நெல்லை கண்ணன் தலைமறைவாக உள்ளாரா?

நெல்லை கண்ணன் தலைமறைவாக உள்ளதாகக் கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  Students Against Corruption 2.0 எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதேபோல, நிறைய பேர் நெல்லை கண்ணன் தலைமறைவு எனக் கூறி கடந்த 24 மணிநேரத்தில் வரிசையாக பதிவு வெளியிட்டுள்ளதைக் காண முடிகிறது.  உண்மை அறிவோம்: அமித் ஷா, மோடி […]

Continue Reading

திருப்பூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக நடந்த பேரணியின் படமா இது?

திருப்பூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக நடந்த பேரணியின்போது எடுக்கப்பட்ட படம் என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பாரதிய ஜனதா கட்சிக் கொடியுடன் மக்கள் செல்லும் மிகப்பெரிய அளவிலான மக்கள் பேரணி மற்றும் பிரம்மாண்ட பொதுக் கூட்டப் படங்கள் பதிவிடப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “திருப்பூர் குலுங்கியது. சி.ஏ.பி, என்.ஆர்.சி-க்கு ஆதரவாக கூடிய கூட்டம். திராவிடம் அதிர்ந்தது. நாங்களும் போராடுவோம்” என்று […]

Continue Reading

திருப்பூரில் இந்து முன்னணியினர் குடித்துவிட்டு போட்ட குப்பையா இது?- உண்மை அறிவோம்!

திருப்பூரில் இந்து முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் குடித்த மது பாட்டல் மற்றும் டம்ளர் குப்பை என்று ஒரு படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர். அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாலை முழுக்க பிளாஸ்டிக் டம்ளர் மற்றும் காகித குப்பையாக உள்ளது. இரண்டு பாஜக என்ற கொடி உள்ளது.  படத்தின் மீது ஸ்வட்ச் பாரத் என்று ஹேஷ் டேக் எழுதப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “நேற்று திருப்பூரில் இந்துமுன்னனி ஆர்ப்பாட்டம் முடிந்ததும் […]

Continue Reading

ராகுல் காந்தியிடம் தவறாக நடந்துகொண்ட உத்தரப்பிரதேசம் போலீசார்?

“ராகுல் காந்தியிடம் இந்த அளவுக்கு நடந்துகொள்ளும் உத்தரப்பிரதேச காவல்துறை இஸ்லாமியர்களிடம் எந்த அளவுக்கு நடந்துகொள்ளும்” என்று பதிவு ஒன்று ஃபேஸ்புக்கில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மோட்டார் பைக்கில் பின்னால் அமர்ந்திருக்கும் ராகுல் காந்தியின் கையைப் பிடித்து போலீஸ் அதிகாரி ஒருவர் இழுக்கும் படத்தை பகிர்ந்துள்ளனர். போலீசார் பலர் அவர்களைச் சுற்றி வளைக்கின்றனர். மற்றொருவர் மோட்டார் பைக்கின் சாவியை எடுக்க முயல்கிறார்.  நிலைத் தகவலில், […]

Continue Reading

ஹிட்லர் பேசியதை காப்பியடித்தாரா மோடி?

“என் மீது வெறுப்புக்கொள்வது உங்கள் விருப்பம். ஆனால் ஜெர்மனியை வெறுக்காதீர்கள்” என்று ஹிட்லர் கூறியதை அப்படியே மாற்றி “இந்தியாவை வெறுக்காதீர்கள்” என்று மோடி பேசியதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ஹிட்லர் மற்றும் பிரதமர் மோடி பேசிய வீடியோ காட்சிகள் ஒன்று சேர்க்கப்பட்டு பதிவிடப்பட்டுள்ளது. இருவருடைய பேச்சும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு சப்-டைட்டிலாக […]

Continue Reading

உத்தரப் பிரதேச போலீஸ் முன்னிலையில் அட்டூழியம் செய்யும் சங்கி? உண்மை விவரம்!

