ஒரு பழங்குடியினப் பெண் குடியரசுத் தலைவரானால் இட ஒதுக்கீட்டை ஒழிக்கலாம் என்று அம்பேத்கர் கூறினாரா?

‘’பழங்குடியினப் பெண் என்றைக்கு இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆகிறாரோ அன்றைய நாளில் இட ஒதுக்கீட்டை ஒழித்திட வேண்டும்- டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என கேட்டிருந்தார். இதனை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக்கில் பகிர்வதை கண்டோம். […]

Continue Reading

ஆட்சிக்கு வந்தால் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பை 40 ஆக மாற்றுவேன் என்று மோடி கூறினாரா?

‘’ஆட்சிக்கு வந்தால் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பை 40 ஆக குறைப்பேன் என்று மோடி காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கூறினார்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்கள் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு +91 9049053770 என்ற வாட்ஸ்ஆப் எண் வழியே அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதேபோல, கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் பலரும் தகவல் பகிர்ந்து வருகின்றனர். FB Claim Link I […]

Continue Reading

ஸ்மிருதி இரானி மகள் நடத்தும் ஓட்டலில் மாட்டிறைச்சி விற்பனை என்று பகிரப்படும் வதந்தி…

ஸ்மிருதி இரானி மகள் நடத்தும் ஓட்டலில் மாட்டிறைச்சி விற்பனை என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:ஸ்மிருதி இரானி மகள் ஜோயிஷ் இரானி சட்டவிரோதமான முறையில் கோவாவில் ரெஸ்டாரண்ட் மற்றும் பார் ஒன்றை சட்டவிரோதமான முறையில் நடத்துவதாக, காங்கிரஸ் கட்சி தரப்பில் புகார் தெரிவிக்கப்படுகிறது. இதனை ஏற்கனவே ஸ்மிருதி இரானி திட்டவட்டமாக மறுத்துள்ளார். The […]

Continue Reading

ராம்நாத் கோவிந்தின் வணக்கத்தை கவனிக்காமல் கேமரா பார்த்தாரா மோடி?

குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெறுதற்கு முன்பு நடந்த பிரிவுபச்சார விழாவில் ராம்நாத் கோவிந்த் வணக்கம் கூறிய போது அவருக்கு பதில் வணக்கம் கூறாமல் மோடி கேமராவை பார்த்துக்கொண்டிருந்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களுக்கு ராம்நாத் கோவிந்த் வணக்கம் செலுத்துகிறார். பிரதமர் மோடி கேமராமேக்களை பார்த்தபடி […]

Continue Reading

பா.ஜ.க-வினர் இலவச மின்சாரத்தை விட்டுக்கொடுக்கும்படி அண்ணாமலை அறிவுறுத்தினாரா?

100 யூனிட் இலவச மின்சாரத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று பாஜக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இலவச மின்சாரத்தை பாஜக-வினர் விட்டுக் கொடுப்பு? இலவச மின்சாரத்தை பாஜகவினர் விட்டுக் கொடுக்க அண்ணாமலை […]

Continue Reading

ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் உற்பத்தியை நிறுத்த தி.மு.க அரசு காரணமா?

ஃபோர்டு இந்தியா நிறுவனம் தன்னுடைய செயல்பாட்டை நிறுத்திக் கொள்வதற்கு தி.மு.க அரசு தான் காரணம் என்பது போன்று பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சென்னை மறைமலைநகரில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலையில் வெளியான கடைசி காருக்கு ஊழியர்கள் கண்ணீர் மல்க விடை கொடுத்தது தொடர்பாக புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த விடியல் […]

Continue Reading

வேகமாக வளரும் நாடுகள் பட்டியலில் 3-ல் இருந்து 164வது இடத்திற்கு இந்தியா தள்ளப்பட்டதா?

