சிறந்த அக்கா – தம்பிக்கான போட்டி நடத்தப்படும் என்று அண்ணாமலை அறிவித்தாரா?

டெய்சி – சூர்யா பெயரில் சிறந்த அக்கா – தம்பிக்கான போட்டி நடத்தப்படும், கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்படும் என்று அண்ணாமலை அறிவித்ததாக சில நையாண்டி நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று சில நியூஸ் கார்டுகளை நெட்டிசன்கள் சிலர் பகிர்ந்து வருகின்றனர். ஒரு நியூஸ் கார்டில், “டெய்சி-சூர்யா பெயரில் சிறந்த அக்கா-தம்பிக்கான போட்டி. டெய்சி சரண் – […]

Continue Reading

பாஜக.,வில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று காயத்ரி ரகுராம் கூறினாரா?

‘’ பாஜக.,வில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை,’’ என்று காயத்ரி ரகுராம் கூறியதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: பாஜக.,வைச் சேர்ந்த திருச்சி சூர்யா சிவா மற்றும் டெய்சி ஆகியோர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, சில ஆடியோ பதிவுகள் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், இதற்கு காயத்ரி ரகுராமை காரணம் காட்டி, மாநில […]

Continue Reading

இரவில் பெண்கள் பாதுகாப்பாக பயணிக்க வாகனம் ஏற்பாடு செய்து தருகிறதா போலீஸ்?

இரவில் பெண்கள் வீட்டுக்கு செல்ல வாகனம் ஏதும் இல்லை என்றால் காவல் துறைக்கு போன் செய்தால், வாகனம் ஏற்பாடு செய்து தரப்படும் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்அப் சாட் பாட் எண்ணுக்குப் புகைப்பட பதிவு ஒன்றை அனுப்பி அது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதில், “காவல்துறை புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது என்னவென்றால் இரவு […]

Continue Reading

பிராமணர்களுக்கு எதிரானவர் அண்ணாமலை என்று காயத்ரி ரகுராம் கூறினாரா?

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பிராமணர்களுக்கு எதிரானவர் என்று காயத்ரி ரகுராம் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காயத்ரி ரகுராம் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பிராமணர்களுக்கு எதிரானவர் அண்ணாமலை! பாஜகவில் பிராமணர்கள் யாரும் முக்கியப் பொறுப்புக்கு வரக்கூடாது என நினைக்கிறார் அண்ணாமலை. எந்த […]

Continue Reading

பாஜக நிர்வாகிகள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆதாரம் உள்ளது என காயத்ரி ரகுராம் கூறினாரா?

அத்துமீறிய பாஜக நிர்வாகிகள் தொடர்பான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளது என்று காயத்ரி ரகுராம் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காயத்ரி ரகுராம் புகைப்படத்துடன் ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அத்து மீறிய நிர்வாகிகள்; பகீர் ஆதாரங்களுடன் காயத்ரி ரகுராம். கட்சிக்குள் பெண்களுக்கு எதிராக நடைபெறும் அத்துமீறல்களை வெளிக்கொண்டு வருவதற்காகவே […]

Continue Reading

ஆகாசப் புளுகர் அண்ணாமலை என்று காயத்ரி ரகுராம் பேட்டி அளித்தாரா?

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகாசப் புளுகர் என்று நடிகை காயத்ரி ரகுராம் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “ஆகாசப் புளுகர் அண்ணாமலை! உண்மையைப் பேசியதால் தான் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளேன். உண்மையைப் பேசுபவர்களுக்கு அங்கு […]

Continue Reading

பிரதமர் மோடி தமிழை தேசிய மொழியாக அறிவித்தாரா?

‘’ காசி தமிழ் சங்கமத்தில் பிரதமர் மோடி தமிழை தேசிய மொழியாக அறிவித்தார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (9049053770) வழியே அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார்.  Twitter Claim Link l Archived Link  உண்மை அறிவோம்:காசி எனப்படும் தற்போதைய வாரணாசியில் பாஜக முன்முயற்சியில், ‘காசி தமிழ் சங்கமம்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதனை மோடி […]

Continue Reading

திராவிடர் கழகம் நடத்திய சூரிய கிரகண விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்ப்பிணி பெண் மரணமா?

