இந்திய அரசியல்வாதிகள் பற்றி சுந்தர் பிச்சை ஃபேஸ்புக்கில் பதிவிட்டாரா?

இந்திய அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் பற்றி சுந்தர் பிச்சை கருத்து கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சத்தியம் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு போல பகிரப்பட்டுள்ளது. அதில் சுந்தர் பிச்சை வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவை அவர்கள் வெளியிட்டுள்ளது போல அந்த நியூஸ் கார்டு உள்ளது.  அதில், “ஒரு அரசியல் வாதியால் இரண்டு இடங்களில் தேர்தலில் போட்டியிட முடியும். ஆனால் நாம் […]

Continue Reading

அயோத்தியில் பாபர் மசூதிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் கிடைத்த அனுமன் சிலையா?

அயோத்தியில் மசூதி கட்ட ஒதுக்கப்பட்ட ஐந்து ஏக்கர் நிலத்தில் தோண்டியபோது அனுமன் சிலை கிடைத்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பள்ளத்தில் இருக்கும் அனுமன் சிலையை போலீஸ் அதிகாரிகள் பார்வையிடும் படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாபர் மசூதிக்கு ஒதுக்கப்பட்ட ஐந்து ஏக்கர் நிலத்தை தோண்டியபோது, ​​நிலத்தில் அனுமனின் சிலை காணப்பட்டது. அயோத்தி ராமரின் நிலம் என்பதை […]

Continue Reading

இந்தியை எதிர்க்கும் தென்னிந்தியர்களை வெளியேற்றுவோம் என்று கூறினாரா ஜே.பி.நட்டா?

“இந்தியை எதிர்க்கும் தென்னிந்தியர்களை வெளியேற்றுவோம்” பாரதிய ஜனதா கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா கூறியதாக தந்தி டி.வி ட்வீட் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தந்தி டி.வி வெளியிட்ட ட்வீட்டின் ஸ்கிரீன் ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “பிரேக்கிங்: குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து ஜேபி நட்டா அறிக்கை. இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே இந்தியர்கள் என்று அடுத்த திருத்தம் […]

Continue Reading

தலித் என்பதால் என்கவுண்டர் பாய்ந்தது! – பா.ரஞ்சித் கூறியதாக பரவும் வதந்தி

தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால்தான் என்கவுண்டர் நடந்தது என்று பா.ரஞ்சித் கூறியதாக, ஐதராபாத் என்கவுண்டர் சம்பவத்துக்கு சாதி சாயம் பூசும் வகையில் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link திரைப்பட காட்சியை வைத்து பதிவிட்டுள்ளார்கள். அதில், “தலித் சமூகம் என்பதால்தான் அவர்கள் மீது என்கவுன்டர் பாய்ந்தது – ப.ரஞ்சித்” என்று குறிப்பிட்டுள்ளனர்.  இந்த பதிவை, Suresharun Suresh என்பவர் 2019 டிசம்பர் 6ம் […]

Continue Reading

மோடியை உலகின் முட்டாள் பிரதமர் என்று கூகுள் அறிவித்ததா?

உலகின் மிகவும் முட்டாள் பிரதமராக மோடி தேர்வு செய்யப்பட்டார் என்று கூகுள் நிறுவனம் அறிவித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சினிமா திரைப்பட காட்சிகளுக்கு மத்தியில் நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு வைக்கப்பட்டு கொலாஜ் செய்யப்பட்டுள்ளது. அதில், “உலகின் மிகவும் முட்டாள் பிரதமராக மோடி தேர்வு! கூகுள் நிறுவனம் அறிவிப்பு” என்று இருந்தது. இந்த பதிவை, Kannadasan […]

Continue Reading

இந்தியாவில் 6 மதங்களுக்கு மட்டுமே அனுமதியா?

‘’இந்தியாவில் 6 மதங்களுக்கு மட்டுமே இனி அனுமதி,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  இது டிஎன்நியூஸ் 24 என்ற இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்க் ஆகும். இதே செய்தியை குறிப்பிட்ட இணையதளம் தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்திருந்தது.  Facebook Claim Link  Archived Link 1 TNNews24 Website Archived Link 2 […]

Continue Reading

நித்யானந்தாவை கிறிஸ்தவ மதத்தில் சேரும்படி அழைத்தாரா சிஜே ஜெபா?

