இனி கைலாஷ் யாத்திரை செல்ல சீனாவின் அனுமதி தேவையில்லை?- ஃபேஸ்புக்கில் பரவும் உளறல்

இனி கைலாஷ் யாத்திரை செல்ல சீனாவின் அனுமதி தேவையில்லை என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கைலாஷ் மானசரோவர் புகைப்படத்துடன் கூடிய பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “இனி கைலாஷ் யாத்திரை செல்ல சீன அனுமதி தேவையில்லை… டெல்லியில் இருந்து கைலாஷ் மானஸ்ரோவர் இனி 750 கிலோமீட்டர் மட்டுமே. இந்துக்களின் கனவுத்திட்டத்தை நனவாக்கியது இந்திய இராணுவம். ஹெலிகாப்டரில் பாட்டன் டேங்கிகளையும், பீரங்கிகளையும் […]

Continue Reading

கைக்குழந்தை உடன் ரயில் பெட்டிகள் இடையே பயணிக்கும் பெண்– வீடியோ உண்மையா?

‘’மோடியின் செயல்பாடுகளால் ரயில் பெட்டிகள் இணைப்பு கம்பிகள் மீது கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் அமர்ந்து செல்கிறார்,’’ என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ரயில் பெட்டிகள் இணைப்புப் பகுதி மீது கைக்குழந்தையுடன் அமர்ந்து பயணிக்கும் பெண்மணியின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியாவின் செயல்பாடுகள் உலகத்தையே திரும்பப் பார்க்க வைத்துள்ளது. மோடியின் செயல்பாடுகளை உலகமே பாராட்டுகிறது […]

Continue Reading

காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றபோது எடுத்த புகைப்படம் இதுவா?

‘’காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றபோது எடுத்த புகைப்படம்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த பதிவில், சில புத்தக ஆதாரங்களை மேற்கோள் காட்டி, காந்தி படுகொலை பற்றி நீண்ட கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அத்துடன், காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது எடுத்த புகைப்படம் என்று கூறி ஒரு புகைப்படமும் இணைக்கப்பட்டுள்ளது.  இதனை பகிர்ந்துள்ள நபர், பல ஆண்டுகளாகவே, இதனை […]

Continue Reading

கொரோனா ஊரடங்கு; சாலையில் நடந்து சென்றதால் காயமடைந்தவரா இந்த பெண்?

ஊரடங்கு காரணமாக சாலையில் நடந்து சென்றதால் பாதங்கள் கிழிந்ததாக ஒரு மூதாட்டியின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கிழிந்த தன்னுடைய பாதங்களைக் காட்டும் மூதாட்டியின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “ஆட்சியாளர்களே கொஞ்சமாவது இரக்கம் வரவில்லையா…. நடந்து நடந்து கால்கள் பிய்ந்தது தான் மிச்சம். . வீடு வரவில்லை…” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Abdul Rahman என்பவர் மே 14ம் தேதி பகிர்ந்துள்ளார். […]

Continue Reading

லண்டன் பேருந்தில் இஸ்லாமிய வாசகங்களை அச்சிட இங்கிலாந்து அரசு உத்தரவிட்டதா?

‘’லண்டனில் ஓடும் அனைத்து பேருந்துகளிலும் இஸ்லாமிய வாசகங்கள் பரப்பப்பட வேண்டும்,’’ என்று இங்கிலாந்து அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து பஸ்களில் இஸ்லாமிய வாசகங்கள் இடம் பெற்றுள்ளன என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link லண்டன் பஸ்களில் இஸ்லாமிய வாசகங்கள் இடம் பெற்றிருப்பது போன்ற படங்கள் பகிரப்பட்டுள்ளன. அதில் ஒன்றில், ஒரு படத்தின் மேல் பகுதியில் ஆங்கிலத்தில் டைப் செய்யப்பட்ட இருந்தது. […]

Continue Reading

திமுக.,வின் ‘ஒன்றிணைவோம் வா’ சிறந்த திட்டம் என்று கூறினாரா மோடி?

‘’தி.மு.க-வின் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டம் சிறந்த முன் உதாரணமாக உள்ளது,’’ என்று பிரதமர் மோடி கூறியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Facebook Link 2 Archived Link வாசகர் ஒருவர் மேலே உள்ள பதிவின் படத்தை நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு (+91 9049044263) அனுப்பி, ‘இது உண்மையா?’, என்று கேட்டிருந்தார். அதன் அடிப்படையில் […]

Continue Reading

திமுக நிர்வாகி பணியில் இருக்கும் பெண் டாக்டரை தாக்கியதாக பரவும் வீடியோ!