‘’ திராவிடர் கழகம் நடத்திய சூரிய கிரகண மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்ப்பிணி பெண் மரணம்,’’ என்று கூறி பகிரப்படும் ஒரு செய்தியின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link l Archived Link  உண்மை அறிவோம்:  குறிப்பிட்ட செய்தியின் நம்பகத்தன்மை பற்றி திராவிடர் கழகம் சார்பாக, வழக்கறிஞர் குமாரதேவன், ‘’இது மிகவும் தவறான தகவல். அப்படி எதுவும் நடைபெறவில்லை. இதுபற்றி திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடு விடுதலையில் […]

Continue Reading

மோடி தமிழ்நாடு வந்தால் நானே நேரில் வரவேற்பேன் என்று சீமான் கூறினாரா?

‘’பிரதமர் மோடி தமிழகம் வந்தால் நானே அவரை நேரில் வரவேற்பேன் என்று சீமான் பேச்சு,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்டவற்றில் இது பகிரப்படுவதைக் கண்டோம்.  Claim Tweet Link l Archived Link  உண்மை அறிவோம்:  […]

Continue Reading

தி.மு.க அமைச்சர்களுக்கு வணக்கம் கூறாமல் மோடி தவிர்த்தாரா?

தனக்கு வணக்கம் தெரிவித்த தமிழக அமைச்சர்களுக்கு பதில் வணக்கம் கூறுவதை மோடி தவிர்த்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காந்திகிராம நிகர்நிலை பல்கலைக் கழக விழாவில் பங்கேற்க மோடி வரும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அப்போது, தமிழக அமைச்சர் கீதா ஜீவன் வணக்கம் கூற மோடி கடந்து செல்வது போன்று காட்சி உள்ளது. நிலைத் தகவலில், “மங்குனிகளுக்கு […]

Continue Reading

கால்பந்தாட்ட வீராங்கனை மரணம்; பா.ஜ.க நிர்வாகியிடம் விசாரணை என்று பரவும் போலி நியூஸ் கார்டுகள்!

மருத்துவர்களின் தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவை இரண்டு நாட்களுக்கு முன்பு பா.ஜ.க நிர்வாகி அமர் பிரசாத் சந்தித்தார் என்றும் அவரை போலீஸ் விசாரித்து வருகிறது என்றும் நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறன. அவை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பா.ஜ.க நிர்வாக அமர் பிரசாத் ரெட்டி புகைப்படத்துடன் புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பாஜக பிரமுகரிடம் […]

Continue Reading

பத்திரிகையாளர்களை சந்திக்காதவர் என்று மோடியை விமர்சித்தாரா மேயர் பிரியா?

பத்திரிகையாளர்களை சந்திக்காத மோடி என்று பிரதமரை சென்னை மாநகராட்சி மேயல் பிரியா விமர்சித்தார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பத்திரிகையாளர்களை சந்திக்காத மோடி! சென்னை மாநகராட்சியில் மழை நீர் வடிகால் பணிகள் சிறப்பாக நடைபெறுவதால், அதை தாங்கிக்கொள்ள முடியாத பாஜகவினர், நான் பேசும்போது […]

Continue Reading

400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய மலர்களின் படமா இது?

சதுரகிரி மலையில் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் காணக்கிடைக்காத அரிய பூக்கள் என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சில மலர்களின் புகைப்படங்களுடன் ஸ்கிரீன்ஷாட் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “கல்லுப்பட்டி சதுரகிரி மலையில்… 400ஆண்டுகளுக்கு ஒரு முறைப் பூத்திடும் மஹாமேரு புஷ்பம்! பூ காணக்கிடைக்காத அரிய பூ ஆகையால் முடிந்த வரை அடுத்தவர்கள் பார்த்திட உதவுங்கள்” […]

Continue Reading

கன்னியாகுமரி நித்திரவிளை பகுதியில் 20.10.2022 அன்று முன்னறிவிப்பு இன்றி மின் விநியோகம் நிறுத்தப்பட்டதா?