‘’நித்யானந்தாவை கிறிஸ்தவ மதத்தில் சேர அழைத்த பாதிரியார் சி.ஜே. ஜெபா,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link News N எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை கடந்த டிசம்பர் 8, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், ‘’நித்யானந்த சுவாமி மற்றும் அவருடைய சீடர்கள் இப்போது கிறிஸ்தவத்திற்கு மாறி ஊழியம் செய்தால் அவர் மீது நடத்தப்படும் சட்டரீதியான […]

Continue Reading

வள்ளியூர் காவல்நிலையத்தில் இருக்கும் சிறுமி!- ஃபேஸ்புக் தகவல் உண்மையா?

படத்தில் இருக்கும் சிறுமி தற்போது திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் காவல் நிலையத்தில் உள்ளார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link யாரோ ஒருவர் பகிர்ந்த பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். ஐயப்ப மாலை அணிந்த சிறுமி ஒருவரின் படம் உள்ளது. அதில், “இந்த படத்தில் இருக்கும் சிறுமி தற்போது திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் காவல்நிலையத்தில் உள்ளார். உங்களுக்கு உதவும் […]

Continue Reading

சபரிமலைக்கு மாலை போட்டதால் கழிப்பறை சுத்தம் செய்ய சொன்ன கிறிஸ்தவ பள்ளி?

சபரிமலைக்கு மாலை போட்டதால் பள்ளி கழிவறையை சத்தம் செய்ய கிறிஸ்தவ பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டதாகவும், அப்போது சிறுவனின் கையில் ஆசிட் பட்டதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சிறுவன் ஒருவனின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், “மதச்சார்பற்ற திராவிட ஊடகங்கள் இதைப் பற்றி பேசினா முதலாளியிடம் பேமென்ட் கிடைக்காது. தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே இடையர்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வகுமார். […]

Continue Reading

தி.மு.க-வுடன் இணைய டி.டி.வி முடிவு?- அதிர்ச்சி தந்த ஏஷியாநெட் செய்தி!

தி.மு.க-வுடன் இணைய டி.டி.வி.தினகரன் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டார் என்று ஏஷியாநெட் செய்தி வெளியிட்டிருந்தது. அது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Article Link Archived Link 2 டிசம்பர் 9ம் தேதி ஏஷியாநெட் தமிழ் இணையதளம் வெளியிட்ட செய்தியை ஏஷியாநெட் தமிழ் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அதில், “தி.மு.க-வுடன் இணைய முடிவு! டி.டி.வி.தினகரன் அதிரடி அறிவிப்பு” என்று குறிப்பிட்டிருந்தனர். உண்மை அறிவோம்: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு […]

Continue Reading

போலீசிடம் கெஞ்சிய எடப்பாடி பழனிசாமி- ஃபேஸ்புக் படம் உண்மையா?

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, போலீசாரிடம் “நான்தான் முதல்வர் எடப்பாடி” என்று கூறி கெஞ்சுவது போல ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link எடப்பாடி பழனிசாமியின் படங்கள் நான்கை கொலாஜ் செய்து பதிவிட்டுள்ளனர். அதில் போலீசாரிடம் எடப்பாடி பழனிசாமி “யோவ் நான்தான் முதல்வர் எடப்பாடி” என்று கூறுவது போலவும் அதற்கு போலீஸ்காரர் “யாருடா கோமாளி நீ..?” என்று தள்ளிவிடுவது போலவும் பதிவிட்டுள்ளனர். […]

Continue Reading

ஐதராபாத் என்கவுன்டர் புகைப்படம் இதுவா?

‘’ஐதராபாத் என்கவுன்டர்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு புகைப்படத்தை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link IndiaGlitz Link  Archived Link  IndiaGlitz Tamil இந்த ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளது. இதே செய்தியை தங்களது இணையதளத்திலும் பகிர்ந்துள்ளனர். ஆனால், இதில் உள்ள புகைப்படம் மட்டும் குழப்பமாக உள்ளது. உண்மை அறிவோம்: தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் திஷா (பிரியங்கா ரெட்டி) […]

Continue Reading

மேட்டுப்பாளையம் சுவர் விவகாரம்: முத்தரசன் பற்றி புதிய தலைமுறை வெளியிட்ட செய்தி என்ன?