‘’திமுக நிர்வாகி பணியில் இருக்கும் பெண் டாக்டரை தாக்கிய வீடியோ,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் தகவலின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். அதில் கிடைத்த விவரம் கீழே தொகுத்து தரப்பட்டுள்ளது.  தகவலின் விவரம்:  இதனை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் மூலமாக, நமக்கு அனுப்பி வைத்து, உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார்.  இதன்பேரில், ஃபேஸ்புக் உள்ளிட்ட மற்ற சமூக வலைதளங்களிலும் இந்த வீடியோ பகிரப்பட்டதை கண்டோம்.  Facebook Claim Link Archived Link  உண்மை […]

Continue Reading

விஜய் சேதுபதி மனைவி பற்றி பகிரப்படும் அநாகரீக பதிவு!

‘’எனது மனைவி உடைமாற்றும் காட்சிகளை வெளியிடத் தயார்,’’ என்று விஜய் சேதுபதி கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நடிகர் விஜய் சேதுபதி படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டுடன் நடிகர் மணிவண்ணன் புகைப்படத்துடன் கூடிய புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. நியூஸ் கார்டில், “என் மனைவி உடைமாற்றும் காட்சிகளை வெளியிடவும் தயார்! – இந்து கடவுள் குறித்து […]

Continue Reading

மும்பையில் இருந்து மேற்கு வங்கம் சென்ற தொழிலாளர்கள் ரயில் வீடியோ உண்மையா?

மும்பையிலிருந்து மேற்கு வங்கம் சென்ற ரயில் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ரயில் இன்ஜின் முழுக்க பயணிகள் தொங்கியபடி செல்லும் ரயில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளனர். 2.15 நிமிடம் இந்த வீடியோ செல்கிறது. வீடியோவில், “மும்பையில் இருந்து மேற்கு வங்கம் சென்ற ரயில், 10-5-2020” என குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில் டிஜிட்டல் […]

Continue Reading

இத்தாலியில் அனைத்து மத மக்களும் இணைந்து தொழுகை நடத்தினார்களா?

‘’இத்தாலியில் கொரோனா வேகமாக பரவி வருவதால், மக்கள் அனைவரும் அல்லாஹ்விடம் மண்டியிட்டு பிரார்த்தனை செய்தார்கள்,’’ என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 Mohamed Nithas என்பவர் மே 9, 2020 அன்று ஷேர் செய்திருந்த ஒரு வீடியோவை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம். உண்மையில் அந்த வீடியோவை, மார்ச் மாதம் 27ம் தேதி தஃவத் தப்லீக் […]

Continue Reading

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மீட்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டதா?

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் மீட்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டுவிட்டது என்று சமூக ஊடகங்களில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இந்தியக் கொடியின் நிறம் அடிக்கப்படுவது போன்ற வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கூகுள் மேப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு எல்லை கோட்டை (loc) எடுத்து விட்டது. இனி ஒரே #காஷ்மீர் […]

Continue Reading

ஏர் இந்தியா விமானத்தை திருப்பி அனுப்பியதா கத்தார் அரசு?

‘’ஏர் இந்தியா விமானத்தை திருப்பி அனுப்பிய கத்தார் அரசு, அசிங்கப்பட்ட மோடி,’’ எனும் தலைப்பில் ஷேர் செய்யப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link  Facebook Claim Link Archived Link இதேபோல, மேலும் சில ஃபேஸ்புக் பதிவுகளும் பகிரப்படுகின்றன.  Facebook Claim Link Archived Link இதே செய்தியை நமது வாசகர் ஒருவரும் வாட்ஸ்ஆப் மூலமாக அனுப்பி விளக்கம் கேட்டிருந்தார்.  […]

Continue Reading

குடியரசுத் தலைவர் விருது 2020 விண்ணப்ப பட்டியலில் தமிழ் மொழி புறக்கணிப்பா?

