“உயர் சாதியினருக்கு ரூ.20 லட்சம் வந்தாலும் அவர்கள் ஏழைகள்தான்” – தமிழிசை பெயரில் பரவும் நியூஸ் கார்டு

உயர் சாதியினருக்கு இருக்கும் பிரச்னைக்கு, அவர்களுக்கு ரூ.20 லட்சம் வருமானம் வந்தாலும் கூட அவர்கள் ஏழைகள்தான் என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Link I Archived Link தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் தமிழிசை கூறியதாக ஒரு தகவல் மற்றும் தமிழிசை படம் உள்ளது. தகவலில், “உயர் ஜாதியினருக்கு […]

Continue Reading

கிரிக்கெட் தோல்வி குறித்து எச்.ராஜா கருத்து கூறியதாகப் பரவும் ட்வீட்!

உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில், இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது தொடர்பாக எச்.ராஜா ட்வீட் செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link எச்.ராஜா தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது போன்ற ஒரு பதிவின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், “போயும் போயும் கிறிஸ்தவ பாவாடைகள் கிட்ட தோத்திருக்கானுக,,, ச்சேய் கேவலம் நான் சாவ போறேன்” என்று உள்ளது. […]

Continue Reading

பாலியல் குற்றச்சாட்டில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டார்களா?

பாலியல் குற்றச்சாட்டில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டதாகக் கூறி, ஒரு வைரல் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: Facebook Link I Archived Link முஹம்மது ஃபாரூக் என்பவர் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி பகிர்ந்து வருகின்றனர். இதில், ஒரு நடுத்தர வயது ஆணின் மடியில், இளம்பெண் ஒருவர் அமர்ந்து கொஞ்சும் புகைப்படத்தை பகிர்ந்து, அடத் […]

Continue Reading

“பெண்ணின் மார்பகத்தில் முத்தமிட்ட போப் பிரான்சிஸ்!” – வைரல் போட்டோ உண்மையா?

பெண் ஒருவரின் மார்பின் மீது போப் பிரான்சிஸ் முத்தமிடுவது போன்ற படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பெண் ஒருவரின் மார்பின் மீது கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் பிரான்சிஸ் முத்தமிடுவது போன்ற படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “போப்பாண்டவர் பாவமன்னிப்பு கொடுக்கும் போது கிளிக்கியது. பெரிய பாவமன்னிப்பா இருக்குமோ..” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, 2019 ஜூன் […]

Continue Reading

படேல் சிலைக்கு பல கோடி ரூபாயில் ரெயின் கோட் அணிவிக்க மோடி அரசு திட்டமா?

‘’படேல் சிலைக்கு பல ஆயிரம் கோடி ரூபாயில் ரெயின் கோட் அணிவிக்க மோடி அரசு திட்டம்,’’ என்று கூறி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Lakshmi Velpandi என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை, ஜூலை 3, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், சர்தார் படேல் சிலைக்கு ரெயின் கோட்டது போல ஒரு நியூஸ்பேப்பர் துண்டு காட்டப்பட்டுள்ளது. அதன் […]

Continue Reading

“தமிழ்நாட்டுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்க சொன்ன மோடி!” –தந்தி டிவி நியூஸ் கார்டு உண்மையா?

“தமிழ்நாடு போன்ற முன்னேறிய மாநிலங்கள் நாட்டு நலனுக்காக நிதி ஒதுக்கீட்டைக் குறைத்துக்கொள்ளுதல் போன்ற சில தியாகங்கள் செய்யத் தயாராக இருக்க வேண்டும்” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம்… தகவலின் விவரம்:  Facebook Link I Archived Link 2019 ஜூலை 2ம் தேதியிட்ட தந்தி டிவி நியூஸ்கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், பிரதமர் மோடியின் படம் வைக்கப்பட்டுள்ளது. அதன் […]

Continue Reading

“மன்மோகன் சிங் வீடு தேடிச் சென்ற மோடி!” – சமூக ஊடகங்களில் பரவும் தகவல் உண்மையா?

