பிரதமர் மோடி சாதுக்களுடன் இருக்கும் புகைப்படத்தை வைத்து பொருளாதாரத்தை சரி செய்ய ஆலோசனை என கிண்டல்!

பொருளாதாரத்தை சரி செய்வது எப்படி என சன்னியாசிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார் என்று ஒரு புகைப்படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive பிரதமர் மோடி இந்து மதத் துறவிகளுடன் அமர்ந்து பேசும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதனுடன், “பொருளாதாரத்தை சரி செய்வது எப்படி? மயில்களுக்கு அரிசி போடுவது எப்படி? – நிபுணர்களுடன் […]

Continue Reading

விவசாயிகள் போராட்ட வீடியோவை எடுத்து நுபுர் சர்மா கைது என்று பரப்பும் நெட்டிசன்கள்!

‘’நுபுர் சர்மா கைது செய்யப்பட்டார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:பாஜக.,வைச் சேர்ந்த நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோர் சமீபத்தில் நபிகள் நாயகம் பற்றி தெரிவித்த கருத்து, பெரும் சர்ச்சையை சர்வதேச அளவில் ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக, இஸ்லாமிய நாடுகள் பலவும் இந்தியாவிற்கு கண்டனம் […]

Continue Reading

அரபு நாடுகளில் பணிபுரிவோர் உண்மையான இந்துக்கள் அல்ல என்று அர்ஜூன் சம்பத் கூறினாரா?

‘’அரபு நாடுகளில் பணிபுரியும் இந்துக்கள் உண்மையான இந்துக்கள் அல்ல,’’ என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக, ஒரு பதிவு சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: வாட்ஸ்ஆப் வழியே வாசகர் ஒருவர் நமக்கு இதனை அனுப்பியிருந்தார். இதே ஸ்கிரின்ஷாட் பதிவை, பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்கின்றனர். Facebook Claim Link I Archived Link கமெண்ட்களில் கூட அர்ஜூன் சம்பத் நிஜமாகவே இப்படி கூறியதாகப் […]

Continue Reading

Rapid FactCheck: ஹிட்லருடன் மோடியை ஒப்பிட்டு டைம் ஊடகம் அட்டைப் படம் வெளியிட்டதா?

‘’ஹிட்லருடன் ஒப்பிட்டு மோடி புகைப்படத்தைச் சித்தரித்து டைம் ஊடகம் அட்டைப் படம் வெளியிட்டது,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் பலர் உண்மை போல குறிப்பிட்டு, ஷேர் செய்வதைக் கண்டோம். Twitter Claim Link […]

Continue Reading

அக்னிபத் போராட்டக்காரர்களைச் சுட்டுத் தள்ள வேண்டும் என்று பா.ஜ.க.,வின் நிர்மல் கூறினாரா?

மத்திய அரசின் அக்னிபத் போராட்டக்காரர்களைச் சுட்டுத் தள்ளுங்கள் என்று தமிழ்நாடு பா.ஜ.க-வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநிலத் தலைவர் நிர்மல் குமார் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமூர் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அக்னிபத் போராட்டக்காரர்களை சுட்டுத்தள்ளுங்கள். மத்திய அரசின் அக்னிபத் […]

Continue Reading

அக்னிபாத் திட்டத்திற்கு மாற்றாக ஜலபாத் திட்டம் என்று மோடி அறிவித்தாரா?

‘’அக்னிபாத் திட்டத்திற்கு மாற்றாக ஜலபாத் என்ற புதிய திட்டத்தை மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிவித்தார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +919049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது, ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றில் பலர் இதனை ஷேர் செய்வதைக் கண்டோம். […]

Continue Reading

இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் இருந்து அம்மா உணவகங்களுக்கு சமையல் எண்ணெய் வாங்கும்படி அண்ணாமலை கூறினாரா?

