பா.ஜ.க-வினர் இலவச மின்சாரத்தை விட்டுக்கொடுக்கும்படி அண்ணாமலை அறிவுறுத்தினாரா?

100 யூனிட் இலவச மின்சாரத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று பாஜக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இலவச மின்சாரத்தை பாஜக-வினர் விட்டுக் கொடுப்பு? இலவச மின்சாரத்தை பாஜகவினர் விட்டுக் கொடுக்க அண்ணாமலை […]

Continue Reading

ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் உற்பத்தியை நிறுத்த தி.மு.க அரசு காரணமா?

ஃபோர்டு இந்தியா நிறுவனம் தன்னுடைய செயல்பாட்டை நிறுத்திக் கொள்வதற்கு தி.மு.க அரசு தான் காரணம் என்பது போன்று பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சென்னை மறைமலைநகரில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலையில் வெளியான கடைசி காருக்கு ஊழியர்கள் கண்ணீர் மல்க விடை கொடுத்தது தொடர்பாக புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த விடியல் […]

Continue Reading

ஓபிஎஸ் கூட்டத்தின் குலத்தொழில் திருடுவது என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

திருடுவதுதான் ஓ.பன்னீர்செல்வம் சார்ந்த சமூகத்தினரின் குலத்தொழில் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக, ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: FB Claim Link I Archived Link உண்மை அறிவோம்: ஜெயலலிதா மரணமடைந்த நிலையில், சசிகலாவை வெளியேற்றி விட்டு, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஒன்றிணைந்து, 4 ஆண்டுகள் அதிமுக.,வை தலைமையேற்று, தமிழ்நாட்டில் ஆட்சி நடத்தி வந்தனர்.  Fact Crescendo Tamil Link கடந்த […]

Continue Reading

கனியாமூர் தனியார் பள்ளி பிரச்னை பற்றி நடிகைகளுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை செய்தாரா?

சின்ன சேலம் தனியார் பள்ளி பிரச்னை பற்றி நடிகைகளுடன் ஆலோசித்த உதயநிதி ஸ்டாலின் என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்: சமீபத்தில் சின்ன சேலம் அருகே கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, உள்ளூர் பொது […]

Continue Reading

ஐதராபாத் வந்த மோடியை தமிழிசை மற்றும் அவரது டிரைவர் மட்டுமே வரவேற்றார்களா?

ஐதராபாத் வந்த பிரதமர் மோடியை தெலங்கானா ஆளுநர் தமிழிசை மற்றும் அவரது டிரைவர் என இரண்டு பேர்தான் வரவேற்றார்கள் என்று சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive பிரதமர் மோடியை தமிழிசை சௌந்திரராஜன் வரவேற்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “என்னடா இது நாட்டோட பிரதமருக்கு வந்த சோதனை .. ?? தெலுங்கானாவுல கால வச்சவுடனே வரவேற்தது இரண்டே பேர் […]

Continue Reading

ஜவஹர்லால் நேரு குடும்பம் முஸ்லீம் வழிவந்தவர்களா? திட்டமிட்டு பகிரப்படும் வதந்தியால் சர்ச்சை…

ஜவஹர்லால் நேரு குடும்பம் முஸ்லீம் வழிவந்தவர்கள் என்று நேருவின் தனிப்பட்ட உதவியாளராக இருந்த எம்.ஓ.மத்தாய் புத்தகம் எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வைரலாக பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில், இந்திய அரசியல் வரலாறு பற்றிய எந்த அடிப்படை புரிதலும் இன்றி இந்து – முஸ்லீம் விரோதத்தை வளர்க்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கில் […]

Continue Reading

தெலங்கானாவில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டதா துணை ராணுவம்?

தெலங்கானாவில் கடந்த 2021ம் ஆண்டு வெள்ளத்தில் மூழ்கிய ஜேசிபி இயந்திரத்தில் சிக்கியவர்களை துணை ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் மீட்ட வீடியோவை தற்போது நடந்தது போன்று பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மழை வெள்ளத்தில் சிக்கிய ஜேசிபி வாகனத்துக்குள் இருந்தவர்களை மீட்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், “தெலங்கானாவில் கடும் வெள்ளப்பெருக்கு – ஆற்றில் ஜேசிபி வாகனத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்ட துணை ராணுவம்.. பதபதைக்கவைக்கும் […]

Continue Reading

இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டாரா?