கன்னியாகுமரி நித்திரவிளை பகுதியில் 20.10.2022 அன்று முன் அறிவிப்பின்றி மின் விநியோகம் நிறுத்தப்பட்டதாகக் கூறி ஒரு செய்தி பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link l Archived Link இந்த செய்தியில் ‘கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியில் தொடர் மின் வெட்டு காலை 8 மணிக்கு துண்டிக்கப்பட்ட நிலையில் மக்கள் அவதி,’ என்று எழுதியுள்ளனர். 20.10.2022 அன்று இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றி வாசகர் ஒருவர் சந்தேகம் கேட்டிருந்தார்.  […]

Continue Reading

சிவகார்த்திகேயன் மீது பிரின்ஸ் பட நடிகை புகார் அளித்தாரா?

நடிகர் சிவ கார்த்திகேயன் மீது பிரின்ஸ் பட நடிகை புகார் அளித்தார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஃபேஸ்புக், ட்விட்டரில் நக்கீரன் வெளியிட்டது போன்று ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதில், “பிரின்ஸ் பட நடிகை புகார்! பிரின்ஸ் படபிடிப்பு நடக்கும்போது நடிகர் சிவகார்த்திகேயன் தன்னிடம் தவறாக நடந்துகொண்டார் என பிரின்ஸ் […]

Continue Reading

விமானத்தின் மீது தமிழில் பெயரை எழுதுவோம் என்று விமான நிறுவனம் அறிவித்ததா?

விமானத்தில் தங்கள் நிறுவனத்தின் பெயரை தமிழில் எழுத உள்ளதாக ரயானி ஏர் அறிவித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive விமானத்தின் மீது Rayani Air என்று ஆங்கிலத்திலும் ரயானி ஏர் எனத் தமிழிலும் எழுதப்பட்டிருப்பதாக ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதனுடன், “உலகிலேயே முதல் முறையாக விமானத்தில் தமிழ் எழுத்து. மலேசியா விமான நிறுவனம் ரயானி ஏர் […]

Continue Reading

மேம்பால ரயிலில் இருந்து தண்ணீர் கொட்டும் வீடியோ சென்னையில் எடுக்கப்பட்டதா?

சென்னையில் மேம்பாலம் ஒன்றில் வாகனம் செல்லும் போது மழை நீர் அருவி போல கீழே சாலையில் நிற்பவர்கள் மீது கொட்டியது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மேம்பாலம் ஒன்றில் பஸ் போன்ற வாகனம் ஒன்று செல்கிறது. அப்போது மேம்பாலத்தில் தேங்கியிருந்த மழை நீர் அந்த வாகனத்தில் சக்கரத்தில் பட்டு கீழே கொட்டுகிறது. கீழே சாலையில் வாகனவோட்டிகள், […]

Continue Reading

மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ அலுவலகம் முன்பு தண்ணீர் தேங்கிய படம் 2022ல் எடுக்கப்பட்டதா?

மு.க.ஸ்டாலின் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி அலுவலகம் தண்ணீரில் மூழ்கியதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மழை நீரில் மூழ்கியிருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மழைநீர் வடிகால் 4000 கோடி பேக்கேஜ். 10 வருஷமா சட்டமன்ற உறுப்பினர் இப்போ முதலமைச்சர். அவர் தொகுதி  அலுவலகத்தின் நிலைமை நேற்றுவரை… இதில் […]

Continue Reading

மு.க.ஸ்டாலின் தொகுதியில் தேங்கி நிற்கும் மழைநீர் என்று பரவும் வீடியோ உண்மையா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் மழை நீர் தேங்கி நிற்கிறது என்று ஒரு வீடியோ மற்றும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்அப் சாட்பாட் எண்ணுக்கு வீடியோ மற்றும் புகைப்படம் ஒன்றை அனுப்பி, இது உண்மையா என்று கேட்டிருந்தார். வீடியோவில் ஒரு முதியவர் தூய தமிழில் பேசுகிறார். கொளத்தூர் என்று வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. புகைப்படத்தில் “முரசொலி பேப்பரின் பொய் செய்தி  […]

Continue Reading

மோர்பி பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அண்ணாமலை நன்றி கூறினாரா?