‘’குடியரசுத் தலைவர் விருது 2020 விண்ணப்ப பட்டியலில் தமிழ் மொழி புறக்கணிப்பு,’’ என பகிரப்படும் வைரல் செய்தியின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்:  இதனை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் மூலமாக அனுப்பி உண்மை விவரம் கண்டறியும்படி கேட்டிருந்தார். இதே தகவலை ஃபேஸ்புக்கில் யாரேனும் பகிர்ந்துள்ளனரா என விவரம் தேடினோம். அப்போது பலரும் இதனை பகிர்வதைக் கண்டோம்.  Facebook Claim Link 1 Archived Link Facebook Claim Link 2 Archived Link […]

Continue Reading

பேருந்தில் விஜயகாந்த் படம் வைத்ததா மலேசிய அரசு?- ஃபேஸ்புக் வதந்தி

விஜயகாந்தின் மனிதநேயத்தை பாராட்டி மலேசிய அரசு, பஸ்ஸின் பின்புறம் அவரது புகைப்படத்தை வைத்துள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சமூக ஊடகத்தில் ஒருவர் வெளியிட்ட புகைப்பட பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “கேப்டன் மனிதநேயத்தை பாராட்டி மலேசிய அரசு அவரை பாராட்டும் விதமாக அவர்கள் நாட்டு பேருந்தில் படம் வரைந்து, அந்த நாட்டு மக்கள் அவரை பற்றித் […]

Continue Reading

அமித்ஷாவுக்கு புற்றுநோயா? ஃபேஸ்புக் வதந்தி

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எலும்பு புற்றுநோய் என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. மதம் சார்ந்த கருத்துக்களுடன் “Chondrosarcoma என்பது நாய்களுக்கு வரும் எலும்பு புற்றுநோய். அரிதாகத்தான் மனிதர்களுக்கு வருமாம். அதுவும் இடுப்பு எலும்பில் வந்தால் கடுமையான வேதனை இருக்குமாம். அமெரிக்கா-டெக்சாசில் உள்ள எம்.டி ஆண்டர்சன் கேன்சர் மருத்துவமனையில் அப்பாயின்ட்மென்ட் கிடைத்தும் […]

Continue Reading

நடிகை கவுசல்யா மற்றும் நடிகர் முத்துக்காளை புகைப்படத்தை இணைத்து பகிரப்படும் செய்தியால் குழப்பம்!

‘’அழகை பார்க்காமல் திருமணம் செய்த நடிகர்கள்,’’ எனும் தலைப்பில் நடிகை கவுசல்யா மற்றும் நடிகர் முத்துக்காளையின் புகைப்படத்தை வைத்து பகிரப்படும் ஒரு வைரல் செய்தியை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், இணையதளம் ஒன்றில் வெளியான செய்தியின் லிங்கை இணைத்துள்ளனர். அந்த செய்தியின் தலைப்பில், ‘’பணம்தான் முக்கியம் எ ன்று அழகைக் கூட பார்க்காமல் அசிங்கமான நடிகர்களை திருமணம் செய்த நடிகைகள்,’’ எனக் […]

Continue Reading

பீகாரில் மூன்று பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சாதி காரணமா?

பீகாரில் சாதிய வன்கொடுமை காரணமாக மூன்று பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வரைலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பெண்களுக்கு மொட்டை போடுவது, தட்டில் எதையோ அருந்தச் செய்வது உள்ளிட்ட புகைப்படங்களை கொலாஜாக பகிர்ந்துள்ளனர். அவற்றின் மேல் மற்றும் கீழ் பகுதியில் போட்டோஷாப் முறையில் டைப் செய்துள்ளனர். அதில், “சாதிய வன்கொடுமை. பீகாரில் மூன்று பெண்களுக்கு மொட்டையடித்து மனித […]

Continue Reading

ராமதாஸ் பற்றி சன் நியூஸ் வெளியிட்ட இந்த நியூஸ் கார்டு உண்மையா?

‘’ராமதாஸ் பற்றி சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டு,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு ஒரு வரும் தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  இந்தசெய்தியை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் மூலமாக நமக்கு அனுப்பி வைத்திருந்தார். இது போலியான தகவல், சிலர் வேண்டுமென்றே இதனை பகிர்ந்து வருவதாக, அவர் குற்றம்சாட்டியிருந்தார். இதன்பேரில், இந்த நியூஸ் கார்டை வேறு யாரேனும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளனரா என […]

Continue Reading

பாபா ராம்தேவ் கொரோனா நிவாரணம் கொடுத்ததால் ரூ.2212 கோடி கடன் தள்ளுபடியா? -உண்மை அறிவோம்

