்ணாமலை ரூ. 5000 கோடி விவகாரம்; கழுகார் எக்ஸ்க்ளூசிவ் என பரவும் வதந்தி!

மத்திய அமைச்சர் ஒருவருக்காக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ரூ.5000 கோடியை வெளிநாட்டில் முதலீடு செய்யச் சென்றுள்ளார் என்று ஜூனியர் விகடன் இதழில் செய்தி வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜூனியர் விகடன் இதழின் ஒரு பகுதியை புகைப்படமாக எடுத்து பதிவிட்டுள்ளனர். கழுகார் எக்ஸ்க்ளூசிவ் என்று பெட்டி செய்தியாக உள்ளது. அதில், “மத்திய அமைச்சரவையின் […]

Continue Reading

உலக நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அமெரிக்காவில் குடியேற தடையா?

‘’அமெரிக்காவில் குடியேற உலக நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு தடை,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர் +91 9049053770 மற்றும் +91 9049044263 ஆகிய நமது வாட்ஸ்ஆப் எண்களுக்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தனர். ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் பலர் இதனை உண்மை போல குறிப்பிட்டு ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim […]

Continue Reading