மோடி எங்களை உள்ளே விடவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

பிரதமர் மோடி எங்களை உள்ளே விடவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாகக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:சமீபத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லி சென்றிருந்தார். அப்போது, தந்தி டிவி வெளியிட்ட செய்தி விவரம் கீழே தரப்பட்டுள்ளது. இந்த நியூஸ்கார்டை எடிட் செய்து, மோடி எங்களை உள்ளே விடவில்லை, அதனால், அவரை சந்திக்க முடியவில்ல […]

Continue Reading

RAPID FACT CHECK: எஸ்.டி.பி.ஐ கட்சியினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் என்று பரவும் பழைய படம்!

எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ கைப்பற்றிய ஆயுதங்கள் என்று சில பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மேசை முழுக்க வாள்களை போலீசார் அடுக்கிவைத்துப் பார்வையிடும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதனுடன், “இந்த ஆயுதங்கள் எல்லாம் யாருக்காக, யாரிடமிருந்துன்னு நெனச்சீங்க மக்களே? நேற்று NIA வால் கைது செய்யப்பட்ட SDPI-யினரிடமிருந்தாம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை மதுரை தல்லாகுளம் […]

Continue Reading

‘அரபுக்கள் நாம் இந்து ராஷ்டிரத்தை எதிர்ப்போம்’ என்று திருமாவளவன் புத்தகம் வெளியிட்டாரா?

‘’அரபுக்கள் நாம் இந்து ராஷ்டிரத்தை எதிர்ப்போம் என்ற புத்தகத்தை வெளியிட்ட திருமாவளவன்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link ‘அரபுக்கள் நாம் இந்து ராஷ்டிரத்தை எதிர்கொள்வோம்‘ என்று திருமாவளவன் புத்தகத்தை வெளியிட்டதாக, இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:  நாம் குறிப்பிட்ட தகவல் உண்மையா […]

Continue Reading

சினிமாப் பாடல்களுக்கு சீமான் நடனமாடினாரா?

‘’சினிமாப் பாடல்களுக்கு நடனமாடிய சீமான்,’’ என்று கூறி பகிரப்படும் வீடியோக்கள் சிலவற்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link இதேபோன்று மேலும் பலர் பதிவிட்டு வருகின்றனர். உண்மை அறிவோம்:குறிப்பிட்ட வீடியோ உண்மையில், ஆடியோ எடிட் செய்யப்பட்டதாகும். சீமான், சமீபத்தில் நடைபெற்ற சங்கத் தமிழிசை விழாவில் பங்கேற்று, விருந்தினர்களுடன் நடனமாடிய காட்சி இது. அப்போது இசைக்கப்பட்ட பின்னணி இசை வேறொன்றாகும். அதற்கான உண்மை வீடியோ […]

Continue Reading

கோவையில் 1995-ல் நிறுவப்பட்ட கதவில்லா டாய்லெட் புகைப்படம் தற்போது பரவுவதால் சர்ச்சை…

‘’கோவையில் ஒரே நேரத்தில் இருவர் பயன்படுத்தும் வகையில் நிறுவப்பட்டுள்ள டாய்லெட்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்படும் செய்தி ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+91 9049053770) அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். இந்த மீம் பதிவை நியூஸ் 7 தமிழ் ஊடகம் முதலில் நகைச்சுவை நோக்கில் பகிர்ந்திருக்க, அதனை எடுத்து மற்ற சமூக வலைதள பயனாளர்கள் ‘இது திராவிட ஆட்சியில் (திமுக) […]

Continue Reading

பெண்ணின் மானம் காத்த இஸ்லாமியர் என்று பரவும் வீடியோ உண்மையா?

இந்து பெண் ஒருவரின் மானம் காத்த இஸ்லாமியர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சிசிடிவி காட்சி என்று வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. இளம் ஜோடி கோவிலுக்குச் சென்று திரும்புகின்றனர். பைக்-கை ஸ்டார்ட் செய்யும் போது, இளம் பெண்ணின் தாவணி இருசக்கர வாகனத்தின் டயரில் மாட்டிக்கொள்கிறது. அப்போது அந்த வழியே வந்த இஸ்லாமியத் தம்பதியினர் தாவணியை […]

Continue Reading

மு.க.ஸ்டாலின் வெற்றுப் பேச்சு பேசுவதாக ஜூனியர் விகடன் அட்டைப் படம் வெளியிட்டதா?

