“தோனியிடம் மன்னிப்பு கேட்ட சச்சின்!” – ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

“ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் தோனிக்கு ரன் அவுட் அளித்தது சரியில்லை. அதனால், அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: https://www.facebook.com/groups/489428884557185/permalink/1303489323151133/ Archived link சச்சின் படத்துடன் ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், “இந்த நிலையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த மும்பை அணியின் மூத்த வீரர் சச்சின் டெண்டுல்கர், ‘தோனியின் ரன்-அவுட்தான் மும்பை […]

Continue Reading

கல்ராஜ் மிஸ்ரா இன்னமும் மத்திய அமைச்சர் பதவியில் உள்ளார்: தி இந்து தமிழ் திசைக்கு வந்த குழப்பம்

‘’மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா,’’ என்று கூறி ஒரு செய்தியை தி இந்து தமிழ் திசை இணையதளம் வெளியிட்டிருந்தது. இந்த செய்தியை, தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலும் இந்து தமிழ் திசை பகிர்ந்துள்ளது. கல்ராஜ் மிஸ்ரா இன்னமும் மத்திய அமைச்சர் பதவியில் தொடர்கிறாரா என்ற கோணத்தில் இதுபற்றி நாம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: குடிமக்கள் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்துவதாக பாஜக உறுதி அளிக்கவில்லை: மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா மறுப்பு Archived […]

Continue Reading

பா.ஜ.க ஆதரவாளர்களிடம் மட்டும் ரூ. 40 லட்சம் கோடி கருப்பு பணம்: விக்கிலீக்ஸ் வெளியிட்டதாகப் பரவும் வதந்தி!

இந்தியாவில் இருந்து வெளிநாட்டு வங்கிகளில் ரூ.72 லட்சம் கோடி கருப்பு பணம் பதுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் ரூ.40 லட்சம் கோடி பாஜ.க ஆதரவு பெற்ற தொழிலதிபர்களிடம் இருப்பதாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியானதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவல் அறிவோம்: Archived link விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே அறிவிப்பு வெளியிடுவது போன்ற படத்தில், “இந்தியாவில் இருந்து பதுக்கப்பட்ட கருப்பு பணம் எழுபத்தி இரண்டு லட்சம் கோடி. அதில் […]

Continue Reading

கோவை குடிநீர் கோவிந்தா: சர்ச்சையை கிளப்பும் ஃபேஸ்புக் பதிவு

‘’கோவை குடிநீர் கோவிந்தா,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை, காண நேரிட்டது. இதனைப் பலரும் வைரலாக ஷேர் செய்து வருவதால், இதன் உண்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: கோவை குடிநீர் கோவிந்தா….!!! கோவையை வச்சு செய்ய கங்கனம் கட்டிவிட்டார்கள் காவி கார்பரேட் கூட்டம்… இனி திராவிட தேசிய கட்சிகளை நம்பி வாக்களித்தால்…சர்வநாசம் நிச்சயம்…. Archived Link கடந்த மார்ச் 26ம் தேதியன்று இந்த ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஒரு வீடியோ […]

Continue Reading

தூத்துக்குடியில் போலீசார் துப்பாக்கியால் சுடும்போது குறுக்கே போனதால் 13 பேர் இறந்தனர்! – அன்புமணி கூறியதாக பரவும் வதந்தி

தூத்துக்குடியில் போலீசார் துப்பாக்கியால் சுடும்போது குறுக்கே போனதால் 13 பேர் இறந்ததாக பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் ஷேர் ஆகி உள்ளது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ஸ்டெர்லைட் சம்பவம் Archived link நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் படத்தின் மேல், “போலீசார் துப்பாக்கியால் சுடும்போது குறுக்கே போனதால் 13 பேர் இறந்தனர் – அன்புமணி” என்று உள்ளது. படத்துக்கு கீழே, “கேவலம் பதவிக்காகவும் […]

Continue Reading

எல்லோரா கைலாசநாதர் கோயில் தமிழனின் கட்டிடக்கலையா?

ஃபேஸ்புக்கில், தமிழனின் கட்டிடக்கலையின் அழகு என்று கூறி ஒரு புகைப்படம் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: தமிழனின் கட்டிட கலையின் அழகை பிடித்தவர்கள் #ஷேர்பண்ணுங்க…. Archived link தமிழனின் கட்டிடக்கலையின் அழகைப் பிடித்தவர்கள் ஷேர் செய்யுங்கள் என்று கூறி மலையை குடைந்து உருவாக்கப்பட்ட அழகிய கோவிலின் புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. கோவிலின் பெயர், எங்கே உள்ளது என்று எந்த ஒரு தகவலும் இந்த பதிவில் இல்லை. கீர்த்தி சூரேஷ் என்ற நபர் […]

Continue Reading

இஸ்ரேலின் இன்னொரு கொடூர முகம்தான் ஐஎஸ்ஐஎஸ்: ஃபேஸ்புக் தகவலின் உண்மை என்ன?