அம்மா உணவகங்களுக்கு தேவையான சமையல் எண்ணெயை இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் இருந்து வாங்க வேண்டும் என்று அண்ணாமலை தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்ததாகக் கூறி சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். இதேபோல, ஃபேஸ்புக்கிலும் இதனை சிலர் உண்மை போல குறிப்பிட்டு, பகிர்வதைக் கண்டோம். Facebook Claim […]

Continue Reading

தமிழ்நாட்டில் ஏற்றப்பட்ட பாஜக கொடி?- எடிட் செய்த புகைப்படத்தால் சர்ச்சை…

‘’தமிழ்நாட்டில் ஏற்றப்பட்ட பாஜக கொடி ,’’ என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட புகைப்படத்தை ஏற்கனவே பாஜக.,வின் கர்நாடகா நிர்வாகி சிடிஆர்.ரவி அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். CTR Ravi Tweet Link I Archived Link அதற்கு கமெண்ட் அளித்துள்ள பலரும் தெலுங்கானா மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி பகிர்ந்த […]

Continue Reading

கத்தார் ஏர்வேஸ் தலைமைச் செயல் அதிகாரியின் பதிலடி என்று பகிரப்படும் வதந்தி…

‘’Bycott ஹேஷ்டேக் விவகாரத்தில் கத்தார் ஏர்வேஸ் தலைமைச் செயல் அதிகாரியன் பதிலடி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link வாசுதேவ் என்பவர் கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தை புறக்கணிப்பதாக, வீடியோ வெளியிட்டதை தொடர்ந்து, கத்தார் ஏர்வேஸ் சிஇஓ நேரடியாக ஒரு Spoof வீடியோவை அல் ஜசீரா டிவி உதவியுடன் வெளியிட்டுள்ளார் என்று இந்த ஃபேஸ்புக் […]

Continue Reading

பிரம்மபுத்திரா ஆற்றின் கீழ் கட்டப்பட்ட 14 கி.மீ சுரங்கப்பாதையா இது?

இந்தியாவின் முதல் நீருக்கடியில் அமைக்கப்பட்ட சாலை மற்றும் ரயில் பாதை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி கையசைக்கும் புகைப்படங்கள் மற்றும் தண்ணீருக்கு அடியில் அமைக்கப்பட்ட சாலை மற்றும் ரயில் பாதையின் மாதிரி படம் ஆகியவற்றை இணைத்து புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியாவின் முதல் நீருக்கடியில் சாலை மற்றும் ரயில் பாதை, இத […]

Continue Reading

ரூ.50 லட்சத்தை அண்ணாமலையிடம் ஒப்படைத்தேன் என கார்த்திக் கோபிநாத் கூறினாரா?

கோவிலைப் புதுப்பிப்பதாகக் கூறி வசூலித்த ரூ.50 லட்சத்தை அண்ணாமலையிடம் வழங்கினேன் என்று கார்த்திக் கோபிநாத் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கோவிலைப் புனரமைக்கப்போவதாகக் கூறி பணம் வசூலித்து முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட கார்த்திக் கோபிநாத், பா.ஜ.க தலைவர்களுடன் இருக்கும் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கார்த்திக் கோபிநாத் போலீசில் பரபரப்பு […]

Continue Reading

சவூதி அரேபியாவை விட குஜராத்தில் பெட்ரோல் விலை குறைவு என்று அண்ணாமலை கூறினாரா?

சவூதி அரேபியாவை விட குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைவு, என்று பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கூறியதாகக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் எண்ணில் (+91 9049053770) நமக்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் தகவல் தேடியபோது பலரும் ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim […]

Continue Reading

கோயில் சிலை உடைப்பு, பணம் வசூலில் அண்ணாமலைக்கும் தொடர்பு என்று யூடியுபர் கார்த்திக் கோபிநாத் கூறினாரா?