வேகமாக வளரும் நாடுகள் பட்டியலில் 3வது இடத்திலிருந்த இந்தியா, தற்போது 164வது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டது போன்ற ட்வீட் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில், “இந்தியா தற்போது 193 நாடுகள் அடங்கிய உலகின் வேகமாக வளரும் நாடுகள் பட்டியலில் 164வது இடத்தில் உள்ளது. 2011ல் மிகப்பெரிய […]

Continue Reading

சமையல் எரிவாயு விலை இனிமேல் உயர்த்தப்படாது என்று அண்ணாமலை அறிவித்தாரா?

கேஸ் சிலிண்டர் விலை இனி உயர்த்தப்படாது என்று அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கேஸ் விலை ஏற்றம் இதுவே கடைசி. இதுவே கடைசி இதற்கு மேல் கேஸ் விலை உயர்த்தப்படாது. மீறி உயர்த்தினால் எங்களை செருப்பைக் கழட்டி அடியுங்கள் […]

Continue Reading

மின் மயானத்திற்கும் இனி ஜிஎஸ்டி என்று நிர்மலா அறிவித்தாரா?

மின் மயானத்திற்கும் இனி ஜிஎஸ்டி என நிர்மலா சீதாராமன் அறிவித்தார் என ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆனந்த விகடன் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மின் மயானத்திற்க்கும் இனி ஜிஎஸ்டி வரி! மின் மயானத்தில் உடல்களை தகனம் செய்ய 5% ஜி.எஸ்.டி வரி விதிக்க மத்திய அரசு முடிவு!” என்று […]

Continue Reading

ராதாரவி மீது நடவடிக்கை எடுக்கும்படி அண்ணாமலையை பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினாரா?

‘’ராதாரவி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என அண்ணாமலையை பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டு, நியூஸ் கார்டு ஒன்று பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர் +91 9049044263 , +91 9049053770 ஆகிய நமது வாட்ஸ்ஆப் எண்களுக்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதே நியூஸ் கார்டை மற்றவர்கள் உண்மை என நம்பி ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I […]

Continue Reading

ராதாரவி ஒரு நாலாந்தரப் பேச்சாளர் என்று அண்ணாமலை கூறினாரா?

நடிகர் ராதா ரவியை நாலாந்தரப் பேச்சாளர் என்று அண்ணாமலை விமர்சித்தார் என ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அண்ணாமலை புகைப்படத்துடன் ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ராதா ரவி போன்ற நாலாந்தரப் பேச்சாளர்கள் குடித்துவிட்டுப் பேசுவதைப் பொருட்படுத்தத் தேவையில்லை. பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை அக்யூஸ்டுகள் என்று குறிப்பிட்டது […]

Continue Reading

கார்த்திக் கோபிநாத் குகைக்குள் நிர்வாண பூஜை செய்வதாக நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதா?

‘’கார்த்திக் கோபிநாத் குகைக்குள் தங்கி நிர்வாண பூஜை செய்கிறார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் நியூஸ் 7 தமிழ் லோகோவுடன் ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா எனக் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்டவற்றில் இதனை பலரும் உண்மை போல குறிப்பிட்டு, ஷேர் செய்வதைக் கண்டோம். Twitter Claim […]

Continue Reading

ராம்நாத் கோவிந்துக்கு சிவப்பு கம்பள வரவேற்பு மறுக்கப்பட்டதா?

ஜனாதிபதியாகவே இருந்தாலும் சிவப்பு கம்பளத்தில் வர முடியாது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிவப்பு கம்பளத்தில் நடந்து வருகிறார். அவருக்கு அருகில் சிவப்பு கம்பளத்துக்கு வெளியே ஓரமாகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நடந்து வரும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஜனாதிபதியாகவே இருந்தாலும் ரெட் கார்பெட்டில் […]

Continue Reading

பா.ஜ.க மூத்த தலைவர்களின் மகள்கள் இஸ்லாமியர்களை திருமணம் செய்தனரா?