இங்கிலாந்தின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இங்கிலாந்தின் முன்னாள் நிதித்துறை அமைச்சரும் தற்போது பிரதமர் பதவி போட்டியில் முன்னிலை வகிப்பவருமான ரிஷி சுனக் புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “இந்திய பஞ்சாப் மாநில இன்போசிஸ் நாராயணமூர்த்தி மருமகன் “ரிஷி சுனக்” பிரிட்டிஷ் பிரதமராக தேர்வு” என்று […]

Continue Reading

தாய்லாந்தில் ஓம் என்று உச்சரித்தால் ஆற்று நீர் மேலே எழும் என்று பரவும் வீடியோ உண்மையா?

தாய்லாந்தில் மலைகளுக்கு நடுவே ஓடும் ஆற்றில் ஓம் என்று உச்சரித்தால், ஆற்று நீர் மலையின் உயரத்தை விட அதிகமாக மேலே பீறிட்டு எழுகிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் வாசகர் ஒருவர் வாட்ஸ் சாட்பாட் எண்ணுக்கு வீடியோ மற்றும் தகவல் ஒன்றை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார். வீடியோவில் சிறுமி ஒருவர் “ஆ” என்று கத்துகிறார். […]

Continue Reading

சின்ன சேலம் தனியார் பள்ளி மீது எந்த தவறும் இல்லை என்று சைலேந்திர பாபு கூறினாரா?

சின்ன சேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி மீது எந்த தவறும் இல்லை என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive சைலேந்திர பாபு சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இருக்கும் புகைப்படம் மற்றும் தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டுடன் ட்வீட் பதிவு […]

Continue Reading

மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதாக இந்திய அரசு அறிவித்ததா?

மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதாக, இந்திய அரசு அறிவித்துள்ளது என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என கேட்டிருந்தனர். இதனை பலரும் உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இந்த வதந்தி கடந்த […]

Continue Reading

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மகிழ்ச்சியளிக்கிறது என்று மோகன் பகவத் கூறினாரா?

ரூபாயின் வீழ்ச்சி மகிழ்ச்சியளிக்கிறது. இதனால் ஆர்.எஸ்.எஸ்-க்கு வெளிநாட்டிலிருந்து வரும் நிதி அதிகரிக்கும் என்று மோகன் பகவத் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்று மோகன் பகவத் படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ரூபாயின் வீழ்ச்சி மகிழ்ச்சியளிக்கிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு வெளிநாட்டு வாழ் இந்துக்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடம் […]

Continue Reading

மோகன் பகவத்திடம் ஆசி பெற்ற திரௌபதி முர்மு என்று பரவும் புகைப்படம் உண்மையா?

குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி வேட்பளாராக போட்டியிடும் திரௌபதி முர்மு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்திடம் ஆசி பெற்றதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive திரௌபதி முர்மு மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இருவரும் இணைந்து இந்திய அன்னை ஓவியத்துக்கு வணக்கம் செலுத்தும் புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “மூத்த குடிமகளா? திரௌபதி […]

Continue Reading

மீண்டும் அரசியலுக்கு வரலாமா என்று ஆலோசிக்க உள்ளதாக ரஜினிகாந்த் கூறினாரா?

மீண்டும் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என ஆலோசிக்க மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்திக்க உள்ளார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரஜினிகாந்த் புகைப்படத்துடன் கூடிய தினமலர் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார் ரஜினி. மீண்டும் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என ஆலோசிக்க உள்ளேன். […]

Continue Reading

வேகமாக வளரும் நாடுகள் பட்டியலில் 3-ல் இருந்து 164வது இடத்திற்கு இந்தியா தள்ளப்பட்டதா?

வேகமாக வளரும் நாடுகள் பட்டியலில் 3வது இடத்திலிருந்த இந்தியா, தற்போது 164வது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டது போன்ற ட்வீட் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில், “இந்தியா தற்போது 193 நாடுகள் அடங்கிய உலகின் வேகமாக வளரும் நாடுகள் பட்டியலில் 164வது இடத்தில் உள்ளது. 2011ல் மிகப்பெரிய […]

Continue Reading

அண்ணாமலைதான் அடுத்த தலைவர் என்று அதிமுக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டதா?