பாபா ராம்தேவ் கொரோனா நிவாரண நிதியாக ரூ.25 கோடி அளித்ததால், அவருடைய கடன் ரூ.2212 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பாபா ராம்தேவ், மோடியுடன் ராம்தேவ் இருக்கும் படங்களை வைத்து புகைப்பட பதிவு ஒன்றைத் தயாரித்துள்ளனர். அதில், நேற்று: பாபா ராம்தேவ் கொரோனா நிவாரணமாக 25 கோடி நிதியுதவி. இன்று: பாபா […]

Continue Reading

மசூதிக்குள் சாராய ஊரல் போட்ட இஸ்லாமியர்கள்?- ஃபேஸ்புக் விஷமம்!

கேரளாவில் மசூதிக்குள் கள்ளச்சாராய ஊரல் போட்ட இஸ்லாமியர்கள் கைது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரஷர் குக்கர், பிளாஸ்டிக் டப்பா, அடுப்பு ஆகியவற்றுடன் போலீசார் நிற்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கேரளா காஸர்கோட்டில் மசூதிக்குள் கள்ள சாராயம் ஊரல் போட்ட டப்லீசை வெளுத்து வாங்கிய கேரள காக்கிகள்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவைத் தமிழக இந்துக்கள் […]

Continue Reading

இந்துவை திட்டிய இந்த முஸ்லீம் நபரை சவூதி அரசு கைது செய்ததா?

‘’இந்து மதத்தவரை திட்டியதற்காக முஸ்லீம் நபர் சவுதியில் கைது,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு வைரல் புகைப்படத்தை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த பதிவில் சவூதி குடிமகன் போல உடை அணிந்த நபரை போலீசார் வலுக்கட்டாயமாக மடக்கி பிடித்து காரில் ஏற்றுவது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’ஒரு ஹிந்துவை திட்டிய தன் குடிமகனை கைது செய்த சவூதி அரேபிய […]

Continue Reading

இந்த புகைப்படம் எங்கே எடுக்கப்பட்டது தெரியுமா?

தமிழ்நாட்டில் மது பாட்டில் வாங்கிச் செல்லும் பெரியார் பேத்திகள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் உண்மையில் தமிழகத்தில்தான் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பெண்மணி ஒருவர் கையில் மது பாட்டிலுடன் நடந்து செல்லும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத்தகவலில் “கர்நாடகாவை அடுத்து தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையை நோக்கி. பெரியார் பேத்திகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Sathya Bala என்பவர் 2020 […]

Continue Reading

கர்நாடகாவில் மது வாங்கச் சென்றவர்களுக்கு கொரோனா வைரஸ் என பரவும் வதந்தி…

‘’கர்நாடகாவில் மது வாங்கச் சென்றவர்களுக்கு 367 பேருக்கு கொரோனா தொற்று,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link  இதில், நியூஸ் 7 தமிழ் ஊடகம் பெயரில் வெளியான நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அந்த கார்டில், ‘’கர்நாடக மாநிலத்தில் மது கடையில் இருக்கும் விற்பனையாளர் மூலம் அங்கு வந்து மது வாங்கி சென்ற 367 பேருக்கு கொரோனா […]

Continue Reading

அயோத்தியில் பசி காரணமாக சாது மரணம் அடைந்தாரா?- ஃபேஸ்புக் வதந்தி

அயோத்தியில் பசி காரணமாக வயதான சாமியார் ஒருவர் உயிரிழந்ததாக சமூக ஊடகங்களில் ஒரு படம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link வயதான பெரியவர் ஒருவர் இறந்து கிடக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அயோத்தியில் பசியால் மரணமடைந்த சாது. மத்தபடி அடிச்சி கொன்னா மட்டும்தான் குற்றம். பசில செத்தா பிரச்சனை இல்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Anas Bin Asraf என்பவர் 2020 […]

Continue Reading

கேரள அரசு கொடுத்த உணவைத் தூக்கி எறிந்த வட இந்திய தொழிலாளர்கள்… ஃபேஸ்புக் வீடியோ உண்மையா?

