சுஜித் என்ற பெயரில் பகிரப்படும் தவறான புகைப்படம்!

சுஜித் என்ற பெயரில் வேறொரு சிறுவனின் புகைப்படம் தவறான முறையில் ஃபேஸ்புக்கில் பகிரப்படுவதை காண நேரிட்டது. இதன் மீது உண்மை கண்டறியும் சோதனை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link  Archived Link  மாணிக்கம்  என்பவர் இந்த பதிவை அக்டோபர் 29, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், சுஜித் என்ற பெயரில் ஒரு சிறுவனின் புகைப்படத்தை பகிர்ந்து இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரைப் போலவே பலரும் இந்த சிறுவனின் புகைப்படத்தை பகிர்ந்து, சுஜித்துக்கு இரங்கல் தெரிவித்து வருவதைக் காண […]

Continue Reading

பால் தினகரன் உதவவில்லை: சுஜித் தாய் வேதனை தெரிவித்தாரா?

”சிறுவன் சுஜித்தை காப்பாற்ற நூறு முறை பால் தினகரனுக்கு போன் செய்தேன், ஆனால் அவர் வரவில்லை” என்று சுஜித்தின் தாய் பேட்டி அளித்தார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்தது போன்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், ”என் மகனை காப்பாற்ற நூறு முறை பால் தினகரனுக்கு போன் செய்தேன். பிராடு பாதிரி வரவே […]

Continue Reading

சுர்ஜித் மீட்பு பணிக்கு ரூ.11 கோடி செலவு- ஃபேஸ்புக் செய்தி உண்மையா?

மணப்பாறை சிறுவன் சுர்ஜித் வில்சனை ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு ரூ.11 கோடி செலவிடப்பட்டது என்று ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நம் தினமதி நாளிதழ் என்ற பெயரில் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “சுர்ஜித் வில்சன் மீட்புப் பணிக்கு ரூ.11 கோடி செலவிடப்பட்டது – ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் என்று […]

Continue Reading

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க ரஷ்ய அதிபர் புடின் வருகிறாரா?

‘’அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க ரஷ்ய அதிபர் புடின் வருகிறார்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 OneIndia Tamil Link Archived Link 2 ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்கை மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இணைத்துள்ளனர். இதே தகவலை தினகரன், ஏசியாநெட் தமிழ், நியூஸ்டிஎம் உள்ளிட்ட பல்வேறு செய்தி இணையதளங்கள் வெளியிட்டுள்ளன. அவற்றின் […]

Continue Reading

ஆழ்துளை கிணற்றில் இருந்து சுஜித் மீட்கப்பட்ட வீடியோ: ஃபேஸ்புக் வதந்தி

‘’ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் மீட்கப்பட்ட வீடியோ,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் வீடியோ பதிவுகளை நிறைய காண நேரிட்டது. இது உண்மையா எனும் சந்தேகத்தில் ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Video Link  Sinthu Sinthu Raj Rana என்பவர் அக்டோபர் 27, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதேபோல பலரும் சிறுவன் சு(ர்)ஜித் மீட்கப்படும் வீடியோ என்று கூறி இந்த வீடியோ காட்சியை வைரலாக பகிர்ந்ததை காண […]

Continue Reading

பிள்ளையார் கோவிலை அகற்ற வேண்டும்- சரவணா ஸ்டோர் பெயரில் பரவும் வதந்தி!

சரவணா ஸ்டோர் முன்பு உள்ள பிள்ளையார் கோவிலை அகற்ற வேண்டும் என்று சிலர் சரவணா ஸ்டோர் உரிமையாளரை அணுகியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Archived Link 1 Facebook Link 2 Archived Link 2 Article Link Archived Link 3 பிள்ளையார் கோவிலை உடனடியாக எடுக்கச் சொன்னவர்களுக்கு சரவணா ஸ்டோர் அண்ணாச்சி கொடுத்த பொளேர் பதிலடி! […]

Continue Reading

கையிருப்பு தங்கத்தை விற்கும் ரிவர்வ் வங்கி?- தீயாகப் பரவும் வதந்தி!