பா.ஜ.க, இந்து அமைப்புகளின் தலைவர்களின் மகள்கள் எல்லாம் இஸ்லாமியர்களை திருமணம் செய்துள்ளார்கள் என்பது போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பா.ஜ.க மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோரின் படங்களை வைத்து பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எல்.கே.அத்வானியின் மகள் பிரதிபா அத்வானி பிராமண கணவனை உதறிவிட்டு ஒரு முஸ்லீமை வாழ்க்கை துணையாக்கியபோது […]

Continue Reading

மோடி எம்.ஏ., படித்ததாகச் சொல்வது பொய் என்று அண்ணாமலை கூறினாரா?

பிரதமர் மோடி எம்.ஏ டிகிரி படித்ததாக சொல்வது பொய் என அண்ணாமலை கூறினார் என ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive “என்ன வாய்டா இது..?” என குறிப்பிட்டு தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கள் இரண்டை வைத்து பதிவிட்டுள்ளனர். அதில், “தமிழ்நாடு அமைச்சர்கள் பலருக்கு ஆங்கிலம் தெரியாது.. டெல்லி சென்று எப்படி நிதியை பெற்று வருவார்கள்?” என்றும் […]

Continue Reading

ஆருத்ரா நிறுவன மோசடியில் அண்ணாமலையை தொடர்புபடுத்தி பாலிமர் டிவி செய்தி வெளியிட்டதா?

‘’ஆருத்ரா நிதி நிறுவன மோசடி பணம் அண்ணாமலையிடம் உள்ளது- பாலிமர் டிவி,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர் +91 9049044263 மற்றும் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்களுக்கு அனுப்பி, உண்மையா என்று கேட்டனர். இதுபற்றி தகவல் தேடியபோது பலரும், ஃபேஸ்புக்கில் இதனை உண்மை போல குறிப்பிட்டு பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link […]

Continue Reading

பிரதமர் மோடி சாதுக்களுடன் இருக்கும் புகைப்படத்தை வைத்து பொருளாதாரத்தை சரி செய்ய ஆலோசனை என கிண்டல்!

பொருளாதாரத்தை சரி செய்வது எப்படி என சன்னியாசிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார் என்று ஒரு புகைப்படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive பிரதமர் மோடி இந்து மதத் துறவிகளுடன் அமர்ந்து பேசும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதனுடன், “பொருளாதாரத்தை சரி செய்வது எப்படி? மயில்களுக்கு அரிசி போடுவது எப்படி? – நிபுணர்களுடன் […]

Continue Reading

விவசாயிகள் போராட்ட வீடியோவை எடுத்து நுபுர் சர்மா கைது என்று பரப்பும் நெட்டிசன்கள்!

‘’நுபுர் சர்மா கைது செய்யப்பட்டார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:பாஜக.,வைச் சேர்ந்த நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோர் சமீபத்தில் நபிகள் நாயகம் பற்றி தெரிவித்த கருத்து, பெரும் சர்ச்சையை சர்வதேச அளவில் ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக, இஸ்லாமிய நாடுகள் பலவும் இந்தியாவிற்கு கண்டனம் […]

Continue Reading

அரபு நாடுகளில் பணிபுரிவோர் உண்மையான இந்துக்கள் அல்ல என்று அர்ஜூன் சம்பத் கூறினாரா?

‘’அரபு நாடுகளில் பணிபுரியும் இந்துக்கள் உண்மையான இந்துக்கள் அல்ல,’’ என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக, ஒரு பதிவு சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: வாட்ஸ்ஆப் வழியே வாசகர் ஒருவர் நமக்கு இதனை அனுப்பியிருந்தார். இதே ஸ்கிரின்ஷாட் பதிவை, பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்கின்றனர். Facebook Claim Link I Archived Link கமெண்ட்களில் கூட அர்ஜூன் சம்பத் நிஜமாகவே இப்படி கூறியதாகப் […]

Continue Reading

அக்னிபத் போராட்டக்காரர்களைச் சுட்டுத் தள்ள வேண்டும் என்று பா.ஜ.க.,வின் நிர்மல் கூறினாரா?