சொந்த ஊர் திரும்பும் வட இந்தியர்கள் ரயில் ஏறிய நிலையில் கேரள அரசு கொடுத்த உணவைத் தூக்கி வீசியதாக ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ஒரு நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை பகிர்ந்துள்ளனர். அதில், ரயில் நிலையத்தை ரயில் கடக்கிறது. நடைமேடையில் உணவு பொட்டலங்கள் சிதறிக் கிடக்கின்றன. ரயிலில் உள்ளவர்கள் போராட்டக் குரல் […]

Continue Reading

உ.பி வருமான வரித்துறை துணை கமிஷனர் வீட்டில் புதிய ரூபாய் நோட்டுகள் சிக்கியதா?

உ.பி-யில் வருமான வரித்துறை துணை கமிஷனர் வீட்டில் நடந்த சோதனையில் சிக்கிய புதிய ரூபாய் நோட்டுக்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link புதிய இரண்டாயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுக் கட்டுக்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உபி வருமான வரித்துறை துணை கமிஷ்னர் வீட்டில் நடந்த சோதனையில் சிக்கிய புதிய ரூபாய் நோட்டுகள்..!! பாஜக […]

Continue Reading

இந்திய தேசிய கீதம் பாடிய அமெரிக்கர்கள்? வைரல் தகவலின் முழு விவரம்!

கொரோனாவைக் குணப்படுத்த ஹைட்ராக்ஸிகுரோரோகுயின் மாத்திரை வழங்கிய இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்க அமெரிக்க மாணவர்கள் ஒன்றிணைந்து இந்திய தேசிய கீதத்தை பாடியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 வெளிநாட்டினர் இந்திய தேசிய கீதம் பாடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில், ஹைட்ரோக்சி குளோரோகுயின் மாத்திரை வழங்கிய இந்தியாவுக்கு நன்றி கூறும் வகையில் மாணவர்கள் பாடியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் […]

Continue Reading

தணிகாசலம் பரிந்துரைத்த சித்த மருந்து எதையும் தமிழக அரசு அங்கீகரிக்கவில்லை!

‘’தணிகாசலம் பரிந்துரைத்த சித்த மருந்தை தமிழக அரசு அங்கீகரித்தது,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில் சினி கஃபே என்ற இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்கை பகிர்ந்துள்ளனர். இதனை மேலும் பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.  Cinecafe Link  Archived Link  இந்த செய்தியின் இடையே யூடியுப் வீடியோ […]

Continue Reading

இவர்கள் ஒன்றும் மாஸ்டர் பட டிக்கெட் வாங்க வரிசையில் நிற்கவில்லை!

‘’மாஸ்டர் பட டிக்கெட் வாங்க வரிசையில் நிற்கும் பெண்கள்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் புகைப்பட பதிவு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link பெண்கள் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றோடு வரிசையில் நிற்கும் புகைப்படத்தை இணைத்து, அதன் மேலே, ‘’விரைவில் வரவுள்ள மாஸ்டர் படத்தின் டிக்கெட் முன்பதிவு செய்ய பெண்கள் கூட்டம் அலைமோதியது,’’ என எழுதியுள்ளனர். இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட […]

Continue Reading

ஃபேஸ்புக் வைரல்: குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடினாரா மதுவந்தி?

ஒய்.ஜி மககேந்திரனின் மகள் மதுவந்தி அருண் குத்துப்பாட்டுக்கு நடனமாடியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 பிரபல நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் குத்துப் பாட்டுக்கு நடனமாடும் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. வெறும் 23 விநாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோ எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்று எந்த ஒரு தகவலும் இல்லை. நிலைத் தகவலில்,” 8000 […]

Continue Reading

‘நாளைய முதல்வர்’ சர்ச்சையில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்- முழு விவரம் இதோ!

கொரோனா நிவாரண உதவிப் பொருட்களில் நாளைய முதல்வர் என்று தன்னுடைய பெயருக்கு முன்பு விஜயபாஸ்கர் போட்டுக்கொண்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அரிசி மூட்டையில் விஜயபாஸ்கர் படத்துக்கு கீழ், “நாளைய முதல்வர், டாக்டர் சி.விஜயபாஸ்கர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்” என்று அச்சிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “என்னாது நாளைய முதல்வரா?.. அப்போ எங்க டாக்டரு எடப்பாடி?” என்று […]

Continue Reading

ராகவேந்திரா மண்டபத்தை தர முடியாது என்று லதா ரஜினிகாந்த் கூறவில்லை!