குஜராத் மாநிலம் மோர்பியில் தொங்குபாலம் விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி கூறினார் என்று ஒரு விஷம பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவின் தமிழாக்கம் பகிரப்பட்டுள்ளது. அதில், “குஜராத் மோர்பியில் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களுக்கும், குடும்பத்தாருக்கும் என் மனமார்ந்த […]

Continue Reading

அண்ணாமலையை புறக்கணிக்கிறோம் என்று தந்தி டிவி அறிவித்ததா?

பத்திரிகையாளர்களை அவமதிக்கும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்பைப் புறக்கணிக்கிறோம் என தந்தி டிவி அறிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அண்ணாமலை புகைப்படத்துடன் தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை அவமதிக்கும் தமிழ் நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்பை இனி தந்தி தொலைக்காட்சி […]

Continue Reading

நாங்கள் என்ன தேவிடியன் ஸ்டாக்ஸா என்று எச்.ராஜா கேட்டாரா?

‘’நாங்கள் என்ன தேவிடியன் ஸ்டாக்ஸா,’’ என்று எச். ராஜா கேள்வி கேட்டதாக, ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049044263) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றில் பலரும் ஷேர் செய்வதைக் கண்டோம். Twitter Claim Link I Archived Link  உண்மை அறிவோம்: குறிப்பிட்ட […]

Continue Reading

தீபாவளிக்கு மாட்டிறைச்சி வாங்கும் மக்கள் என்று சன் நியூஸ் வெளியிட்ட செய்தியால் குழப்பம்!

தீபாவளியன்று பொது மக்கள் வரிசையில் நின்று மாட்டிறைச்சி வாங்கிச் சென்றனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு புகைப்படம் ஒன்றை அனுப்பி இது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். சன் டிவி வெளியிட்ட நியூஸ் கார்டு போல இருந்தது. அதில், “வரிசையில் நின்று மாட்டிறைச்சி வாங்கி செல்லும் மக்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

கர்நாடகா மாநிலத்தில் கடல்கன்னி நடமாட்டம் என்று பரவும் வீடியோவால் பரபரப்பு…

‘’கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டிணா பகுதியில் ஓடும் ஆற்றில் கடல்கன்னி நடமாட்டம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்த வீடியோவை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி ‘’கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டிணா, மைசூர் பகுதியில் கடல்கன்னி ஆற்றில் நடமாடுகிறது,’’ என்று ஒரு தகவல் பரவுகிறது என்றும், இது  உண்மையா என்றும் சந்தேகம் கேட்டிருந்தார்.  உண்மை அறிவோம்:  குறிப்பிட்ட வீடியோ தொடர்பாக ஏதேனும் செய்தி […]

Continue Reading

பிரதமர் மோடி டாய்லெட் சென்றபோது 37 புகைப்படங்கள் எடுத்தாரா?

பிரதமர் மோடி கழிப்பறை சென்றுவிட்டு, 37 புகைப்படங்கள் எடுத்து விளம்பரம் செய்கிறார் என்று கூறி ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இந்த படத்தை வாசகர்கள் சிலர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+91 9049044263 & +91 9049053770) அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தனர்.  இதே படத்தை பலரும் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்வதையும் கண்டோம்.  Claim Link  l Archived Link  உண்மை அறிவோம்: இந்த […]

Continue Reading

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வீடியோவை திமுக ஆட்சியில் நிகழ்ந்தது போல பரப்புவதால் சர்ச்சை!