கோவில் சிலைகளை மிஷனரிகள் உடைத்ததாக வதந்தி பரப்பி பணம் வசூலித்ததில் அண்ணாமலைக்கும் தொடர்பு உள்ளது என்று கைது செய்யப்பட்ட யூடியூபர் கார்த்திக் கோபிநாத் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்று ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பாஜக கொள்ளையர்களின் கூடாரமாக மாறிய கோயில். மிஷினரிகள் கோயில் சிலைகளை உடைத்ததாக […]

Continue Reading

மோடியை வரவேற்க தமிழ்நாடு போக்குவரத்து போலீசாருக்கு காவி நிழற்குடைகளை திமுக அரசு வழங்கியதா?

‘’மோடியை வரவேற்பதற்காக, தமிழ்நாடு போக்குவரத்து போலீசாருக்கு காவி நிழற்குடைகளை அரசு வழங்கியுள்ளது,’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link உண்மை அறிவோம்:பிரதமர் மோடி கடந்த வாரம் (மே 26, 2022) தமிழ்நாட்டிற்கு வந்தார். இதன்போது, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. TOI Link I […]

Continue Reading

கர்நாடகா சட்டப்பேரவையை முற்றுகையிடுவோம் என்று அண்ணாமலை அறிவித்தாரா?

‘’கர்நாடகா சட்டப்பேரவையை முற்றுகையிடுவோம் என்று அண்ணாமலை அறிவிப்பு,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.   தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதே தகவலை பலரும் உண்மை என நம்பி, ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்டவற்றில் பகிர்வதையும் கண்டோம். Twitter Claim Link I Archived Link உண்மை […]

Continue Reading

வெளிநாட்டுப் பயணங்களின்போது மோடி மது அருந்துகிறாரா?

‘’வெளிநாட்டுப் பயணங்களின்போது மோடி மது அருந்துகிறார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக்கிலும் சிலர் இந்த புகைப்படத்தை தமிழ் மட்டுமின்றி இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை […]

Continue Reading

ராஜீவ் காந்தியின் கடைசி நிமிடங்கள் என்று பகிரப்படும் சினிமா காட்சியால் சர்ச்சை…

ராஜீவ் காந்தியின் கடைசி நிமிடங்கள் என்று கூறி சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link 2018ல் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ பதிவை இன்றளவும் உண்மை என நம்பி பலரும் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: குறிப்பிட்ட வீடியோவை பார்க்கும்போதே, அதில் கேமிரா பலவித கோணங்களில் ஆடாமல், அசையாமல் படம்பிடிப்பதையும், பின்னணி இசை ஒலிப்பதையும் தெளிவாக உணர முடிகிறது. உண்மையான […]

Continue Reading

காம படைத்தலைவர் எச்.ராஜா என போஸ்டர் ஒட்டப்பட்டதா?

பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஒட்டப்பட்ட போஸ்டரில் காம படைத் தலைவர் என எச்.ராஜாவை குறிப்பிட்டிருந்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எச்.ராஜா கைது கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டரின் படத்தை பகிர்ந்துள்ளனர். அதில், கண்டிகின்றோம்! கண்டிகின்றோம்!! காம படைத்தலைவர் H.ராஜா அவர்களை கைது செய்த தமிழக அரசையும், காவல் துறையையும் […]

Continue Reading

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு; உள்ளாடை போல சரிகிறது என்று ஜூஹி சாவ்லா கூறினாரா?

‘’அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவு, எனது ஜட்டி போல உள்ளது என்று நடிகை ஜூஹி சாவ்லா விமர்சனம் தெரிவித்து, ட்வீட் வெளியிட்டுள்ளார்,’’ என சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நமது வாட்ஸ்ஆப் சாட்போட் (+91 9049053770) எண்ணிற்கு வாசகர் ஒருவர் இதனை அனுப்பி, உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டிருந்தார். இதே ஸ்கிரின்ஷாட் பதிவை உண்மை என நம்பி, ஃபேஸ்புக், ட்விட்டர் […]

Continue Reading

ஆம் ஆத்மி கட்சி எம்.பி., சஞ்சய் சிங் தனது கட்சித் தலைவரை செருப்பால் அடித்தாரா?