மத்திய அரசின் அக்னிபத் போராட்டக்காரர்களைச் சுட்டுத் தள்ளுங்கள் என்று தமிழ்நாடு பா.ஜ.க-வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநிலத் தலைவர் நிர்மல் குமார் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமூர் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அக்னிபத் போராட்டக்காரர்களை சுட்டுத்தள்ளுங்கள். மத்திய அரசின் அக்னிபத் […]

Continue Reading

கான்பூரில் முஸ்லீம்கள் போராட்டம் தொடங்கும் முன்பாக பா.ஜ.க.,வினரிடம் பேசிய போலீஸ் அதிகாரியின் வீடியோவா இது?

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் இஸ்லாமியர்கள் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே, இஸ்லாமியர்கள் கலவரத்தில் ஈடுபடலாம், வெடிகுண்டு வைத்திருக்கலாம் என்று பா.ஜ.க-வினர் போலீசாரிடம் கூறினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காவல் துறை அதிகாரி இந்தியில் ஏதோ பேசுகிறார். நிலைத் தகவலில், “#கான்பூர்_போராட்டத்தில்_வெடிகுண்டு போலீஸாரிடம்_பாஜக_உரையாடல். உபி. அலகாபாத் மாவட்டம் கான்பூர் பிராக்யராஜ் பகுதியில், நபிகளார் அவமதிப்பு பிரச்சாரம் செய்த, […]

Continue Reading

இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் இருந்து அம்மா உணவகங்களுக்கு சமையல் எண்ணெய் வாங்கும்படி அண்ணாமலை கூறினாரா?

அம்மா உணவகங்களுக்கு தேவையான சமையல் எண்ணெயை இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் இருந்து வாங்க வேண்டும் என்று அண்ணாமலை தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்ததாகக் கூறி சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். இதேபோல, ஃபேஸ்புக்கிலும் இதனை சிலர் உண்மை போல குறிப்பிட்டு, பகிர்வதைக் கண்டோம். Facebook Claim […]

Continue Reading

அண்ணாமலையை சிறைக்கு அனுப்பிடுவேன் என்று நாராயணன் திருப்பதி கூறினாரா?

அண்ணாமலையை சிறைக்கு அனுப்பிவிடுவேன் என்று பா.ஜ.க-வின் நாராயணன் திருப்பதியின் ட்வீட் வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட ட்வீட் பதிவின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “என் ஜாதகம் மோசமான ஜாதகம் என்று அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். நான் வழக்கு தொடுத்தால் நீ உள்ளே போய் விடுவாய். […]

Continue Reading

இந்து மதத்தை எதிர்த்து கொல்கத்தாவில் ஒன்று கூடிய இஸ்லாமியர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

இந்து மதத்தை எதிர்த்து கொல்கத்தாவில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்று ஒரு தரப்பினரும், பா.ஜ.க செய்தித் தொடர்பாளர்கள் முகமது நபி பற்றி அவதூறாகப் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து கொல்கத்தாவில் நடந்த ஆர்ப்பாட்டம் என்று மற்றொரு தரப்பினரும் ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் பல ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்துவது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், […]

Continue Reading

தமிழ்ப் பெண்கள் உடன்கட்டை ஏற வேண்டும் என்று நாராயணன் திருப்பதி கூறினாரா?

தமிழ் பெண்கள் மீண்டும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தைத் தொடங்க வேண்டும் என்று தமிழ்நாடு பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழ் பெண்கள் உடன்கட்டை ஏறவேண்டும். உடன்கட்டை ஏறுதல் தமிழர்களின் பாரம்பரியம். தமிழ் பெண்கள் மீண்டும் உடன்கட்டை […]

Continue Reading

ராஞ்சி துப்பாக்கிச்சூடு: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடக்கிறதா?