கொரோனா சிகிச்சைக்கு மண்டபங்கள் தேவைப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ள நிலையில், மூன்று மாதங்களுக்கு அங்கு பராமரிப்பு பணி நடைபெற உள்ளது என்று லதா ரஜினிகாந்த் அறிவித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: புதிய தலைமுறை நியூஸ் டிக்கரோடு, தினத்தந்தி முதல் பக்கத்தை இணைத்து புகைப்பட பதிவு தயாரிக்கப்பட்டுள்ளது. தினத்தந்தி செய்தியில், “கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த 750 திருமண மண்டபங்களில் முகாம்கள், பள்ளி, கல்லூரிகளில் 50 […]

Continue Reading

சூரத்தில் இருந்து நடந்து சென்ற குடும்பம் தற்கொலை செய்துகொண்டதா?- ஃபேஸ்புக் வதந்தி

கொரோனா ஊரடங்கு காரணமாக சூரத்திலிருந்து நடந்து சென்ற குடும்பம் ஒன்று பசி கொடுமை தாங்க முடியாமல் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஏப்ரல் 6, 2020 அன்று இரா.செல்வ குமார் என்பவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருந்த பதிவை சரவணன் என்பவர் 2020 மே 2ம் தேதி ஷேர் செய்துள்ளார். குடும்பமே தற்கொலை செய்துகொண்ட […]

Continue Reading

இந்த குழந்தை கொரோனா வைரஸ் பாதித்து உயிரிழக்கவில்லை!

‘’கொரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்த குழந்தையை பிளாஸ்டிக் மூட்டையில் கட்டித் தழுவும் தந்தை,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு புகைப்படத்தை சமூக ஊடகங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதே தகவலை மற்ற முன்னணி ஊடகங்கள் உள்பட பலரும் பகிர்ந்து வருகின்றனர்.  Facebook Claim 1 Archived Link Facebook Claim 2 Archived Link உண்மை அறிவோம்: மேற்கண்ட புகைப்படத்தைப் பார்த்தால், […]

Continue Reading

திருப்பத்தூர் டவுனில் நள்ளிரவில் தொழுகை நடத்தும் இஸ்லாமியர்கள்! – ஃபேஸ்புக் வதந்தி

திருப்பத்தூரில் நள்ளிரவில் ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் சாலைகளில் ஒன்று கூடி தொழுகை நடத்துவதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இஸ்லாமியர்கள் தொழுகை செய்யும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் டவுனில், ஜூம்மா மசூதி தெருவில் கடந்த இரண்டு நாட்களாக, நள்ளிரவு 1 மணிக்கு நடு ரோட்டிலேயே சுமார் 700நபர்கள் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையினர் உயரதிகாரிகளின் […]

Continue Reading

ஜாய் ஆலூக்காஸ் அதிபர் துபாயில் தற்கொலை செய்துகொண்டாரா?- ஃபேஸ்புக் வதந்தி

ஜாய் ஆலூக்காஸ் அதிபர் தற்கொலை செய்து கொண்டதாக பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஜாய் ஆலூக்காஸ் அதிபர் அரக்கல் துபாயில் தற்கொலை செய்துகொண்டார் என்று செய்தித்தாள் ஒன்றில் வந்த செய்தி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. Sadiq Basha என்பவர் 2020 ஏப்ரல் 30ம் தேதி இந்த செய்தியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். Facebook Link Archived Link அதேபோல், ஜாய் […]

Continue Reading

வெளிநாட்டில் மனம் திருந்திய மக்கள் மதுபாட்டில்களை அழித்தார்களா?

வெளிநாட்டில் மனம் திருந்திய மக்கள் மது பாட்டில்களை அழித்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 38 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ பகிரப்பட்டு வருகிறது. அதில், மிகப்பெரிய இடத்தில் மது பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டு அவை அழிக்கப்படுகின்றன. நிலைத் தகவலில், “மனம் திருந்திய வெளிநாட்டுவாசிகள் விலை உயர்ந்த பல கோடி மதிப்புள்ள மதுபாட்டில்களை சர்வ சாதாரணமாக […]

Continue Reading

சமூக இடைவெளியை பின்பற்றும் மிசோரம் மார்க்கெட்: புகைப்படம் உண்மையா?

