இந்தியாவை விட இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை அதிகமா?

இந்தியாவை விட இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருப்பது போன்று பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்று பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இங்கு உள்ள பெட்ரோல் டிசல் உயர்வு போராளிகளுக்கு சமர்ப்பணம்…..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Anandakumar என்ற […]

Continue Reading

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் வாகனம் தாக்கப்பட்டதா?- முழு விவரம் இதோ!

‘’தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் வாகனத்தை திமுக.,வினர் கல் வீசியும், கொடிக் கம்புகளை வீசியும் தாக்கியுள்ளனர்’’, என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link பாஜக தமிழ்நாடு எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள இந்த பதிவில், ‘’ தமிழுக்கும், சைவத்துக்கும் பெரும் தொண்டாற்றி வரும் தருமபுரம் ஆதீனத்தின் விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்கள், திருக்கடையூரில் இருந்து தருமபுரம் ஆதினத்திற்கு […]

Continue Reading

விருது பெறும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தலையில் இருந்த விக் கழன்றதா?

விருது வாங்கிய விழாவில், நடிகர் விஜய் தலையில் வைத்திருந்த விக் கையோடு கழன்று வந்தது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் விஜய் தன்னுடைய கழுத்தில் அணிந்திருந்த விருதைக் கழற்றுவது போலவும், அப்போது அவரது தலையில் இருந்து விக் கழன்று, அவர் தலை வழுக்கையாக இருப்பது போன்றும் ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை […]

Continue Reading

ம.பி-யில் ராம நவமி ஊர்வலத்தில் கல் வீசிய பெண்கள் கைது என்று பரவும் பழைய வீடியோ!

மத்தியப் பிரதேசத்தில் ராமநவமி ஊர்வலத்தின் மீது கல்வீசிய பெண்களை போலீசார் கைது செய்தனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெண்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. பின்னணியில் இந்தி பாடல் ஒலிக்கிறது. நிலைத் தகவலில், “ராம நவமி நிகழ்ச்சியில் ஹிந்துக்கள் மீது கல் எறிந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்…இடம்…மத்திய பிரதேசம்…கார்கோன்..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த […]

Continue Reading

தனியார் மகளிர் விடுதியில் பெண் வேண்டும் என கேட்ட முன்னாள் எம்.பி.,யின் கணவர்? பழைய செய்தியால் சர்ச்சை!

‘’கோவையில் முன்னாள் பெண் எம்பி., ஒருவரின் கணவர் மகளிர் விடுதி நிர்வாகியை தொடர்பு கொண்டு, ஏதேனும் பெண்ணை சப்ளை செய்யும்படி கேட்டுள்ளார். புகாரை ஏற்க போலீஸ் மறுப்பு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இந்த வீடியோவில் உள்ள லோகோவின் அடிப்படையில், இதனை வெளியிட்ட ஆன்லைன் ஊடகத்தின் (Tamil Maalai TV ) பதிவையும் கண்டுபிடித்தோம். ஏராளமான […]

Continue Reading

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே ஒரு ஊருக்கு ராசு வன்னியர் எனப் பெயர் சூட்டப்பட்டதா?

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள பகுதி ஒன்றுக்கு ராசு வன்னியர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள ஒரு சாலை வழிகாட்டி “சைன் போர்டு” படம் பகிரப்பட்டுள்ளது. அதில், ராசு வன்னியர் என்ற பகுதிக்கு செல்லும் வழி என்று உள்ளது. நிலைத் தகவலில், […]

Continue Reading

துப்பாக்கியுடன் வந்த ஜேஎன்யூ ஏபிவிபி மாணவி கைது என்று பரவும் வீடியோ உண்மையா?

டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஏபிவிபி அமைப்பைச் சார்ந்த மாணவி துப்பாக்கியுடன் கைது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வரலாகப் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மாணவி போன்று தோற்றமளிக்கும் இளம் பெண்ணின் பேன்ட் பாக்கெட்டில் இருந்து போலீசார் துப்பாக்கியை எடுக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “டெல்லி நேரு யூனிவர்சிட்டியில் கைத்துப்பாக்கியுடன் வந்த ABVPஅமைப்பை சேர்ந்த மாணவி படிக்கும் போதே மாணவர்களுக்கு […]

Continue Reading

டீ ரூ.1, பிரியாணி ரூ.8… நாடாளுமன்றத்தில் உணவு விலை என்று பரவும் பழைய தகவல்!

நாடாளுமன்றத்தில் தேநீர் ரூ.1க்கும், பிரியாணி ரூ.8க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நாடாளுமன்றம் புகைப்படத்துடன் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் உணவு எங்கே கிடைக்கும் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா…?  தேநீர்.  1.00 .ரூ,  சூப்.  5.50.  கொட்டை கறி.  1.50,  மதிய உணவு.  2.  00,  […]

Continue Reading

பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான சிறுவன்?- ஊடகச் செய்தியும், உண்மையும்!

‘’பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான சிறுவன், அரை மயக்கத்தில் என்கவுன்ட்டர் செய்யும் பரிதாபம்,’’ என்று கூறி ஊடகங்களில் வெளியான செய்தி ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link கடந்த ஏப்ரல் 6, 2022 அன்று பல்வேறு ஊடகங்களிலும் வெளியான இந்த செய்தியில் பெரும்பாலும், ‘’நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் ஒரு 17 வயது சிறுவன் மயக்க நிலையில் சேர்க்கப்பட்டார். அவர், வீடியோ […]

Continue Reading

பா.ஜ.க தொண்டர்களிடம் வருத்தம் தெரிவித்தாரா துரை வைகோ?

அண்ணாமலையை ஒருமையில் பேசியதற்கு மன வருத்தம் தெரிவித்த துரை வைகோ என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வைகோ மற்றும் துரை வைகோ ஆகியோரின் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அண்ணாமலையை ஒருமையில் பேசியதற்கு மனமார வருத்தம் தெரிவிக்கிறேன்!! பாஜக தொண்டர்களிடமும் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்!! – துரை வைகோ” என்று இருந்தது. […]

Continue Reading

‘டெலிவரி இந்து’- அர்ஜூன் சம்பத் பெயரில் தொடர்ந்து பரவும் விஷம பதிவுகள்!

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் ட்வீட் என்று சில வேடிக்கையான பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன, அவற்றுக்குப் பலரும் மிகவும் கடுமையாக கண்டன பதிவுகளையும் வெளியிட்டு வருகின்றனர். எனவே, அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அர்ஜூன் சம்பத் வெளியிட்டது போன்று ட்வீட் ஒன்றின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “Ram + John. நாளடைவில் Ram + zan என்றானது. #Ramzan இஸ்லாமிய […]

Continue Reading

ராணுவ வீரரின் அஸ்தியை திருநீறாகப் பூசினாரா யோகி ஆதித்யநாத்?

வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் ஒருவரின் அஸ்தியை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திருநீறாகப் பூசிக்கொண்டார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive யோகி ஆதித்யநாத் சாம்பல் மேட்டில் குனிந்து, சாம்பலை எடுத்து திருநீறு போல நெற்றியில் வைத்துக்கொள்ளும் வீடியோ காட்சி பகிரப்பட்டுள்ளது. பின்னணியில் இந்திப் பாடல் ஒலிக்கிறது. நிலைத் தகவலில், “வீர […]

Continue Reading

அண்ணாமலைக்கு பைத்தியம் முற்றிவிட்டது என்று எச்.ராஜா கூறினாரா?

‘’அண்ணாமலைக்கு பைத்தியம் முற்றிவிட்டது – எச்.ராஜா கருத்து,’’ என்று கூறி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: வாசகர் ஒருவர் இந்த ஸ்கிரின்ஷாட்டை அனுப்பி உண்மையா எனக் கேட்டிருந்தார். இதனை ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றிலும் சிலர் உண்மையா பொய்யா என தெரியாமல் பகிர்வதைக் கண்டோம். Twitter Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இந்த தகவல் பற்றி ஜூனியர் விகடன் டிஜிட்டல் பிரிவை தொடர்பு கொண்டு […]

Continue Reading

பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைவா?- உண்மை அறிவோம்!