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை, அவரது வீட்டுக்குச் சென்று பிரதமர் மோடி சந்தித்ததாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I News Link I Archived Link 2 “முன்னாள் பிரதமர் மன்மோகனை சந்திக்க வீடு தேடி வந்த பிரதமர் மோடி! எதற்குத் தெரியுமா?” என்று தலைப்பிட்டு patrikai.com என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், நிதி […]

Continue Reading

பா.ஜ.க-வில் இணைந்த தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா! – ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா, பா.ஜ.க-வில் இணைந்ததாக ஒரு பதிவு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பிரதமர் மோடியுடன் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா பா.ஜ.க-வில் இணைந்தார் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்தப் பதிவை Bullet Pandi RD என்பவர் 2019 ஜூன் 27ம் தேதி வெளியிட்டுள்ளார். இதை தற்போது பலரும் பகிர்ந்து […]

Continue Reading

“தலைப்புச் செய்தி போட தெரியாத ஊடகங்கள்!” – ஃபேஸ்புக் பதிவின் உண்மை

நடிகர் சங்கத் தேர்தல் செய்தியை முதல் பக்கத்திலும், நதி நீர் இணைப்புத் திட்டம் தொடர்பான செய்தியை உள்ளேயும் போட்டு தமிழக ஊடகங்கள் விவஸ்தையே இல்லாமல் செயல்படுகின்றன என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link தினத்தந்தியில் வெளியான இரண்டு செய்திகளின் படத்தை வைத்துள்ளனர். முதல் படத்தில், தினத்தந்தியின் முதல் பக்கத்தில் நடிகர் சங்க வாக்குப் பதிவு செய்தியை வைத்துள்ளனர். […]

Continue Reading

பிரான்மலையில் முருகன் கோயிலை இடித்து விட்டு மசூதி கட்டப்பட்டதா?

‘’1000 ஆண்டு பழமையான முருகன் கோயிலை இடித்து விட்டு மசூதி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். அதில் கிடைத்த விவரங்கள் இதோ உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Hindu Samayam என்ற ஃபேஸ்புக் ஐடி, மே 4, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதன் மேலே, ‘’ பிரான் மலையில் உள்ள 1000-ஆண்டு பழமையான முருகன் மற்றும் […]

Continue Reading

ரூ.5 ½ லட்சம் கோடியில் நதிநீர் இணைப்புத் திட்டம்… அடுத்த மாதம் மோடி தொடங்குகிறார் – பரபரப்பை கிளப்பிய ஃபேஸ்புக் பதிவு!

இந்தியாவில் உள்ள 60 நதிகளை இணைக்க ரூ.5.50 லட்சம் கோடியில் திட்டம் தயார் என்றும், அடுத்த மாதம் இதைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் என்றும் சமூக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1  இந்தியாவில் ரூ.5.50 லட்சம் கோடி செலவில் 60-நதிகளை இணைக்கும் திட்டத்தை பிரதமர் மோடி அடுத்த மாதம் (ஜூலை) 17ம் தேதி தொடங்கிவைக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த […]

Continue Reading

ஆமாயா, நாங்க பணக்காரய்ங்களுக்கு சாதகமாதான் தொழிலாளர் சட்டங்கள மாத்துறோம்: குட் ரிட்டர்ன்ஸ் செய்தியால் குழப்பம்

‘’ஆமாயா, நாங்க பணக்காரய்ங்களுக்கு சாதகமா தான் தொழிலாளர் சட்டங்கள மாத்துறோம்,’’ என்ற தலைப்பில் மோடி, அமித் ஷா புகைப்படத்தை முன்வைத்து குட் ரிட்டர்ன்ஸ் பகிர்ந்துள்ள ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்:குறிப்பிட்ட செய்தியை ஒன் இந்தியா இணையதளத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிர்ந்திருந்தனர். Facebook Link Archived Link இதே செய்தி, குட் ரிட்டர்ன்ஸ் இணையதளத்தின் ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிரப்பட்டுள்ளது. Facebook Link Archived Link இந்த செய்தியின் தலைப்பை […]

Continue Reading

1250 கோடி வீடுகள் கட்டித் தருவோம் என்று மோடி வாக்குறுதி அளித்தாரா?

‘’1250 கோடி வீடுகள் கட்டித் தருவோம்- மோடி ஜி வாக்குறுதி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link இந்த பதிவில், மோடியின் புகைப்படத்தையும், தமிழ் சினிமா நகைச்சுவை காட்சி ஒன்றையும் இணைத்து பகிர்ந்துள்ளனர். ஜூன் 12ம் தேதி வெளியிடப்பட்ட இந்த பதிவில்,1250 கோடி இந்தியர்களுக்கு வீடு கட்டித் தருவேன் என்று மோடி சொன்னதாகக் கூறியுள்ளனர். இதனை பலரும் உண்மை என […]

Continue Reading

“பா.ஜ.க.,வை தோல்வியடைய செய்ததால்தான் தமிழகத்தில் வறட்சி” – தமிழிசை பற்றி பரவும் வதந்தி

தமிழகத்தில் பா.ஜ.க-வை தோல்வியடைய செய்ததால்தான் தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டுள்ளது என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived Link தந்தி தொலைக்காட்சியின் நியூஸ் கார்டில் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாக ஒரு பதிவு பகிரப்பட்டுள்ளது. அதில், “பா.ஜ.க-வை தோல்வியடைய செய்த பாவத்தின் வினைப்பயனைதான் வறட்சியாக தமிழகம் அனுபவிக்கிறது – தமிழிசை சவுந்தரராஜன்” என்று உள்ளது. இந்த […]

Continue Reading

நர்மதா – ஷிப்ரா நதி இணைப்பு நிதின் கட்கரியின் முதல் சாதனையா?