ஸ்டாலின் வெற்றுப் பேச்சு பேசுவதாக, காற்று போன பலூன் போன்று ஜூனியர் விகடன் அட்டைப் படம் வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்று அட்டை படம் பகிரப்பட்டுள்ளது. அதில், காற்று போன பலூன் போல ஸ்டாலின் பறப்பதாக படம் உருவாக்கப்பட்டிருந்தது. அதனுடன், “வெறும் பேச்சு! ஸ்டாலின் புஸ்ஸ்…” என்று இருந்தது. இந்த பதிவை […]

Continue Reading

அண்ணாமலையுடன் மோதல் காரணமாக அரசியலை விட்டு விலகப் போவதாக அறிவித்தாரா பிடிஆர்?

என் செருப்புக்குக் கூட சமம் இல்லை என்று அண்ணாமலை தாக்கியதால், அரசியலை விட்டு வெளியேறப் போவதாக நிதியமைச்சர் பி.தியாகராஜன் (பிடிஆர்) ட்வீட் வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive “18 மாதங்களுக்கு முன்பு என்னுடைய பணி வாழ்வை விட்டுவிட்டு அரசியலில் நுழைந்து பிறகு இன்று முதன் முறையாக தவறு செய்துவிட்டோமோ என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது” என்ற […]

Continue Reading

புல்புல் இறைச்சி விற்ற கடைக்காரரிடம் பா.ஜ.க நிர்வாகி தகராறு செய்தார் என்று பரவும் போலியான செய்தி!

சாவர்க்கர் பறந்து சென்ற புல் புல் பறவையை அடைத்து வைத்திருப்பதாக கறிக்கடைக்காரரிடம் பா.ஜ.க நிர்வாகி ஒருவர் தகராறு செய்தார் என நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பாஜக நிர்வாகி கைது. சாவர்க்கர் பறந்து சென்ற புல் புல் பறவையை அடைத்து வைத்திருப்பதாக கூறி […]

Continue Reading

மு.க.ஸ்டாலின் ஆட்சியில் போடப்பட்ட தார் சாலை என்று பரவும் படம் உண்மையா?

தமிழ்நாட்டில் ஸ்டாலின் ஆட்சியில் அமைக்கப்பட்ட சாலை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தெரு ஒன்றில் ஒரு சிறிய பகுதி மட்டும் தார் சாலை அமைத்து, வெள்ளை பெயிண்ட் கோடு போடப்பட்டுள்ள படத்தை வீடியோவாக பகிர்ந்துள்ளனர். பின்னணியில் ஸ்டாலின்தா வராரு என்ற தி.மு.க தேர்தல் பிரசார பாடல் ஒலிக்கிறது. நிலைத் தகவலில், “திருட்டு திராவிடத்தின் விடியலோ […]

Continue Reading

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட காசியின் தந்தைக்கு பா.ஜ.க-வில் பதவி வழங்கப்பட்டதா?

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட காசி என்பவரின் தந்தை சமீபத்தில் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தார். அவர் பா.ஜ.க-வில் இணைந்ததாகவும் அவருக்கு கலாச்சார அணி மாவட்ட துணை செயலாளர் பதவி வழங்கப்பட்டதாகவும் ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பாஜகவில் இணைந்த காசியின் […]

Continue Reading

இந்த பேப்பர் போடும் சிறுவன் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் இல்லை; முழு விவரம் இதோ!

‘’அப்துல் கலாம் சிறுவயதில் சைக்கிள் ஓட்டிச் சென்று வீடு வீடாக பேப்பர் போடும் வேலை பார்த்தபோது எடுத்த புகைப்படம்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் படம் ஒன்றின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா எனக் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது பலரும் ஃபேஸ்புக்கில் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link […]

Continue Reading

கணிதப் பாடத்தில் சிலுவைக் குறியீடு; இந்துக்கள் படிக்கக்கூடாது என்று அர்ஜூன் சம்பத் கூறினாரா?