மிசோரம் மாநிலத்தில் சமூக இடைவெளி சிறப்பாக கடைப்பிடிக்கப்படுகிறது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அழகாக இடைவெளி விட்டு காய்கறி உள்ளிட்ட பொருட்களை சாலையில் விற்க ஏற்பாடு செய்யப்பட்ட படங்களை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “மிசோரம் என்ற பகுதியும் நம்ம நாட்லதான் இருக்கு. எவ்வளவு அழகாக சமூக இடைவெளியை பின்பற்றி அனைவருக்கும் முன் உதாரணமாக இருக்கிறார்கள் இந்த மக்கள். பார்க்கவே […]

Continue Reading

ஜப்பானிய மருத்துவ பேராசிரியர் தாசுகு ஹொன்ஜோ கோவிட் 19 பற்றி எதுவும் கூறினாரா?

‘’ஜப்பானிய மருத்துவ பேராசிரியர் தாசுகு ஹொன்ஜோ கோவிட் 19 என்பது மனிதன் உருவாக்கிய ஒன்று எனக் கூறியுள்ளார்,’’ என பகிரப்படும் தகவல் ஒன்றைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த தகவலை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்:  மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள தகவல் உண்மை கிடையாது. இந்த தகவல் பல்வேறு மொழிகளிலும் உலக […]

Continue Reading

இஸ்லாமியருக்கு அடைக்கலம் கொடுத்த இந்து பெண்ணை ஆர்எஸ்எஸ் தாக்கியதாக பரவும் வதந்தி!

இஸ்லாமிய குடும்பத்துக்கு அடைக்கலம் கொடுத்த இந்து பெண்ணை ஆர்.எஸ்.எஸ் காவி வெறியர்கள் தாக்கியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பெண்மணி ஒருவர் உணவு அருந்துகிறார், அவர் அருகில் மற்றொரு பெண்மணி நிற்கும் புகைப்படத்தையும், நிற்கும் பெண்மணியைப் போல உள்ளவர் முகத்தில் ரத்தக் காயம் உள்ள படத்தையும் பகிர்ந்துள்ளனர். அந்த படத்தின் மீது, “முஸ்லிம் குடும்பத்துக்கு அடைக்கலம் கொடுத்த இந்து […]

Continue Reading

கோதுமை மாவு பாக்கெட்டில் பணம் வைத்துக் கொடுத்தாரா அமீர்கான்?

கோதுமை மாவு பாக்கெட்டில் பணம் வைத்து இந்தி நடிகர் அமீர் கான் வழங்கியதாக பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நடிகர் அமீர் கான், மாவு பாக்கெட்டில் பணம் இருக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஒவ்வொரு மாவு பாக்கெட்டுக்குள்ளும் 15000 ரூபாய் ஏழைகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி. டில்லியில் ஏழைகள் வாழ்கிற பகுதிக்கு -23/04/2020- இரவில் ஒரு லாரி வந்தது. […]

Continue Reading

கேரளாவில் பூஜை செய்த பெண்ணை தாக்கிய கிறிஸ்தவ மிஷனரிகள்? உண்மை இதோ!

கேரளாவில் பரசுராம ஜெயந்தியைக் கொண்டாடிய தலித் பழங்குடியின பெண்ணை கிறிஸ்தவ மிஷனரிகள் தாக்கியதாக படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மூதாட்டி ஒருவரின் முகத்தில் ரத்தம் வடியும் புகைப்படம், கிருஷ்ணர் சாமி சிலை தரையில் உடைத்து வீசப்பட்டிருக்கும் படங்களைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், கேரளா, தலித் பழங்குடியின மூதாட்டி பரசுராம ஜெயந்தியை முன்னிட்டு இன்று பூஜை செய்த காரணத்தால் […]

Continue Reading

அர்னாப் கோஸ்வாமி பேண்ட்டில் சிறுநீர் கழித்ததாகப் பரவும் வதந்தி!

‘’அர்னாப் கோஸ்வாமி பேண்ட்டில் சிறுநீர் கழித்துவிட்டார்,’’ என்று கூறி பகிரப்பட்டு வரும் ஒரு புகைப்படத்தைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link  Archived Link இதே புகைப்படத்தை மேலும் பலர் பகிர்ந்துள்ளதைக் காண முடிகிறது.  Facebook Claim Link 1 Archived Link Facebook Claim Link 2 Archived Link Facebook Claim Link 3 Archived Link இது பார்க்க விளையாட்டான பதிவாக […]