நர்மதா – ஷிப்ரா நதிகள் குழாய்கள் மூலம் இணைக்கப்பட்டதாகவும், இது மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கிடைத்த முதல் வெற்றி என்றும், இதேபோல் கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் ஒரு ஃபேஸ்புக் பதிவு வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived Link குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. அந்த தண்ணீர் ஆற்றில் விடப்படுகிறது. எந்த இடம், எப்போது எடுக்கப்பட்டது என்று எந்த தகவலும் அந்த வீடியோவில் […]

Continue Reading

மோடி அரசுக்கு எதிராக கேள்வி கேட்டதால் பெண் பத்திரிகையாளர் தாக்கப்பட்டாரா?

மோடி அரசுக்கு எதிராக கேள்வி கேட்டதால், மும்பையில் பெண் பத்திரிகையாளர் தாக்கப்பட்டார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link முகம் முழுவதும் அடிவாங்கிய நிலையில் பெண் ஒருவரின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மோடி அரசின் தவறுகளை கேள்வி கேட்டதற்காக தாக்கப்பட்ட மும்பை ஊடகவியலாளர் நிகிதா ராவ். கடந்த 2 நாட்களில் காவி பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட 4-வது ஊடகவியலாளர்” என்று குறிப்பிட்டுள்ளனர். […]

Continue Reading

அரசு சட்டங்களை மீறி வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரி செயல்படுகிறதா? – சர்ச்சையைக் கிளப்பும் ஃபேஸ்புக் பதிவு!

வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரி மத்திய – மாநில அரசு விதிமுறைகளை மீறி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் எல்லாம் சட்டத்திற்கு அடங்காத அல்லது அடக்க முடியாத கொம்பன்களா என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்வோம். தகவலின் விவரம்: Archived link வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரிக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பொது இடத்துக்கு 12 சீட் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்று ஒரு செய்தி கிளிப் காட்டப்பட்டுள்ளது. அந்த செய்தி […]

Continue Reading

பா.ஜ.க-வினரை எங்கு பார்த்தாலும் அடிப்பேன்! – வேல்முருகன் கூறியதாக ஃபேஸ்புக்கில் பரவும் தகவல்

பா.ஜ.க-வினரை எங்கு பார்த்தாலும் அடிப்பேன் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: தேச விரோதிகளை களையெடுக்க போகும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களே, இவனே என்னா…. பண்ணலாம் ? Archived link டவர் நியூஸ் என்ற லோகோவுடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், “BJPயினரை எங்கு பார்த்தாலும் உதைப்போம் – வேல்முருகன்” […]

Continue Reading

செருப்பு அணிந்தபடி குருவாயூர் கோவிலுக்குச் சென்ற மோடி– ஃபேஸ்புக் பதிவால் சர்ச்சை

குருவாயூர் சென்ற பிரதமர் மோடி, செருப்புக் காலுடன் கிருஷ்ணன் கோவிலுக்குள் சென்றார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அல்பனுக்கு வாழ்வு வந்தால் குருவாயூர் கோவிலில் செருப்பு போட்டு நடப்பானாம் அவன் யார் ? Archived Link கேரள மாநிலம் குருவாயூர் கோவிலில் பிரதமர் நடந்து செல்லும் படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், பிரதமர் காலில் செருப்பு இருப்பதை சிவப்பு நிறத்தில் வட்டமிட்டு காட்டியுள்ளனர். […]

Continue Reading

மும்பை துறைமுகத்துக்கு ராஜேந்திர சோழன் பெயரைச் சூட்டிய மத்திய அரசு– நிஜமா?

மும்பை துறைமுகத்துக்கு ராஜேந்திர சோழன் பெயரை மத்திய அரசு சூட்டியுள்ளதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் குத்துவிளக்கேற்றுகிறார். அவர் அருகில் தேவேந்திர ஃபத்னாவீஸ் உள்ளிட்டவர்கள் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். பின்னணியில், ராஜேந்திர சோழன் 1 என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. அதன் அருகில், ராஜேந்திர சோழன் சிலை மற்றும் கப்பலின் புகைப்படம் பிரேம் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் […]

Continue Reading

தேவி லால் இந்தியில் பேசியதை கனிமொழி தமிழில் மொழி பெயர்த்தாரா?