‘’கணிதப் பாடத்தில் சிலுவைக் குறியீடு உள்ளதால், இந்துக்கள் அதனை படிக்கக்கூடாது என்று அர்ஜூன் சம்பத் கூறினார்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:மேற்கண்ட தகவல் நகைச்சுவைக்காகப் பகிரப்படுவதைப் போல தோன்றினாலும், உண்மையில், இப்படி அர்ஜூன் சம்பத் பேசியிருக்க வாய்ப்பில்லை. வேண்டுமென்றே அவரை உள்நோக்கத்துடன் கேலி செய்யும் வகையில் யாரோ சிலர் இப்படியான நியூஸ் கார்டை புதிய தலைமுறை […]

Continue Reading

தேசியக் கொடி தயாரிக்கும் மொத்த ஆர்டரை அம்பானிக்கு கொடுத்த மோடி!- நியூஸ் கார்டு உண்மையா?

தேசிய கொடி தயாரிக்கும் மொத்த ஆர்டரை அம்பானி நிறுவனத்துக்கு பிரதமர் மோடி வழங்கியுள்ளார் என இந்திய தேசிய கதர் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு கூறியதாக நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தேசியக்கொடி உற்பத்திக்கான மொத்த ஆர்டரை அம்பானிக்கு கொடுக்கக்கூடாது! வீட்டுக்கு […]

Continue Reading

மூவர்ண சட்டை அணிந்தால்தான் தேசப்பற்று… விஷமம் பரப்பும் சமூக ஊடக பதிவு!

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் தேசியக் கொடியின் மூவர்ண சட்டை அணிந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, தமிழ் நடிகர்களுக்கு தேசப் பற்று இல்லை என்பது போன்று பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சண்முகம் சண்முகம் என்பவர் 2022, ஆகஸ்ட் 12 அன்று வெளியிட்டிருந்த பதிவை சத்ரபதி வீர சிவாஜியின் காவிப்படை தளபதிகள் என்ற ஃபேஸ்புக் பக்கம் பகிர்ந்திருந்தது. தெலுங்கு நடிகர் […]

Continue Reading

அருவியில் மூவர்ணக் கொடி; கொண்டாடும் மக்கள்- இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது தெரியுமா?

75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் அருவியில் வண்ணப் பொடியை கொட்டி மூவர்ண தேசிய கொடியாக்கிக் கொண்டாடிய மக்கள் என்று வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அருவியில் இளஞ்சிவப்பு மற்றும் பச்சை வண்ண பொடியை கொட்டி தேசிய கொடியின் மூவர்ணம் போன்று அருவி நீர் கொட்டுவது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில், இந்தியாவின் 75வது சுதந்திர தினம் […]

Continue Reading

பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஆதரவு; பாஜக.,வை விட்டு விலகுவதாக நயினார் நாகேந்திரன் கூறினாரா?

‘’நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசியதை வெட்கக்கேடானது; பாஜக.,வில் இனியும் தொடர்வதா என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்,’’ என்று நயினார் நாகேந்திரன் கூறியதாக, ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மதுரை விமான நிலையத்திற்கு வந்த தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரை வழிமறித்து […]

Continue Reading

தேசியக் கொடி விற்பனையிலும் கொள்ளையடிக்கும் மோடி என புதிய தலைமுறை நியூஸ் கார்டு வெளியிட்டதா?

தேசியக் கொடி விற்பனையிலும் மோடி கொள்ளையடிக்கிறார் என தென்னிந்திய நெசவாளர்கள் சங்கம் கூறியதாக புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “தேசியக்கொடி விற்பனையிலும் கொள்ளையடிக்கும் மோடி! பாலியெஸ்டர் துணி உற்பத்தி செய்யும் அம்பானி நிறுவனத்தின் இலாபத்துக்காக இந்திய தேசியக்கொடிகள் கதர் துணியால் […]

Continue Reading

சேலம் மேம்பாலத்தில் மூவர்ண ஒளி அலங்காரம் என்று பரவும் வீடியோ உண்மையா?

சேலம் மேம்பாலத்தில் மூவர்ண தேசியக் கொடி ஒளி விளக்கு அமைக்கப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Twitter I Archive 2  பாலம் மூவர்ண ஒளி வெள்ளத்தில் இருப்பது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. பின்னணியில் ஏ.ஆர்.ரஹ்மானின் வந்தேமாதரம் பாடல் ஒலிக்கிறது. நிலைத் தகவலில், “5வது சுதந்திர தினத்தையொட்டி பாலத்தில் ஒளிரவிடப்பட்ட மூவர்ணம்…!! #india #Independenceday […]