மேட்டுப்பாளையம் சுவர் குறித்து 1998ம் ஆண்டு கருணாநிதியிடம் புகார் கொடுத்தோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Article Link புதிய தலைமுறை வெளியிட்ட ட்வீட் பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வெளியிட்டது போல பதிவு உள்ளது. அதில், “மேட்டுப்பாளையம் சுவர் குறித்து 1998ம் ஆண்டே கருணாநிதியிடம் புகார் கொடுத்தோம். அதை கிடப்பில் போட்டதால் இன்று […]

Continue Reading

ஒரே முகம் கொண்ட 28 பேர் – ஃபேஸ்புக் புகைப்படம் உண்மையா?

ஒரே முகம் கொண்ட 28 பேர் ஆனால், வெவ்வேறு நாடுகளைச் சார்ந்தவர்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link குரூப் போட்டோ பகிரப்பட்டுள்ளது. அதில், இவர்கள் யார், எங்கே எப்போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்று எந்த ஒரு தகவலும் இல்லை. நிலைத் தகவலில், “உலகின் எட்டாவது அதிசயம். ஒரே முகம் கொண்ட 28 பேர். ஆனால், வெவ்வேறு […]

Continue Reading

ஆபாச படம் பார்ப்பவர்களின் பெயர் பட்டியலை சிபிஐ வெளியிட்டதா?

‘’ஆபாச படம் பார்ப்பவர்களின் பட்டியலை சிபிஐ வெளியிட்டது,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட பதிவு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Raja Sekara Pandian‎ எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதேபோல, நிறைய பேர் ஃபேஸ்புக்கில் தகவல் பகிர்ந்து வருவதைக் காண முடிகிறது.  உண்மை அறிவோம்:உலக அளவில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை பார்ப்பதில் சென்னை மாநகரம் […]

Continue Reading

துருக்கி படை பாலஸ்தீனம் வந்ததாகச் சொல்லப்படும் ஃபேஸ்புக் தகவல் உண்மையா?

காஸா மக்களை பாதுகாக்க துருக்கி ராணுவ உதவி செய்துள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link துருக்கி ராணுவத்தின் 9 படங்கள் பகிரப்பட்டுள்ளன. சில படங்களில் துருக்கி நாட்டு கொடி உள்ளது. சில படங்களில் எதுவும் இல்லை. ஒரு படத்தில் உள்ள வீரர்களைப் பார்க்கும்போது அமெரிக்கர்களைப் போல தெரிந்தனர்.  நிலைத் தகவலில், “காஸா மக்களை பாதுகாக்க, துருக்கி படை […]

Continue Reading

நம் உயிர் காப்பாற்ற காவல் காக்கும் இந்திய வீரரின் புகைப்படம் இதுவா?

‘’நம் உயிர் காப்பாற்ற காவல் காக்கும் இந்திய வீரரின் புகைப்படம்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த பதிவின் கமெண்ட்களில் பலரும் மேற்கண்ட புகைப்படத்தில் இருப்பவர் இந்திய ராணுவ வீரர் என நினைத்து, பதிவிட்டதை காண முடிகிறது. எனவே, இப்புகைப்படம் ஃபேஸ்புக் வாசகர்களை குழப்புவதாக உள்ளதென்று தெளிவாகிறது.  உண்மை அறிவோம்:இந்த புகைப்படத்தை நன்கு உற்றுப்பார்த்தால் அதில் […]

Continue Reading

எம்ஜிஆர் அடித்தபோது காப்பாற்றியவர் கருணாநிதி: ரஜினி பெயரில் போலி செய்தி!

“எம்.ஜி.ஆர் என்னை கட்டி வைத்து அடித்தபோது காப்பாற்றியவர் கருணாநிதி” என்று ரஜினிகாந்த் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link புதிய தலைமுறை நியூஸ் கார்டுடன் ஒரு சினிமா காட்சியை சேர்த்து பதிவிடப்பட்டுள்ளது. நியூஸ் கார்டில், “எம்.ஜி.ஆர் என்னை கட்டிவைத்து அடித்தபோது காப்பாற்றியவர் கருணாநிதி – ரஜினிகாந்த்” என்று இருந்தது. சினிமா காட்சிப் பகுதியில், “கருணாநிதி உன்னை காப்பாற்றினது […]

Continue Reading

முரசொலி ஆதாரம் இல்லை என்று டாக்டர் ராமதாஸ் கூறினாரா?