உத்தரப்பிரதேச போலீசார் முன்னிலையில் இஸ்லாமியர் ஒருவரை வலதுசாரி ஆதரவாளர் தாக்குவதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link காவலர் ஒருவர் இஸ்லாமியர் ஒருவரை பிடித்திருக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. காவலர் அருகில் சாதாரண உடையில் உள்ள நபர் அந்த இஸ்லாமியரின் தாடியைப் பிடித்து இழுக்கிறார்.  நிலைத் தகவலில், “உ.பி போலீஸ்க்கு முன்னால் அட்டூழியம் செய்யும் சங்கி” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Mohmed […]

Continue Reading

போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி?- ஃபேஸ்புக் வைரல் பதிவு

போலீஸ் வேடத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் உள்ளார் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுடன் ஒருவர் இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived link 1 Archived link 2 மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுடன் ஆர்.எஸ்.எஸ் சீருடையுடன் ஒருவர் உள்ள புகைப்படம், ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் போல இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்று சேர்த்துப் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், […]

Continue Reading

1857 சிப்பாய் புரட்சியில் சாவர்க்கர் பங்கேற்றார் என்று அமித்ஷா கூறினாரா?

1857ம் ஆண்டு நடந்த சிப்பாய் புரட்சியில் சாவர்க்கர் பங்கேற்றார் என்று அமித்ஷா கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இந்தியா டுடே ஆங்கிலத்தில் வெளியிட்ட செய்தி ஒன்றின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், “வீர சாவர்க்கர் இன்றி 1857 புரட்சி வரலாறு ஆகியிருக்காது – அமித்ஷா” என்று தலைப்பிட்டிருந்தனர். இதன் கீழ், சாவர்க்கரின் விக்கிப்பீடியா பதிவு படத்தை வைத்துள்ளனர். அதில் சாவர்க்கர் […]

Continue Reading

எச்.ராஜாவை எதிர்த்து போராட்டம் நடத்திய பாஜக நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா?

‘’எச்.ராஜாவை எதிர்த்து போராட்டம் நடத்திய பாஜக நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய நேரிட்டது. தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link MKS For CM எனும் ஃபேஸ்புக் ஐடி மேற்கண்ட பதிவை வெளியிட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்கின்றனர். இதேபோல, மற்றொரு ஃபேஸ்புக் ஐடியிலும் இதே புகைப்பட பதிவை பகிர்ந்திருந்ததை காண நேரிட்டது.  Facebook […]

Continue Reading

மின்னணு வாக்குப்பதிவு முறைகேட்டில் பாஜக ஈடுபட்டது நிரூபணம்! – அதிர்ச்சி ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பா.ஜ.க முறைகேடு செய்து வெற்றிபெற்றது நிரூபணமாகியுள்ளது என்றும் இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியதும் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரல் ஆகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரதமர் மோடியின் படத்துடன் ஒரு போட்டோ கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “2019 நாடாளுமன்றத் தேர்தலில் இ.வி.எம் மோசடியால் தான் பா.ஜ.க வெற்றிபெற்றது. ஆதாரங்கள் நிரூபணமானது. தேர்தல் ஆணையத்திற்கு […]

Continue Reading

குடியுரிமை திருத்தத்தை ஆதரித்து பிரமாண்ட பேரணி: தவறான புகைப்படம்!

‘’குடியுரிமை திருத்தத்தை ஆதரித்து பிரமாண்ட பேரணி,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டிருந்த ஒரு வைரல் புகைப்படத்தை காண நேரிட்டது. இதன் நம்பத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  Jeevanandam Paulraj என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். இதில், திரளான மக்கள் கூட்டம் இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்து, அதன் மேலே, ‘’குடியுரிமை சட்ட திருத்தத்தை ஆதரித்து பெருகி வரும் பேராதரவு,’’ என எழுதியுள்ளார். இதனை பலரும் உண்மை […]

Continue Reading

அமர் ஜவான் ஜோதி நினைவு சின்னத்தை தாக்கிய பங்களாதேஷ் முஸ்லீம்: உண்மை என்ன?

‘’அமர் ஜவான் ஜோதி நினைவு சின்னத்தை தாக்கிய பங்களாதேஷ் முஸ்லீம்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Siva Varman என்பவர் கடந்த டிசம்பர் 14, 2019 அன்று இந்த பதிவை இந்து தமிழ்நாடு என்ற ஃபேஸ்புக் குரூப்பில் பகிர்ந்துள்ளார். இதில், அமர் ஜோதி நினைவு சின்னத்தை முஸ்லீம் ஒருவர் எட்டி உதைப்பதை போன்ற […]

Continue Reading

தனி நாடு கேட்டு போராடிய மலப்புரம் முஸ்லீம்கள்: உண்மை என்ன?