Continue Reading

மு.க.ஸ்டாலின் தலையில் விக் மாட்டும் புகைப்படம் என்று பகிரப்படும் வதந்தி…

‘’மு.க.ஸ்டாலின் தலையில் விக் மாட்டும் புகைப்படம்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் படம் ஒன்றை கண்டோம். இதுபற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில் பலரும் இது உண்மையான புகைப்படம் என்றே கருதி, ஆதரவாகவும், எதிராகவும் கமெண்ட் பகிர்வதைக் கண்டோம். உண்மை அறிவோம்:மு.க.ஸ்டாலின் தலையில் செயற்கை முடிகளை நட்டு, சிகை அலங்காரம் செய்துள்ளார் என்பது உண்மைதான். அது தலையின் முன் பகுதியாகும். அவருக்குப் […]

Continue Reading

அதிமுக.,வின் கடைசி முதலமைச்சர் நான்தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

‘’அதிமுக சார்பாக, தமிழகத்தை ஆட்சி செய்த கடைசி முதலமைச்சர் நான்தான்,’’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாகக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link இதனை பலரும் உண்மை என நம்பி ட்விட்டர் மட்டுமின்றி ஃபேஸ்புக்கிலும் பகிர்வதைக் காண முடிகிறது. உண்மை அறிவோம்:சமீபத்தில், 44th Chess Olympiad சென்னை மாநகரில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே விமரிசையாக நடைபெற்றது. இதனை […]

Continue Reading

மேட்டூரில் குடியிருப்புக்குள் காவிரி நீர் புகுந்ததாக பரவும் பழைய வீடியோ!

மேட்டூரில் குடியிருப்புக்குள் காவிரி நீர் புகுந்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்ற வீடியோ ஒன்றை அனுப்பி, அது உண்மையா என்று கேட்டிருந்தார். அதில், ஆற்று நீர் மிக வேகமாக ஊருக்குள் வருகிறது. “மேட்டூர் அருகே உள்ள தங்கமாபுரி பட்டினத்தில் குடியிருப்புக்குள் காவிரி […]

Continue Reading

அர்ஜூன் சம்பத் சகோதரர் பாலியல் தொழில் செய்ததால் போலீசாரால் கைது செய்யப்பட்டாரா?

‘’கோவையில் விபச்சார விடுதி நடத்தியதால் அர்ஜூன் சம்பத் உறவினர் கணேசமூர்த்தி என்பவர் கைது,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: மேற்கண்ட தகவலை +91 9049044263 மற்றும் +919049053770 ஆகிய எண்களில் நமக்கு வாசகர்கள் தொடர்ச்சியாக அனுப்பி வைத்து, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதேபோல, கதிர் நியூஸ் லோகோவுடன் கூடிய செய்தி ஒன்றையும் சிலர் பகிர்கின்றனர். Facebook Claim […]

Continue Reading

சென்னையில் திமுக ஆட்சியில் நிறுவப்பட்ட கான்கிரீட் வடிகால் பாதை இடிந்து விழுந்ததா?

சென்னையில் திமுக ஆட்சியில் கான்கிரீட்டால் நிறுவப்பட்ட வடிகால் பாதை இடிந்து விழுந்த பரிதாப காட்சி என்று குறிப்பிடப்பட்டு, பகிரப்படும் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இளைஞர் ஒருவர் நடந்து செல்லும்போது திடீரென கான்கிரீட் வடிகால் பாதை இடிந்து விழும் காட்சிகள் கொண்ட சிசிடிவி பதிவு ஒன்றை இந்த ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளனர். இதன் மேலே, ‘’சென்னையில் போடப்பட்ட […]

Continue Reading

சவுக்கு சங்கர் மறைந்துவிட்டதாக வதந்தி பரப்பும் விஷமிகள்!

அரசியல் விமர்சகர் என்று அழைக்கப்படும் சவுக்கு சங்கர் காலமாகிவிட்டார் என்று சிலர் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர். இதையும் ஏராளமானவர்கள் லைக், ஷேர் செய்து வரவே அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சவுக்கு சங்கர் புகைப்படத்துடன் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் பெயரில் இந்த போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரை தேவரின சிறப்புச் செய்திகள் என்ற ஃபேஸ்புக் […]

Continue Reading

இந்துக்களுக்கு எதிராக இஸ்லாமியர்களுடன் கைகோர்த்து வழக்கு தொடர்ந்ததா தி.மு.க அரசு?