‘’அண்ணாமலைதான் அடுத்த தலைவர் என்று அதிமுக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டதால் அடிதடி,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Linkஉண்மை அறிவோம்:அதிமுக.,வின் புதிய தலைமை யார் என்பது தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகியோரிடையே மோதல் வெடித்துள்ளது. இதையொட்டி நாள்தோறும் தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பு காட்சிகள் அரங்கேறி வரும் சூழலில், அதிமுக பொதுக்குழுவில், அண்ணாமலைதான் அடுத்த தலைவர் […]

Continue Reading

தாமரை சின்னத்தில் கூட போட்டியிட தயார் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

‘’தாமரை சின்னத்தில் கூட போட்டியிட தயார்,’’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாகக் குறிப்பிட்டு ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (+91 9049044263, +91 9049053770) அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் பலர் இதனை உண்மை போல பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:அஇஅதிமுக.,வின் […]

Continue Reading

ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் கட்சியில் இருந்து நீக்குகிறேன் என்று சசிகலா அறிவித்தாரா?

அதிமுக-வில் இருந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை நீக்குவதாக, சசிகலா அறிவித்தார் என்று கூறி ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வி.கே.சசிகலா புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை வெளியிட்டது போன் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “EPS,OPS இருவரும் அஇஅதிமுக தலைமைக்கழக அலுவலகத்தில் வன்முறையைத் தூண்டியுள்ளனர். எனவே அவர்கள் இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து […]

Continue Reading

ஊழல் வழக்கில் தண்டனை; ஜெயலலிதா நிரந்தர பொதுச் செயலாளர் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

‘’ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் ஜெயலலிதா. அவர் நிரந்தர பொதுச் செயலாளராக இனி இருக்க முடியாது,’’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டார். பலரும் இதனை உண்மை என நம்பி சமூக வலைதளங்களில் ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link […]

Continue Reading

அதிமுக பொதுச் செயலாளருக்கு மேல்வரிசைப் பற்கள் 1 இன்ச் நீளம் இருக்க வேண்டும் என்று பகிரப்படும் வதந்தி…

‘’அதிமுக பொதுச் செயலாளருக்கு முன்வரிசைப் பற்கள் 1 இன்ச் நீளம் குறையாமல் இருக்க வேண்டும் என்று அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே அதிமுக பொதுக்குழுவில், புதிய தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அத்துடன், அவரது எதிர் கோஷ்டியான ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் […]

Continue Reading

சூரியனை விட்டு பூமி அதிக தூரம் செல்வதால் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் குளிர் அதிகரிக்குமா?

சூரியனுக்கும், பூமிக்கும் இடையே உள்ள தொலைவு மிகவும் அதிகரிப்பதால், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பூமியில் அதிக குளிர்ச்சி ஏற்பட்டு, மக்களுக்கு ஆரோக்கிய கோளாறுகள் ஏற்படும் என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இந்த தகவல், சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுவதோடு, மக்களை பீதியடையச் செய்யும் வகையில் உள்ளது. உண்மை அறிவோம்:சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் உள்ள தொலைவு […]

Continue Reading

சமையல் எரிவாயு விலை இனிமேல் உயர்த்தப்படாது என்று அண்ணாமலை அறிவித்தாரா?

கேஸ் சிலிண்டர் விலை இனி உயர்த்தப்படாது என்று அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கேஸ் விலை ஏற்றம் இதுவே கடைசி. இதுவே கடைசி இதற்கு மேல் கேஸ் விலை உயர்த்தப்படாது. மீறி உயர்த்தினால் எங்களை செருப்பைக் கழட்டி அடியுங்கள் […]

Continue Reading

மின் மயானத்திற்கும் இனி ஜிஎஸ்டி என்று நிர்மலா அறிவித்தாரா?