பொருளாதார நெருக்கடி காரணமாக கையிருப்பு தங்கத்தை விற்கும் நிலைக்கு இந்திய ரிவர்வ் வங்கி தள்ளப்பட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் யு என்ற ஊடகத்தின் பெயரில் நியூஸ் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “இந்திய கஜானா காலி – பொருளாதார நெருக்கடியால் தங்கத்தை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட ரிசர்வ் வங்கி” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை […]

Continue Reading

சர்தார் படேல் சிலையில் விரிசல் ஏற்பட்டுள்ளதா?

’சர்தார் படேல் சிலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது,’’ என்ற பெயரில் பகிரப்படும் ஃபேஸ்புக் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link  Archived Link  Troll Mafia எனும் ஃபேஸ்புக் ஐடி, மேற்கண்ட பதிவை வெளியிட்டுள்ளது. இதில், சர்தார் படேல் சிலையில் வெள்ளை நிறத்தில் காணப்படும் சில கோடுகளை சுட்டிக்காட்டி, சிலை திறந்து ஒரே மாதத்தில் விரிசல் ஏற்பட்டுவிட்டதாக, எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி […]

Continue Reading

காரப்பன் சில்க்ஸ் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா?- ஃபேஸ்புக் வதந்தி

சிறுமுகை காரப்பன் சில்க்ஸில் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா உள்ளதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link காரப்பன் சில்க்ஸ் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை காரப்பன் சில்க்ஸ் ஜவுளிக்கடையில் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்து ஆபாசமாக பார்க்கிறார் முதலாளி” என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த பதிவை, Sabari R என்பவர் […]

Continue Reading

கையில் மருதாணி வைத்த மாணவிக்கு அபராதம் விதித்த கிறிஸ்தவ ஸ்கூல்?

‘’கையில் மருதாணி வைத்த மாணவிக்கு அபராதம் விதித்த கிறிஸ்தவ ஸ்கூல்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு ஃபேஸ்புக் செய்தியின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Dumeels எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், சென்னை வேப்பேரியில் இயங்கும் Doveton Girls & Boys Hr.Sec.Schools பெயரில் ஒரு ரசீதின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர். இதன் மேலே, ‘கிறிஸ்தவ பள்ளியில் படிக்கும் இந்து மாணவி கையில் மருதாணி […]

Continue Reading

இந்தோனேஷியாவில் 7500 ஆண்டுகள் பழமையான இந்து கோவில் கண்டுபிடிப்பு?

இந்தோனேஷியாவில் 7500 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட இந்து கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 2.48 நிமிடம் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “இஸ்லாமியப் பெருமக்கள் அதிகமாக வாழ்கின்ற இந்தோனேசியா நாட்டில் பூமிக்கடியில் 7500 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவியருளிய சிவாலயம் கண்டுபிடிப்பு ! சைவ சமயத்தின், தமிழ்ச் […]

Continue Reading

மெயின் ரோட்டாண்டா வாம்மா; அமைச்சர் ஜெயக்குமார் பற்றி மீண்டும் பரவும் வதந்தி!

“மெயின் ரோட்டாண்ட வாம்மா இப்போ நம்மகிட்டயே டாக்டர் இருக்காங்க” என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் படங்களை ஒன்று சேர்த்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது – செய்தி” என்று உள்ளது. இதற்கு கீழ், அமைச்சர் ஜெயக்குமார் போனில் […]

Continue Reading

பாஜக முன்னாள் அமைச்சர் பங்கஜ முண்டே தேர்தல் தோல்வியில் கதறி அழுதாரா?

‘’தேர்தல் தோல்வியால் கதறி அழுத மகாராஷ்டிர அமைச்சர்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 News18 Tamil Link  Archived Link 2 இதுபற்றி ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபொழுது, ஒரே செய்தியை 3 முறை நியூஸ்18 தமிழ் ஊடகம் பகிர்ந்திருந்த விவரம் கிடைத்தது. அத்துடன், தனிநபர் ஒருவரும் பகிர்ந்திருந்தார்.  Facebook Link 1 Archived Link […]

Continue Reading

டாக்டர் பட்டம் பெற்றதற்காக எடப்பாடி பழனிசாமியை கேலி செய்தாரா தமிழிசை?