‘’ஐஎஸ் தீவிரவாதிகளை வளர்த்துவிடுவதே இஸ்ரேல் நாடுதான்,’’ என்கிற ரீதியில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் அடிப்படையில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். அதன் விவரம் இதோ… தகவலின் விவரம்: Archived Link இந்த பதிவு கடந்த ஏப்ரல் 23ம் தேதியன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட பதிவில், ஐஎஸ் தீவிரவாதிகளை வளர்த்துவிட்டு, உலகம் முழுக்க இஸ்லாம் என்றால் அது பயங்கரவாதம்தான் என பரப்புரை செய்து, இஸ்லாம் மதத்தை […]

Continue Reading

வாக்குப் பதிவு இயந்திரம் உத்திரமேரூரில் உடைக்கப்பட்டதா?

‘’உத்திரமேரூரில் வாக்கு எந்திரத்தின் சீல் உடைக்கப்பட்டது,’’ என்ற தலைப்பில், ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. அதன் உண்மைத்தன்மை பற்றி நாம் ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived Link இந்த பதிவு, ஏப்ரல் 20ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதனை பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். ஆம் நாங்கள் சமூக விரோதிகள் என்ற பெயரிலான ஃபேஸ்புக் குழு இந்த பதிவை வெளியிட்டுள்ளது. உண்மை அறிவோம்:இந்த பதிவில், வாக்கு இயந்திரங்களை சிலர் சரிபார்ப்பதுபோன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் […]

Continue Reading

ஜப்பான் ரயில் நிலையத்தில் தமிழ் மொழியில் அறிவிப்பு உண்மையா?

ஜப்பான் ரயில் நிலையம் ஒன்றில், தமிழ் மொழியில் அறிவிப்பு செய்யப்படுவதாக, ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: தமிழ் நம் அடையாளம் ?? #அதிகம்_பகிரவும் Archived link வழிகாட்டி அறிவிப்பு பலகை ஒன்றில், ஜப்பான் மற்றும் தமிழ் மொழியில் அறிவிப்பு வைத்திருப்பது போல உள்ளது. தமிழில் உள்ள அறிவிப்பில் ‘படிக்கட்டில் வலது பக்கமாக செல்லவும்’ என்று உள்ளது. Shin-Okubo என்று ஆங்கிலத்திலும் உள்ளது. இந்த படத்தில், “ஜப்பான் […]

Continue Reading

20 ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை எறும்பு தின்றுவிட்டது: சர்க்காரியா கமிஷனிடம் கருணாநிதி இப்படி சொன்னாரா?

‘’20 ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை எறும்பு தின்றுவிட்டது,’’ என்று கருணாநிதி, சர்க்காரியா கமிஷன் முன்பு, சாட்சியம் அளித்ததாகக் கூறி, ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: #ஊழலின் பிதாமகன்… கட்டுமரம் Archived Link ஏப்ரல் 6ம் தேதி Mohan Raj என்பவர் இத்தகைய பதிவை வெளியிட்டுள்ளார். இதனை உண்மை என நம்பி, ஆயிரக்கணக்கானோர் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:இந்த பதிவை பார்க்கும்போதே இது […]

Continue Reading

இஸ்லாமியர் தெருவிற்குள் நுழைந்ததால் இந்து சன்னியாசி தாக்கப்பட்டாரா?

இஸ்லாமியர்கள் வசிக்கும் தெருவில் சென்ற இந்து சன்னியாசி ஒருவர் தாக்கப்பட்டதாக ஒரு ஃபேஸ்புக் பதிவு அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: முஸ்லிம் தெருவில் இந்து சாமியார்கள் நுழையக்கூடாதா..??? #இது_இந்தியாவா,,,, இல்லை #பாகிஸ்தானா..??? Archived link உடல் முழுக்க விபூதி பூசியது போன்று உள்ள ஒருவரை சிலர் சுற்றி நின்று தாக்குகின்றனர். அந்த நபர் கையெடுத்துக் கும்பிடும் படமும் உள்ளது. படத்தின் மேல், “ஒரு இஸ்லாமியனின் மதவெறி. ஹிந்து […]

Continue Reading

மோடி கோரிக்கையை ஏற்று சவூதி அரசு 850 கைதிகளை விடுதலை செய்யவில்லை: ஃபேஸ்புக் பதிவால் சர்ச்சை

‘’மோடியின் கோரிக்கையை ஏற்று சவூதி அரசு 850 கைதிகளை விடுதலை செய்யவில்லை. சவூதியில் ரமலான் மாதத்தை முன்னிட்டு பொது மன்னிப்பாக அவர்களை விடுதலை செய்துள்ளனர்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ரமளான் மாத பொது மன்னிப்பாக சௌதி அரேபிய அரசு சிறைக் கைதிகளை ஆண்டு தோறும் விடுதலை செய்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 850 இந்தியர்களையும் விடுதலை செய்துள்ளது. அதை தனது […]

Continue Reading

நீதிமன்றமே சொன்னாலும் 8 வழிச்சாலை அமைப்போம்: பொன்.ராதாகிருஷ்ணன் பற்றிய செய்தி உண்மையா?