ஆம் ஆத்மி கட்சி எம்.பி., சஞ்சய் சிங் தனது சக கட்சித் தலைவரை செருப்பால் அடித்த காட்சி, என்று கூறி சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்படும் வீடியோ ஒன்றை கண்டோம். அதுபற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இந்த வீடியோவை முதலில் நன்கு உற்றுப் பார்த்தாலே, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் அந்த வீடியோவில் கூட்ட அரங்கில் மோடி, யோகி ஆதித்யநாத் ஆகியோரின் உருவம் அடங்கிய பதாகை […]

Continue Reading

மோடி பேசினால் அமெரிக்கா வரை கேட்கும்; ஆனால் அவர்களுக்கு இந்தி புரியாது என்று அண்ணாமலை கூறினாரா?

‘’மோடி பேசினால் அமெரிக்கா வரை கேட்கும். ஆனால், அவர்களுக்கு இந்தி தெரியாது என்பதால் பேசியும் பயனில்லாத நிலை ,’’ என்று பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பேசியதாக, ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் மூலமாக நமக்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதனை ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றிலும் பலர் பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived […]

Continue Reading

இலங்கையை ஸ்டாலின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று செய்தியாளர் செந்தில் கூறினாரா?

இலங்கையை தமிழ்நாட்டுடன் இணைத்து ஸ்டாலின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று செய்தியாளர் செந்தில் கூறினார் என்று ஒரு ட்வீட் பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive செய்தியாளர் செந்தில் வேல் வெளியிட்டது போன்று ட்வீட் ஒன்றின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கையை தவிக்க விட்டுவிட்டு பிரதமர் மகிந்தா ராஜபக்சே தப்பியோட்டம் !! […]

Continue Reading

ஹெலிகாப்டரை முழுங்கும் சுறா மீன்; கிரண் பேடி வெளியிட்ட ட்வீட்டால் சர்ச்சை…

ஹெலிகாப்டரை முழுங்கும் சுறா மீன் என்று கூறி கிரண் பேடி வெளியிட்ட ட்வீட் ஒன்று மிக வைரலாகப் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link இது உண்மையா, பொய்யா என்ற குழப்பத்தில் பலரும் இந்த பதிவை ஷேர் செய்வதைக் காண முடிந்தது. Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இந்த பதிவு வைரலாகப் பரவிய நிலையில், பலராலும் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. […]

Continue Reading

பலுசிஸ்தான் மக்கள் பா.ஜ.க கொடியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனரா?

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மக்கள், இந்தியப் பிரதமர் மோடி தங்களுக்கு சுதந்திரம் பெற்றுத் தருவார் என்று பா.ஜ.க கொடியுடன் கொண்டாட்டம் மேற்கொண்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமிய பெண்கள் பாட்டுப் பாடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் ஒருவர் பாஜக கொடியை வைத்துள்ளார். ஒருவர் மோடி முகமூடி அணிந்து வருகிறார். நிலைத் தகவலில், “பாகிஸ்தானில் பாஜக கொடி……. பாகிஸ்தானில் […]

Continue Reading

பத்திரிகையாளர்களைப் பார்த்ததும் ஓ மை காட் என்று மோடி பதறினாரா?

ஊடகவியலாளர்களை பார்த்து பதில் சொல்ல முடியாமல் மோடி ஓ மை காட் என்று அலறினார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் நியூஸ் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “டென்மார்க்கில் ஷாக் ஆன பிரதமர் மோடி. டென்மார்க்கில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் “ஓ மை காட்” என்று மட்டும் கூறிச் சென்ற […]

Continue Reading

மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் 125 பள்ளிகளை மூட உத்தரவிட்டாரா?