‘’டாக்டர் பட்டம் பெற்றதற்காக எடப்பாடி பழனிசாமியை கேலி செய்தார் தமிழிசை சவுந்தரராஜன்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டிருந்த வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link  Archived Video Link  Troll Mafia எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை அக்டோபர் 22, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், பாஜக தமிழக முன்னாள் தலைவரும், இந்நாள் தெலுங்கானா மாநில ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் பேசுகிறார். அவர், ‘’ஒரு […]

Continue Reading

காரப்பா சில்க்ஸில் புடவை வாங்கு… கமல் பெயரில் பரவும் வதந்தி!

சிறுமுகை காரப்பா சில்க்ஸில் புடவை வாங்கு என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ட்வீட் செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் ட்வீட் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பாரப்பா ஊரினிலே பல கடையுண்டு யாரப்பா அங்கெல்லாம் துணி வாங்குவார்? காரப்பா சில்க்கினிலே புடவை வாங்கு ஜோரப்பா விலையும் தரமும் […]

Continue Reading

கீழடியில் இந்து கடவுள்களின் சிலை கிடைத்ததாக எச்.ராஜா பேசினாரா?

கீழடியில் இந்து கடவுள்களின் சிலை கிடைத்தது என்று எச்.ராஜா பேசுகிற ஒரு வீடியோவை பலரும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர். இந்த வைரல் வீடியோவின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Video Link  காஞ்சி செந்தில் 2.0 என்பவர் இந்த வீடியோ பதிவை செப்டம்பர் 24, 2019 அன்று பகிர்ந்துள்ளார். இதில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேசும் ஒரு காட்சியை இணைத்துள்ளனர். இதன் மேலே, ‘’கீழடி பற்றிய உண்மை தெரிஞ்ச […]

Continue Reading

400 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் மகாமேரு; காதில் பூ சுற்றும் ஃபேஸ்புக் பதிவு!

இமயமலைப் பகுதியில் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் மகாமேரு என்ற செடி பூத்துள்ளதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கோழியின் தலை போன்ற தோற்றம் கொண்ட மலர் ஒன்றின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இயற்கையின் வினோதம். 400 வருடங்களுக்கு ஒரு முறை இமாலய மலையில் மலரும் , “மகாமேரு” அல்லது “ஆர்யா” பூ. இப்பொழுது […]

Continue Reading

பேச்சிப்பாறை அணையில் நீர் இடி விழும் காட்சி; வீடியோ உண்மையா?

‘’பேச்சிப்பாறை அணையில் நீர் இடி விழும் காட்சி,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு வீடியோ காட்சியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: Facebook Link  Archived Video Link  அன்பான இரு உள்ளங்கள் எனும் ஃபேஸ்புக் ஐடி அக்டோபர் 21, 2019 அன்று இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. இதில், அணைக்கட்டு ஒன்றில் திடீரென நீருக்கடியில் எதோ வெடித்துச் சிதறும் காட்சி இடம்பெற்றுள்ளது. மேலே, ‘’ ⛈?⚡கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிபாறை […]

Continue Reading

ஃபேஸ்புக்கில் பரவும் திருவனந்தபுரம்- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை படம் உண்மையா?

திருவனந்தபுரம் – நாகர்கோவில் இடையேயான தேசிய நெடுஞ்சாலை குளம் போல காட்சி அளிப்பதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாலை முழுக்க குண்டும் குழியுமாக இருக்கிறது. சாலையில் குளம்போல காட்சி அளிக்கும் பள்ளத்தில் மோட்டார் சைக்கிளில் ஒருவர் பயணிக்கிறார். வாகன போக்குவரத்துக்கு முற்றிலும் பயனில்லாத சாலையாக அது உள்ளது. நிலைத் தகவலில் “திருவனந்தபுரம், நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை அவலநிலை. […]

Continue Reading

தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இறந்துவிட்டதாகப் பரவும் வதந்தி உண்மையா?