நீதிமன்றமே சொன்னாலும் சேலம் 8 வழிச் சாலை அமைப்பது உறுதி என்று மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் படத்துடன், “நீதிமன்றமே சொன்னாலும் 8 வழிச் சாலை வருவது உறுதி” என்று உள்ளது. பார்க்க, தனியார் செய்தித் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு போல உள்ளது. இதன் “கீழே, […]

Continue Reading

அர்விந்த் கெஜ்ரிவால் பேசியதற்கும், தமிழ்நாடு வேலை தமிழருக்கே என்பதற்கும் என்ன தொடர்பு?

‘’தமிழ்நாடு வேலை தமிழருக்கே போராட்டம் விளைவு,’’ என்று கூறி ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: #தமிழ் பிரிவினை போராட்டம் விளைவு…!#அனைத்து மாநிலங்களிலும் #மொழி #பிரிவினை பேச #ஆரம்பித்தால் நிலைமை நினைத்து பாருங்கள்..? மே 4ம் தேதி பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், கெஜ்ரிவால் பற்றி நியூஸ்7 தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியை இணைத்து, ‘’தமிழ் பிரிவினை போராட்டம் விளைவு, அனைத்து மாநிலங்களிலும் மொழி பிரிவினை பேச ஆரம்பித்தால் நிலைமை […]

Continue Reading

சிதம்பரத்தில் திமுக வன்னியர்கள் எனக்கு ஓட்டுப் போட வேண்டாம் என்று திருமாவளவன் சொன்னாரா?

‘’சிதம்பரத்தில் திமுக வன்னியர்களின் ஓட்டு எனக்குத் தேவையில்லை என்று திருமாவளவன் பேசியதால் பரபரப்பு,’’ எனும் தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். அதன் விவரம் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது. தகவலின் விவரம்:வன்னியர்கள் ஓட்டு எனக்கு தேவையில்லை திருமாவளவன் திட்டவட்டம்.பிரச்சாரம் செய்ய ஊருக்குள் அனுமதிக்காததால் திருமாவளவன் ஆத்திரம். Archived Link ஏப்ரல் 11ம் தேதியன்று, இந்த பதிவை கோபிநாத் தமிழன் என்பவர் பகிர்ந்துள்ளார். இதில், திருமாவளவனின் புகைப்படத்தை பகிர்ந்து,’’வன்னியர்கள் ஜாதி […]

Continue Reading

சைமன் என்று வேட்புமனுவில் குறிப்பிட்ட சீமான்?- பரவும் போலி வேட்பு மனு

2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட சீமான், தன்னுடைய வேட்பு மனுவில் சைமன் என்னும் சீமான் என்று குறிப்பிட்டதாக ஒரு வேட்பு மனுவின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நாம் தமிழர் சீமான். வேட்புமனுவில் தன் உண்மையான பெயர் சைமன் என்றும் தன் தந்தை பெயர் செபாஸ்டியன் என்றும் குறிப்பிட்ட பத்திரம் போட்டோ. Archived link நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 2016 சட்டமன்ற […]

Continue Reading

அமிதாப் குடும்பத்தினருக்கு மாதம் ரூ.50 ஆயிரம் பென்ஷன் அறிவித்தாரா யோகி ஆதித்யநாத்?

அமிதாப் பச்சன், அவர் மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச்சன், அவர் மனைவி ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோருக்கு உ.பி பா.ஜ.க அரசு தலா ரூ.50 ஆயிரம் பென்ஷன் வழங்குவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: BJP-யின் ஆட்சி ஒரு மானங்கெட்ட ஆட்சி என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு ! Archived link அமிதாப்பச்சன், ஜெயாபச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் […]

Continue Reading

அன்புமணி ராமதாஸ் மீது 12 குற்ற வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுவது உண்மையா?

‘’இந்தியா முழுவதும் போட்டியிடும் மொத்த வேட்பாளர்களில் குற்ற வழக்குகள் அதிகம் உள்ள வேட்பாளர் அன்புமணி ராமதாஸ்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. ஆதாரத்திற்கு, தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டையும் சேர்த்து பகிர்ந்துள்ளதால், இந்த பதிவில் எந்தளவுக்கு உண்மை உள்ளது என ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link Hemanathan Murugesan என்பவர் திமுக இணையதள அணி என்ற ஃபேஸ்புக் குழுவில் இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதில், தந்தி டிவி […]

Continue Reading

அம்மா அனுப்பும் பணத்தில் மோடி உல்லாச வாழ்வு வாழ்கிறாரா?

அம்மா அனுப்பும் பணத்தில் மோடி உல்லாச வாழ்வு வாழ்வதாகக் கூறி, ஒரு ஃபேஸ்புக் பதிவு வைரலாகி வருகிறது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். அதில் கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்துள்ளோம். தகவலின் விவரம்: தரமான வடை ஜி ??? Archived Link இந்த பதிவை ஏப்ரல் 24ம் தேதியன்று, அரசியல் உண்மைகள் 2.0 என்ற ஃபேஸ்புக் ஐடி வெளியிட்டுள்ளது. இதில், நியூஸ் 7 தொலைக்காட்சி பெயரில் வெளியான நியூஸ் கார்டை வைத்து, அதன் கீழே பதிவரின் […]

Continue Reading

கேரள பள்ளிகள் அனைத்தும் தமிழில் தகவல் தொழில்நுட்ப பாடம் நடத்த பினராயி விஜயன் உத்தரவிட்டாரா?