‘’தனி நாடு கேட்டு போராடிய மலப்புரம் முஸ்லீம்கள்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Thankaraj P என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ராகுல் காந்தி எம்பியாக தேர்வு செய்யப்பட்ட கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் முஸ்லீம்கள் பச்சைக் கொடி பிடித்து, தனி நாடு கேட்டு போராடுகிறார்கள், எனக் குறிப்பிட்டுள்ளார். இதனை பலரும் […]

Continue Reading

வானதி ஸ்ரீனிவாசனை கேள்வி கேட்ட பா.ரஞ்சித்: உண்மை அறிவோம்!

‘’வானதி ஸ்ரீனிவாசனை கேள்வி கேட்ட பா.ரஞ்சித்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரியாணி சட்டி – Biriyani Satti எனும் ஃபேஸ்புக் ஐடி மேற்கண்ட பதிவை டிசம்பர் 4, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூரில் தனியார் வீட்டைச் சுற்றி எழுப்பப்பட்ட […]

Continue Reading

3 மனைவி, 8 குழந்தைகள், ரூ.29 ஆயிரம் மொபைல் போன்; சொகுசு வாழ்க்கை வாழும் ரோஹிங்கியா அகதி?

இந்தியா தப்பி வந்த ரோஹிங்கியா அகதி மூன்று மனைவி, எட்டு குழந்தைகள், மிகவும் விலை உயர்ந்த செல்போனுடன் சொகுசாக வாழ்வதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஆங்கிலத்தில் கருத்து பதிவிடப்பட்ட புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “உதவியற்ற ஏழை ரோஹிங்கியா. அவருக்கு சாப்பிட உணவு இல்லை, போட்டுக்கொள்ள ஆடை இல்லை. இவருக்கு இரண்டு கர்ப்பிணி மனைவிகள் உள்பட மொத்தம் மூன்று […]

Continue Reading

உயர் சாதி என்பதால் என்கவுன்டர் பாய்ந்தது என்று எச்.ராஜா சொன்னாரா?

‘’உயர் சாதி என்பதால் அவர்கள் மீது என்கவுன்டர் பாய்ந்தது என்று சொன்ன எச்.ராஜா,’’ எனும் தலைப்பில் பகிரப்பட்டிருந்த ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link பாசிசபாஜக ஆட்சிஒழிக எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை டிசம்பர் 7ம் தேதி பகிர்ந்துள்ளது. இதில், வடிவேலுவின் நகைச்சுவை காட்சி ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’உயர்ந்த சமூகம் என்பதால்தான் அவர்கள் […]

Continue Reading

சிஏபி சட்ட திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்த ரஜினி?

குடியுரிமை சட்ட திருத்தத்தை வரவேற்று ரஜினி பேசியதாக புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ரஜினிகாந்த் படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சிஏபி-க்கு ரஜினி ஆதரவு! நாட்டின் பாதுகாப்பிற்காக சில கடினமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை வரவேற்கிறேன். நாட்டு மக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை. – […]

Continue Reading

இந்தியை எதிர்க்கும் தென்னிந்தியர்களை வெளியேற்றுவோம் என்று கூறினாரா ஜே.பி.நட்டா?

“இந்தியை எதிர்க்கும் தென்னிந்தியர்களை வெளியேற்றுவோம்” பாரதிய ஜனதா கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா கூறியதாக தந்தி டி.வி ட்வீட் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தந்தி டி.வி வெளியிட்ட ட்வீட்டின் ஸ்கிரீன் ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “பிரேக்கிங்: குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து ஜேபி நட்டா அறிக்கை. இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே இந்தியர்கள் என்று அடுத்த திருத்தம் […]

Continue Reading

மோடியை உலகின் முட்டாள் பிரதமர் என்று கூகுள் அறிவித்ததா?