‘’கனிமொழிக்கு இந்தி தெரியும்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். அதன் முடிவுகள் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது. தகவலின் விவரம்: Archived Link இதில், கனிமொழி சிறு வயதில் தனது தந்தை கருணாநிதியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’ முப்தாண்டுகளுக்கு முன்பு 1989ல் சென்னை கடற்கரையில் அன்றைய பிரதமர் வி.பி.சிங் கலந்து கொண்ட தேசியமுன்னணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அன்றைய துணை பிரதமர் […]

Continue Reading

எச். ராஜா மாரடைப்பால் மரணம்: சர்ச்சையை கிளப்பும் ஃபேஸ்புக் வதந்தி

‘’பாஜக தேசிய செயலாளர் திரு. எச்ச ராஜா மாரடைப்பால் மரணம்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வதந்தியை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link அரசியல் அதிரடி என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதனை பலரும் அரசியல் உள்நோக்கத்திற்காக, வைரலாக பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:பாஜக தேசிய செயலாளராக உள்ள எச்.ராஜா தனது சர்ச்சையான கருத்துகளால் அவ்வப்போது, பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். சமீபத்தில் நடந்து […]

Continue Reading

மோடி ஆட்சியில் ஊழல் இல்லாத நாடுகள் பட்டியலில் 104ல் இருந்து 43வது இடத்திற்கு முன்னேறியது இந்தியா– வதந்தியா; உண்மையா?

ஊழல் இல்லாத நாடுகள் பட்டியலில் ஒரே ஆண்டில், 104வது இடத்தில் இருந்து 43வது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளதாகவும் மோடி அரசின் செயல்பாடுதான் காரணம் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link கார் ஒன்றிலிருந்து இறங்கும் பிரதமர் மோடியை மலர்களை தூவி வரவேற்கும் படத்தை வெளியிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “ஊழல் இல்லாத நாடுகள் பட்டியலில் 104வது இடத்திலிருந்து 43வது இடத்துக்கு இந்தியா முன்னேறியது. மோடி […]

Continue Reading

44 வயதில் முதல்வரான யோகி ஆதித்யநாத்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

‘’26 வயதில் எம்பி, 44 வயதில் முதல்வர் ஆன யோகி ஆதித்யநாத்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link Prabu என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், யோகி ஆதித்யநாத்தின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’26 வயதில் பாராளுமன்ற உறுப்பினர், 44 வயதில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஜி அவர்களுக்கு பிறந்த நாள் […]

Continue Reading

யானை சின்னத்தில் அழுத்தினால் தாமரை சின்னத்திற்கு ஓட்டு பதிவானது: வைரல் வீடியோ

‘’யானை சின்னத்திற்கு ஓட்டுப் போட்டால் தாமரை சின்னத்திற்கு ஓட்டு பதிவானது,’’ என்று கூறி ஒரு சர்ச்சையான வீடியோவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link Tamil Entertainment என்ற ஃபேஸ்புக் குழு இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவின் மேலே, ‘’ இப்படி இருந்தா 300 தொகுதியென்ன…3000 தொகுதி கூட ஜெய்ப்பீங்கடா,’’ என்றும் எழுதியுள்ளனர். இதனை உண்மை என நம்பி, பலரும் வைரலாக ஷேர் செய்து […]

Continue Reading

காவிப்படை அணிவகுப்பை நடத்தினாரா யோகி ஆதித்யநாத்?

வாரணாசியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்ற காவிப்படை அணிவகுப்பு ஒன்றை நடத்தியதாக ஃபேஸ்புக்கில் சிலர் பதிவிட்டுள்ளனர். இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: வாரணாசியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்ற காவிப்படை அணிவகுப்பு Archived link இரண்டு படங்களை இணைத்துப் பதிவிட்டுள்ளனர். அதில், மாடி பஸ் போன்ற ஒன்றில் நிறைய பேர் உள்ளனர். லட்சக்கணக்கானோர் திரண்டு பேரணி செல்வது போல் உள்ளது. முழுக்க காவி பொடி தூவப்பட்டு, காவி வண்ணமாக […]

Continue Reading

இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த சவுதி இளவரசர்?

இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களை, ஜெய் ஶ்ரீராம் என்று சொல்ல கட்டாயப்படுத்தினால், சவுதியில் உள்ள இந்துக்கள் அனைவரையும் இஸ்லாமியராக மாற்றுவேன் என்று இந்தியாவுக்கு சவுதி இளவரசர் எச்சரக்கை விடுத்ததாக, ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: குடிக்கிற கஞ்சியிலே மண்ணள்ளி போடப்போற…… RSS -BJP இந்துத்தீவிரவாதிகளால் வயித்துப்பிழைப்புக்காக சென்ற இந்துக்களுக்கு ஆபத்து. Archived link ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க இந்துத் தீவிரவாதிகளால் வயிற்றுப் பிழைப்புக்காக சவுதி சென்ற […]

Continue Reading

தன்னுடைய உதவியாளர் கொலை வழக்கில் ஸ்மிருதி இரானிக்கு தொடர்பா?

அமேதி தொகுதியில் வெற்றிபெற காரணமாக இருந்த தன்னுடைய உதவியாளர் கொலைக்கு ஸ்மிருதி இரானியே காரணம் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: மார்ட்டின் உதவியாளர் இறந்தால் அது மார்ட்டின் கைவண்ணம். ஸ்மிருதி ராணி உதவியாளர் இறந்தால் அது யார் கைவண்ணம்?? Archived link மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செட்டிங்கை வெளியிடுவேன் என்று மிரட்டியதால் ஸ்மிருதி இரானி உதவியாளர் சுட்டுக்கொலையா என்று உங்கள் நியூஸ் (Satire news) […]

Continue Reading

எஸ்.ஆர்.எம் பல்கலையில் மூன்று மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை? – விஷமத்தனமான ஃபேஸ்புக் போஸ்ட்

எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்தில் மூன்று மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதாக படத்துடன் கூடிய தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link மூன்று பெண்கள் இறந்து கிடக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “எஸ்.ஆர்.எம் கல்லூரி 3 பெண்கள் கற்பழித்து கொலை. இதை மறைப்பதற்கு சினிமா பைத்தியங்களை வைத்து நேசமணி கூத்தாடி வடிவேலு கதையைப் பரப்பிவிட்டுள்ளது வேதனை. எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழக தற்கொலை செய்திகளை […]

Continue Reading

ஆஸ்திரேலிய பாதிரியாரை உயிரோடு எரித்துக் கொன்றவர் பிரதாப் சாரங்கி– பகீர் ஃபேஸ்புக் பதிவு

மத்திய அமைச்சரவையில் மிகவும் எளிமையான நபர் என்று சமூக ஊடகங்களில் கொண்டாடப்படுபவர் பிரதாப் சாரங்கி. ஒடிஷாவில் ஆஸ்திரேலிய பாதிரியாரையும் அவரது இரண்டு மகன்களுடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருக்கும் தொடர்பு உண்டு என்று பகீர் குற்றச்சாட்டு சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: மீடியா பயங்கரவாதம்! Archived link ஆஸ்திரேலிய பாதிரியாரின் குடும்ப படம், எரிக்கப்பட்ட அவரது வாகனம் மற்றும் பிரதாப் சாரங்கி பதவி ஏற்றபிறகு பிரதமர் […]

Continue Reading

மோடி பதவி ஏற்றதைக் கொண்டாடிய வெளிநாட்டு மக்கள்! –உண்மை அறிவோம்!

பிரதமர் மோடி பதவி ஏற்பதை வெளிநாட்டில் உள்ள மக்கள் பார்த்து கொண்டாடியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link ஒரு பெரிய திரையில், இரண்டாவது முறையாக பிரதமர் மோடி பதவி ஏற்கும் விழா காட்சி ஒளிபரப்பாகிறது. அவர், பதவி ஏற்க தன்னுடைய பெயரைக் கூறியதும், அங்கு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்துக் கொண்டாடுகின்றனர். இந்த வீடியோவை, பாஜக-இராமநாதபுரம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 மே […]

Continue Reading

கல்வியறிவு அதிகம் உள்ள மாநிலங்களில் பா.ஜ.க புறக்கணிக்கப்பட்டதா?