கேரளாவில் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தமிழில் தகவல் தொழில்நுட்ப புத்தகங்களை வெளியிடவும், தமிழ் படிக்கும் மாணவர்களுக்கக சிறப்பு தமிழ் ஆசிரியர்களை நியமிக்கவும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம் Archived link கேரள முதல்வர் பினராயி விஜயன் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே,” கேரளாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் […]

Continue Reading

கூடங்குளம் அணு உலையில் சரி செய்ய முடியாத அளவுக்கு பிரச்னை உள்ளதா?

‘’கூடங்குளம் அணு உலை மிகவும் பாதுகாப்பானது என்று அப்துல் கலாம் உரையாற்றினார். அவர் இறந்து நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், இன்று மத்திய அரசு அணு உலையில் சரி செய்ய முடியாத தொழில்நுட்ப பிரச்னைகள் இருக்கிறது,’’ என்ற தலைப்பில் ஒரு பதிவு அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link ‘’கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து மக்கள் போராடினார்கள். மத்திய மாநில அரசுகள் எவ்வளவோ எடுத்துக்கூறியும் மக்கள் போராட்டத்தில் […]

Continue Reading

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாததற்கு மாநில அரசுகள் காரணமா?

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாததற்கு, மாநில அரசுகள்தான் காரணம், என்ற தலைப்பில் தினமலர் வெளியிட்ட வீடியோ, வைரலாகப் பரவி வருகிறது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:ஏன்�பெட்ரோல் டீசல் ஜி.எஸ்.டி.யில் வரவில்லை? | Petrol | Diesel price | GST #gst #petrol #diesel Archived Link ஏப்ரல் 4ம் தேதி இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி மற்றும் பெட்ரோல், டீசல் விலை போன்ற வார்த்தைகள் இருப்பதன் காரணமாக, பலரும் […]

Continue Reading

மூளைச்சாவு என்பது ஏமாற்று வேலையா?

“மூளைச்சாவு பித்தலாட்டத்தின் உச்சம்! மூளை இறக்குமா? இந்த பதிவு விழிப்புணர்வுக்கானது” என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதில், மூளைச்சாவு என்பது மக்களை ஏமாற்றும் மோசடி என்று கூறப்பட்டுள்ளது. இந்த பதிவின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: மூளைச்சாவு – பித்தலாட்டத்தின் உச்சம் ! https://www.facebook.com/groups/638741463130558/permalink/904744589863576/ Archived link மூளைச்சாவு என்ற பெயரில் உடல் உறுப்புக்கள் கொள்ளை  அடிக்கப்படுகின்றன என்று மிகப்பெரிய கட்டுரை வடிவில் பதிவு உள்ளது. இதில், முக்கிய […]

Continue Reading

திருச்சியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தி.க உறுப்பினர் – வேகமாகப் பரவும் தகவல் உண்மையா?

திருச்சியில் 6 வயது சிறுமியைக் கற்பழித்த பாலியல் வழக்கில் தலைமறைவான தி.க உறுப்பினரை போலீசார் பிடிக்கும் வரை ஷேர் செய்யுங்கள், என்று ஒரு பதிவு வேகமாக ஷேர் செய்யப்படுகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link பெரியார் சிலை அருகே நிற்கும் ஒருவரின் படம் பகிரப்பட்டுள்ளது. அதில், மேலே திருச்சியில் 6 வயது சிறுமி கற்பழிப்பு பாலியல் வழக்கில் தலைமறைவான தி.க உறுப்பினர் இவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. படத்தின் கீழ் பகுதியில், போலீசார் […]

Continue Reading

டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடினால் கைது செய்யக்கூடாது – சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையா?

டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடினால் கைது செய்யக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: தீர்ப்புக்கு நன்றிங்க அய்யா.. Archived link டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடும் யாரையும் கைது செய்யக் கூடாது என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு என்று இதில் கூறப்பட்டுள்ளது. இதன் கீழ் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் […]

Continue Reading

கோமதி மாரிமுத்துவிற்கு ஒரு டஜன் ஷூ அனுப்பி வைக்கப்படும்: கனடா பிரதமர் பற்றி வதந்தி

‘’கோமதி மாரிமுத்து கிழிந்த ஷூவுடன் ஓடியதை கேள்விப்பட்ட கனடா பிரதமர் வேதனை‘’, என்ற தலைப்பில் ஃபேஸ்புக் செய்தி ஒன்றை காண நேரிட்டது. நியூஸ் 18 தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு போலவே, அச்சு அசலாக வெளியிடப்பட்டுள்ள இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: #அதிகம்_பகிரவும் இந்தா வந்துட்டான்டா என் தலைவேன்… ????தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே ஒப்பற்ற தலைவன்… நீங்க நல்லா இருக்கணும்… ??? Archived Link ரிடயர்டு ரவுடி 3.0 என்ற ஃபேஸ்புக் குழு, […]

Continue Reading

அய்யாவழி பால பிரஜாபதி அடிகளார் வீட்டில் இருந்து ரூ.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதா?