உலகின் மிகவும் முட்டாள் பிரதமராக மோடி தேர்வு செய்யப்பட்டார் என்று கூகுள் நிறுவனம் அறிவித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சினிமா திரைப்பட காட்சிகளுக்கு மத்தியில் நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு வைக்கப்பட்டு கொலாஜ் செய்யப்பட்டுள்ளது. அதில், “உலகின் மிகவும் முட்டாள் பிரதமராக மோடி தேர்வு! கூகுள் நிறுவனம் அறிவிப்பு” என்று இருந்தது. இந்த பதிவை, Kannadasan […]

Continue Reading

இந்தியாவில் 6 மதங்களுக்கு மட்டுமே அனுமதியா?

‘’இந்தியாவில் 6 மதங்களுக்கு மட்டுமே இனி அனுமதி,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  இது டிஎன்நியூஸ் 24 என்ற இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்க் ஆகும். இதே செய்தியை குறிப்பிட்ட இணையதளம் தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்திருந்தது.  Facebook Claim Link  Archived Link 1 TNNews24 Website Archived Link 2 […]

Continue Reading

எச்.ராஜா தெலுங்கானா போலீசாரை கேள்வி கேட்டாரா?

‘’அதிகாலை 3 மணிக்கு எப்படி குறி பாத்து சுட முடியும் என்று கேள்வி கேட்ட எச்.ராஜா,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வைரல் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Post Archived Link Tamizha – தமிழா எனும் ஃபேஸ்புக் ஐடி மேற்கண்ட பதிவை வெளியிட்டுள்ளது. இதில், எச்.ராஜா மற்றும் வடிவேலு புகைப்படத்தை கம்பேர் செய்து, அதன் மேலே, ‘’அதிகாலை 3 மணிக்கு எப்படி குறி […]

Continue Reading

மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்படும் என்று அமித்ஷா அறிவித்தாரா?

இந்தியா முழுவதும் மதமாற்றத் தடைச் சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அமித்ஷா படத்துடன் கூடிய தந்தி டி.வி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்தியா முழுவதும் மதம் மாற்றத் தடைச் சட்டம் அமல்படுத்தப்படும் மத்திய உள்துறை அமைச்சர் – அமித்ஷா” என்று உள்ளது. நிலைத் தகவலில், “அமித்ஷாவின் […]

Continue Reading

முரசொலி விவகாரம் கிளப்பியது நானல்ல; ராமதாஸ் என்று பாஜக சீனிவாசன் கூறினாரா?

“முரசொலி விவகாரம் கிளப்பியது நானல்ல ராமதாஸ்தான்” என்று பா.ஜ.க செயலாளர் சீனிவாசன் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், ராமதாஸ் மற்றும் தமிழக பா.ஜ.க செயலாளர் சீனிவாசன் படங்கள் உள்ளன. மேலும், “முரசொலி விவகாரம் கிளப்பியது நானல்ல ராம்தாஸ்தான். சட்டப்படி அவருக்குத்தான் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் – சீனிவாசன் […]

Continue Reading

கன்றை கயிறு கட்டி காரில் இழுத்துச் சென்று கொன்ற பாஜக நபர்?

ராஜஸ்தான் பா.ஜ.க நிர்வாகி ஒருவர், சாலையில் சென்ற போது குறுக்கே வந்து விழுந்து கார் ஹெட்லைட்டை உடைத்த கன்றை அடித்து, காரின் பின்னால் கயிறு கட்டி 10 கி.மீ தூரம் இழுத்துச் சென்று கொன்றதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கார் ஒன்றின் பின்னால் கன்று ஒன்று கட்டப்பட்டுள்ளது. காரில் பாரதிய ஜனதா கட்சி சின்னத்துடன் இந்தியில் ஒரு […]

Continue Reading

ஃபேஸ்புக் வதந்தி: போரில் வெற்றி பெற நரபலி தவறில்லை என்றாரா அமித்ஷா?

போரில் வெற்றி பெறுவதற்காக நம் வீரர்களையே நரபலி கொடுப்பதில் தவறில்லை என்று சாணக்ய நீதி கூறுகிறது என்று அமித்ஷா கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அமித்ஷா படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “போரில் வெற்றி பெறுவதற்காக நம் வீரர்களையே நரபலி கொடுப்பதில் தவறில்லை என்கிறது சாணக்ய நீதி – அமித் […]

Continue Reading

லஞ்சம் வாங்கிய பாஜக தலைவர்கள் பட்டியலை வெளியிடுவோம் என்று ஸ்டெர்லைட் நிறுவனம் மிரட்டியதா?