பாஜக ஆளும் மாநிலங்களில் எல்லாம் பெட்ரோல், டீசல் விலை ரூ.100க்கு கீழ் உள்ளது என்றும், தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயைக் கடந்து விற்பனையாகிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்ட செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்துப் பகிர்ந்துள்ளனர். அதில், பாஜக ஆளும் மாநிலங்கள் […]

Continue Reading

கோத்தபயவை கண்டித்து பாடகி யோஹானி பதாகை ஏந்தியதாகப் பரவும் வதந்தி…

‘’இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவை கண்டித்து பதாகை ஏந்திய பாடகி யோஹானி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவுடன், அந்நாட்டைச் சேர்ந்த பாடகி யோஹானி பேசுவது போன்ற சில புகைப்படங்கள் மற்றும் கோத்தபயவுக்கு எதிராக யோஹானி பதாகை ஏந்தியது போன்ற ஒரு புகைப்படம் ஆகியவற்றை சேர்த்து பகிரப்பட்டுள்ள இந்த ஸ்கிரின்ஷாட்டை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+91 9049053770) […]

Continue Reading

இந்தியர்களைப் போல விலைவாசி உயர்வை பொறுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினாரா கோத்தபய ராஜபக்‌ச?

‘’இந்தியர்களைப் பார்த்து, விலைவாசியை பொறுத்துக் கொள்ளுங்கள் என்று இலங்கை மக்களுக்கு கோத்தபய ராஜபக்சே அறிவுரை,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link இதனைப் பகிர்ந்துள்ள நபர் @Muthalvant, சென்னையில் IBC Tamil என்ற ஊடகத்தில் பணிபுரிவதாக அவரது சுய விவர பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே, இது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் வாசகர்கள் நம்மிடம் விளக்கம் […]

Continue Reading

பஹ்ரைனில் ஹிஜாப் அணிந்த பெண்ணை உள்ளே விட மறுத்த ஓட்டல் பணியாளர் ஒரு இந்தியரா?

‘’ஹிஜாப் அணிந்த பெண்ணிற்கு அனுமதி மறுத்த இந்தியர் பணியிடை நீக்கம், ஓட்டலை மூடியது பஹ்ரைன் அரசு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இதே செய்தியை கலைஞர் செய்திகள் ஊடகமும் வெளியிட்டிருந்ததைக் கண்டோம். Kalaignar Seithigal Link I Archived Link உண்மை அறிவோம்:சமீபத்தில் பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் ஹிஜாப் அணிந்தபடி, […]

Continue Reading

வீடு மற்றும் கடை வாடகைக்கு ஜிஎஸ்டி என்று நிர்மலா சீதாராமன் அறிவித்தாரா?

வீடு மற்றும் கடை வாடகைக்கு ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நிர்மலா சீதாராமன் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “வீடு மற்றும் கடை வாடகைக்கு ஜிஎஸ்டி. வீடு மற்றும் கடைகளுக்கான வாடகைக்கு 12% ஜிஎஸ்டி வரி […]

Continue Reading

நடிகர் கருணாஸ் இறந்துவிட்டதாக வதந்தி பரப்பும் விஷமிகள்!

நடிகரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான கருணாஸ் மாரடைப்பால் காலமானார் என்று ஒரு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் கருணாஸ் மறைந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி பதிவு வெளியிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சற்றுமுன் மாரடைப்பால் முன்னால் MLA கருணாஸ் காலமானார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை A K Pandiyan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் […]

Continue Reading

தலித்துகள் சிறிய வீடுதான் கட்ட வேண்டும் என்று பிராமணர் சங்கத் தலைவர் கூறினாரா?