அய்யா வழி பிரிவைச் சேர்ந்த பால பிரஜாபதி அடிகளார் வீட்டில் திடீர் சோதனை நடத்தப்பட்டதாகவும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வசந்தகுமார் கொடுத்த ரூ.25 லட்சம் அவர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டதாகவும் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம் பணத்தை வாங்கிட்டுதான் மோடிக்கு எதிரா பேசினியா, நீ இந்து மதத்தில் இருக்க தகுதியற்றவன், உணர்வு அற்றவனே,,, Archived link நியூஸ்7 வெளியிட்ட  நியூஸ்கார்டில், […]

Continue Reading

நாடு முழுவதையும் தீ வைத்துக் கொளுத்துவோம் என்று மிரட்டிய யோகி ஆதித்யநாத்? – அதிரவைக்கும் ஃபேஸ்புக் பதிவு

ஒரு வேளை எங்கள் அரசு வீழ்ந்துவிட்டால் நாட்டை தீ இட்டு கொளுத்துவோம் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாக ஒரு தொலைக்காட்சி நியூஸ் கார்டு வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: காவிக்காலி..! ஆமா, இது தமிழ் ஊடகங்களுக்குத் தெரியலையே ஏன்? வெங்காயத்தான்க இதுக்கொரு விவாதம் வைக்கலாம்தானே! Archived link செய்தி நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் வெளியிடும் பிரேக்கிங் கார்டில், யோகி ஆதித்யநாத் படம் உள்ளது. அருகில் இந்தி வார்த்தைகள் உள்ளன. […]

Continue Reading

இலங்கையில் முஸ்லீம் ஹோட்டலில் வைத்திருந்த ஆண்மை இழப்பு மருந்து பறிமுதல்: உண்மை என்ன?

‘’இலங்கையில் முஸ்லீம் ஹோட்டலில் உணவில் கலக்க வைத்திருந்த ஆண்மை இழப்பு மருந்து பறிமுதல்,’’ என்ற தலைப்பில், ஒரு ஃபேஸ்புக் வைரல் செய்தியை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். இதில் தெரியவந்த விவரம், இந்த செய்தித்தொகுப்பில் தரப்பட்டுள்ளது. வதந்தியின் விவரம்: …தமிழர் வேலை தமிழருக்கே !!! – இது டிரண்டிங் செய்தி இலங்கையில் முஸ்லீம் ஹோட்டல் உணவில் கலக்க வைத்திருந்த ஆண்மை இழப்பு /மலடு மருந்து பிடிபட்டது – உண்மைசெய்தி  தமிழக மக்கள் […]

Continue Reading

ராகுல் காந்தி கொலம்பிய நாட்டு பெண்ணை திருமணம் செய்துள்ளார்: ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி

ராகுல் காந்தி கொலம்பிய பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார் என்று ஃபேஸ்புக்கில் ஒரு வதந்தி பரவி வருகிறது. இது உண்மையா என்ற கோணத்தில் ஆய்வு செய்தோம். வதந்தியின் விவரம்: …விக்கிலீக்ஸ் செய்தியின் படி, ராகுல்காந்தி கொலம்பிய நாட்டு பெண்ணை திருமணம் செய்துள்ளார். மகன் NIYEK வயது 14 , மகள் MAINK வயது 10 , லண்டனில் உள்ளனர்… Archived Link மே 6ம் தேதி Guru Krishna என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதனை பலரும் […]

Continue Reading

உமாபாரதி நிற்கும் ஸ்டூலை தாங்கிப்பிடித்தவர் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியா?

சுய மரியாதையோடு வாழக் கற்றுத்தந்தது திராவிடம், என்று மத்திய அமைச்சர் உமா பாரதி நிற்கும் ஸ்டூலை, ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் மேடையில் அமர்ந்து பிடிப்பது போன்ற படம் ஒன்று சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: திராவிடம் என்ன செய்தது ??கேட்க்கும் முட்டாள் கூட்டமே இது போன்ற இழி பிறவிகளிடமிருந்து நம்மை காத்து சுயமரியாதையோடு வாழவைத்தது திராவிடம் Archived link இதில் உள்ள புகைப்படத்தில், மேடை மீது […]

Continue Reading

பானி புயல் தமிழகத்திற்கு வராமல் போனதற்கான காரணம் மோடியா?

‘’பானி புயல் தமிழகத்திற்கு வராமல் போனதற்கு மோடி செய்த சதிதான் காரணம்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா அல்லது வேண்டுமென்றே குசும்புத்தனம் உள்ளவர்கள் செய்த விஷமத்தனமா என்ற நோக்கில் ஆய்வு செய்தோம். வதந்தியின் விவரம்: …. பானி புயல் தமிழகத்திற்கு வராமல் போனதற்கான காரணம் …__________________________________ கீழே உள்ள படத்தில் இருப்பது காற்றாலை போல காட்சி தரலாம் ஆனால் இவை மிக வேகமாக சுழலக்கூட்டிய ராட்சத இஞ்சின்களை கொண்ட […]

Continue Reading

நாக்பூர் ஆர்.பி.ஐ பெட்டகத்திலிருந்து 200 டன் தங்கம் மாயமா?