ராஞ்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இஸ்லாமியர்கள் உயிரிழந்ததற்கு அந்த மாநிலத்தை ஆட்சி செய்து வரும் பா.ஜ.க அரசு தான் காரணம் என்று சில பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராஞ்சி போராட்டம் தொடர்பான புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “பாஜக ஆளும் மாநிலம் ராஞ்சியில் காவி காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு முஸ்லிம்கள் பலி! ராஞ்சி – […]

Continue Reading

தேசியக் கொடியை எரித்தவர்கள் இந்திய முஸ்லீம்களா?

இந்தியாவில் இஸ்லாமியர்கள் இந்தியாவின் தேசியக் கொடியை எரித்தது போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமியர்கள் இந்தியாவின் தேசியக் கொடியை எரிக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த மண்ணில் பிறந்து, இந்நாட்டில் வாழ்ந்து, பாரதம் தந்த அத்தனை பயன்களையும் அனுபவித்துக் கொண்டு தாய்நாட்டின் கொடியை ஒரு உண்மையான குடிமகனால் எரிக்க முடியாது… பெற்றதாயும் தாய்நாடும் ஒன்றுதான்…” […]

Continue Reading

தமிழ்நாட்டில் ஏற்றப்பட்ட பாஜக கொடி?- எடிட் செய்த புகைப்படத்தால் சர்ச்சை…

‘’தமிழ்நாட்டில் ஏற்றப்பட்ட பாஜக கொடி ,’’ என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட புகைப்படத்தை ஏற்கனவே பாஜக.,வின் கர்நாடகா நிர்வாகி சிடிஆர்.ரவி அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். CTR Ravi Tweet Link I Archived Link அதற்கு கமெண்ட் அளித்துள்ள பலரும் தெலுங்கானா மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி பகிர்ந்த […]

Continue Reading

முகமது நபி விவகாரம்: இந்தியாவைக் கண்டித்து ஈரானில் நடந்த போராட்டம் என்று பரவும் வீடியோ உண்மையா?

இந்தியாவில், முகமது நபி பற்றிப் பொய் பரப்புவதைக் கண்டித்து ஈரானில் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடந்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றின் வீடியோவை நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் நமக்கு அனுப்பியிருந்தார். அதனுடன், “இந்தியாவில் ஆட்சியில் உள்ள BJP உள்ளிட்ட  இந்துத்துவ  பாசிஸ்டுகள் முஹம்மது நபி அவர்களை அவமதித்ததைக் கண்டித்து ஈரானில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக சொல்லி வாட்சப் உள்ளிட்ட […]

Continue Reading

கத்தார் ஏர்வேஸ் தலைமைச் செயல் அதிகாரியின் பதிலடி என்று பகிரப்படும் வதந்தி…

‘’Bycott ஹேஷ்டேக் விவகாரத்தில் கத்தார் ஏர்வேஸ் தலைமைச் செயல் அதிகாரியன் பதிலடி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link வாசுதேவ் என்பவர் கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தை புறக்கணிப்பதாக, வீடியோ வெளியிட்டதை தொடர்ந்து, கத்தார் ஏர்வேஸ் சிஇஓ நேரடியாக ஒரு Spoof வீடியோவை அல் ஜசீரா டிவி உதவியுடன் வெளியிட்டுள்ளார் என்று இந்த ஃபேஸ்புக் […]

Continue Reading

இந்தியாவில் கிரிக்கெட் விளையாட மாட்டேன் என்று மொயின் அலி எச்சரித்தாரா?

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர்கள் முகமது நபி பற்றி தவறாக பேசியதற்கு இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும். அது வரை இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டேன் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் மொயின் அலி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி ட்வீட் பதிவுடன் கூடிய புகைப்பட பதிவு […]

Continue Reading

முகமது நபி மீதான விமர்சனம்; பாஜக.,வை கண்டித்தாரா விளாடிமிர் புதின்?