பிராமணர்கள் வீட்டை விட உயரமாக மற்றவர்கள் வீடு கட்டக் கூடாது, தலித்துக்கள் தங்கள் வீட்டை சிறியதாக கட்ட வேண்டும் என்று பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தலித்துக்கள் சிறிய வீடாக கட்ட வேண்டும். பிராமணர்கள் வீட்டை விட […]

Continue Reading

Rapid FactCheck: கோவையில் இந்து மக்களுக்கு ஆண்மைக் குறைவு மருந்து கலந்த பிரியாணி விற்பனையா?

‘’கோவையில் இந்து மக்களுக்கு ஆண்மைக் குறைவு மருந்து கலந்த பிரியாணி விற்ற முஸ்லீம்கள் கைது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே +91 9049053770 நமக்கு அனுப்பி உண்மையா எனக் கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும் தகவல் தேடியபோது, குறிப்பிட்ட ஸ்கிரின்ஷாட்டின் ஃபேஸ்புக் பதிவு கிடைக்கவில்லை. அதேசமயம், இதனை சிலர் ஆங்கிலத்தில், ட்விட்டரில் பகிர்வதைக் கண்டோம். Twitter Claim […]

Continue Reading

மாதம் 50 லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட்ட விகடன்?- இந்தியா டுடே பெயரில் வதந்தி…

மாதம் ரூ.50 லட்சத்திற்கு அடமானம் வைக்கப்பட்ட விகடன் குழுமம் என்று குறிப்பிட்டு இந்தியா டுடே தமிழ் அட்டைப்பட செய்தி வெளியிட்டதாக, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவலை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது பலரும் இதனை உண்மை போல சமூக வலைதளங்களில் பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இந்தியா டுடே […]

Continue Reading

மக்களின் பேராசையே பெட்ரோல் விலை உயர காரணம் என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா?

‘’பொதுமக்கள் பேராசையில் அதிக வாகனம் வாங்குவதே பெட்ரோல் விலை உயர காரணம் என்று நிர்மலா சீதாராமன் கருத்து,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link உண்மை அறிவோம்:நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த விலை உயர்வு வாழ்வாதாரத்தை பாதிக்கச் செய்வதாக, நடுத்தர மக்கள் […]

Continue Reading

ஏழை பெண்களின் திருமணத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை நிதி உதவி செய்கிறதா லாட்லி அறக்கட்டளை?

மகளின் திருமணச் செலவுக்கு பணம் இன்றி கவலைப்படுபவர்கள் லாட்லி அறக்கட்டளையைத் தொடர்புகொண்டால் ரூ.1 லட்சம் வரை நிதி உதவி கிடைக்கும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் பதிவு ஒன்றை அனுப்பி அது உண்மையா என்று கேட்டிருந்தார். அதில், “,, முக்கிய அறிவிப்பு.  ,, மகளின் திருமணச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவிக்கும் குடும்பம்  உங்கள் சொந்த விருப்பத்தின் […]

Continue Reading

வில் ஸ்மித்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததற்கு அதிருப்தி தெரிவித்தாரா செந்தில்வேல்?

சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைக்காமல், வில் ஸ்மித்துக்கு கிடைத்திருப்பது வேதனை அளிக்கிறது என்று செந்தில்வேல் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஊடகவியலாளர் செந்தில்வேல் வெளியிட்டது போன்று ட்வீட் பகிரப்பட்டுள்ளது. அதில், “உழைக்கும் மக்களின் குரலாக #ஜெய்பீம் திரைப்படத்தில் ஒலித்த நடிகர் சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைக்காமல், ஹரித்வாரில் கங்கா […]

Continue Reading

ஊது பாவை என்ற பெயரில் மூலிகை உள்ளதா?