முரசொலி நிலம் பிரச்னையில் ஆதாரம் இல்லை என்று டாக்டர் ராமதாஸ் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link டாக்டர் ராமதாஸ் மற்றும் திரைப்பட காட்சி ஒன்றை கொலாஜ் செய்து பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், டாக்டர் ராமதாஸ் படத்துக்கு மேல் “முரசொலி ஆதாரம் இல்லை, 2010ல் அதிமுக அறிக்கையில் இருந்ததால் சொன்னேன் – ராமதாஸ் அந்தர்பல்டி” என்று போட்டோஷாப்பில் எழுதப்பட்டுள்ளது. […]

Continue Reading

ரானு மோண்டல் மேக்அப் புகைப்படம் உண்மையா?

‘’ரானு மோண்டல் மேக்அப் புகைப்படம்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு வைரல் புகைப்படத்தைக் காண நேரிட்டது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  இதே செய்தியை Star Tamils என்ற இணையதளமும் பகிர்ந்திருந்தது.  Facebook Link  Archived Link  Star Tamils News Link Archived Link  உண்மை அறிவோம்: மேற்கு வங்கம் மாநிலம், ரானாகத் பகுதி ரயில் நிலையத்தில் பாட்டு பாடி பிச்சை எடுத்து வந்தவர் […]

Continue Reading

சீமான் கையில் ஆமை- புகைப்படம் உண்மையா?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆமை ஒன்றை கையில் வைத்திருப்பது போன்ற படம் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link காரில், ஆமையை கையில் ஏந்தியபடி சீமான் அமர்ந்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அனைவருக்கும் அமாவாசையின் ஞாயிற்றுக்கிழமை நல்வாழ்த்துக்கள். எங்கள் வீட்டில் ஆமை கறி உங்க வீட்டில்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, அமாவாச – Naga […]

Continue Reading

ஃபேஸ்புக் வதந்தி: போரில் வெற்றி பெற நரபலி தவறில்லை என்றாரா அமித்ஷா?

போரில் வெற்றி பெறுவதற்காக நம் வீரர்களையே நரபலி கொடுப்பதில் தவறில்லை என்று சாணக்ய நீதி கூறுகிறது என்று அமித்ஷா கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அமித்ஷா படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “போரில் வெற்றி பெறுவதற்காக நம் வீரர்களையே நரபலி கொடுப்பதில் தவறில்லை என்கிறது சாணக்ய நீதி – அமித் […]

Continue Reading

மிக அரிதான மரபியல் குறைபாட்டுடன் பிறந்த குழந்தை பற்றி சமூக ஊடகங்களில் பரவும் வதந்தி!

அஸ்ஸாமில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் உயிரிழந்ததாகவும் தாயின் குடலை கர்ப்பப்பையில் இருந்த சிசு சாப்பிட்டதால்தான் தாய் உயிரிழந்தார் என்று பரிதாபமான பச்சிளம் குழந்தை படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 15 விநாடிகள் மட்டும் ஓடக்கூடிய வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், மிகவும் பயங்கரமான தோற்றத்தில் பச்சிளம் குழந்தை […]

Continue Reading

300 அடி ஆழ கிணற்றில் விழுந்த சிறுவனை காப்பாற்றிய சீனர்கள்: உண்மை என்ன?

‘’300 அடி ஆழ கிணற்றில் விழுந்த சிறுவனை காப்பாற்றிய சீனர்கள்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link  இனி என்றும் அம்மாவின் நினைவில்   எனும் ஃபேஸ்புக் ஐடி அக்டோபர் 26, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் ஒருவனை சீன தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. 300 அடி ஆழம் […]

Continue Reading

பிராமணர்களுக்கு கீழ்தான் மற்ற இந்து அடிமைகள் என்று எச்.ராஜா கூறினாரா?

“பிராமணர்களுக்கு கீழ்தான் மற்ற இந்து அடிமைகள் என்பதை அத்திவரதர் வருகை நிரூபித்துள்ளது” என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அத்திவரதர் மற்றும் எச்.ராஜா படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பிராமணர்களுக்கு கீழ்தான் மற்ற இந்து அடிமைகள் என்பதை அத்திவரதர் வருகை நிரூபித்திருக்கிறது […]

Continue Reading

முரசொலி விசாரணையின்போது கழிவறை செல்வதாகக் கூறி தப்பினாரா பாஜக செயலாளர் சீனிவாசன்?