நாக்பூர் இந்திய ரிசர்வ் வங்கி பெட்டகத்தில் இருந்து 200 டன் தங்கம் மாயமாகிவிட்டதாகவும் சௌகிதார் மோடி களவாணி, என்று ஒரு பதிவு சமூக ஊடகத்தில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நாக்பூர் RBI பெட்டகத்தில் இருந்து 200டன் தங்கத்தை காணவில்லையாம்…சௌகிதார் மோடி களவாணி ஹே. ! Archived link சுவரில் ஓட்டை ஓட்டு, சிலர் பணத்தைக் கொள்ளை அடித்து செல்வது போலவும், காவலாளி போல் மார்ஃபிங் செய்யப்பட்ட மோடியிடம் மக்கள் […]

Continue Reading

வறுமையில் ஆடு மேய்க்கிறாரா எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு மாணவி?

‘’திருச்சி அருகே வறுமையால் ஆடு மேய்க்கும் எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு மாணவி. முடிந்தால் ஷேர் செய்து அவருக்கு உதவியை பெற்றுத்தாருங்கள்,’’ என்று ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: திருச்சி அருகில் வறுமையால் ஆடு மேய்க்கும் MBBS முதல் ஆண்டு மாணவி.உங்களால் முடிந்தால் #Share செய்து உதவியை பெற்றுக்குடுங்கள். Archived link இளம் பெண் ஒருவர் ஆடு மேய்த்துக்கொண்டிருக்கிறார். இயக்குநர் சசிகுமார் படம் மற்றும் பெயரில் உள்ள […]

Continue Reading

தண்ணீரில் வெண்ணெய் எடுக்கும் மோடி: ஃபேஸ்புக் செய்தியின் உண்மை அறிவோம்!

‘’தண்ணீரில் வெண்ணெய் எடுக்கும் மோடி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்ய தீர்மானித்தோம். முடிவுகள் இதோ… தகவலின் விவரம்: …தண்ணியில வெண்ணை எடுக்கிறவர கண்டிருக்கிங்களா? அவர்தான்மோடி..! இனியும் அனுமதிக்கலாம் அவரின் ஆட்சியை..?… Archived Link ஏப்ரல் 14ம் தேதி வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’ தண்ணியில வெண்ணை எடுக்கிறவர கண்டிருக்கிங்களா? அவர்தான்மோடி..! இனியும் அனுமதிக்கலாம் அவரின் ஆட்சியை..?,’’ எனக் கேட்டுள்ளனர். கீழே, மோடியின் புகைப்படம், தி இந்துவில் […]

Continue Reading

36 தொழிலதிபர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியதற்கு மோடி காரணமா?

‘’மல்லையா, நிரவ் மோடி உள்பட 36 தொழிலதிபர்கள் இந்தியாவை விட்டு ஓடிவிட்டார்கள் என்று அமலாக்கத் துறை கூறியுள்ளது,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் ஒரு வைரல் செய்தியை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Linkஅரசியல் I Support Thirumurugan Gandhi என்ற ஃபேஸ்புக் குழு, கடந்த ஏப்ரல் 16ம் தேதி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், மோடி, மல்லையா உள்ளிட்ட 36 தொழிலதிபர்கள், நாட்டை விட்டு தப்பியோடிவிட்டதாக, அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் […]

Continue Reading

பங்காரு அடிகளாருக்கு பாத பூஜை செய்தாரா ஸ்டாலின்?

மேல் மருவத்தூர் பங்காரு அடிகளாருக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பாத பூஜை செய்வது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் அதிக அளவில் வைரலாகி வருகிறது. இததைப் பற்றி ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: அருள்புரிவாயே ஆதிபராசக்தி!!! தாயே!! Archived link தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாருக்கு பாத பூஜை செய்கிறார். அருகில், கவிஞர் கனிமொழி இருக்கிறார். மே 1ம் தேதி டிஎம்கே ட்ரோல் மீ மீ என்ற பக்கம் […]

Continue Reading

கட்டண சேனல்களுக்கு கட்டுப்பாடு விதித்தாரா கெஜ்ரிவால்?