‘’திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதுபற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Twitter Claim Link I Archived Link   உண்மை அறிவோம்: குறிப்பட்ட வீடியோவில், 22.05.2018 என்றும் FCI Roundana என்றும் எழுதப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. இதன்மூலமாக, கடந்த 2018ம் ஆண்டு இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டதாக, எளிதல் உறுதி செய்ய முடிகிறது.  அடுத்தப்படியாக, இந்த வீடியோ எங்கே எடுக்கப்பட்டது என […]

Continue Reading

அதிமுக உண்ணாவிரதப் போராட்டத்தில் பிரியாணி வழங்கப்பட்டது என்று பரவும் செய்தி உண்மையா?

அ.தி.மு.க உண்ணாவிரதப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்குப் பிரியாணி வரவழைக்கப்பட்டது என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக-வினர் போராட்டத்தில் ஈடுபட்ட புகைப்படத்துடன் மாலை மலர் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “போராட்டத்தில் கைது ஆன எடப்பாடி ஆட்களுக்கு “யா மொய்தீன்” கடையில் இருந்து பிரியாணி […]

Continue Reading

மோடி பெயரை கெடுக்க திமுக மற்றும் காங்கிரஸ் நிர்பந்தம் கொடுத்தனர் என்று அய்யாக்கண்ணு கூறினாரா?

‘’மோடியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும்படி திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் நிர்பந்தம் கொடுத்தனர்,’’ என்று அய்யாக்கண்ணு தெரிவித்ததாகக் குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்படும் செய்தி பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 மற்றும் +919049053770) அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தனர். இந்த செய்தியை ஃபேஸ்புக்கில் பலர் உண்மை போல பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்: தலைநகர் டெல்லியில் […]

Continue Reading

விசாரணை கமிஷன் அறிக்கை வீண் என்று அண்ணாமலை கூறினாரா?

ஜெயலலிதா மரணம் மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையங்கள் அளித்த அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் விசாரணை வீண் என்று அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive தினமலர் நாளிதழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “விசாரணை அறிக்கை வீண். நீதிபதிகளே ஊழலில் திளைக்கும் போது ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய ஆணையம் மட்டும் எப்படி சரியான அறிக்கையை […]

Continue Reading

மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கவில்லை என்று செந்தில்பாலாஜி கூறிய பிறகும் பரவும் வதந்தி!

தீபாவளிக்கு ரூ.600 கோடிக்கு மது விற்பனை செய்ய வேண்டும் என்று டாஸ்மாக் இலக்கு நிர்ணயித்தது என்று பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் டாஸ்மாக் கடை புகைப்படங்களை ஒன்று சேர்த்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தீபாவளி பண்டிகைக்கு விடியல்_டாஸ்மாக் கடைகளில் ரூ.600 கோடிக்கு மது விற்க ஏற்பாடு* டாஸ்மாக் கடைகளில் 10 நாட்களுக்குத் […]

Continue Reading

Explainer: ஆவின் தயாரிப்புகளில் டால்டா கலக்கப்படுகிறதா?

‘’ஆவின் தயாரிப்புகளில் நெய்க்குப் பதிலாக டால்டா கலக்கப்படுகிறது,’’ என்று பகிரப்படும் செய்தி பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Archived Link இந்த ட்விட்டர் பதிவில் தினமலர் நாளிதழ் பெயருடன் உள்ள நியூஸ்கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். உண்மை அறிவோம்: ஆவின் தயாரிக்கும் பால் மற்றும் பால் சார்ந்த தயாரிப்புகள், இனிப்பு வகைகள் தமிழக மக்களிடையே பிரபலம். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், ஆவின் தயாரிக்கும் இனிப்புகளில் நெய்க்கு பதிலாக, வனஸ்பதி எனப்படும் டால்டா சேர்க்கப்படுவதாகக் […]

Continue Reading

ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் 41.55 ரூபாய் வரியை தமிழ்நாடு அரசு வசூலிக்கிறதா?