அழிவின் விளிம்பில் இருக்கும் ஊது பாவை என்ற மூலிகை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive செடி ஒன்று புகை வெளியேற்றுவது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அழிவின் விளிம்பில் இருக்கும் ஊது பாவை வகையைச் சேர்ந்த மூலிகை இது தன் இனவிருத்திக்காக தன் மகரந்தத்தை இப்படி ஊதித் தள்ளி கொண்டே இருக்கும் அடர்ந்த மழைப்பொழிவு […]

Continue Reading

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டால் தீக்குளிப்பேன் என்று அண்ணாமலை கூறினாரா?

பெட்ரோல், டீசல், கேஸ் விலையைக் குறைக்காவிட்டால் தீக்குளித்து சாவேன் என்று அண்ணாமலை சபதம் ஏற்றதாக ஒரு போலியான நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியுள்ளது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய “தமிழ் கேள்வி” என்ற இணைய ஊடகத்தின் பெயரில் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைக்காவிட்டால் நான் தீக்குளித்து சாவுவேன் […]

Continue Reading

ஸ்டாலின் அணிந்த கூலிங் ஜாக்கெட் விலை ரூ. 17 கோடி என்று பிடிஆர் கூறினாரா?

துபாய் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணிந்திருந்த கூலிங் ஜாக்கெட் விலை ரூ.17 கோடி என்று தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கூலிங் ஜாக்கெட் 17 கோடி. துபாய் […]

Continue Reading

பிரியாணி பீஸ் கேட்டு அடி வாங்கியதால் கட்சி ஆரம்பித்தேன் என்று அர்ஜூன் சம்பத் கூறினாரா?

பீப் பிரியாணியில் இரண்டு பீஸ் கூடுதலாக கேட்டதற்காக பாய் அடித்ததால் இந்து மக்கள் கட்சியை ஆரம்பித்தேன் என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக ஒரு ட்வீட் பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்து மக்கள் கட்சி வெளியிட்டது போன்று ட்வீட் பதிவு ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “ஒருநாள் பீப் பிரியாணி ரெண்டு பீஸ் extra கேட்டேன். அந்த பாய் […]

Continue Reading

அரசுப் பேருந்துகள் நிற்கும் ஓட்டல்கள் சைவமா, அசைவமா? தமிழ்நாடு அரசு கூறியது என்ன?

‘’சைவ ஓட்டல்களில் மட்டுமே அரசுப் பேருந்துகள் நிற்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிடவில்லை. ஊடகங்கள் வதந்தி பரப்புகின்றன,’’ என்று குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் திமுக ஆதரவாளர்கள் பகிரும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link உண்மை அறிவோம்:தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்கள் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் (SETC) சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் உணவு இடைவெளியின்போது சாலையோர ஓட்டல்களில் நின்று செல்வது வழக்கம். இதற்காக, […]

Continue Reading

20 ஆயிரம் புத்தகம் படித்ததாகக் கூறிய அண்ணாமலையை கேலி செய்து அட்டைப்படம் வெளியிட்டதா துக்ளக்?

20 ஆயிரத்துக்கும் அதிகமான புத்தகங்களைப் படித்திருக்கிறேன் என்று அண்ணாமலை கூறியதைக் கிண்டலடித்து துக்ளக் அட்டைப்படம் வெளியிட்டதாக புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive துக்ளக் அட்டைப்பட ஓவியம் பகிரப்பட்டுள்ளது. இரண்டு கழுதைகள் பேசக்கொள்வது போல ஓவியம் உள்ளது. அதில், “இதுவரை 20 ஆயிரம் புத்தகங்களை தின்னுருக்கேன்,நீ எத்தனை தின்னுருக்கே” என்று இருந்தது. இந்த பதிவை […]

Continue Reading

சோனியாவுக்கு மரியாதை கொடுக்கத் தவறிய மோடி என்று பரவும் படம்- உண்மை என்ன?

சோனியா காந்தி வணக்கம் தெரிவித்த போது, பிரதமர் மோடி கைக்கட்டி நின்று அவமரியாதை செய்தார் என்று ஒரு புகைப்பட பதிவு வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் புகைப்பட பதிவு ஒன்றை அனுப்பி, இது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். பிரதமர் மோடி கைக்கட்டியபடி நிற்க, சோனியா காந்தி வணக்கம் சொல்வது போன்று அந்த படம் இருந்தது. அந்த […]

Continue Reading

நாக்கால் நடனமாடும் திறமை படைத்தவர் சாவர்க்கர் என்று இந்து மக்கள் கட்சி கூறியதா?