முரசொலி நிலம் தொடர்பான விசாரணை நடைபெறும்போது கழிவறை சென்றுவருவதாக கூறி பின்வாசல் வழியாக பா.ஜ.க செயலாளர் சீனிவாசன் தப்பி ஓடியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா அல்லது வதந்தியா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழக பாரதிய ஜனதா கட்சியின் செயலாளர் சீனிவாசனின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத்தகவலில், “முரசொலி விவகாரத்தில் விசாரணை நடைபெறும்போது கழிவறை சென்றுவருதாக கூறி பின் வாசல் வழியாக தப்பி ஓடிய […]

Continue Reading

இங்கிலாந்து அரசிக்கு அணிவகுப்பு மரியாதை அளித்த ஆர்.எஸ்.எஸ்?

இங்கிலாந்து அரசிக்கு ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு மரியாதை அளித்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத் வரும்போது, அவருக்கு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் அணிவகுப்பு மரியாதை செய்தது போன்ற படம் ஒன்ற பகிரப்பட்டுள்ளது. படத்தின் மீது, “இவர்களா தேச பக்தர்கள்? – விடுதலைப் போராட்ட போராளிகளை காட்டிக்கொடுத்து ஆங்கிலேயர்களுக்கு அணிவகுத்து மரியாதை செய்யும் ஆர்.எஸ்.எஸ்” என்று குறிப்பிட்டுள்ளனர். […]

Continue Reading

ரத்த புற்றுநோய்க்கு அடையாறு கேன்சர் இஸ்டிடியூட்டில் இலவச சிகிச்சை தரப்படுகிறதா?

ரத்த புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாகவும் இந்த மருந்து சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் இலவசமாக வழங்கப்படுகிறது என்றும் சமூக ஊடகங்களில் ஒரு தகவல் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இதுவரை கொடிய நோயாக இருந்த ரத்த புற்றுநோயை முழுவதுமாக குணமாக்குவதற்கு புதிதாக மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. அதில், புற்றுநோய் மருத்துவமனையின் முகவரி, போன் நம்பர் கொடுத்துள்ளனர். பல பேர் பார்க்க […]

Continue Reading

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் நடந்த முரசொலி விசாரணைக்கு பயந்து தப்பி ஓடிய உதயநிதி?

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் நடந்த முரசொலி நிலம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாமல் உதயநிதி ஸ்டாலின் பயந்து தப்பி ஓடியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link முரசொலி அலுவலக புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. படத்தின் மேல் மற்றும் கீழ்ப் பகுதியில், “மூல பத்திரத்தைக் காட்டு… இல்ல முரசொலிய பூட்டு” என்று போட்டோஷாப்பில் எழுதப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “முரசொலி விசாரணைக்கு பயந்து எஸ்சி எஸ்டி […]

Continue Reading

கர்நாடகாவில் மசூதிக்குள் மறைக்கப்பட்ட பிரம்மாண்ட கோவில் இதுவா?

கர்நாடக மாநிலம் ரெய்ச்சூரில் மசூதி ஒன்றுக்குள் மறைக்கப்பட்டிருந்த கோவில் என்று ஒரு பிரம்மாண்ட கோவில் படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரம்மாண்ட குகைக் கோவில் சிலை படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளனர். படத்தின் மேல் பகுதியில், “கர்நாடகா ரெய்ச்சூர் மசூதிக்குள் மறைக்கப்பட்ட கோவில். ரெய்ச்சூரில் சாலை விரிவாக்க பணிக்காக பள்ளிவாசலை இடித்தபோது, மறைக்கப்பட்ட தேவி ஆலயம் வெளிவந்தது. வாழ்க இந்துக்களை வஞ்சிக்கும் […]

Continue Reading

நித்தியானந்தா காலில் விழுந்த அமித்ஷா: ஃபேஸ்புக் வைரல் புகைப்படம் உண்மையா?

நித்தியானந்தா நாட்டைவிட்டுத் தப்பி ஓட முயலும்போது அவரை அமித்ஷா பிடித்த தருணம் என்று நித்தியானந்தா காலில் அமித்ஷா விழுந்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நித்தியானந்தா காலில் ஒருவர் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் படத்தை பகிர்ந்துள்ளனர். பார்க்க அமித்ஷா போல தெரிகிறது. ஆனால், உடல்வாகு அமித்ஷா போலத் தெரியவில்லை. காலில் விழும் அவரை தூக்க நித்தியானந்தா கையை அவருடைய […]

Continue Reading

சென்னை ஐஐடியில் மனுதர்ம சாஸ்திரம், தனித்தனி கை கழுவும் இடம் என்று பகிரப்படும் படங்கள் உண்மையா?