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் இறைத்தூதர் முகமது நபி குறித்து பேசியதற்கு ரஷ்ய அதிபர் புதின் கண்டனம் தெரிவித்தார் என்பது போல சில பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் இஸ்லாமியர்களின் இறைத்தூதர் முகமது நபி பற்றி சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்ததற்கு ரஷ்ய அதிபர் புதின் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை […]

Continue Reading

தமிழ்நாடு அரசின் வருவாய் முழுவதும் அரசு ஊழியர் சம்பளம், ஓய்வூதியத்திற்குச் செலவாகிறதா?

தமிழ்நாடு அரசின் வரி வருவாய் மொத்தமும் அரசு ஊழியர் சம்பளம், அரசு ஊழியர் ஓய்வூதியம் மற்றும் கடனுக்கு வட்டி கட்டவே சரியாகிவிடுகிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive யாரோ ஒருவர் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வெளியிட்டது போல உள்ளது. அதில், “தமிழக அரசின் மொத்த வரி வருவாய் – 1,42,800 கோடி. […]

Continue Reading

பிரம்மபுத்திரா ஆற்றின் கீழ் கட்டப்பட்ட 14 கி.மீ சுரங்கப்பாதையா இது?

இந்தியாவின் முதல் நீருக்கடியில் அமைக்கப்பட்ட சாலை மற்றும் ரயில் பாதை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி கையசைக்கும் புகைப்படங்கள் மற்றும் தண்ணீருக்கு அடியில் அமைக்கப்பட்ட சாலை மற்றும் ரயில் பாதையின் மாதிரி படம் ஆகியவற்றை இணைத்து புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியாவின் முதல் நீருக்கடியில் சாலை மற்றும் ரயில் பாதை, இத […]

Continue Reading

சவூதி அரேபியாவை விட குஜராத்தில் பெட்ரோல் விலை குறைவு என்று அண்ணாமலை கூறினாரா?

சவூதி அரேபியாவை விட குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைவு, என்று பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கூறியதாகக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் எண்ணில் (+91 9049053770) நமக்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் தகவல் தேடியபோது பலரும் ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim […]

Continue Reading

Rapid Fact Check: #GoBackModi என்று வானதி ஶ்ரீனிவாசன் கையில் போஸ்டர் பிடித்தாரா? 

பிரதமர் மோடி சென்னை வரும் சூழலில் கோ பேக் மோடி என பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி ஶ்ரீனிவாசன் போஸ்டர் பிடித்தார் என்று என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive Go Back Modi என வானதி ஶ்ரீனிவாசன் போஸ்டர் பிடித்திருப்பது போன்று எடிட் செய்யப்பட்ட படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “பி. ஜே. பி ஓட சட்டமன்ற […]

Continue Reading

கர்நாடகா சட்டப்பேரவையை முற்றுகையிடுவோம் என்று அண்ணாமலை அறிவித்தாரா?

‘’கர்நாடகா சட்டப்பேரவையை முற்றுகையிடுவோம் என்று அண்ணாமலை அறிவிப்பு,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.   தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதே தகவலை பலரும் உண்மை என நம்பி, ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்டவற்றில் பகிர்வதையும் கண்டோம். Twitter Claim Link I Archived Link உண்மை […]

Continue Reading

அண்ணாமலை எனக்கு முதுகில் குத்திவிட்டார் என காயத்ரி ரகுராம் கூறினாரா?