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இந்துக்களுக்கு எதிராக இஸ்லாமியர்களுடன் கைகோர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், நாசர் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தார்கள் என்றும், அந்த வழக்கில் அரசுக்கு எதிரான தீர்ப்பு வந்ததாகவும் அந்த தீர்ப்பை தமிழக ஊடகங்கள் மறைத்தன என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) வாசகர் ஒருவர் […]

Continue Reading

இரண்டாம் நரசிம்மவர்மன் தாளகிரி சிவன் கோயிலில் செதுக்கிய கணினி மற்றும் கீபோர்டு சிற்பம் இதுவா?

‘’தாளகிரி சிவன் கோயிலில் இரண்டாம் நரசிம்மவர்மன் கோயிலில் செதுக்கிய கணினி மற்றும் கீ போர்டு சிற்பம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர் நமக்கு +91 9049044263 மற்றும் +91 9049053770 என்ற வாட்ஸ்ஆப் எண்களில் அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தனர். இதனை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக், ட்விட்டரில் பகிர்வதையும் கண்டோம். Facebook Claim […]

Continue Reading

ஒரு பழங்குடியினப் பெண் குடியரசுத் தலைவரானால் இட ஒதுக்கீட்டை ஒழிக்கலாம் என்று அம்பேத்கர் கூறினாரா?

‘’பழங்குடியினப் பெண் என்றைக்கு இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆகிறாரோ அன்றைய நாளில் இட ஒதுக்கீட்டை ஒழித்திட வேண்டும்- டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என கேட்டிருந்தார். இதனை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக்கில் பகிர்வதை கண்டோம். […]

Continue Reading

ஆட்சிக்கு வந்தால் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பை 40 ஆக மாற்றுவேன் என்று மோடி கூறினாரா?

‘’ஆட்சிக்கு வந்தால் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பை 40 ஆக குறைப்பேன் என்று மோடி காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கூறினார்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்கள் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு +91 9049053770 என்ற வாட்ஸ்ஆப் எண் வழியே அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதேபோல, கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் பலரும் தகவல் பகிர்ந்து வருகின்றனர். FB Claim Link I […]

Continue Reading

ஸ்மிருதி இரானி மகள் நடத்தும் ஓட்டலில் மாட்டிறைச்சி விற்பனை என்று பகிரப்படும் வதந்தி…

ஸ்மிருதி இரானி மகள் நடத்தும் ஓட்டலில் மாட்டிறைச்சி விற்பனை என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:ஸ்மிருதி இரானி மகள் ஜோயிஷ் இரானி சட்டவிரோதமான முறையில் கோவாவில் ரெஸ்டாரண்ட் மற்றும் பார் ஒன்றை சட்டவிரோதமான முறையில் நடத்துவதாக, காங்கிரஸ் கட்சி தரப்பில் புகார் தெரிவிக்கப்படுகிறது. இதனை ஏற்கனவே ஸ்மிருதி இரானி திட்டவட்டமாக மறுத்துள்ளார். The […]

Continue Reading

பேச்சுப் போட்டியில் பிச்சு உதறிய சின்ன சேலம் தனியார் பள்ளி மாணவி என்று பரவும் மற்றொரு வீடியோ!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளியில் உயிரிழந்த ஶ்ரீமதி பள்ளி வளாகத்தில் நடந்த பேச்சுப் போட்டியில் பேசிய காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து சந்தேகமான முறையில் உயிரிழந்த மாணவி ஶ்ரீமதி படத்துடன் வீடியோ ஒன்றை இணைத்து பதிவை உருவாக்கியுள்ளனர். வீடியோவில் “ஶ்ரீமதி பள்ளி வளாகத்தில் பேச்சு […]

Continue Reading

மீண்டும் செல்போனை தட்டிவிட்ட சிவக்குமார் என்று பரவும் வீடியோ- எப்போது எடுக்கப்பட்டது தெரியுமா?

நடிகர் சிவக்குமார் திரும்பவும் செல் போனை தட்டிவிட்டுள்ளார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive நடிகர் சிவக்குமாருடன் செல்ஃபி எடுக்க ஒருவர் முயற்சி செய்கிறார். செல்போனை நடிகர் சிவக்குமார் தட்டிவிட்டு செல்லும் காட்சி வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திரும்பவும் செல்ல தட்டிவிட்டுருக்கான் செல்தட்டி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை சங்கி Mahesh M என்ற […]

Continue Reading

கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதி பேச்சு என்று பரவும் வீடியோ உண்மையா?