‘’தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இறந்துவிட்டார்,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Facebook Link Archived Link Shahul Hameed என்பவர் இந்த பதிவை அக்டோபர் 20, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் புகைப்படத்தை பகிர்ந்து, அவரது பெயரை டைகர் எனக் குறிப்பிட்டு, மாவட்ட தெருநாய்கள் சங்க தலைவர் இறந்துவிட்டார், என்றும் கூறி, விமர்சித்துள்ளனர். இதனை […]

Continue Reading

அயோத்திக்கு பிறகு பூதாகரமாக வெடிக்கப் போகும் ஸ்ரீரங்கப்பட்டினம்?

அயோத்திக்கு பிறகு பூதாகரமாக வெடிக்க போகும் ஸ்ரீரங்கப்பட்டினம் திப்பு சுல்தான் கட்டிய மசூதி என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Archived Link 1 Facebook Link 2 Archived Link 2 மசூதி ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதன் மூளைக்கல்லில் முகம் போன்ற உருவம் தெரிகிறது. அந்த பகுதி மட்டும் காவி நிறத்தால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நிலைத் […]

Continue Reading

சித்தியுடன் சின்னையா? ஃபேஸ்புக் விஷம புகைப்படம்

திரைப்பட நடிகை ஷகிலாவுடன் மாலையும் கழுத்துமாக டாக்டர் ராமதாஸ் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link டாக்டர் ராமதாஸ் மற்றும் நடிகை ஷகிலா மாலையும் கழுத்துமாக உள்ளது போன்று படம் உள்ளது. இருவருக்கும் நடுவே டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளார். எடிட் செய்யப்பட்டது தெளிவாகத் தெரிகிறது. இந்த பதிவை, ராஜ லிங்கம் என்பவர் 2019 அக்டோபர் 18ம் […]

Continue Reading

நகை திருடனை சந்தித்து நன்றி சொன்னாரா லலிதா ஜூவல்லரி உரிமையாளர்?

‘’நகை திருடனை சந்தித்து நன்றி சொன்ன லலிதா ஜூவல்லரி உரிமையாளர்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாகப் பகிரப்பட்டு வரும் ஒரு சென்டிமெண்ட் கதையை காண நேர்ந்தது. இது உண்மையா என்ற கோணத்தில் ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Asianet News Link  Archived Link 2 ஏசியாநெட் தமிழ் நியூஸ் இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதனையே தங்களது இணையதளத்திலும் செய்தியாக பதிவிட்டுள்ளனர். இந்த செய்தியில், ‘’திருச்சி லலிதா நகைக் கடையில் […]

Continue Reading

ஐநா சபையிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தியதா இந்தியா?

ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து வாங்கிய கடன் அனைத்தையும் இந்தியா திருப்பி செலுத்திவிட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. உலக வங்கியிடமிருந்தே கடன் பெறப்படும் சூழலில், ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து பெற்ற கடன் திரும்ப செலுத்தப்பட்டுள்ளது என்று கூறியிருப்பது ஆச்சர்யத்தை அளித்து. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரதமர் மோடி புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “United Nationsல் வாங்கப்பட்ட அனைத்துக் கடனையும் […]

Continue Reading

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இஸ்லாமியரை இழிவுபடுத்தினாரா?

‘’ராஜேந்திர பாலாஜி இஸ்லாமியரை மிரட்டி இழிவுபடுத்திப் பேசினார்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் வைரல் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Link Archived Link ஆம் நாங்கள் சமூக விரோதிகள் எனும் ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ரேஷன் கடை அமைக்கக் கோரி மனு கொடுக்கச் சென்ற இஸ்லாமியர்கள் சிலரை மிரட்டியதோடு, இழிவுபடுத்தி தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார் எனக் […]

Continue Reading

மேகக்கூட்டத்தில் ஐயப்பன் அமர்ந்திருக்கும் புகைப்படம் உண்மையா?