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை எனக்கு முதுகில் குத்திவிட்டார் என பா.ஜ.க-வைச் சேர்ந்த காயத்ரி ரகுராம் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பா.ஜ.க-வைச் சேர்ந்தவரும் திரைப்பட நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் புகைப்படத்துடன் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. முன்னணி ஊடகம் வெளியிட்ட நியூஸ் கார்டு போல உள்ளது. அதில், “அண்ணாமலை எனக்கு முதுகில் குத்திவிட்டார்” என்று […]

Continue Reading

ராஜீவ் காந்தியின் கடைசி நிமிடங்கள் என்று பகிரப்படும் சினிமா காட்சியால் சர்ச்சை…

ராஜீவ் காந்தியின் கடைசி நிமிடங்கள் என்று கூறி சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link 2018ல் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ பதிவை இன்றளவும் உண்மை என நம்பி பலரும் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: குறிப்பிட்ட வீடியோவை பார்க்கும்போதே, அதில் கேமிரா பலவித கோணங்களில் ஆடாமல், அசையாமல் படம்பிடிப்பதையும், பின்னணி இசை ஒலிப்பதையும் தெளிவாக உணர முடிகிறது. உண்மையான […]

Continue Reading

காம படைத்தலைவர் எச்.ராஜா என போஸ்டர் ஒட்டப்பட்டதா?

பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஒட்டப்பட்ட போஸ்டரில் காம படைத் தலைவர் என எச்.ராஜாவை குறிப்பிட்டிருந்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எச்.ராஜா கைது கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டரின் படத்தை பகிர்ந்துள்ளனர். அதில், கண்டிகின்றோம்! கண்டிகின்றோம்!! காம படைத்தலைவர் H.ராஜா அவர்களை கைது செய்த தமிழக அரசையும், காவல் துறையையும் […]

Continue Reading

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு; உள்ளாடை போல சரிகிறது என்று ஜூஹி சாவ்லா கூறினாரா?

‘’அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவு, எனது ஜட்டி போல உள்ளது என்று நடிகை ஜூஹி சாவ்லா விமர்சனம் தெரிவித்து, ட்வீட் வெளியிட்டுள்ளார்,’’ என சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நமது வாட்ஸ்ஆப் சாட்போட் (+91 9049053770) எண்ணிற்கு வாசகர் ஒருவர் இதனை அனுப்பி, உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டிருந்தார். இதே ஸ்கிரின்ஷாட் பதிவை உண்மை என நம்பி, ஃபேஸ்புக், ட்விட்டர் […]

Continue Reading

ஆம் ஆத்மி கட்சி எம்.பி., சஞ்சய் சிங் தனது கட்சித் தலைவரை செருப்பால் அடித்தாரா?

ஆம் ஆத்மி கட்சி எம்.பி., சஞ்சய் சிங் தனது சக கட்சித் தலைவரை செருப்பால் அடித்த காட்சி, என்று கூறி சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்படும் வீடியோ ஒன்றை கண்டோம். அதுபற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இந்த வீடியோவை முதலில் நன்கு உற்றுப் பார்த்தாலே, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் அந்த வீடியோவில் கூட்ட அரங்கில் மோடி, யோகி ஆதித்யநாத் ஆகியோரின் உருவம் அடங்கிய பதாகை […]

Continue Reading

இளம் பெண்ணுடன் ராகுல் காந்தி என்று பரவும் திரைப்பட ஸ்டில்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இளம் பெண் ஒருவருடன் சுற்றிக்கொண்டிருக்கிறார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராகுல் காந்தி போன்று தோற்றம் கொண்ட ஒருவர் பெண் ஒருவரைத் தூக்கிக் கொண்டிருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த பப்பு ஒரு பாப்பாவ தூக்கிட்டு சுத்துறான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Tn Modi followers Hosur.என்ற […]

Continue Reading

மோடி பேசினால் அமெரிக்கா வரை கேட்கும்; ஆனால் அவர்களுக்கு இந்தி புரியாது என்று அண்ணாமலை கூறினாரா?