இந்தியாவில், கல்வியறிவு அதிகம் உள்ள மாநிலங்களில் எல்லாம் பா.ஜ.க வெற்றிபெறவில்லை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link வாழ்க வளமுடன் என்று கூறி ஒரு புள்ளிவிவர புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கல்வியறிவு அடிப்படையில் மாநிலங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த பத்தியில், பா.ஜ.க பெற்ற தொகுதிகள் பட்டியலிடப்பட்டுள்ளது. முடிவில், கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. என்ற திருக்குறளையும் வெளியிட்டுள்ளனர். […]

Continue Reading

ஜனாதிபதிக்கு மனு அனுப்பிய மூன்று கல்லூரி மாணவிகள் மர்ம மரணம்? விஷமத்தமான ஃபேஸ்புக் பதிவு

ஜனாதிபதிக்கு மனு அனுப்பிய சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியை சேர்ந்த மூன்று மாணவிகள் மர்மமான முறையில் இறந்துள்ளதாகவும் இதனால் உண்மை தெரியும் வரை அந்த கல்லூரியை இழுத்து மூட வேண்டும் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link தாமரைக்கண்ணா என்பவர் 2019 மே 29ம் தேதி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எஸ்.ஆர்.எம் கல்லூரியில் ஜனாதிபதிக்கு மனு அனுப்பிய மூன்று மாணவிகள் மர்மமான முறையில் […]

Continue Reading

வாக்களிக்க வேண்டாம் என்று ரூ.500 தந்து, கையில் மை வைத்த பா.ஜ.க.,வினர்! – உத்தரப்பிரதேச நிகழ்வு நிஜமா?

உத்தரப்பிரதேசத்தில், வாக்குச்சாவடிக்கு யாரும் வர வேண்டாம் என்று ரூ.500 கொடுத்து கையில் மையும் வைத்துச் சென்ற பா.ஜ.க-வினர் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: BJP ஆட்கள் வந்தார்கள் விரலில் மை வைத்தார்கள் ரூ 500 தந்தார்கள் வாக்குச்சாவடிக்கு யாரும் வர வேண்டாம் என்று சொன்னார்கள் . ஒரு கிராமமே திரண்டு புகார் சொல்கிறது . இலக்ஷன் கமிசன் நடவடிக்கை எடுக்குமா? https://www.facebook.com/groups/dmkfans/permalink/2808019169270389/ Archived link […]

Continue Reading

டைம் பத்திரிகை மோடியை கிண்டல் செய்து கார்ட்டூன் வெளியிட்டதா?

‘’மோடியை கிண்டல் செய்து டைம் பத்திரிகை கார்ட்டூன் வெளியிட்டுள்ளது,’’ என்று கூறி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived Link இந்த பதிவை மே 26ம் தேதி Sivasuriya என்பவர் வெளியிட்டுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து 2வது முறையாக பிரதமர் மோடி ஆட்சியமைக்க […]

Continue Reading

பல தொகுதிகளில் பா.ஜ.க வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் 2,11,820 தானா?

“பல தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்கு ஒன்றாகவே உள்ளது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரியாக வேலை பார்த்துள்ளது” என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ஓட்டு மிஷின்சாரியாக தான் வேலை செய்துள்ளது Archived link பல தொகுதிகளில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் ஒரே மாதிரியாக உள்ளது என்று பட்டியலிடப்பட்டுள்ளது. பா.ஜ.க-வின் போலோ […]

Continue Reading

சமூக செயற்பாட்டாளர் நந்தினி பற்றிய அவதூறு… எல்லை தாண்டிய ஃபேஸ்புக் பதிவு!

சமூக செயற்பாட்டாளர் நந்தினி, இனி விபசாரம் செய்யமாட்டேன் என்று பேனர் எழுதி, கையில் பிடித்திருப்பது போன்ற ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்த தொண்டு நாயை ,,,,கன்ட இடத்தில் செருப்பால் அடிக்கவும்,,,,,, Archived link சமூக செயற்பாட்டாளர் நந்தினி ஆனந்தன் கையில் ஒரு பேனரைப் பிடித்தபடி நிற்கிறார். அதில், “இனி விபச்சாரம் செய்ய மாட்டேன்” என்று எழுதப்பட்டுள்ளது. இதை தம்பி கோபாலன் என்பவர் மே 26ம் […]

Continue Reading

ரூ.15 லட்சம் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றாரா மோடி?

‘’ரூ.15 லட்சம் பணம் போடுறேன்னு பொய் பிரச்சாரம் பண்ணி மக்களை ஏமாத்தி ஜெயித்தவர் மோடி‘’, என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link அச்சம் தவிர் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை மே 28ம் தேதி வெளியிட்டுள்ளது. இதில், ரஜினிகாந்த் ஊடகங்களில் அளித்த பேட்டியை மேற்கோள் காட்டி, அதன் கீழே, நாட்டாமை படத்தில் மனோரமா பேசும் காட்சி புகைப்படத்தை இணைத்துள்ளனர். ‘’நேரு, […]