மேற்கு வங்கத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் நடத்தப்படும் 125 பள்ளிகளை மூட உத்தரவிட்ட மம்தா பானர்ஜி, என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் செய்தி ஒன்றை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்டவற்றில் பலரும் ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link இது […]

Continue Reading

அடையாறு ஆனந்த பவன் முஸ்லீம் நபருக்கு விற்பனை செய்யப்பட்டதா?

‘’அடையாறு ஆனந்த பவனை முஸ்லீம் நபர் வாங்கியுள்ளார். ஹிந்துக்கள் மற்றும் சுத்த சைவ உணவுப் பிரியர்கள் கவனிக்கவும்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049044263) வழியே அனுப்பி, உண்மையா என கேட்டிருந்தார். இதனை ஃபேஸ்புக் பயனாளர்களும் ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:மேற்குறிப்பிட்ட தகவல் உண்மையா என […]

Continue Reading

பல்லக்கை தூக்க அண்ணாமலைக்கு அனுமதி இல்லை என்று தருமபுரம் ஆதீனம் கூறினாரா?

பட்டின பிரவேச பல்லக்கைத் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தூக்க அனுமதி இல்லை என்று தருமபுரம் ஆதீனம் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தருமபுரம் ஆதீனம் பதில். மரபாக சைவ வெள்ளாளர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் விழா என்பதால் அண்ணாமலை அவர்களுக்கு பட்டின பிரவேச […]

Continue Reading

2026 தேர்தலில் அண்ணாமலை முதல்வராக வர அதிமுக உழைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

‘’2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை முதல்வர் வேட்பாளராக நின்றால், அவருக்காக அதிமுக உழைக்கும்,’’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக, ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+91 9049044263) அனுப்பி உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், தகவல் தேடியபோது பலரும் உண்மை என நம்பி, ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்டவற்றில் பகிர்ந்து வருகின்றனர். Twitter Claim Link I […]

Continue Reading

குஜராத் மாநிலத்தில் தினசரி 8 மணிநேரம் மின் தடையா?

‘’குஜராத் மாநிலத்தில் தினசரி 8 மணிநேரம் மின் தடை மற்றும் தொழிற்சாலைகள் வாரத்தில் 2 நாள் இயங்க தடை,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது, பலரும் இந்த மீம் பதிவை உண்மை போல குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் […]

Continue Reading

பெட்ரோல், டீசல் வருமானத்தில் ராமர் கோயில், அனுமன் சிலை போன்ற வளர்ச்சித் திட்டங்கள் நடப்பதாக வானதி சீனிவாசன் கூறினாரா?

‘’பெட்ரோல், டீசல் வருமானத்தில் மத்திய அரசு ராமர் கோயில், அனுமன் சிலை நிறுவுதல் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது,’’ என்று வானதி சீனிவாசன் பேசியதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இந்த தகவலை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் (+91 9049044263) வழியே நமக்கு அனுப்பி உண்மையா எனக் கேட்டிருந்தார். இதன்பேரில், தகவல் தேடியபோது பலரும் இதனை உண்மை என நம்பி, ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் […]

Continue Reading

தேர் திருவிழா நடைபெறும் ஊர்களில் மின்தடை- தமிழ்நாடு அரசுக்கு அண்ணாமலை வேண்டுகோள் விடுத்தாரா?

‘’தேர் திருவிழா நடைபெறும் ஊர்களில் மின்சாரம் நிறுத்தினால், விருந்தாளிகள் ஊர் திரும்பாமல் திருவிழா தடையின்றி நடைபெறும் என்று தமிழக அரசுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுகோள்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link ஜூனியர் விகடன் லோகோ இணைத்து பகிரப்பட்டுள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’மின்சாரத்தை நிறுத்து! அரசுக்கு வேண்டுகோள். தேர் திருவிழா நடைபெறும் ஊர்களில் காப்புக் கட்டிய […]

Continue Reading

விமானப் பணிப்பெண்ணாக இருந்த ராம்நாத் கோவிந்த் மகளுக்கு மாற்று வேலை ஒதுக்கியதா டாடா நிறுவனம்?

ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா வாங்கிய பிறகுதான் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மகள் ஏர் இந்தியாவில் விமானப் பணிப் பெண் வேலை செய்து வந்த விவரம் தெரியவந்துள்ளது என்றும் அதைத் தொடர்ந்து அவருடைய பணியை டாடா நிறுவனம் மாற்றிவிட்டது என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராம்நாத் கோவில் மற்றும் அவரது மகள் இருக்கும் […]

Continue Reading

வட இந்தியாவில் ‘தலித்’ அரசு ஊழியர் ஜாதி காரணமாக தாக்கப்பட்டாரா?

‘’வட இந்தியாவில் அரசு ஊழியராக இருந்தும் ஜாதி வெறியர்களால் தாக்கப்படும் தலித்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாட்ஸ்ஆப் (+91 9049044263 & +91 9049053770) மூலமாக, நமது வாசகர்கள் பலரும் அனுப்பி, இதுபற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டனர். இதே தகவலை ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றிலும் பலர் பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்: குறிப்பிட்ட வீடியோவின் ஒரு […]

Continue Reading

குண்டர்கள் நிறைந்த கட்சியே பாஜக என்று ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறினாரா?

பா.ஜ.க என்பது ஒரு அரசியல் கட்சி அல்ல, அது ஒரு கட்டமைக்கப்பட்ட குண்டர்களின் கும்பல் என்று ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ புகைப்படத்துடன் கூடிய பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “பாஜக ஒரு அரசியல் கட்சி அல்ல. அது ஒரு கட்டமைக்கப்பட்ட […]

Continue Reading

பாக்யராஜ் பற்றி பயில்வான் ரங்கநாதன் கூறியதாக பரவும் போலி நியூஸ் கார்டு!

பாக்யராஜ் தொடர்பான அஜால்குஜால் சமாச்சாரங்களை வெளியிடுவேன் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியதாக ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பயில்வான் ரங்கநாதன் புகைப்படத்துடன் கூடிய ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பாக்யராஜே குறைப்பிரசவத்தில் பிறந்தவர்தான்! ஏழு மாதத்தில் பிறந்தவர் பாக்யராஜ் என்று எம்.ஜி.ஆருக்கே தெரியும். முந்தானை முடிச்சு படத்தில் நானும் நடித்திருக்கிறேன். […]

Continue Reading

விக்ரமன் பற்றி புதிய தலைமுறை வெளியிட்டதாக பரவும் போலி நியூஸ் கார்டு!

ஊடகவியலாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவருமான விக்ரமனை மிக மோசமாக விமர்சித்து புதிய தலைமுறை வெளியிட்டது போன்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று பிரேக்கிங் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சமூக வலைதளம் வாயிலாக பழகிய ஆண்களை படுக்கைக்கு அழைத்ததாக ஊடக நெறியாளரும் விசிக பிரமூகருமான விக்ரமன் மீது பகிரங்க […]

Continue Reading

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் வாகனம் தாக்கப்பட்டதா?- முழு விவரம் இதோ!

‘’தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் வாகனத்தை திமுக.,வினர் கல் வீசியும், கொடிக் கம்புகளை வீசியும் தாக்கியுள்ளனர்’’, என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link பாஜக தமிழ்நாடு எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள இந்த பதிவில், ‘’ தமிழுக்கும், சைவத்துக்கும் பெரும் தொண்டாற்றி வரும் தருமபுரம் ஆதீனத்தின் விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்கள், திருக்கடையூரில் இருந்து தருமபுரம் ஆதினத்திற்கு […]

Continue Reading

தனியார் மகளிர் விடுதியில் பெண் வேண்டும் என கேட்ட முன்னாள் எம்.பி.,யின் கணவர்? பழைய செய்தியால் சர்ச்சை!