சென்னை ஐஐடி-யில் மனு தர்ம சாஸ்திரத்தில் அசைவ உணவு உட்கொள்வது பற்றி குறிப்பிட்டுள்ள கருத்து கல்வெட்டாக வைக்கப்பட்டுள்ளது போலவும், சைவம், அசைவம் சாப்பிடுபவர்களுக்கு தனித்தனி கை கழுவும் இடம் உள்ளது போலவும் சில படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மூன்று படங்கள் பதிவிடப்பட்டுள்ளன. முதல் படத்தில், “நூறு வருஷ காலம் வருஷந்தோறும் அசுவமேத யாகம் செய்த பயனும், மாமிச போஜனம் […]

Continue Reading

திருச்சி கோவிலில் மொபைல், விண்வெளி வீரர் சிற்பம்- ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

திருச்சியில் உள்ள பஞ்சவர்ணசாமி கோவிலில் சைக்கிள், விண்வெளி வீரர், செல்போன் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளதாக படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இரண்டு சைக்கிளில் பயணம் செய்பவர்கள் சிலை, தொடக்க கால மாடல் செல்போன் விண்வெளி வீரர் சிலை படங்கள் பகிரப்பட்டுள்ளது.  நிலைத் தகவலில், “ஒரு மிதிவண்டியை,செல்லிடப்பேசியை கண்டுபிடித்தவர் யார்? சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டில் எந்த விண்வெளி வீரரும் […]

Continue Reading

மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்த ராமதாஸ்: உண்மை அறிவோம்!

‘’மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்த ராமதாஸ்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link MKS For CM எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை நவம்பர் 19, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், பாமக நிறுவனர் ராமதாஸ் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’முரசொலி நிலம் பஞ்சமி நிலம் அல்ல என நிரூபித்தால் அரசியலில் இருந்தே விலக தயார். […]

Continue Reading

ராமதாஸ் ஆதாரம் தரவில்லை: பாஜக சீனிவாசன் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு!

பஞ்சமி நில விவகாரத்தில் ராமதாஸ் ஆதாரம் தந்து அனுப்பவில்லை என்றும் வாய்தா வாங்கியுள்ளோம் என்றும் பா.ஜ.க நிர்வாகி சீனிவாசன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் சீனிவாசன் படத்துடன் கூடிய நியூஸ்7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பஞ்சமி நில விவகாரம். ராமதாஸ் ஆதாரம் தந்து […]

Continue Reading

அர்ஜுன் சம்பத் வாயில் இருந்து வேதம் வருவது வேதனை என்று எச்.ராஜா கூறினாரா?

“அர்ஜுன் சம்பத் வாயில் இருந்து வேதம் வெளிவரப்போவது வேதனை அளிக்கிறது” என்று எச்.ராஜா ட்வீட் செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link எச்.ராஜா ட்வீட் ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிரப்பட்டது போன்று பதிவு உள்ளது. அதில், “திருமாவளவனை இந்து மதத்தில் இருந்து விலக்க அர்ஜுன் சம்பத் யாகம் செய்வதாக அறிந்தேன். வேதத்தை கேட்டாலே காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டிய […]

Continue Reading

பாஜகவுக்கு யார் அதிகம் சொம்படிப்பது என்ற தலைப்பில் மதன் ரவிச்சந்திரன் விவாதம் நடத்தினாரா?

‘’பாஜக யார் சரியாக சொம்பு தூக்குவது,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு செய்தியை காண நேரிட்டது. இந்த தலைப்பில் உண்மையிலேயே வின் டிவி விவாத நிகழ்ச்சி நடத்தியதா என விவரம் அறிய முயற்சித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Troll Mafia எனும் ஃபேஸ்புக் ஐடி மேற்கண்ட பதிவை வெளியிட்டுள்ளது. இதில், வின் டிவி பெயரில் மதன் ரவிச்சந்திரன் நடத்தும் விவாத நிகழ்ச்சி ஒன்றின் பெயரில் நியூஸ் கார்டு வெளியிட்டுள்ளனர். அதில், ‘’மதன் […]

Continue Reading

கருணாநிதியின் சிறுவயது புகைப்படம் என்று சமூக ஊடகங்களில் பரவும் வதந்தி!