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஶ்ரீமதி பேசிய காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஶ்ரீமதி புகைப்படத்துடன் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில் மாணவி ஒருவர் காமராஜர் பற்றி தெளிவாக அழகாக பேசுகிறார். நிலைத் தகவலில், “கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி  பள்ளியில் பேசிய பேச்சு. கண்ணீர் அஞ்சலி” […]

Continue Reading

பா.ஜ.க-வினர் இலவச மின்சாரத்தை விட்டுக்கொடுக்கும்படி அண்ணாமலை அறிவுறுத்தினாரா?

100 யூனிட் இலவச மின்சாரத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று பாஜக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இலவச மின்சாரத்தை பாஜக-வினர் விட்டுக் கொடுப்பு? இலவச மின்சாரத்தை பாஜகவினர் விட்டுக் கொடுக்க அண்ணாமலை […]

Continue Reading

ஓபிஎஸ் கூட்டத்தின் குலத்தொழில் திருடுவது என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

திருடுவதுதான் ஓ.பன்னீர்செல்வம் சார்ந்த சமூகத்தினரின் குலத்தொழில் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக, ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: FB Claim Link I Archived Link உண்மை அறிவோம்: ஜெயலலிதா மரணமடைந்த நிலையில், சசிகலாவை வெளியேற்றி விட்டு, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஒன்றிணைந்து, 4 ஆண்டுகள் அதிமுக.,வை தலைமையேற்று, தமிழ்நாட்டில் ஆட்சி நடத்தி வந்தனர்.  Fact Crescendo Tamil Link கடந்த […]

Continue Reading

கனியாமூர் தனியார் பள்ளி பிரச்னை பற்றி நடிகைகளுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை செய்தாரா?

சின்ன சேலம் தனியார் பள்ளி பிரச்னை பற்றி நடிகைகளுடன் ஆலோசித்த உதயநிதி ஸ்டாலின் என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்: சமீபத்தில் சின்ன சேலம் அருகே கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, உள்ளூர் பொது […]

Continue Reading

ஜவஹர்லால் நேரு குடும்பம் முஸ்லீம் வழிவந்தவர்களா? திட்டமிட்டு பகிரப்படும் வதந்தியால் சர்ச்சை…

ஜவஹர்லால் நேரு குடும்பம் முஸ்லீம் வழிவந்தவர்கள் என்று நேருவின் தனிப்பட்ட உதவியாளராக இருந்த எம்.ஓ.மத்தாய் புத்தகம் எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வைரலாக பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில், இந்திய அரசியல் வரலாறு பற்றிய எந்த அடிப்படை புரிதலும் இன்றி இந்து – முஸ்லீம் விரோதத்தை வளர்க்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கில் […]

Continue Reading

சின்ன சேலம் தனியார் பள்ளி மீது எந்த தவறும் இல்லை என்று சைலேந்திர பாபு கூறினாரா?

சின்ன சேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி மீது எந்த தவறும் இல்லை என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive சைலேந்திர பாபு சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இருக்கும் புகைப்படம் மற்றும் தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டுடன் ட்வீட் பதிவு […]

Continue Reading

மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதாக இந்திய அரசு அறிவித்ததா?

மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதாக, இந்திய அரசு அறிவித்துள்ளது என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என கேட்டிருந்தனர். இதனை பலரும் உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இந்த வதந்தி கடந்த […]

Continue Reading

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மகிழ்ச்சியளிக்கிறது என்று மோகன் பகவத் கூறினாரா?

ரூபாயின் வீழ்ச்சி மகிழ்ச்சியளிக்கிறது. இதனால் ஆர்.எஸ்.எஸ்-க்கு வெளிநாட்டிலிருந்து வரும் நிதி அதிகரிக்கும் என்று மோகன் பகவத் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்று மோகன் பகவத் படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ரூபாயின் வீழ்ச்சி மகிழ்ச்சியளிக்கிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு வெளிநாட்டு வாழ் இந்துக்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடம் […]

Continue Reading

மீண்டும் அரசியலுக்கு வரலாமா என்று ஆலோசிக்க உள்ளதாக ரஜினிகாந்த் கூறினாரா?