‘’கோவையில் முன்னாள் பெண் எம்பி., ஒருவரின் கணவர் மகளிர் விடுதி நிர்வாகியை தொடர்பு கொண்டு, ஏதேனும் பெண்ணை சப்ளை செய்யும்படி கேட்டுள்ளார். புகாரை ஏற்க போலீஸ் மறுப்பு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இந்த வீடியோவில் உள்ள லோகோவின் அடிப்படையில், இதனை வெளியிட்ட ஆன்லைன் ஊடகத்தின் (Tamil Maalai TV ) பதிவையும் கண்டுபிடித்தோம். ஏராளமான […]

Continue Reading

துப்பாக்கியுடன் வந்த ஜேஎன்யூ ஏபிவிபி மாணவி கைது என்று பரவும் வீடியோ உண்மையா?

டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஏபிவிபி அமைப்பைச் சார்ந்த மாணவி துப்பாக்கியுடன் கைது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வரலாகப் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மாணவி போன்று தோற்றமளிக்கும் இளம் பெண்ணின் பேன்ட் பாக்கெட்டில் இருந்து போலீசார் துப்பாக்கியை எடுக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “டெல்லி நேரு யூனிவர்சிட்டியில் கைத்துப்பாக்கியுடன் வந்த ABVPஅமைப்பை சேர்ந்த மாணவி படிக்கும் போதே மாணவர்களுக்கு […]

Continue Reading

ராணுவ வீரரின் அஸ்தியை திருநீறாகப் பூசினாரா யோகி ஆதித்யநாத்?

வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் ஒருவரின் அஸ்தியை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திருநீறாகப் பூசிக்கொண்டார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive யோகி ஆதித்யநாத் சாம்பல் மேட்டில் குனிந்து, சாம்பலை எடுத்து திருநீறு போல நெற்றியில் வைத்துக்கொள்ளும் வீடியோ காட்சி பகிரப்பட்டுள்ளது. பின்னணியில் இந்திப் பாடல் ஒலிக்கிறது. நிலைத் தகவலில், “வீர […]

Continue Reading

அண்ணாமலைக்கு பைத்தியம் முற்றிவிட்டது என்று எச்.ராஜா கூறினாரா?

‘’அண்ணாமலைக்கு பைத்தியம் முற்றிவிட்டது – எச்.ராஜா கருத்து,’’ என்று கூறி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: வாசகர் ஒருவர் இந்த ஸ்கிரின்ஷாட்டை அனுப்பி உண்மையா எனக் கேட்டிருந்தார். இதனை ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றிலும் சிலர் உண்மையா பொய்யா என தெரியாமல் பகிர்வதைக் கண்டோம். Twitter Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இந்த தகவல் பற்றி ஜூனியர் விகடன் டிஜிட்டல் பிரிவை தொடர்பு கொண்டு […]

Continue Reading

பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைவா?- உண்மை அறிவோம்!

பாஜக ஆளும் மாநிலங்களில் எல்லாம் பெட்ரோல், டீசல் விலை ரூ.100க்கு கீழ் உள்ளது என்றும், தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயைக் கடந்து விற்பனையாகிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்ட செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்துப் பகிர்ந்துள்ளனர். அதில், பாஜக ஆளும் மாநிலங்கள் […]

Continue Reading

இந்தியர்களைப் போல விலைவாசி உயர்வை பொறுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினாரா கோத்தபய ராஜபக்‌ச?

‘’இந்தியர்களைப் பார்த்து, விலைவாசியை பொறுத்துக் கொள்ளுங்கள் என்று இலங்கை மக்களுக்கு கோத்தபய ராஜபக்சே அறிவுரை,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link இதனைப் பகிர்ந்துள்ள நபர் @Muthalvant, சென்னையில் IBC Tamil என்ற ஊடகத்தில் பணிபுரிவதாக அவரது சுய விவர பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே, இது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் வாசகர்கள் நம்மிடம் விளக்கம் […]

Continue Reading

பஹ்ரைனில் ஹிஜாப் அணிந்த பெண்ணை உள்ளே விட மறுத்த ஓட்டல் பணியாளர் ஒரு இந்தியரா?