‘’நாக்கை மட்டும் தரையில் ஊன்றி 40 நிமிடங்கள் நடனமாடும் திறமை படைத்தவர் தேசத்தந்தை சாவர்க்கர்,’’ எனக் குறிப்பிட்டு, இந்து மக்கள் கட்சி ட்வீட் வெளியிட்டதாகப் பரவும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப்பில் அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக்கில் சிலர் இதனை உண்மை என நம்பி பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:சமீப […]

Continue Reading

பெரியாரை புரிந்து கொள்ளாத எந்த இந்துவும் ஞானமடைய முடியாது என்று சுகிசிவம் கூறினாரா?

பெரியாரைப் புரிந்துகொள்ளாத எந்த இந்துவும் ஞானம் அடைய முடியாது என்று பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் சுகி சிவம் கூறியதாக பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சுகி.சிவம் மற்றும் தந்தை பெரியார் ஆகியோர் படங்களை இணைத்து புகைப்பட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “பெரியாரைப் புரிந்து கொள்ளாத எந்த ஹிந்துவும் ஞானமடைய முடியாது! – சுகி.சிவம்” என்று போட்டோஷாப் முறையில் எழுதப்பட்டிருந்தது. […]

Continue Reading

பாகிஸ்தான் டிவி வழியே பண்டிட்களிடம் மன்னிப்பு கேட்ட காஷ்மீர் இஸ்லாமியர்?- முழு விவரம் இதோ!

‘’பாகிஸ்தான் டிவி மூலமாக, காஷ்மீர் பண்டிட்களுக்கு நிகழ்ந்த வன்முறைகளை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்ட காஷ்மீர் இஸ்லாமியர்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link டிவி நிகழ்ச்சி ஒன்றின் காட்சிகளை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ The Kashmir Files படம் பகைமையை வளர்க்கும்னு உருட்டுபவர்கள் கவனத்திற்கு … இப்படி மனிதத்தையும் தட்டி எழுப்பும் என்பதை சொல்லும் காணொளி […]

Continue Reading

தி.மு.க-வில் இருந்து கனிமொழி விலக உள்ளதாக நியூஸ் 7 செய்தி வெளியிட்டதா?

திமுக-வில் இருந்து கனிமொழி விலக உள்ளதாக நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கனிமொழி மற்றும் மு.க.ஸ்டாலின் புகைப்படங்களுடன் நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கனிமொழி திமுகவில் இருந்து விலகல்? திமுகவில் அதிகரித்து வரும் பாலியல் நடவடிக்கைகளை கண்டிக்கும் விதமாக கட்சியில் இருந்து […]

Continue Reading

ஹிஜாப் விவகாரம்; மும்பை உயர் நீதிமன்றத்தின் 2018 உத்தரவு தற்போது பரவுவதால் சர்ச்சை…

‘’ஹிஜாப் அணிய மாணவியருக்கு அனுமதி,’’ என்று மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’மாணவிகள் பள்ளிகள் கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று சொல்ல கல்லூரி மேனேஜ்மென்றுகளுக்கோ பிறின்ஸிபலுக்கோ தலைமை ஆசிரியர்களுக்கோ எந்த உரிமையும் இல்லை மும்பை உயர்நீதிமன்றம்,’’ என்று எழுதியுள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி […]

Continue Reading

ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்தவர்கள் என்று அனுதாபம் தேட முயன்றதா உக்ரைன்?