Continue Reading

பாஜக வெற்றி பெற்ற விரக்தியில் புலம்பிய மம்தா பானர்ஜி: வைரல் வீடியோவால் குழப்பம்

‘’மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதால் விரக்தியடைந்து மிக மோசமாக நடந்துகொண்ட மம்தா பானர்ஜி‘’, என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வீடியோ பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் ஆய்வு நடத்தினோம். தகவலின் விவரம்: Archived Link PN செய்திகள் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை, மே 28ம் தேதி வெளியிட்டுள்ளது. இதில், மம்தா பானர்ஜி ஆக்ரோஷமாக, வங்க மொழியில் கோஷம் போடுகிறார். அவரை ஊடகத்தினர் சுற்றி வளைத்து பேட்டி எடுக்கின்றனர். அந்த இடத்தை […]

Continue Reading

பா.ஜ.க வெற்றி கொண்டாட்டத்தில் இஸ்லாமிய பெண் தாக்கப்பட்டாரா?

பா.ஜ.க வெற்றி கொண்டாட்டத்தில் இஸ்லாமிய இளம்பெண் ஒருவர் தாக்கப்பட்டதாக, ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: BJP யினரின் அசத்தலான வெற்றிக் கொண்டாட்டம் https://www.facebook.com/jeyakumarhosanna/videos/1438940216246359/ Archived link வீடியோவில், பர்தா அணிந்த இஸ்லாமிய இளம்பெண் ஒருவரை இளைஞர்கள் சுற்றி வளைத்துத் தாக்குகின்றனர். அவரது பர்தாவை இழுத்தும், அவர் மீது மாவை வீசியும் தண்ணீரைக் கொட்டியும், அடித்தும் வரம்பு மீறி செயல்படுகின்றனர். அந்த பெண்ணின் அலறல் […]

Continue Reading

பிஎஸ்என்எல் நிறுவனம் 54,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்?

‘’பிஎஸ்என்எல் நிறுவனம் 54 ஆயிரம் ஊழியர்களை நீக்க ஒப்புதல்,’’ என்ற பெயரில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பெயரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: Archived Link சேகுவேரா போராளி என்ற ஃபேஸ்புக் ஐடி கடந்த ஏப்ரல் 3ம் தேதியன்று இந்த பதிவை நக்கல் மன்னன் கவுண்டமணி என்ற பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இதில், பிரதமர் மோடியின் புகைப்படத்தையும், பத்திரிகையாளர் அருண் ஷோரியின் புகைப்படத்தையும் இணைத்து பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’54 ஊழியர்களை நீக்க […]

Continue Reading

வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய பாஜக, தேர்தல் ஆணையம் சதித்திட்டம்: சர்ச்சை கிளப்பும் வீடியோ

இந்திய அளவில் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய, பாஜக.,வும், தேர்தல் ஆணையமும் மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டியுள்ளதாகக் கூறி, ஒரு பரபரப்பு வீடியோ ஃபேஸ்புக்கில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை பரிசோதித்தோம். வதந்தியின் விவரம்: Archived Link இந்த பதிவில், Tricolour News Network என்ற பெயரில் ஒரு தொலைக்காட்சியின் செய்தி வீடியோ பகிரப்பட்டுள்ளது. இதில் ஒரு வெள்ளைக்காரப் பெண் பேசுகிறார். அவர், இந்திய தேர்தல் பற்றியும், வாக்குப் பதிவு இயந்திரங்களில் […]

Continue Reading

பொன். ராதாகிருஷ்ணன் தோல்விக்கு மத ரீதியான ஓட்டுகள் காரணமா?

‘’பொன்.ராதாகிருஷ்ணன் தோற்றதற்கு மத வேறுபாடுதான் காரணம்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: Archived Link நாங்க நாகர்கோவில் காரங்க என்ற ஃபேஸ்புக் குழு இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், பொன்.ராதாகிருஷ்ணன் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’குமிரியில் நீங்கள் மதத்தால் தோற்று போகலாம், ஆனால் நீங்கள் செய்த சாதனைகள் என்றும் உங்கள் புகழ் பாடும்!!!,’’ என்று எழுத்துப் பிழைகளுடன் எழுதியுள்ளனர். இதனை பலரும் […]

Continue Reading

தமிழக விவசாயிகளுக்காக இந்திய நதிகளை காவிரியுடன் இணைப்போம்: இந்தியா டுடே பேட்டியில் நிதின் கட்கரி சொன்னாரா?