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.41.55ஐ தமிழ்நாடு அரசு வரியாக வசூலிக்கிறது என்பது போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெட்ரோல் நிலையத்தில் அறிவிப்புப் பலகை வைத்திருப்பது போன்று எடிட் செய்யப்பட்ட புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “ அடிப்படை விலை 35.50 மத்திய அரசு வரி 19.50 மாநில அரசு வரி 41.55 விநியோகஸ்தர் 6.50 மொத்தம் 103.05.  […]

Continue Reading

ஒரே ஆண்டில் வாகன பராமரிப்புக்கு ரூ.51.64 கோடி செலவு என்று தி.மு.க அரசு கணக்கு காட்டியதா?

தி.மு.க அரசு அமைந்த பிறகு மதுரை மாநகராட்சியில் வாகன பராமரிப்புக்கு என்று ரூ.51.64 கோடி செலவு செய்யப்பட்டது போன்று பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜூனியர் விகடன் வெளியிட்ட நியூஸ் கார்டை வைத்து பதிவிடப்பட்டுள்ளது. அதில், “வாகன ரிப்பேர் செலவு ரூ.51.64 கோடி… மிரள வைக்கும் மதுரை மாநகராட்சி கணக்கு!” என்று இருந்தது. நிலைத் தகவலில், “வாகன ரிப்பேர் […]

Continue Reading

டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் சபரீசனின் உதவியாளரை சிபிஐ கைது செய்ததா?

டெல்லியில் மதுபான வரி முறைகேடு வழக்கில் ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் உதவியாளர் அபிஷேக் கைது செய்யப்பட்டார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தி.மு.க தலைவராக இருந்த மு.கருணாநிதி மறைவின் போது ஸ்டாலின் அழுத வீடியோவை வைத்து பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை மற்றும் மருமகன் சபரீசனின் தனி உதவியாளர் அபிஷேக் […]

Continue Reading

மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை சூட்டுகிறார் மோடி என தந்தி டிவி செய்தி வெளியிட்டதா?

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைப்பதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட உள்ளார் என தந்தி டிவி செய்தி வெளியிட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கதேவர் பெயர் ஆணை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!!! […]

Continue Reading

கிரிக்கெட் விளையாடி கீழே விழுந்த திமுக எம்.பி செந்தில் என்று பரவும் வீடியோ உண்மையா?

தர்மபுரி தி.மு.க எம்.பி செந்தில்குமார் கிரிக்கெட் விளையாடி கீழே விழுந்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கிரிக்கெட் விளையாடும் நபர் ஒருவர் பந்தை அடிக்க முயற்சி செய்து கீழே விழும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தர்மபுரி எம்பியின் அபாரமான பேட்டிங்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Vinoth Kumar என்ற ஃபேஸ்புக் ஐடி […]

Continue Reading

மு.க.ஸ்டாலினை கேலி செய்து சன் நியூஸ் இந்த செய்தியை வெளியிட்டதா?

‘’மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டார் – The dictator படத்தின் காட்சியை இணைத்து செய்தி வெளியிட்ட சன் நியூஸ்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:கேலி செய்யும் நோக்கில் இந்த டெம்ப்ளே தயாரிக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்படுகிறது. ஆனால், இதனை பலர் உண்மை போலவே நம்பி பகிர்வதால், நாமும் குழப்பமடைய வேண்டியுள்ளது. உண்மையில், இப்படி […]

Continue Reading

மலேசிய அருங்காட்சியகத்தில் குந்தவை ஓவியம்?- நையாண்டிப் பதிவால் குழப்பம்!

பழைய புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து இதுதான் குந்தவையின் ஓவியம் என்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். நையாண்டிக்குப் போடப்பட்ட பதிவை பலரும் உண்மையானது போலப் பகிர்ந்து வரவே அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பட்டுப் புடவை மற்றும் ஏராளமான நகை அணிந்த பெண்ணின் கருப்பு வெள்ளை புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மலேசிய நாட்டிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருக்கும் சோழ இளவரசி குந்தவையின் […]

Continue Reading

ராமேஸ்வரம் முதல் கேதார்நாத் வரை ஒரே நேர்க்கோட்டில் சிவாலயங்கள் அமைந்துள்ளனவா?