‘’மோடி பேசினால் அமெரிக்கா வரை கேட்கும். ஆனால், அவர்களுக்கு இந்தி தெரியாது என்பதால் பேசியும் பயனில்லாத நிலை ,’’ என்று பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பேசியதாக, ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் மூலமாக நமக்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதனை ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றிலும் பலர் பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived […]

Continue Reading

ஹெலிகாப்டரை முழுங்கும் சுறா மீன்; கிரண் பேடி வெளியிட்ட ட்வீட்டால் சர்ச்சை…

ஹெலிகாப்டரை முழுங்கும் சுறா மீன் என்று கூறி கிரண் பேடி வெளியிட்ட ட்வீட் ஒன்று மிக வைரலாகப் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link இது உண்மையா, பொய்யா என்ற குழப்பத்தில் பலரும் இந்த பதிவை ஷேர் செய்வதைக் காண முடிந்தது. Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இந்த பதிவு வைரலாகப் பரவிய நிலையில், பலராலும் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. […]

Continue Reading

பலுசிஸ்தான் மக்கள் பா.ஜ.க கொடியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனரா?

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மக்கள், இந்தியப் பிரதமர் மோடி தங்களுக்கு சுதந்திரம் பெற்றுத் தருவார் என்று பா.ஜ.க கொடியுடன் கொண்டாட்டம் மேற்கொண்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமிய பெண்கள் பாட்டுப் பாடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் ஒருவர் பாஜக கொடியை வைத்துள்ளார். ஒருவர் மோடி முகமூடி அணிந்து வருகிறார். நிலைத் தகவலில், “பாகிஸ்தானில் பாஜக கொடி……. பாகிஸ்தானில் […]

Continue Reading

பத்திரிகையாளர்களைப் பார்த்ததும் ஓ மை காட் என்று மோடி பதறினாரா?

ஊடகவியலாளர்களை பார்த்து பதில் சொல்ல முடியாமல் மோடி ஓ மை காட் என்று அலறினார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் நியூஸ் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “டென்மார்க்கில் ஷாக் ஆன பிரதமர் மோடி. டென்மார்க்கில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் “ஓ மை காட்” என்று மட்டும் கூறிச் சென்ற […]

Continue Reading

கி.வீரமணி பல்லக்கில் வந்ததாக பரவும் தகவல் உண்மையா?

கி.வீரமணி பல்லக்கில் பவனி வந்தது போலவும், அவர் வரலாம் ஆதீனம் வரக்கூடாது என்று சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். உண்மையில் கி.வீரமணி பல்லக்கில் பவனி வந்தாரா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாரட் வண்டியில் கி.வீரமணி அமர்ந்திருக்கும் புகைப்படத்துடன் யாரோ வெளியிட்ட பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “இந்த தருதலையை சுமக்கலாம்… ஆதீனத்தை சுமக்க கூடாதாம்..?!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை BJP Thalli […]

Continue Reading

வாடிகனில் மனிதனை மனிதன் தூக்கும் பல்லக்கில் போப் பவனி வருகிறாரா? 

தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசத்தை விமர்சிப்பவர்கள், பிஷப்பை எதிர்க்கத் துணிவிருக்கிறதா, வாட்டிக்கனில் நடக்கும் பல்லக்கு ஊர்வலத்தை நிறுத்தச் சொல்லி கூற தைரியம் உள்ளதா என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறன. அவை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பா.ஜ.க பிரமுகர் வெளியிட்ட ட்வீட்டை வைத்து ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியின் தலைப்பை மட்டும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து பலரும் பகிருகின்றனர். அதில், “தருமபுர ஆதீன பட்டினப்பிரவேசத்தை விமர்சித்தீரே.. […]

Continue Reading

அடையாறு ஆனந்த பவன் முஸ்லீம் நபருக்கு விற்பனை செய்யப்பட்டதா?

‘’அடையாறு ஆனந்த பவனை முஸ்லீம் நபர் வாங்கியுள்ளார். ஹிந்துக்கள் மற்றும் சுத்த சைவ உணவுப் பிரியர்கள் கவனிக்கவும்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049044263) வழியே அனுப்பி, உண்மையா என கேட்டிருந்தார். இதனை ஃபேஸ்புக் பயனாளர்களும் ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:மேற்குறிப்பிட்ட தகவல் உண்மையா என […]

Continue Reading