‘’ஹிஜாப் அணிந்த பெண்ணிற்கு அனுமதி மறுத்த இந்தியர் பணியிடை நீக்கம், ஓட்டலை மூடியது பஹ்ரைன் அரசு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இதே செய்தியை கலைஞர் செய்திகள் ஊடகமும் வெளியிட்டிருந்ததைக் கண்டோம். Kalaignar Seithigal Link I Archived Link உண்மை அறிவோம்:சமீபத்தில் பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் ஹிஜாப் அணிந்தபடி, […]

Continue Reading

மக்களின் பேராசையே பெட்ரோல் விலை உயர காரணம் என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா?

‘’பொதுமக்கள் பேராசையில் அதிக வாகனம் வாங்குவதே பெட்ரோல் விலை உயர காரணம் என்று நிர்மலா சீதாராமன் கருத்து,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link உண்மை அறிவோம்:நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த விலை உயர்வு வாழ்வாதாரத்தை பாதிக்கச் செய்வதாக, நடுத்தர மக்கள் […]

Continue Reading

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டால் தீக்குளிப்பேன் என்று அண்ணாமலை கூறினாரா?

பெட்ரோல், டீசல், கேஸ் விலையைக் குறைக்காவிட்டால் தீக்குளித்து சாவேன் என்று அண்ணாமலை சபதம் ஏற்றதாக ஒரு போலியான நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியுள்ளது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய “தமிழ் கேள்வி” என்ற இணைய ஊடகத்தின் பெயரில் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைக்காவிட்டால் நான் தீக்குளித்து சாவுவேன் […]

Continue Reading

நாக்கால் நடனமாடும் திறமை படைத்தவர் சாவர்க்கர் என்று இந்து மக்கள் கட்சி கூறியதா?

‘’நாக்கை மட்டும் தரையில் ஊன்றி 40 நிமிடங்கள் நடனமாடும் திறமை படைத்தவர் தேசத்தந்தை சாவர்க்கர்,’’ எனக் குறிப்பிட்டு, இந்து மக்கள் கட்சி ட்வீட் வெளியிட்டதாகப் பரவும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப்பில் அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக்கில் சிலர் இதனை உண்மை என நம்பி பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:சமீப […]

Continue Reading

ஹிஜாப் விவகாரம்; மும்பை உயர் நீதிமன்றத்தின் 2018 உத்தரவு தற்போது பரவுவதால் சர்ச்சை…

‘’ஹிஜாப் அணிய மாணவியருக்கு அனுமதி,’’ என்று மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’மாணவிகள் பள்ளிகள் கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று சொல்ல கல்லூரி மேனேஜ்மென்றுகளுக்கோ பிறின்ஸிபலுக்கோ தலைமை ஆசிரியர்களுக்கோ எந்த உரிமையும் இல்லை மும்பை உயர்நீதிமன்றம்,’’ என்று எழுதியுள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி […]

Continue Reading

தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் கோமாதாவுக்கு நிதி ஒதுக்கவில்லை என்று எச்.ராஜா கூறினாரா?

‘’தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் கோமாதாவுக்கு நிதி ஒதுக்கவில்லை என்று எச்.ராஜா குற்றச்சாட்டு,’’ என குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்று பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link உண்மை அறிவோம்:தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெறுகிறது. இதையொட்டி நிதி பட்ஜெட், வேளாண் பட்ஜெட் என தனித்தனியாக சமர்ப்பிக்கப்பட்டது. 2 பட்ஜெட்களுக்கும் பல்வேறு தரப்பிலும் வரவேற்பு தெரிவிக்கப்படும் சூழலில், இதில் கோமாதாவுக்கு முக்கியத்துவம் தரவில்லை […]

Continue Reading