Continue Reading

ஊரடங்கு காலத்தில் கிண்டி கத்திப்பாரா பாலம்: தவறான புகைப்படம்…

‘’ஊரடங்கு காலத்தில் கிண்டி கத்திப்பாரா பாலம்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படம் பார்க்க வேடிக்கையாக இருந்தாலும், ஊரடங்கு காலத்தில் வீட்டில் முடங்கியுள்ள பொதுமக்கள் சமூக ஊடகங்களையே அதிகம் நம்பியுள்ளனர். அவற்றில் பகிரப்படும் தகவல்கள் எதுவாக இருந்தாலும், அவர்களை குழப்புவதாக இருக்கக்கூடாது என்ற நோக்கில், இதனை நாம் […]

Continue Reading

பெரிய மரமாக வளர்ந்திருக்கும் துளசி– ஃபேஸ்புக் வைரல் படம் உண்மையா?

துளசி மரம் என்று சமூக ஊடகங்களில் ஒரு படம் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link துளசி விதைகள் நிறைந்த மரம் ஒன்றின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “துளசி செடி தான் பார்த்திருக்கிறோம். மரத்தை இப்போதுதான் பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை U Murugesan என்பவர் 2019 ஜூலை 2ம் தேதி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 2020 ஏப்ரல் 16ம் தேதி வரை […]

Continue Reading

அமெரிக்காவில் குர்ஆன் ஓதப்படும் வீடியோ- எப்போது எடுத்தது தெரியுமா?

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நிலையில் தற்போது அதிபர் டிரம்ப் முன்னிலையில் குர்ஆன் ஓதப்படுவது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருக்கிறார். நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் மையப்பகுதியில் கிறிஸ்தவ மத குருக்கள் போல சிலர் அமர்ந்திருக்கின்றனர். குர்ஆன் ஓதப்படுகிறது. 57 விநாடிகளுக்குப் பிறகு […]

Continue Reading

செவிலியரை இஸ்லாமியர் காலில் விழ வைத்த ஆந்திர எம்.எல்.ஏ?

ஆந்திராவில் டெல்லியில் நடந்த இஸ்லாமிய மாநாட்டுக்கு சென்று வந்தவர் காலில் செவிலியர் ஒருவரை எம்.எல்.ஏ விழ வைத்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இஸ்லாமியர் ஒருவர் காலை செவிலியர் ஒருவர் தொடுவது போன்ற படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்ட மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் செவிலியர் இவர். இவரை கர்னூல் தொகுதி எம்எல்ஏ மிரட்டி […]

Continue Reading

கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த புனே டாக்டர் மேகா: வைரல் வதந்தி…

‘’கரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்த புனேவைச் சேர்ந்த பெண் டாக்டர் மேகா,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதனை உண்மை என நம்பி பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்:  மேற்குறிப்பிட்ட புகைப்படத்தில் இருப்பவர் உண்மையில் யார் என்று அறிந்துகொள்ள முதலில் கூகுளில் பதிவேற்றி தகவல் தேடினோம். அப்போது, இந்த புகைப்படத்தை வைத்து […]

Continue Reading

மாலத்தீவு முன்னாள் அதிபர் மடியில் சோனியா அமர்ந்திருக்கும் படம் உண்மையா!

சோனியா காந்தி மாலத்தீவு முன்னாள் அதிபர் மடியில் அமர்ந்திருப்பது போன்று போட்டோஷாப் செய்யப்பட்ட அநாகரீகமாக  படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். வதந்தியின் விவரம்: Facebook Link Archived Link மாலத்திவு முன்னாள் அதிபர் மாமூன் மடியில் சோனியா காந்தி நெருக்கமாக அமர்ந்திருப்பது போன்று எடிட் செய்யப்பட்ட படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “ஒவ்வொன்றாக அம்பலம் ஏறுகிறது அன்டானியோ மைனோவின் விஷமங்கள்.. கொரானா லாக்டௌன் ‘நல்லது’…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. […]

Continue Reading

ஊட்டி – கோவை சாலையில் திரியும் மயில்கள்; இந்த புகைப்படம் உண்மையா?

ஊட்டி – கோவை சாலையை மயில்கள் ஆக்கிரமித்துள்ளதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஊட்டி – கோவை சாலை அதன் உண்மையான உரிமையாளரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்று சாலை முழுக்க மயில்கள் நிற்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. இதை Vanakkam Chennai என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 ஏப்ரல் 6ம் தேதி பகிர்ந்துள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். உண்மை […]

Continue Reading