மின் மயானத்திற்கும் இனி ஜிஎஸ்டி என நிர்மலா சீதாராமன் அறிவித்தார் என ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆனந்த விகடன் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மின் மயானத்திற்க்கும் இனி ஜிஎஸ்டி வரி! மின் மயானத்தில் உடல்களை தகனம் செய்ய 5% ஜி.எஸ்.டி வரி விதிக்க மத்திய அரசு முடிவு!” என்று […]

Continue Reading

ராதாரவி மீது நடவடிக்கை எடுக்கும்படி அண்ணாமலையை பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினாரா?

‘’ராதாரவி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என அண்ணாமலையை பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டு, நியூஸ் கார்டு ஒன்று பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர் +91 9049044263 , +91 9049053770 ஆகிய நமது வாட்ஸ்ஆப் எண்களுக்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதே நியூஸ் கார்டை மற்றவர்கள் உண்மை என நம்பி ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I […]

Continue Reading

ராதாரவி ஒரு நாலாந்தரப் பேச்சாளர் என்று அண்ணாமலை கூறினாரா?

நடிகர் ராதா ரவியை நாலாந்தரப் பேச்சாளர் என்று அண்ணாமலை விமர்சித்தார் என ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அண்ணாமலை புகைப்படத்துடன் ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ராதா ரவி போன்ற நாலாந்தரப் பேச்சாளர்கள் குடித்துவிட்டுப் பேசுவதைப் பொருட்படுத்தத் தேவையில்லை. பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை அக்யூஸ்டுகள் என்று குறிப்பிட்டது […]

Continue Reading

2019ம் ஆண்டு வீடியோவை எடுத்து திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று பரப்பும் நெட்டிசன்கள்!

கடந்த 2019ம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் இளைஞர்கள் நான்கு பேர் சேர்ந்து காவலர் ஒருவரை தாக்கிய வீடியோவை தற்போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துவிட்டது என்று குறிப்பிட்டு சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காவலர் ஒருவரை நான்கு – ஐந்து இளைஞர்கள் தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விடியல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு காற்றில் பறக்குது. போலீஸுக்கே தண்ணி திமுகவினர். அதிகாரம் […]

Continue Reading

கரூரில் ரூ.90 லட்சத்தில் கட்டப்பட்ட கழிப்பறையா?

கரூரில் ஜோதிமணி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.90 லட்சத்திற்கு கழிப்பறை கட்டப்பட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கரூரில் ஜோடிமணி எம்.பி நிதியில் கட்டப்பட்ட பொதுக்கழிவறை! அதுக்கு என்னன்னு கேக்குறீங்களா? செலவு ஜஸ்ட் 90 லட்ச ரூபாய்தான்!” என்று […]

Continue Reading

கார்த்திக் கோபிநாத் குகைக்குள் நிர்வாண பூஜை செய்வதாக நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதா?

‘’கார்த்திக் கோபிநாத் குகைக்குள் தங்கி நிர்வாண பூஜை செய்கிறார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் நியூஸ் 7 தமிழ் லோகோவுடன் ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா எனக் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்டவற்றில் இதனை பலரும் உண்மை போல குறிப்பிட்டு, ஷேர் செய்வதைக் கண்டோம். Twitter Claim […]

Continue Reading

வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகளை துணிச்சலுடன் மீட்கும் தந்தை- உண்மை என்ன?

‘’வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகளை துணிச்சலுடன் மீட்கும் தந்தை,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link மேற்கண்ட வீடியோவில், ‘வெள்ளத்தில் சிக்கிய சிறுவர்களை இளைஞர் ஒருவர் போராடி காப்பாற்றி, கரை சேர்க்கிறார். அதன் பிறகு, கரையில் உள்ள மற்ற நபர்கள் அவர்களுக்கு கை கொடுத்து உதவுகிறார்கள்,’ ஆகிய காட்சிகளை காண முடிகிறது. இதனை பலரும் […]

Continue Reading

ராம்நாத் கோவிந்துக்கு சிவப்பு கம்பள வரவேற்பு மறுக்கப்பட்டதா?

ஜனாதிபதியாகவே இருந்தாலும் சிவப்பு கம்பளத்தில் வர முடியாது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிவப்பு கம்பளத்தில் நடந்து வருகிறார். அவருக்கு அருகில் சிவப்பு கம்பளத்துக்கு வெளியே ஓரமாகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நடந்து வரும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஜனாதிபதியாகவே இருந்தாலும் ரெட் கார்பெட்டில் […]

Continue Reading

இந்துத்துவம் எனும் பெயரால் வஞ்சிக்கப்பட்டோம் என்று உத்தவ் தாக்கரே கூறினாரா?