‘’மேகக்கூட்டத்தில் ஐயப்பன் அமர்ந்திருக்கும் புகைப்படம்,’’ என்ற பெயரில் பகிரப்பட்ட ஒரு புகைப்படத்தை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link  Seen Mani என்பவர் 2015, டிசம்பர் 28 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்துள்ளார். இதில் நியூஸ்பேப்பர் ஒன்றில் வெளிவந்த செய்தியின் புகைப்படத்தை இணைத்துள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: மேற்கண்ட புகைப்படம் உண்மையா […]

Continue Reading

சீனாவில் உள்ள இந்து கோவில்களை செப்பனிட ஜின்பிங் உத்தரவு?

சீனாவில் உள்ள இந்து ஆலயங்களை செப்பனிட்டு தினமும் மூன்று வேளை பூஜைக்கு ஏற்பாடு செய்ய சீன அதிபர் ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link “சீன அதிபர் ஜின்பிங் அதிரடி உத்தரவு… சீனாவில் உள்ள அனைத்து இந்து ஆலங்களையும் செப்பனிட்டு 3 வேளை பூஜைக்கு ஏற்பாடு…” என்று ஒரு போட்டோ கார்டு பகிரப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை […]

Continue Reading

சீமானை நினைத்து வெட்கப்படுகிறேன்; அற்புதம்மாள் பெயரில் பரவும் நியூஸ் கார்டு!

சீமானை நினைத்து வெட்கப்படுகிறேன் என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் தாயார் கூறியதாக தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 7 தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அக்டோபர் 16, 2019 காலை 10.10க்கு அந்த நியூஸ்கார்டு வெளியானதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அற்புதம்மாள் மற்றும் சீமான் படங்கள் […]

Continue Reading

ரிசர்வ் வங்கி புதிய ரூ.1000 நோட்டு அறிமுகம் செய்துள்ளதா?

‘’ரிசர்வ் வங்கி புதியதாக அறிமுகம் செய்துள்ள ஆயிரம் ரூபாய் நோட்டு,’’ என்ற பெயரில் பகிரப்பட்டு வரும் ஃபேஸ்புக் கிளெய்ம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Archived Link பூபாலன் விவசாயி என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை அக்டோபர் 16, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், புதிய ரூ.1000 நோட்டு எனக் கூறி ஒரு கரன்சியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதேபோல, மேலும் பலர் பதிவிட்டுள்ளதைக் காண […]

Continue Reading

மோடி பிரதமராக இருந்தால் இந்தியா மிகப்பெரிய சக்தியாக மாறும்: ஃபேஸ்புக் வதந்தி

“2029ம் ஆண்டு வரை மோடி பிரதமராக இருந்தால் இந்தியா மிகப்பெரிய சக்தியாக மாறும். இந்தியாவை யாரும் வெல்ல முடியாது” என்று வட கொரிய அதிபர் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் படத்துடன் கூடிய பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “2029 வரை மோடி பிரதமராக இருந்தால் இந்தியா மிகப்பெரிய சக்தியாக மாறும். […]

Continue Reading

ட்விட்டரில் கோபேக் மோடி டிரெண்டிங்; பாகிஸ்தான் சதி காரணமா?

‘’ட்விட்டரில் கோபேக் மோடி டிரெண்டிங் ஆனதற்கு பாகிஸ்தான் சதியே காரணம்,’’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link தங்க ராஜ் என்பவர் இந்த பதிவை அக்டோபர் 12, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், டைம்ஸ் ஆஃப் இந்தியா, தினத்தந்தி உள்ளிட்ட இணையதளங்களில் வெளியான செய்தியை மேற்கோள் காட்டியுள்ளார். இதே செய்தியை மேலும் பலர் உண்மை என […]

Continue Reading

அமெரிக்கா வெளியிட்ட உலகின் நேர்மையானவர்கள் பட்டியலில் முதலிடத்தில் மன்மோகன் சிங்?