ராமேஸ்வரம் முதல் வட இந்தியாவில் உள்ள கேதார்நாத் வரை எட்டு முக்கிய சிவாலயங்கள் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளது என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்திய வரைபடத்தில் நேர்க்கோடு வரைந்து அவற்றில் முக்கிய சிவாலயங்கள் சிவலிங்கம் போன்று அடையாளப்படுத்திக் காட்டப்பட்டுள்ள படத்தை வைத்துப் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. “ராமேஸ்வரம் முதல் கேதார்நாத் வரை ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும் முக்கிய […]

Continue Reading

RAPID FACT CHECK: அண்ணாமலை ரூ. 5000 கோடி விவகாரம்; கழுகார் எக்ஸ்க்ளூசிவ் என பரவும் வதந்தி!

மத்திய அமைச்சர் ஒருவருக்காக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ரூ.5000 கோடியை வெளிநாட்டில் முதலீடு செய்யச் சென்றுள்ளார் என்று ஜூனியர் விகடன் இதழில் செய்தி வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜூனியர் விகடன் இதழின் ஒரு பகுதியை புகைப்படமாக எடுத்து பதிவிட்டுள்ளனர். கழுகார் எக்ஸ்க்ளூசிவ் என்று பெட்டி செய்தியாக உள்ளது. அதில், “மத்திய அமைச்சரவையின் […]

Continue Reading

இந்தி தெரியாததால் தமிழ்நாடு 50 ஆண்டுகள் பின்தங்கியுள்ளதா?- தினந்தந்தி பெயரில் பரவும் வதந்தி.

‘’இந்தி தெரியாததால் தமிழ்நாடு 50 ஆண்டுகள் பின்தங்கியுள்ளது – தினத்தந்தி கருத்துக் கணிப்பு ,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இந்தி தெரியாததால் தமிழ்நாடு 50 ஆண்டுகள் பின்தங்கியுள்ளதாக, தினத்தந்தி சர்வே வெளியிட்டதாக, எதுவும் செய்தி உள்ளதா என்று விவரம் தேடினோம். ஆனால், அப்படி எதுவும் காணக் கிடைக்கவில்லை. இதுபற்றி […]

Continue Reading

ரூ.5000 கோடி கடத்திய அண்ணாமலை என ஜூ.வி அட்டைப்படம் வெளியிட்டதா?

அண்ணாமலை கடத்திச் சென்ற ரூ.5000 கோடி யாருடைய பணம் என்று ஜூனியர் விகடனில் வெளியிட்டது போன்று அட்டைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு ஃபேஸ்புக் லிங்க் ஒன்றை அனுப்பி அது உண்மையா என்று கேட்டிருந்தார். அந்த லிங்கை திறந்து பார்த்தோம். அதில் ஜூனியர் விகடன் […]

Continue Reading

திருமாவளவன் மற்றும் டாக்டர் ஷர்மிளா ஒன்றாக பீர் குடித்ததாகப் பரவும் வதந்தி…

‘’திருமாவளவன் மற்றும் டாக்டர் ஷர்மிளா ஒன்றாக ஊட்டியில் பீர் குடித்த காட்சி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+91 9049044263 & +919049053770) அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். இதே புகைப்படத்தை பலரும் உண்மை போல ஃபேஸ்புக்கில் பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்: குறிப்பிட்ட புகைப்படம் பார்க்கும்போதே எடிட் […]

Continue Reading

காரைக்காலில் மின்தடை; மக்கள் அவதி- திமுக அரசு காரணமா?