மக்களவை தேர்தல் முடிவுகளை அடுத்து, “விவசாயிகளின் நன்மை கருதி, உடனடியாக, தேசிய நதிகளை காவிரியுடன் இணைத்து, தமிழகம் செழிக்க பாடுபடுவேன்,’’ என்று இந்தியா டுடே டிவியில் பாஜக மூத்த தலைவர் நிதின் கட்கரி, கண்ணீர் மல்க பேசியதாக, சில ஃபேஸ்புக் வதந்திகளை பார்க்க நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். வதந்தியின் விவரம்: Archived Link Archived Link மேற்கண்ட 2 ஃபேஸ்புக் பதிவுகளிலுமே ஒரே விசயத்தைத்தான் கூறியுள்ளனர். அதன் விவரம் கீழே வருமாறு: ***நேற்று […]

Continue Reading

உத்தரப்பிரதேசத்தில் கடையில் இருந்து 300 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டதா?

நாடு முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றி முறைகேடு நடந்ததாகவும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடை ஒன்றில் இருந்து 300 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பல செய்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இவற்றின் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உத்திரபிரதேசத்தில் கடையொன்றில் 300க்கும் அதிகமான EVM மெஷின்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. Archived link உத்தரப்பிரதேசத்தில் 300க்கும் அதிகமான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. வீடியோவில், சேமிப்பு கிடங்கு போல, ஷட்டர் போடப்பட்ட […]

Continue Reading

மக்களவைத் தேர்தல் 2019 வெற்றிக்காக மோடியை கட்டியணைத்து அத்வானி வாழ்த்தினாரா?

‘’பிரதமர் மோடியை வாழ்த்திய பாஜக மூத்த தலைவர் அத்வானி,’’ என்ற தலைப்பில் ஒரு புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Kalaiselvi Samyraj என்பவர் மே 23ம் தேதி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். இது 2019 மக்களவை தேர்தல் முடிவுகளை தொடர்ந்து நடைபெற்ற சம்பவம் என்பதுபோல அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: குறிப்பிட்ட புகைப்படத்தில், மோடியை அரவணைத்து, அத்வானி […]

Continue Reading

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உயிரிழந்தார்: விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு

‘’பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சற்று முன் வீரமரணம் அடைந்தார்,’’ என்ற தலைப்பில் ஒரு விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived Link நக்கல் மன்னன்-2.0 என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை, மே 23ம் தேதி வெளியிட்டுள்ளது. இது வேடிக்கையாக இருந்தாலும், அரசியல் விஷமத்தனம் நிறைந்ததாக உள்ளது. பலரும் இதனை உண்மை போல பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: மே 23ம் தேதி இந்திய […]

Continue Reading

வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு மரியாதை செலுத்தும் மோடி: புகைப்படம் உண்மையா?

தேர்தலில் வெற்றிபெற்ற பிரதமர் மோடி, வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு மலர் தூவி வணக்கம் செலுத்தியதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்தோம். தவலின் விவரம்: நீ இருக்கும் வரை நானே பிரதமர் Archived link வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பிரதமர் மோடி வணக்கம் செலுத்துவது போன்று படம் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நீ இருக்கும் வரை நானே பிரதமர்” என்று கூறுவது போல, எழுதப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வந்துள்ள […]

Continue Reading

பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜாவுக்கு மாநிலங்களவை எம்.பி பதவி அறிவிக்கப்பட்டதா?

“பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா ஆகியோருக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி வழங்கப்பட உள்ளதாக பா.ஜ.க அறிவித்துள்ளது” என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ராஜ்ய சபா எம்பியாக குமரி மைந்தன் திரு #பொன்னார்அவர்களும் திரு #Hராஜா ஜிஅவர்களும் பாஜக மேலிடம் அறிவிப்பு. Archived link தமிழகத்தில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பொன் ராதாகிருஷ்ணன், சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த எச்.ராஜா ஆகியோருக்கு மாநிலங்கள் அவை உறுப்பினர் […]

Continue Reading

தேர்தல் நியாயமாக நடைபெற்றால் பாஜக 40 தொகுதிகளைக் கூட தாண்டாது: அஜய் அகர்வால் சொன்னது என்ன?

‘’ தேர்தல் நியாயமாக நடைபெற்றால் பாஜக 40 தொகுதிகளைக் கூட தாண்டாது? பாஜக மூத்த தலைவர்!,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. சத்தியம் தொலைக்காட்சி பகிர்ந்துள்ள இச்செய்தியின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: தேர்தல் நியாயமாக நடைபெற்றால் பாஜக 40 தொகுதிகளைக் கூட தாண்டாது? பாஜக மூத்த தலைவர்!#BJP #Ajay_Agarwal #Parliament_election_2019 #PM #Modi Archived Link சத்தியம் தொலைக்காட்சியின் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்ட செய்தியை அப்படியே, அவர்களின் அதிகாரப்பூர்வ […]

Continue Reading