ரஷ்யத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் என்று உடல்களை அடுக்கிவைத்து உக்ரைன் அனுதாபம் தேட முயன்றது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இறந்தவர்கள் உடல்கள் பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டு வரிசையாக வைக்கப்பட்டது போல் உள்ளது. ஒரு பையிலிருந்து ஒருவர் உயிரோடு எழுவது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. Demo Gegen klimapolitik என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  நிலைத் தகவலில், “உக்ரைன் […]

Continue Reading

தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் கோமாதாவுக்கு நிதி ஒதுக்கவில்லை என்று எச்.ராஜா கூறினாரா?

‘’தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் கோமாதாவுக்கு நிதி ஒதுக்கவில்லை என்று எச்.ராஜா குற்றச்சாட்டு,’’ என குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்று பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link உண்மை அறிவோம்:தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெறுகிறது. இதையொட்டி நிதி பட்ஜெட், வேளாண் பட்ஜெட் என தனித்தனியாக சமர்ப்பிக்கப்பட்டது. 2 பட்ஜெட்களுக்கும் பல்வேறு தரப்பிலும் வரவேற்பு தெரிவிக்கப்படும் சூழலில், இதில் கோமாதாவுக்கு முக்கியத்துவம் தரவில்லை […]

Continue Reading

ஊடகத்தினரைப் பார்த்து மோடி அருவருக்கிறார் என்று அண்ணாமலை கூறினாரா?

ஊடகத்தினரைப் பார்த்து பிரதமர் மோடி அருவருக்கிறார் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஊடக பிரச்சைக்காரர்களை பார்த்து மோடி அருவருக்கிறார். ஊடகத்துறையினர் பிச்சைக்காரர்களைப் போல் பிரதமர் மோடியை சுற்றி நின்று “தேர்தல் வாக்குறுதியான […]

Continue Reading

உ.பி-யில் 165 இடங்களில் வாக்குகளை பிரித்து பாஜக வெற்றிக்கு ஓவைசி உதவினாரா?

நடந்து முடிந்த உத்தரப்பிரதேச தேர்தலில் 165 இடங்களில் ஓவைசி வாக்குகளைப் பிரித்து, பாஜக வெற்றிக்கு காரணமாக அமைந்தார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஓவைசி புகைப்படத்துடன் கூடிய பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “200 வாக்குகள் வித்தியாசத்தில் 7 தொகுதிகள். 500 வாக்குகள் வித்தியாசத்தில் 23 தொகுதிகள். 1000 வாக்குகள் வித்தியாசத்தில் 49 தொகுதிகள். 2000 வாக்குகள் […]

Continue Reading

தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் பார்க்கும்போது அத்வானி மற்றும் யோகி ஆதித்யநாத் கதறி அழுதனரா?

‘’தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் பார்க்கும்போது கதறி அழுத அத்வானி மற்றும் யோகி ஆதித்யநாத்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ பதிவுகள் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இதேபோல, யோகி ஆதித்யநாத் அழுவதைப் போன்ற ஒரு வீடியோவையும் பகிர்ந்து, காஷ்மீர் ஃபைல்ஸ் பார்க்கும்போது அவர் அழுதார் என்று தகவல் பரப்புவதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்: ஜம்மு […]

Continue Reading

மீன் சாப்பிடுபவர்கள் இந்துக்கள் கிடையாது என்று அண்ணாமலை கூறியதாகப் பரவும் வதந்தி…

‘’மீன் சாப்பிடுபவர்கள் இந்துக்கள் கிடையாது என்று அண்ணாமலை கருத்து,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link I Archived Link இதே செய்தியை ஏசியாநெட் நியூஸ் தமிழ் ஊடகமும் வெளியிட்டுள்ளது.  Asianet News Tamil FB Post I Article Link I Archived Link உண்மை அறிவோம்: கடந்த ஜனவரி மாதம், சென்னை குயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கோயில் கட்டிட நிலத்தில் […]

Continue Reading

பிரியாணி சாப்பிட்டதால் ஆண்மைக்குறைவு ஏற்பட்டது என்று அர்ஜூன் சம்பத் கூறினாரா?