உலகின் மிகவும் நேர்மையானவர்கள் 50 பேர் பட்டியலை அமெரிக்கா வெளியிட்டதாகவும் அதில், இந்தியாவிலிருந்து இடம் பிடித்தது மட்டுமின்றி முதலிடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் என்றும் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Sheik Uduman என்பவர் மன்மோகன் சிங் படத்துடன் வெளியிட்டிருந்த பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “உலகின் மிகவும் நேர்மையானவர்கள் 50 நபர்களின் […]

Continue Reading

மாமல்லபுரத்தை முன்வைத்த சீனா! – ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

சீன அதிபருடனான சந்திப்புக்கு வாரணாசியை மத்திய அரசு முன்வைத்தது என்றும் ஆனால் சீனாவோ, மாமல்லபுரத்தை முன் வைத்தது என்றும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 18 தமிழ் நாடு வெளியிட்டது போன்ற செய்தியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அதில், “வாரணாசியைத் தேர்வு செய்த மத்திய அரசு… மாமல்லபுரத்தை முன் வைத்த சீனா…!” என்று இருந்தது. நிலைத் தகவலில், “மத மத […]

Continue Reading

சீமானை விமர்சித்த ரஜினிகாந்த்; பரபரப்பை ஏற்படுத்தும் நியூஸ் கார்டு!

“ராஜீவ் காந்தி மரணம் பற்றி சீமான் பேசியது அபத்தம். மனநிலை சரியில்லாதவர் கூட அப்படி பேசமாட்டார்” என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link புதிய தலைமுறை பிரேக்கிங் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. 2019 அக்டோபர் 16ம் தேதி அந்த நியூஸ் கார்டு வெளியிடப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நியூஸ் கார்டில், “சீமான் சர்ச்சை – ரஜினி […]

Continue Reading

பச்சை பட்டாணிக்கு பச்சை நிறம் சேர்க்கப்படும் வீடியோ: உண்மை என்ன?

‘’பச்சை பொடி கலந்து தயாரிக்கப்படும் பச்சை பட்டாணி,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் வைரல் வீடியோவின் உண்மைத்தன்மை பற்றி ஆராய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Archived Video Link Prakash Iyer என்பவர் இந்த ஃபேஸ்புக் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். இதில், வீடியோ ஒன்றை பகிர்ந்து அதன் மேலே, ‘’இனிமே பச்சை பட்டாணி கேப்பியா, கேப்பியா‘’, என எழுதியுள்ளார். வீடியோவில், உணவுப்பொருள் போன்ற ஒன்றை மூட்டைகளில் இருந்து கொட்டி, அதனுடன் பச்சை நிறம் […]

Continue Reading

ரயில்வே துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் உயர்த்தினாரா ஜெகன்மோகன் ரெட்டி?

‘’ரயில்வே துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்கிய ஜெகன் மோகன் ரெட்டி,’’ என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் பரவி வரும் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மரணகலாய் எனும் ஃபேஸ்புக் ஐடி அக்டோபர் 11, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி புகைப்படத்திற்கு, பெண்கள் பாலாபிஷேகம் செய்யும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ […]

Continue Reading

மொபைல் ஃபோனில் கேம் விளையாடினால் கண்ணில் புழு வரும்: வீடியோ உண்மையா?

‘’மொபைல் ஃபோனில் கேம் விளையாடினால் கண்ணில் புழு வரும்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு வைரல் வீடியோவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Video Link  இந்த Page ஐ இங்க லைக் பண்ணுங்க ப்ளிஸ். எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், கண்ணில் இருந்து நீளமான ஒரு மெல்லிய புழுவை கத்தரிக்கோல் மூலமாக அகற்றும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவின் […]

Continue Reading

கோபேக் மோடி ட்வீட் செய்த 256 பேர் மீது வழக்கு?

கோ பேக் மோடி என்று ட்வீட் செய்த 256 பேர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழ்நாடு சைபர் கிரைம் அவேர்னஸ் ஆர்கனைசேஷன் (Tamilnadu Cyber Crime Awareness Organisation) என்ற லோகோவோடு பிரேக்கிங் நியூஸ் கார்டு ஒன்று வெளியாகி உள்ளது. அதில், “கோ பேக் மோடி ட்வீட் […]

Continue Reading

சீமான் பேசியதற்கு மறுப்பு தெரிவித்து விடுதலைப் புலிகள் அறிக்கை வெளியிட்டனரா?