மு.கருணாநிதியின் சிறுவயது புகைப்படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த படத்தின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link யாரோ ஒருவர் பகிர்ந்ததை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், பல ஆண்டுகளுக்கு முற்பட்ட நாதஸ்வரம், தவில் வாசிக்கும் குழுவினரின் புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. அதில் உள்ள ஒரு சிறுவன் மட்டும் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளான். படத்தின் மீது, “கருணாநிதி பிறக்கும்போதே கோடீஸ்வரன் என்று தொரை முருகன் சொன்னதை நிரூபிக்கும் […]

Continue Reading

எச்.ராஜா மகள் திருமணத்தில் ஆபாச புகைப்படத்தை பரிசளித்தாரா அர்ஜூன் சம்பத்?

‘’எச்.ராஜா மகள் திருமணத்தில் புனித சிலையை பரிசளித்த அர்ஜூன் சம்பத்,’’ என்ற பெயரில் பரவி வரும் ஒரு அநாகரீகமான ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link  Archived Link  Troll Mafia எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், செக்ஸ் பொசிஷன் ஒன்றின் புகைப்படத்தை அர்ஜூன் சம்பத், எச். ராஜா மகள் திருமணத்திற்கு நேரில் சென்று பரிசளிப்பது போல பகிர்ந்துள்ளனர். இதனை பலரும் […]

Continue Reading

தமிழக கோவில்களில் உள்ள அசிங்கமான சிலைகளை அகற்ற வேண்டும் என்று கனிமொழி கூறினாரா?

தமிழக கோவில்களில் உள்ள அசிங்கமான சிலைகளை தமிழக அரசு உடனடியாக அகற்ற வேண்டும் என்று தி.மு.க எம்.பி கனிமொழி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கனிமொழி படம் மற்றும் நியூஸ்7 தமிழ் நியூஸ்கார்டை கொலாஜ் செய்து பதிவிட்டுள்ளனர். அந்த நியூஸ் கார்டில், “தமிழக கோயில்களில் உள்ள அசிங்கமான சிலைகளை தமிழக அரசு உடனடியாக இடிக்கவோ, அப்புறப்படுத்தவோ வேண்டும் […]

Continue Reading

வ.உ.சிதம்பரனாருக்கு அஞ்சலி செலுத்திய மோடி: புகைப்படம் உண்மையா?

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் படத்துக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியது போன்ற படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link வ.உ.சிதம்பரனார் படத்துக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார். நிலைத் தகவலில், “செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு பாரத பிரதமர் அவர்களின் மலரஞ்சலி” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Narayanan Vengat என்பவர் 2019 நவம்பர் 18ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் […]

Continue Reading

டாக்டர் ராமதாஸ் காயத்ரி ரகுராமுக்கு பதில் அளித்தாரா?

நடிகை காயத்ரி ரகுராமுக்கு டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் பதில் அளித்தது போன்ற ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பா.ம.க நிறுவனர் டாக்டர் எஸ்.ராமதாஸ் ட்வீட் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “காயத்திரி ரகுராம் வேண்டுமானால் எச்.ராஜாவையோ, எஸ்.வி.சேகரையோ துணைக்கு அழைத்துகொள்ளட்டும். பார்ப்பனர்களுக்கு அடியாள் வேலை பார்க்க வன்னியர்கள் ஒன்றும் முட்டாள் இல்லை. காலம் மலையேறிவிட்டது. எங்களுக்கும் புத்திவந்துவிட்டது என்று அவரிடம் […]

Continue Reading

சிதம்பரம் தீட்சிதருக்கு ஆதரவாக எச்.ராஜா கருத்து கூறியதாக பரவும் வதந்தி!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண்ணை தாக்கப்பட்ட விவகாரத்தில் தீட்சிதருக்கு ஆதரவாக எச்.ராஜா கருத்து கூறியதாக பிபிசி நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link எச்.ராஜா படத்துடன் கூடிய பிபிசி தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பெண் பக்தரை தாக்கியதாக கூறப்படும் தீட்சிதர் அர்ச்சனை செய்வதும், செய்யாமல் இருப்பதும் அவரின் தனிப்பட்ட விருப்பம். அவர் களைப்பாக கூட இருந்திருக்கலாம் […]

Continue Reading

சொத்தைப்பல்லை சரியாக்கும் வெங்காயம் – நல்லெண்ணெய்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

சின்ன வெங்காயம் சாறு மற்றும் நல்லெண்ணெய்யை சமஅளவு எடுத்து  கலக்கி, சொத்தைப் பல் மீது வைத்தால் சிறிது நேரத்திலேயே சொத்தைப் பல் பூச்சி இறந்து, பல் வலியும் குணமாகிவிடும் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link புகைப்படத்துடன் பகிரப்பட்ட தகவலை, ஸ்கிரீன் ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “சின்ன வெங்காயம் அரைத்து சாறு 3 ஸ்பூன் அளவு எடுத்து […]

Continue Reading

நெல்லையில் லஞ்சம் கேட்ட காவலரை தாக்கிய இளைஞர்; ஃபேஸ்புக் புகைப்படம் உண்மையா?