மீண்டும் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என ஆலோசிக்க மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்திக்க உள்ளார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரஜினிகாந்த் புகைப்படத்துடன் கூடிய தினமலர் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார் ரஜினி. மீண்டும் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என ஆலோசிக்க உள்ளேன். […]

Continue Reading

அண்ணாமலைதான் அடுத்த தலைவர் என்று அதிமுக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டதா?

‘’அண்ணாமலைதான் அடுத்த தலைவர் என்று அதிமுக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டதால் அடிதடி,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Linkஉண்மை அறிவோம்:அதிமுக.,வின் புதிய தலைமை யார் என்பது தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகியோரிடையே மோதல் வெடித்துள்ளது. இதையொட்டி நாள்தோறும் தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பு காட்சிகள் அரங்கேறி வரும் சூழலில், அதிமுக பொதுக்குழுவில், அண்ணாமலைதான் அடுத்த தலைவர் […]

Continue Reading

தாமரை சின்னத்தில் கூட போட்டியிட தயார் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

‘’தாமரை சின்னத்தில் கூட போட்டியிட தயார்,’’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாகக் குறிப்பிட்டு ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (+91 9049044263, +91 9049053770) அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் பலர் இதனை உண்மை போல பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:அஇஅதிமுக.,வின் […]

Continue Reading

ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் கட்சியில் இருந்து நீக்குகிறேன் என்று சசிகலா அறிவித்தாரா?

அதிமுக-வில் இருந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை நீக்குவதாக, சசிகலா அறிவித்தார் என்று கூறி ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வி.கே.சசிகலா புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை வெளியிட்டது போன் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “EPS,OPS இருவரும் அஇஅதிமுக தலைமைக்கழக அலுவலகத்தில் வன்முறையைத் தூண்டியுள்ளனர். எனவே அவர்கள் இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து […]

Continue Reading

ஊழல் வழக்கில் தண்டனை; ஜெயலலிதா நிரந்தர பொதுச் செயலாளர் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

‘’ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் ஜெயலலிதா. அவர் நிரந்தர பொதுச் செயலாளராக இனி இருக்க முடியாது,’’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டார். பலரும் இதனை உண்மை என நம்பி சமூக வலைதளங்களில் ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link […]

Continue Reading

அதிமுக பொதுச் செயலாளருக்கு மேல்வரிசைப் பற்கள் 1 இன்ச் நீளம் இருக்க வேண்டும் என்று பகிரப்படும் வதந்தி…

‘’அதிமுக பொதுச் செயலாளருக்கு முன்வரிசைப் பற்கள் 1 இன்ச் நீளம் குறையாமல் இருக்க வேண்டும் என்று அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே அதிமுக பொதுக்குழுவில், புதிய தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அத்துடன், அவரது எதிர் கோஷ்டியான ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் […]

Continue Reading

சமையல் எரிவாயு விலை இனிமேல் உயர்த்தப்படாது என்று அண்ணாமலை அறிவித்தாரா?

கேஸ் சிலிண்டர் விலை இனி உயர்த்தப்படாது என்று அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கேஸ் விலை ஏற்றம் இதுவே கடைசி. இதுவே கடைசி இதற்கு மேல் கேஸ் விலை உயர்த்தப்படாது. மீறி உயர்த்தினால் எங்களை செருப்பைக் கழட்டி அடியுங்கள் […]

Continue Reading

ராதாரவி மீது நடவடிக்கை எடுக்கும்படி அண்ணாமலையை பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினாரா?

‘’ராதாரவி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என அண்ணாமலையை பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டு, நியூஸ் கார்டு ஒன்று பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர் +91 9049044263 , +91 9049053770 ஆகிய நமது வாட்ஸ்ஆப் எண்களுக்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதே நியூஸ் கார்டை மற்றவர்கள் உண்மை என நம்பி ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I […]

Continue Reading

2019ம் ஆண்டு வீடியோவை எடுத்து திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று பரப்பும் நெட்டிசன்கள்!

கடந்த 2019ம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் இளைஞர்கள் நான்கு பேர் சேர்ந்து காவலர் ஒருவரை தாக்கிய வீடியோவை தற்போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துவிட்டது என்று குறிப்பிட்டு சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காவலர் ஒருவரை நான்கு – ஐந்து இளைஞர்கள் தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விடியல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு காற்றில் பறக்குது. போலீஸுக்கே தண்ணி திமுகவினர். அதிகாரம் […]

Continue Reading