‘’சீமான் பேசியதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் விடுதலைப் புலிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்,’’ என்று கூறி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 OneIndia News Archived Link 2 Oneindia Tamil எனும் ஃபேஸ்புக் ஐடி தனது இணையதளத்தில் வெளியிட்ட செய்தியின் லிங்கை, இந்த ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளது. அந்த செய்தியை கிளிக் செய்து படித்தபோது, […]

Continue Reading

திருமுருகன் காந்திக்கு ரூ.10 கோடி கொடுத்ததா அன்னை தெரசா அறக்கட்டளை?

‘’திருமுருகன் காந்திக்கு ரூ.10 கோடி கொடுத்த அன்னை தெரசா அறக்கட்டளை,’’ என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் பரவி வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Sri Nithya Veera Badhrananda என்பவர் இந்த பதிவை ஆகஸ்ட் 26, 2018 அன்று பகிர்ந்துள்ளார்.  இதில், வங்கி காசோலை ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’திருமுருகன் காந்தி அன்னை தெரசா அறக்கட்டளையில் இருந்து பெற்ற […]

Continue Reading

புரி ஜெகந்நாதர் கோயிலில் தடுத்து நிறுத்தப்பட்டாரா குடியரசுத் தலைவர்?

‘’புரி ஜெகந்நாதர் கோயிலில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி தடுத்து நிறுத்தப்பட்டனர்,’’ என்று கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் வைரல் செய்தியின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link Arumugam Bhel என்பவர் ஜூன், 30, 2018 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்துள்ளார். இதில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் வெளியிடப்பட்ட செய்தி எனக் கூறி, ஒடிசா புரி ஜெகந்நாதர் கோயிலுக்குள் […]

Continue Reading

ஆர்.எஸ்.எஸ் என்பதால் மேற்கு வங்கத்தில் கொல்லப்பட்ட குடும்பம்?

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை ஆதரித்தார் என்பதற்காக ஒருவர் குடும்பத்தோடு படுகொலை செய்யப்பட்டார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சமீபத்தில் மேற்கு வங்கத்தில் படுகொலை செய்யப்பட்ட போந்து பிரகாஷ் பால் மற்றும் அவரது குடும்பத்தினர் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத்தகவலில், “ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவை ஆதரித்த ஒரே காரணத்திற்காக ஒரு குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று […]

Continue Reading

பாஜக, அதிமுக அரசுகள் இருக்கும் வரை நீட் தொடரும்– விஜயபாஸ்கர் பெயரில் வதந்தி

பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க அரசுகள் இருக்கும் வரை நீட் தேர்வு தொடரும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அக்டோபர் 6, 2019 தேதியிட்ட புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் விஜயபாஸ்கர் படம் உள்ளது. “பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க அரசுகள் இருக்கும் வரை நீட் தேர்வு தொடரும். […]

Continue Reading

எடப்பாடி பழனிசாமியை கூப்பிட்டு செங்கோலை பிடிக்கச் சொன்னாரா எம்ஜிஆர்?

‘’எடப்பாடி பழனிசாமியை கூப்பிட்டு செங்கோலை பிடிக்கச் சொன்ன எம்ஜிஆர்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் வீடியோ ஒன்றின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Video Link Anand Sekar என்பவர் செப்டம்பர் 23, 2019 அன்று இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இது அதிமுக.,வின் பழைய கட்சி நிகழ்ச்சி பற்றியதாகும். இதில், ஜெயலலிதா எம்ஜிஆர் கையில் வெள்ளி செங்கோல் ஒன்றை கொடுக்க, அதனை அருகில் இருக்கும் நபரை அழைத்து ஒரு கை […]

Continue Reading

சீமானுக்கு பதிலடி கொடுத்த ஜெகன் மோகன்?- ஃபேஸ்புக் நியூஸ் கார்டு உண்மையா?

“நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் யார் என்றே தெரியாது என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பதிலடி கொடுத்தார்”- என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், ஜெகன் மோகன் ரெட்டி சீமானுக்கு பதிலடி! என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், “சீமான் யாரென்றே எனக்குத் தெரியாது. […]

Continue Reading

கோவளம் கடற்கரையில் பாதுகாப்பு சோதனை; மோடி பற்றிய படம் உண்மையா?

ஏற்கனவே சுத்தம் செய்யப்பட்ட, வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் ஆய்வு செய்த கடற்கரையில் பிரதமர் மோடி குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தார் என்று சமூக ஊடகங்களில் பல படங்கள் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. இவற்றின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நான்கு புகைப்படங்களை கொலாஜ் செய்து பகிர்ந்துள்ளனர். முதல் படத்தில், பாதுகாப்பு அதிகாரிகள் முழு கடற்கரையையும் சோதனை செய்தனர் என்று உள்ளது. இரண்டாவது படத்தில், பிளாஸ்டிக் குப்பைகள் பை நிறைய இருப்பது […]

Continue Reading

கேமிரா குழுவுடன் பீச் சுத்தம் செய்வதாக நடித்தாரா பிரதமர் மோடி?

‘’கேமிரா குழுவுடன் பீச்சை சுத்தம் செய்வதாக நடித்த மோடி,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் வைரல் புகைப்படத்தைக் காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மதவாத எதிர்ப்பு பிரச்சாரம் என்ற ஃபேஸ்புக் ஐடி, மேற்கண்ட பதிவை அக்டோபர் 12, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், மோடி கடற்கரையில் குப்பை அள்ளும் புகைப்படங்களையும், அவரை சில புகைப்படக்காரர்கள் போட்டோ பிடிப்பது போன்ற புகைப்படத்தையும் இணைத்து […]

Continue Reading

பாஜக செய்தித் தொடர்பாளர் உள்ளாடையுடன் ஆடும் வீடியோ?- உண்மை அறிவோம்!

‘’பாஜக செய்தித்தொடர்பாளர் உள்ளாடையுடன் ஆடும் வீடியோ,’’ என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் தகவலின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். அதன் விவரம் இங்கே செய்தியாக தொகுத்து தரப்பட்டுள்ளது. தகவலின் விவரம்: Facebook Link  Archived Post Link Archived Video Link  Madhu Soodhanan என்பவர் அக்டோபர் 8, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், குடிபோதையில் உள்ளாடையுடன் ஆண் ஒருவர் ஆபாச நடனமாடுகிறார். அவருடன் பெண் ஒருவரும் கம்பெனி கொடுக்கிறார். இதில் இருப்பவர் பாஜக […]

Continue Reading

ஜெருசலேம் மிதக்கும் பாறை; பிரமிப்பு தரும் ஃபேஸ்புக் படம் உண்மையா?

ஜெருசலேமில் தரை தொடாத மிதக்கும் பாறை ஒன்று உள்ளதாக சமூக ஊடகங்களில் ஒரு புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link வேறு ஒரு சமூக ஊடக பதிவில் இருந்து ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்பட்டது போன்ற படத்தை பகிர்ந்துள்ளனர். அதில், பாறை காற்றில் மிதந்தபடி உள்ளது. படத்தின் மேல், “தரை தொடாத பாறை. இடம்: ஜெருசலேம்” என்று இருந்தது.  இந்த படத்தை Vijayarani Viju என்பவர் தன்னுடைய […]

Continue Reading

ஆர்எஸ்எஸ் ஆதரவாகப் பேசினாரா திருமாவளவன்?

‘’திருமாவளவன் ஆர்எஸ்எஸ் ஆதரவாகப் பேசும் காட்சி,’’என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாகப் பகிரப்படும் ஒரு வீடியோவின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link  உலக பிராமணர் ஒற்றுமை எனும் ஃபேஸ்புக் ஐடி மே 26, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதில், திருமாவளவன் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது. வெளிச்சம் டிவியின் அதிகாரப்பூர்வ லோகோவும் அதில் உள்ளது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் எவ்விதம் செயல்படுகிறார்கள் என்பது […]

Continue Reading