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்த உத்தவ் தாக்கரே, இந்துத்துவம் என்ற பெயரால் வஞ்சிக்கப்பட்டோம் என்று கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே புகைப்படத்துடன் கூடிய ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்துத்துவம் என்கிற […]

Continue Reading

பா.ஜ.க மூத்த தலைவர்களின் மகள்கள் இஸ்லாமியர்களை திருமணம் செய்தனரா?

பா.ஜ.க, இந்து அமைப்புகளின் தலைவர்களின் மகள்கள் எல்லாம் இஸ்லாமியர்களை திருமணம் செய்துள்ளார்கள் என்பது போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பா.ஜ.க மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோரின் படங்களை வைத்து பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எல்.கே.அத்வானியின் மகள் பிரதிபா அத்வானி பிராமண கணவனை உதறிவிட்டு ஒரு முஸ்லீமை வாழ்க்கை துணையாக்கியபோது […]

Continue Reading

ஸ்கூட்டர் ஓட்டி பழகிய மம்தா பானர்ஜி என்று பகிரப்படும் வீடியோ உண்மையா?

மேற்கு வங்க முதல்வர் இருசக்கர வாகனம் ஓட்ட மேற்கொண்ட பயிற்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் தொண்டர்கள் மற்றும் போலீசார் சூழ மம்தா பானர்ஜி இருசக்கர வாகனம் ஓட்டி வரும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழ்நாட்டில் ஸ்டாலின் சைக்கிள்களில்… அங்க மம்தா மூதேவி ஸ்கூட்டர் பழகுறாளாம். அதுவும் ரோட்டில் இவ்வளவு அடியாட்கள் […]

Continue Reading

மோடி எம்.ஏ., படித்ததாகச் சொல்வது பொய் என்று அண்ணாமலை கூறினாரா?

பிரதமர் மோடி எம்.ஏ டிகிரி படித்ததாக சொல்வது பொய் என அண்ணாமலை கூறினார் என ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive “என்ன வாய்டா இது..?” என குறிப்பிட்டு தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கள் இரண்டை வைத்து பதிவிட்டுள்ளனர். அதில், “தமிழ்நாடு அமைச்சர்கள் பலருக்கு ஆங்கிலம் தெரியாது.. டெல்லி சென்று எப்படி நிதியை பெற்று வருவார்கள்?” என்றும் […]

Continue Reading

ஆருத்ரா நிறுவன மோசடியில் அண்ணாமலையை தொடர்புபடுத்தி பாலிமர் டிவி செய்தி வெளியிட்டதா?

‘’ஆருத்ரா நிதி நிறுவன மோசடி பணம் அண்ணாமலையிடம் உள்ளது- பாலிமர் டிவி,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர் +91 9049044263 மற்றும் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்களுக்கு அனுப்பி, உண்மையா என்று கேட்டனர். இதுபற்றி தகவல் தேடியபோது பலரும், ஃபேஸ்புக்கில் இதனை உண்மை போல குறிப்பிட்டு பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link […]

Continue Reading

வன்னி அரசுக்கு மூளை பிதற்றல் நோய் என திருமாவளவன் கூறினாரா?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த வன்னி அரசுக்கு மூளை பிதற்றல் நோய் இருப்பதாக தொல் திருமாவளவன் கூறினார் என ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு ஆகியோர் புகைப்படங்களுடன் தந்தி டிவி வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தம்பி […]

Continue Reading

லைக்ஸ் வாங்க இஸ்ரேல் புகைப்படத்தை எடுத்து இந்திய ராணுவ வீராங்கனை என பரப்பும் நெட்டிசன்கள்!