விளம்பரம் ஒளிபரப்பும் தொலைக்காட்சிகள் நேயர்களிடம் கட்டணம் வசூலிக்கவும்  கட்டண சேனல்களில் விளம்பரம் ஒளிபரப்பவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தடை விதித்துள்ளதாக சமூக ஊடகங்களில் ஒரு தகவல் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்… தகவலின் விவரம்: Archived link அனைத்து கட்டண சேனல்களுக்கும் டெல்லி அரசு அதிரடி உத்தரவு… கட்டண சேனல்களில் விளம்பரம் இருக்கக் கூடாது. விளம்பரம் வெளியிடும் தொலைக்காட்சிகள் மக்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது. கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கும் சேனல்களுக்கு […]

Continue Reading

ஐ.எம்.எஃப் தலைவராக மயில்சாமியை நியமிக்க ஷேர் செய்யுங்கள்: ஃபேஸ்புக் வதந்தி

ஐ.எம்.எஃப் எனப்படும் சர்வதேச செலாவணி நிதியம் அமைப்பின் தலைவராக நடிகர் மயில்சாமியை நியமிக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தமிழர் என்பதால் மத்திய அரசு முட்டுக்கட்டை போடுவதாகவும் ஒரு படம் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: விரைந்து ஷேர் செய்யுங்கள் போராளிகளே . தமிழண்டா .. Archived link மயில்சாமியின் பொருளாதார அறிவைப் பார்த்து வியந்த இன்டர்நேஷனல் மானிட்டரி ஃபண்ட் அமைப்பு அவரை தலைவராக நியமிக்க முடிவு செய்துள்ளதாகவும் […]

Continue Reading

ராகவா லாரன்ஸ் சீமானுக்கு பகிரங்க சவால்: பாலிமர் செய்தி உண்மையா?

‘’சீமானுக்கு ராகவா லாரன்ஸ் பகிரங்க சவால்,’’ என்ற தலைப்பில், பாலிமர் நியூஸ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள வீடியோவை பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். எனவே, இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:…ராகவா லாரன்ஸ் சீமானுக்கு பகிரங்க சவால் #RaghavaLawrence #Seeman … Archived Link ஏப்ரல் 15ம் தேதி இந்த வீடியோ செய்தியை, பாலிமர் நியூஸ் வெளியிட்டுள்ளது. இதில், சீமான் நடிகர் ராகவா லாரன்ஸ் பற்றி விமர்சித்துப் பேசுகிறார். அதற்கு, ராகவா லாரன்ஸ் […]

Continue Reading

காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் உண்மையில் ஒரு முஸ்லீம்: ஃபேஸ்புக் செய்தியால் சர்ச்சை

‘’காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன், பிராமணர் வேஷத்தில் வாழும் ஒரு முஸ்லீம்; அவனது உண்மையான பெயர் தாவூத் நவுஷத் கான்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதனை பலரும் ஷேர் செய்து வருவதால், இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். வதந்தியின் விவரம்:…”Dawood Naushad Khan who claimed himself as Brahmin” உண்மையை அறிய கடைசி வரை முழுவதுமாக படிக்கவும். அனைவராலும் பரவலாக பேசப்பட்ட சம்பவம். காஞ்சிபுரம் குருக்கள் தேவநாதன் கருவறைக்குள் […]

Continue Reading

கடலில் இருக்கும் அபூர்வ விநாயகர்; ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

இதுதான் கடலில் இருக்கும் அபூர்வ விநாயகர் சிலை. இதை உடனே பகிர்ந்தால் நல்லது நடக்கும் என்று கூறி ஒரு புகைப்படம் ஃபேஸ்புக்கில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அந்த தகவலின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link கோவில் அர்ச்சகர் ஒருவர், கோட்டைச் சுவர் போன்று இருக்கும் இடத்தில் தண்ணீரில் பாதி மூழ்கி இருக்கும் விநாயகர் சிலையைத் தொடுவது போல இந்த படம் உள்ளது. அதில், இது கடலில் இருக்கும் அபூர்வ விநாயகர் […]

Continue Reading

பெங்களூருவில் பிறந்த நாள் கொண்டாடிய மாணவனை அடித்துக் கொன்ற நண்பர்கள்: வைரல் வீடியோ உண்மையா?

‘’பெங்களூரில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது அடித்து விளையாடியதில் மாணவன் உயிரிழப்பு,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்:பெங்களூரில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது அடித்து விளையாடியதில் மாணவன் உயிரிழப்பு #sunnews Archived Link மே 3ம் தேதி இந்த பதிவை, சன் நியூஸ் சேனல் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இது, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பெங்களூருவில் உள்ள இந்தியன் […]

Continue Reading

மதம் மாறிய திரை பிரபலங்கள்; இணையதளத்தில் வெளியான செய்தி உண்மையா?

தமிழ் சினிமாவில் இது வரை மதம் மாறிய நடிகர் – நடிகைகளின் அதிர்ச்சி பட்டியல் மற்றும் பின்னணி தெரியவந்துள்ளதாக TNNews24 என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தியின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: தமிழ் சினிமாவில் இதுவரை மதம் மாறிய நடிகை நடிகைகளின் பட்டியல் அதிர்ச்சி அளிக்கும் பின்னணி தகவல்கள். Archived link 1 Archived link 2 நடிகர்கள் ரஜினி, அஜித், சரத்குமார் உள்ளிட்டவர்கள் அமர்ந்திருக்கும் படத்துடன், மதம் மாறிய நடிகர்கள் […]

Continue Reading

28 பேரின் உயிரைக் காப்பாற்றி உயிரிழந்த பஸ் டிரைவர்… வைரல் படம் உண்மையா?