‘’காரைக்காலில் மின்தடை, விடியாத அரசின் அவலம்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link l Archived Link காரைக்கால் பகுதியில் தொடர் மின் தடை ஏற்பட்டதால், பொதுமக்கள் இரவு நேரத்தில் சாலை மறியல் செய்தனர் என்று தந்தி டிவி வெளியிட்ட செய்தியை எடுத்து, அதன் மேலே ‘’ இனி விடியாது தமிழகம், காரைக்கால் மாவட்டம் முழுவதும் மீண்டும் 2 மணிநேரத்திற்கும் மேலாக #தொடர்_மின்தடை […]

Continue Reading

திருப்பூரில் வட இந்தியர்கள் கொள்ளை என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’திருப்பூரில் வட இந்தியர்கள் கொள்ளை – சிசிடிவி காட்சி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link உண்மை அறிவோம்: குறிப்பிட்ட வீடியோ எங்கே எடுக்கப்பட்டது என்பது தொடர்பாக நாம் நீண்ட நேரம் தகவல் தேடியும் இதுபற்றி உரிய விவிரம் கிடைக்கவில்லை. எனவே, நாம் நேரடியாக தமிழ்நாடு காவல்துறையினரிடம் விளக்கம் பெற தீர்மானித்தோம். தமிழ்நாடு […]

Continue Reading

RAPID FACT CHECK: உலகின் மிக ஆரோக்கியமான காலை உணவு இட்லி என்று யுனெஸ்கோ அறிவித்ததா?

உலகின் மிகவும் ஆரோக்கியமான காலை உணவு இட்லி என்று யுனெஸ்கோ அறிவித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுபற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive யுனெஸ்கோ (UNESCO) வழங்கியது போன்று சான்றிதழ் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “2016ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி இந்த உலகில் உள்ள ஒட்டுமொத்த காலை உணவுகளிலும் மிகவும் ஆரோக்கியமான காலை உணவாக தென்னிந்தியாவின் இட்லி அறிவிக்கப்படுகிறது” என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

ஆ.ராசா மன்னிப்பு கேட்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று மன்னை ஜீயர் அறிவித்தாரா?

‘’ஆ.ராசா மன்னிப்பு கேட்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்,’’ என்று மன்னை ஜீயர் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் வாசகர் ஒருவர் புகைப்படம் ஒன்றை அனுப்பி, இது உண்மையா என்று கேட்டிருந்தார். மன்னை ஜீயர் புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டிருந்தது. அதில், “சாகும் வரை உண்ணாவிரதம் ! ஆ.ராசா மன்னிப்பு கேட்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் – மன்னை […]

Continue Reading

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை அனுமதிக்காவிட்டால் நிர்வாண போராட்டம் நடத்துவோம் என்று பாஜக அறிவித்ததா?

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்குத் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காவிட்டால், நிர்வாண போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கதிர் என்ற ஊடகம் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “RSS சார்பில் அம்மண போராட்டம் நடைபெறும். ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி தராவிட்டால், […]

Continue Reading

300 ஆண்டுகளுக்கு முன் ஜீவ சமாதியடைந்த சித்தர் உயிருடன் கண்டுபிடிப்பா?

‘’300 ஆண்டுகளுக்கு முன் ஜீவ சமாதியடைந்த சித்தரின் உடல் உயிருடன் கண்டுபிடிப்பு,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்: இந்த செய்தி உண்மையா என விவரம் அறிய நாம் வள்ளலார் மடத்தை தொடர்புகொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய மடத்தின் நிர்வாகி ஒருவர், ‘’இப்படி எந்த சம்பவமும் எங்களது வட்டாரத்தில் நிகழவில்லை,’’ என்று குறிப்பிட்டனர். தொடர்ந்து […]

Continue Reading

பிஎஃப்ஐ தடை காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு உயரும் என நட்டா கூறினாரா?

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட இயக்கங்கள் தடை செய்யப்பட்டுவிட்டதால் இந்திய ரூபாயின் மதிப்பு உயரும் என்று ஜே.பி.நட்டா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மாலை மலர் நாளிதழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்திய பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருந்த PFI உள்ளிட்ட இயக்கங்கள் தடை செய்யப்பட்டுவிட்டதால் இனி வரும் […]

Continue Reading