பிரியாணி சாப்பிட்டதால் தனக்கு ஆண்மைக் குறைவு ஏற்பட்டது என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அர்ஜூன் சம்பத் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பிரியாணியால் எனக்கு ஆண்மைக்குறைவு ஏற்பட்டுள்ளது. பிரியாணி ஆண்மைக் குறைவு ஏற்படுத்தும் என்பது உண்மைதான். பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் நான் இதை பதிவு […]

Continue Reading

மோகன் பகவத்துடன் ஓவைசி இருக்கும் படம் உண்மையா?

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உடன் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி இருப்பது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் உடன், அசாதுதீன் ஓவைசி அமர்ந்திருப்பது போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இப்பொழுது தெரிகிறதா யார் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிறார் என்று மோகன் […]

Continue Reading

கே.என்.நேரு தரையில் அமர்ந்த படம் போலியானதா?

பங்காரு அடிகளார் முன்பாக, அமைச்சர் கே.என்.நேரு தரையில் அமர்ந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மேல் மருவத்தூர் பங்காரு அடிகளார் முன்னிலையில் தமிழக அமைச்சர் கே.என்.நேரு தரையில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தின் மீது ஃபேக் என்று குறிப்பிட்டும், அமைச்சர் சோஃபாவில் அமர்ந்திருப்பது போல உள்ள படத்தின் மீது ஒரிஜினல் என்றும் குறிப்பிட்டு புகைப்பட பதிவு […]

Continue Reading

அமைச்சர் கே.என்.நேரு பதவி விலக வேண்டும் என்று தி.மு.க எம்.பி கூறினாரா?

கே.என்.நேரு பதவி விலக வேண்டும் என்று தி.மு.க எம்.பி. செந்தில்குமார் கூறினார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தி.மு.க எம்.பி. செந்தில் குமார் மற்றும் அமைச்சர் கே.என்.நேரு தரையில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தைச் சேர்த்து தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கே.என்.நேரு பதவி விலக வேண்டும். சுய மரியாதை இல்லாமல் […]

Continue Reading

கே.என்.நேரு தரையில் அமர்ந்த விவகாரம்; டி.ஆர்.பி. ராஜா கண்டனம் தெரிவித்தாரா?

‘’கே.என்.நேரு தரையில் அமர்ந்த விவகாரத்திற்கு டி.ஆர்.பி.ராஜா கண்டனம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வேகமாகப் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனைப் பலரும் உண்மை போல ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். FB Claim Link I Archived Link உண்மை அறிவோம்:திமுக அமைச்சர் கே.என்.நேரு, பங்காரு அடிகள் சாமியாரை நேரில் சந்தித்தபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இதன்போது, நேரு […]

Continue Reading

மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்குத் தடை- மோடிக்கு கடிதம் எழுதினாரா அண்ணாமலை?

‘’மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களை தடை செய்ய வேண்டும்,’’ என்று பிரதமர் மோடிக்கு அண்ணாமலை கடிதம் எழுதியதாக, ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+91 9049044263) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதனை ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றில் பலரும் உண்மை போல பகிர்வதையும் கண்டோம். Twitter Claim Link I Archived Link உண்மை அறிவோம்:பாஜக […]

Continue Reading

பிரியாணி சாப்பிடுபவர்கள் உண்மையான இந்துக்கள் இல்லை என்று அண்ணாமலை கூறினாரா?

‘’பிரியாணி சாப்பிடுபவர்கள் இந்துக்கள் இல்லை – அண்ணாமலை,’’ என்று குறிப்பிட்டு ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: தந்தி டிவி லோகோவுடன் பகிரப்பட்டுள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’பிரியாணி சாப்பிடுபவர்கள் இந்துக்கள் இல்லை. பிரியாணி, கிரில் சிக்கன், பார்பிக்யூ போன்ற அரேபிய உணவுகளை உண்பவர்கள் உண்மையான இந்துக்கள் இல்லை. இதுபோன்ற அந்நிய உணவுகளை தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும். பாஜக தலைவர் அண்ணாமலை,’’ என்று எழுதியுள்ளனர். […]

Continue Reading