‘’பேருந்தில் இருந்த 28 பேரின் உயிரைக் காப்பாற்றிவிட்டு இறந்த டிரைவர் மாரிமுத்து. உங்களிடம் ஒரு நிமிடம் இருந்தால் ஆர்.ஐ.பி என்று டைப் செய்யவும்,’’ என்ற தலைப்பில் ஒரு படம் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: பேருந்தில் இருந்த 28 பேரின் உயிரைக் காப்பாற்றி விட்டு இறந்த டிரைவர் மாரிமுத்து .உங்களிடம் ஒரு நிமிடம் டைம் இருந்தால் இவருக்காக Rip என்று கமெண்ட் செய்யவும் . Driver saves lives […]

Continue Reading

பத்தாம் வகுப்பு தேர்வில் 97.3% மதிப்பெண் எடுத்து ஏழை மாணவி ரோகினி சாதனை: ஃபேஸ்புக் பொய் செய்தி

‘’ 10 வகுப்பு தேர்வில் 97.3% மதிப்பெண் எடுத்து ஏழை குடும்பத்து மாணவி ரோகினி சாதனை,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் ஒரு வைரல் செய்தி மற்றும் புகைப்படத்தை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மையை பரிசோதிக்க தீர்மானித்தோம். தகவலின் விவரம்:10 வகுப்பு தேர்வில் 97.3% மதிப்பெண் எடுத்து ஏழை குடும்பத்து மாணவி ரோகினி சாதனை. சினிமா நடிகைகளுக்கு லைக் ,ஷேர் வரும் .இந்த சகோதரிக்கு ஒரு ஷேர் வருமா ?அப்பிடியே என்னோட Page ah லைக் பண்ணி Support […]

Continue Reading

சிவப்பு சட்டை அணிந்து மேல்மருவத்தூர் சென்ற ஸ்டாலின்: இணைய தள செய்தி உண்மையா?

‘’சிவப்பு சட்டை அணிந்து மேல் மருவத்தூர் சென்றால் முதல்வர் பதவி கிடைக்கும் என்று மே தினத்தன்று தில்லாலங்கடி ஆடிய மு.க.ஸ்டாலின்,’’ என்ற தலைப்பில் ஒரு செய்தி இணையத்தில் பரவிவருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: சிகப்பு சட்டை அணிந்து மேல்மருவத்தூர் சென்றால் முதல்வர் பதவி மே தினத்தில் தில்லாலங்கடி ஆடிய ஸ்டாலின் பரபர பின்னணி. Archived link 1 Archived line 2 மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டவர்கள் சிவப்பு நிற சட்டை அணிந்து ஊர்வலமாக […]

Continue Reading

ஃபானி புயல் ஒடிசாவை தாக்க பாஜக.,தான் காரணம் என்று ராகுல் காந்தி சொன்னாரா?

‘’பானி புயல் ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரா போன்ற மாநிலங்களை தாக்குவதற்கு, பாஜக.,வின் சதிதான் காரணம்,’’ என்று ராகுல் காந்தி சொன்னதாகக் கூறி, பலரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்து வருகிறார்கள். இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவை எம்பெட் செய்ய முடியவில்லை என்பதால், அதனை ஸ்கிரின்ஷாட் எடுத்து இங்கே பகிர்ந்துள்ளோம். Nagarajan Sai என்பவர் பகிர்ந்துள்ள இந்த பதிவு உண்மையா, பொய்யா என பரிசோதிக்கும்படி, நமது வாசகர் தரப்பில் இருந்து […]

Continue Reading

7000 ஆண்டுகளாக நந்தி வாயில் இருந்து வழியும் நீர்: ஃபேஸ்புக் செய்தியால் சர்ச்சை

‘’7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர்,’’ என்ற தலைப்பில் வைரலாகி வரும் ஃபேஸ்புக் வீடியோ பதிவு ஒன்றை காண நேரிட்டது. இது உண்மையா எனக் கண்டறியும் சோதனையில் ஈடுபட்டோம். அதில், கிடைத்த விவரங்கள் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது. தகவலின் விவரம்: 7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம் நம் முன்னோர்களால் கட்டப்பட்டுள்ள பெரும்பாலான கோவில்களில் நம் அறிவிற்கு புலப்படாத ஏதோ ஒரு ஆச்சர்யம் […]

Continue Reading

கங்கை நீர் கண்ணாடி போல சுத்தமாகிவிட்டதா?

கங்கை நதி மிகவும் தூய்மையாக மாறிவிட்டது போலவும், அதில் இருந்து பிரியங்கா காந்தி தண்ணீர் அருந்துவது போலவும் ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். உண்மை அறிவோம்: மறுப்போர் இல்லை… Archived link கங்கை நதி முன்பு இருந்த நிலை, இப்போது இருக்கும் நிலை என்று கொலாஜ் செய்யப்பட்ட புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. முதல் படத்தில், கங்கை நதி மாசடைந்து, சாக்கடை போல உள்ளது. அதில் மன்மோகன் சிங் படம் […]

Continue Reading