‘’லஞ்சம் வாங்கிய பாஜக தலைவர்கள் பட்டியலை வெளியிடுவோம்,’’ என்று ஸ்டெர்லைட் நிறுவனம் மிரட்டியதாகக் கூறி ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் வைரலாகப் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link  Vyasar Lawrence என்பவர் பகிர்ந்துள்ள இந்த ஃபேஸ்புக் பதிவை, சுமார் 10,000 பேர் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்துள்ளனர். உண்மை அறிவோம்: மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை பார்க்கும்போதே, இது தவறாக சித்தரிக்கப்பட்ட நியூஸ் கார்டு என […]

Continue Reading

பிராமணர்களுக்கு கீழ்தான் மற்ற இந்து அடிமைகள் என்று எச்.ராஜா கூறினாரா?

“பிராமணர்களுக்கு கீழ்தான் மற்ற இந்து அடிமைகள் என்பதை அத்திவரதர் வருகை நிரூபித்துள்ளது” என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அத்திவரதர் மற்றும் எச்.ராஜா படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பிராமணர்களுக்கு கீழ்தான் மற்ற இந்து அடிமைகள் என்பதை அத்திவரதர் வருகை நிரூபித்திருக்கிறது […]

Continue Reading

முரசொலி விசாரணையின்போது கழிவறை செல்வதாகக் கூறி தப்பினாரா பாஜக செயலாளர் சீனிவாசன்?

முரசொலி நிலம் தொடர்பான விசாரணை நடைபெறும்போது கழிவறை சென்றுவருவதாக கூறி பின்வாசல் வழியாக பா.ஜ.க செயலாளர் சீனிவாசன் தப்பி ஓடியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா அல்லது வதந்தியா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழக பாரதிய ஜனதா கட்சியின் செயலாளர் சீனிவாசனின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத்தகவலில், “முரசொலி விவகாரத்தில் விசாரணை நடைபெறும்போது கழிவறை சென்றுவருதாக கூறி பின் வாசல் வழியாக தப்பி ஓடிய […]

Continue Reading

ராமதாஸ் ஆதாரம் தரவில்லை: பாஜக சீனிவாசன் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு!

பஞ்சமி நில விவகாரத்தில் ராமதாஸ் ஆதாரம் தந்து அனுப்பவில்லை என்றும் வாய்தா வாங்கியுள்ளோம் என்றும் பா.ஜ.க நிர்வாகி சீனிவாசன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் சீனிவாசன் படத்துடன் கூடிய நியூஸ்7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பஞ்சமி நில விவகாரம். ராமதாஸ் ஆதாரம் தந்து […]

Continue Reading

அர்ஜுன் சம்பத் வாயில் இருந்து வேதம் வருவது வேதனை என்று எச்.ராஜா கூறினாரா?

“அர்ஜுன் சம்பத் வாயில் இருந்து வேதம் வெளிவரப்போவது வேதனை அளிக்கிறது” என்று எச்.ராஜா ட்வீட் செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link எச்.ராஜா ட்வீட் ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிரப்பட்டது போன்று பதிவு உள்ளது. அதில், “திருமாவளவனை இந்து மதத்தில் இருந்து விலக்க அர்ஜுன் சம்பத் யாகம் செய்வதாக அறிந்தேன். வேதத்தை கேட்டாலே காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டிய […]

Continue Reading

எச்.ராஜா மகள் திருமணத்தில் ஆபாச புகைப்படத்தை பரிசளித்தாரா அர்ஜூன் சம்பத்?

‘’எச்.ராஜா மகள் திருமணத்தில் புனித சிலையை பரிசளித்த அர்ஜூன் சம்பத்,’’ என்ற பெயரில் பரவி வரும் ஒரு அநாகரீகமான ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link  Archived Link  Troll Mafia எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், செக்ஸ் பொசிஷன் ஒன்றின் புகைப்படத்தை அர்ஜூன் சம்பத், எச். ராஜா மகள் திருமணத்திற்கு நேரில் சென்று பரிசளிப்பது போல பகிர்ந்துள்ளனர். இதனை பலரும் […]

Continue Reading

வ.உ.சிதம்பரனாருக்கு அஞ்சலி செலுத்திய மோடி: புகைப்படம் உண்மையா?