இஸ்ரேல் பெண் ராணுவ வீரர் படத்தை லைக் வாங்குவதற்காக என்னையெல்லாம் உங்களுக்கு பிடிக்குமா என கேட்டு சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.  தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெண் ராணுவ வீரர் ஒருவரின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். படத்தின் மீது, “ஒரு நடிகைன்னா உங்களுக்கு புடிக்கும்… என்னையெல்லாம் உங்களுக்கு புடிக்குமா” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Pavani என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜூன் 19ம் தேதி பதிவிட்டிருந்தார். […]

Continue Reading

பிரதமர் மோடி சாதுக்களுடன் இருக்கும் புகைப்படத்தை வைத்து பொருளாதாரத்தை சரி செய்ய ஆலோசனை என கிண்டல்!

பொருளாதாரத்தை சரி செய்வது எப்படி என சன்னியாசிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார் என்று ஒரு புகைப்படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive பிரதமர் மோடி இந்து மதத் துறவிகளுடன் அமர்ந்து பேசும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதனுடன், “பொருளாதாரத்தை சரி செய்வது எப்படி? மயில்களுக்கு அரிசி போடுவது எப்படி? – நிபுணர்களுடன் […]

Continue Reading

என் காலில் விழுந்த நாய் ஒன்று கட்சியை கவ்விச் சென்றுவிட்டது என்று சசிகலா கூறினாரா?

‘’என் காலில் விழுந்து பதவி பெற்ற நாய் ஒன்று கட்சியை கவ்விச் சென்றுவிட்டது,’’ என்று சசிகலா கூறியதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி வைத்த இந்த நியூஸ் கார்டை பலரும் உண்மை என நம்பி, ஷேர் செய்து வருவதைக் காண முடிகிறது. Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:அஇஅதிமுக.,வில் தற்போது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் […]

Continue Reading

இட ஒதுக்கீட்டை நம்பி நான் வரல… இளையராஜா பெயரில் பொய்ச் செய்தி வெளியிட்ட குமுதம்!

‘’இட ஒதுக்கீட்டை நம்பி நான் வரல, என்னோட திறமையில்தான் வந்தேன்,’’ என்று கூறி இளையராஜா பேசியதாக, சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்த நியூஸ் கார்டை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா எனக் கேட்டார். இதன்பேரில் நாம் தகவல் தேடியபோது பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக் போன்றவற்றில் ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim […]

Continue Reading

விவசாயிகள் போராட்ட வீடியோவை எடுத்து நுபுர் சர்மா கைது என்று பரப்பும் நெட்டிசன்கள்!

‘’நுபுர் சர்மா கைது செய்யப்பட்டார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:பாஜக.,வைச் சேர்ந்த நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோர் சமீபத்தில் நபிகள் நாயகம் பற்றி தெரிவித்த கருத்து, பெரும் சர்ச்சையை சர்வதேச அளவில் ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக, இஸ்லாமிய நாடுகள் பலவும் இந்தியாவிற்கு கண்டனம் […]

Continue Reading

ஸ்டெர்லைட் ஆலை மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் நடத்தப்படும் என கனிமொழி கூறினாரா?

ஸ்டெர்லைட் ஆலையை யார் வாங்கினாலும் மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிறுவனமாக நடத்தப்படும் என்று தி.மு.க எம்.பி கனிமொழி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்ட ட்வீட், யூடியூப் பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “ஸ்டெர்லைட் ஆலையை யார் வாங்கினாலும் மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிறுவனமாக நடத்தப்படும்-கனிமொழி, எம்.பி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  நிலைத் […]

Continue Reading

கோவாவில் பசுவை விரட்டிய வெளிநாட்டுப் பெண்ணை சங் பரிவார் அமைப்பினர் தாக்கினரா?

கோவா கடற்கரையில் பசு மாட்டை விரட்டிய வெளிநாட்டுப் பெண்ணை சங் பரிவார் அமைப்பினர் தாக்கினர் என ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கடற்கரையில் இருவர் தாக்கிக் கொள்கின்றனர். அதில் ஒருவர் அயல் நாட்டினர் போல உள்ளார். மற்றொருவர் இந்தியர் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் இடையே சமரசம் செய்ய சிலர் முயற்சிக்கின்றனர். ஆனால், வெளிநாட்டைச் சார்ந்த […]

Continue Reading

நடிகர் விஜய்யின் வாரிசு பட போஸ்டர் காப்பி அடிக்கப்பட்டதா?

நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி வரும் வாரிசு படத்தின் போஸ்டர் காப்பி அடிக்கப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி வரும் வாரிசு படத்தின் போஸ்டர் மற்றும் ஓட்டோ என்ற ஆடை நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றாக இருப்பது போன்று பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “முதலெல்லாம் படத்தைத்தான் காப்பி அடிச்சுட்டு இருந்தீங்க… ஆனா […]

Continue Reading

தி.மு.க ஆட்சியில் தேனி மாவட்டத்தில் எல்.ஈ.டி பல்ப் வாங்கியதில் முறைகேடு நடந்தது என்று பரவும் தகவல் உண்மையா?

மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் ஒரு எல்.ஈ.டி பல்ப்பை ரூ.10 ஆயிரம் கொடுத்து வாங்கி மோசடி நடந்துள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இரண்டு செய்திகளை ஒன்றாகச் சேர்த்து, திரைப்பட காட்சியை வைத்து புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “நீர் வள நிலவளத்திட்ட பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் வழங்கிய காபி, மிக்சர் செலவு ரூ.47 கோடி. […]

Continue Reading

தமிழ்நாட்டில் 98% பேர் மோடியை வெறுக்கின்றனர் என்று பிபிசி கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?

இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் 98 சதவிகித மக்கள் பிரதமர் மோடியை வெறுக்கின்றனர் என்று பிபிசி ஆய்வறிக்கை வெளியிட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஊடகம் ஒன்றின் நியூஸ் கார்டை எடிட் செய்தது போன்று நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்தியாவின் பிரதமரை 99% வெறுக்கும் No.1 மாநிலம் தமிழ்நாடு தான். BBC ஆய்வறிக்கையில் தகவல்” […]

Continue Reading

அரபு நாடுகளில் பணிபுரிவோர் உண்மையான இந்துக்கள் அல்ல என்று அர்ஜூன் சம்பத் கூறினாரா?

‘’அரபு நாடுகளில் பணிபுரியும் இந்துக்கள் உண்மையான இந்துக்கள் அல்ல,’’ என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக, ஒரு பதிவு சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: வாட்ஸ்ஆப் வழியே வாசகர் ஒருவர் நமக்கு இதனை அனுப்பியிருந்தார். இதே ஸ்கிரின்ஷாட் பதிவை, பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்கின்றனர். Facebook Claim Link I Archived Link கமெண்ட்களில் கூட அர்ஜூன் சம்பத் நிஜமாகவே இப்படி கூறியதாகப் […]

Continue Reading

Rapid FactCheck: ஹிட்லருடன் மோடியை ஒப்பிட்டு டைம் ஊடகம் அட்டைப் படம் வெளியிட்டதா?

‘’ஹிட்லருடன் ஒப்பிட்டு மோடி புகைப்படத்தைச் சித்தரித்து டைம் ஊடகம் அட்டைப் படம் வெளியிட்டது,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் பலர் உண்மை போல குறிப்பிட்டு, ஷேர் செய்வதைக் கண்டோம். Twitter Claim Link […]

Continue Reading

திருமோகூர் கோவிலில் செல்போன் டவர் மூலம் இந்து சமய அறநிலையத் துறை பணம் சம்பாதிக்கிறதா?

மதுரை அருகே உள்ள திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் செல்போன் டவர் வைக்க இந்து சமய அறநிலையத் துறை அனுமதி கொடுத்துள்ளது என்று ஒரு வதந்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கோவிலின் மேல் பகுதியில் செல்போன் டவர் இருப்பது போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் செல் பேசி டவர். 1400 வருட […]

Continue Reading

அக்னிபத் போராட்டக்காரர்களைச் சுட்டுத் தள்ள வேண்டும் என்று பா.ஜ.க.,வின் நிர்மல் கூறினாரா?

மத்திய அரசின் அக்னிபத் போராட்டக்காரர்களைச் சுட்டுத் தள்ளுங்கள் என்று தமிழ்நாடு பா.ஜ.க-வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநிலத் தலைவர் நிர்மல் குமார் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமூர் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அக்னிபத் போராட்டக்காரர்களை சுட்டுத்தள்ளுங்கள். மத்திய அரசின் அக்னிபத் […]

Continue Reading