திருநெல்வேலியில் லஞ்சம் கேட்ட போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரை இளைஞர் தாக்கியதாக புகைப்படங்களுடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சப்-இன்ஸ்பெக்டரை இளைஞர் ஒருவர் தாக்குகிறார். அவரை அடிக்க இன்னும் சிலர் தயாராக உள்ளனர். எந்த இடம் என்பது தெரியவில்லை. நிலைத் தகவலில், “நெல்லையில் லஞ்சம் கேட்ட காவலரை புரட்டி எடுத்த வாலிபர்…. பாராட்ட நினைத்தால் ஷேர் பண்ணுங்க நண்பர்களே…, (அரசாங்க […]

Continue Reading

மனைவியோடு சபரிமலைக்கு செல்வேன்: பியூஷ் மனுஷ் பெயரில் வதந்தி!

மகரஜோதிக்கு மனைவி மற்றும் சில பெண்களோடு சபரிமலைக்கு செல்வேன் என்று சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் படத்துடன் கூடிய நியூஸ் 7 நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பியூஸ் மனுஷ் அதிரடி. மகரஜோதிக்கு என் மனைவி மற்றும் சில பெண்களோடு சபரிமலைக்கு செல்வேன் – சமூக […]

Continue Reading

திருப்பதி கோவிலுக்கு பால் தரும் புங்கனூர் பசுவின் விலை ரூ.12 கோடியா?

திருப்பதி வெங்கடாசலபதி கோவில் அபிஷேகத்துக்கு பால் தரும் பசு என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பசுவின் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “இந்த பசுவின் விலை ரூ.12 கோடி.ஆமாம் நீங்கள் படித்தது உண்மைதான்.இது புங்கநூரு ஜாதி பசு.ஒரு நாளைக்கு100 லிட்டர் பால் தருகிறது. இந்த ஜாதி பசுவின் பால்தான் திருப்பதி ஶ்ரீ வெங்கடாஜலபதிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த பசுவின் […]

Continue Reading

இந்தியா கொடுத்த ரூ.3000 கோடியில் சீனா கட்டிய பாலம்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

படேல் சிலையை அமைக்க ரூ.3000 கோடியை பிரதமர் மோடி சீனாவுக்கு வழங்கியதாகவும், அந்த பணத்தைக் கொண்டு சீனா கடலில் மிகநீண்ட மேம்பாலம் கட்டிவிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள படேல் சிலை, இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் மற்றும் பாலம் ஒன்றின் புகைப்படம் கொலாஜ் செய்து பகிரப்பட்டுள்ளது. Tp Jayaraman என்பவர் வெளியிட்டிருந்த பதிவை […]

Continue Reading

நக்கீரன் மூடப்படுகிறதா? – பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் வதந்தி!

நக்கீரன் இதழ் நஷ்டத்தின் காரணமாக மூடப்படுகிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நக்கீரன் கோபால் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. நிலைத் தகவலில், “பொய் செய்திகளை வெளியிட்டு வந்த இந்துக்கள் புறக்கணித்த நக்கீரன் வார இதழ் நஷ்டத்தால் மூடப்படுகிறது..மிக்க மகிழ்ச்சி..” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Govind Palaniguru என்பவர் 2019 […]

Continue Reading

ஸ்டாலினின் அப்பா அன்பழகன்; அநாகரீகமான ஃபேஸ்புக் பதிவு!

ஸ்டாலினின் அப்பா அன்பழகன்தான் என்று தயாளுஅம்மாள் கூறியதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தயாளுஅம்மாள் படத்துடன் கூடிய நியூஸ்7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “அன்பழகன்தான் ஸ்டாலினின் தந்தை. – தயாளு அம்மாள் பகீர் தகவல்” என்று டைப் செய்யப்பட்டுள்ளது.  நிலைத்தகவலில், “நாங்க சொன்னா காவி வெறியன்னு சொல்றீங்க. இப்போ என்ன சொல்ல போறீங்க” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. […]

Continue Reading