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் படத்துக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியது போன்ற படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link வ.உ.சிதம்பரனார் படத்துக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார். நிலைத் தகவலில், “செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு பாரத பிரதமர் அவர்களின் மலரஞ்சலி” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Narayanan Vengat என்பவர் 2019 நவம்பர் 18ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் […]

Continue Reading

டாக்டர் ராமதாஸ் காயத்ரி ரகுராமுக்கு பதில் அளித்தாரா?

நடிகை காயத்ரி ரகுராமுக்கு டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் பதில் அளித்தது போன்ற ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பா.ம.க நிறுவனர் டாக்டர் எஸ்.ராமதாஸ் ட்வீட் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “காயத்திரி ரகுராம் வேண்டுமானால் எச்.ராஜாவையோ, எஸ்.வி.சேகரையோ துணைக்கு அழைத்துகொள்ளட்டும். பார்ப்பனர்களுக்கு அடியாள் வேலை பார்க்க வன்னியர்கள் ஒன்றும் முட்டாள் இல்லை. காலம் மலையேறிவிட்டது. எங்களுக்கும் புத்திவந்துவிட்டது என்று அவரிடம் […]

Continue Reading

சிதம்பரம் தீட்சிதருக்கு ஆதரவாக எச்.ராஜா கருத்து கூறியதாக பரவும் வதந்தி!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண்ணை தாக்கப்பட்ட விவகாரத்தில் தீட்சிதருக்கு ஆதரவாக எச்.ராஜா கருத்து கூறியதாக பிபிசி நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link எச்.ராஜா படத்துடன் கூடிய பிபிசி தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பெண் பக்தரை தாக்கியதாக கூறப்படும் தீட்சிதர் அர்ச்சனை செய்வதும், செய்யாமல் இருப்பதும் அவரின் தனிப்பட்ட விருப்பம். அவர் களைப்பாக கூட இருந்திருக்கலாம் […]

Continue Reading

எச்.ராஜா ஒரு மன நோயாளி என்று அவரது மாப்பிள்ளை சொன்னாரா?

‘’எச்.ராஜா ஒரு மன நோயாளி என்று கூறி அவரது மாப்பிள்ளை தகராறு,’’ என்று ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு செய்தியின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link  தமிழ்நாட்டு சங்கி என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை நவம்பர் 15 அன்று பகிர்ந்திருக்கிறார். இது ஃபேக் ஐடியாக இருந்தாலும், பதிவு என்னமோ உண்மை போலவே இருப்பதால், பலரும் இதனை வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் […]

Continue Reading

நக்கீரன் மூடப்படுகிறதா? – பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் வதந்தி!

நக்கீரன் இதழ் நஷ்டத்தின் காரணமாக மூடப்படுகிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நக்கீரன் கோபால் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. நிலைத் தகவலில், “பொய் செய்திகளை வெளியிட்டு வந்த இந்துக்கள் புறக்கணித்த நக்கீரன் வார இதழ் நஷ்டத்தால் மூடப்படுகிறது..மிக்க மகிழ்ச்சி..” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Govind Palaniguru என்பவர் 2019 […]

Continue Reading

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் விபசாரம் குறைந்துள்ளது என்று ரவிசங்கர் பிரசாத் கூறினாரா?

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் விபசாரம் வெகுவாக குறைந்துள்ளது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாக ஒரு நியூஸ்கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஜெயம் அசோக் நியூஸ் என்ற பெயரில் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் விபச்சாரம் வெகுவாக குறைந்துள்ளது. மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேச்சு” என்று உள்ளது. மேலும், […]

Continue Reading

புதிய தலைமுறை கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மோடி, அமித்ஷா சிரித்தனரா?

புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நெறியாளர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பிரதமர் மோடி, அமித்ஷா, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் சிரிப்பது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 1.14 நிமிடம் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். அதில் […]

Continue Reading

தமிழக பாஜகவுக்கு 4 புதிய பொறுப்பாளர்கள் நியமனம்: உண்மை அறிவோம்

‘’தமிழக பாஜக.,வுக்கு 4 பொறுப்பு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link  Archived Link  Mohan Raj என்பவர் இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதேபோல, நிறைய பேர் ஃபேஸ்புக்கில் மேற்கண்ட செய்தியை வெளியிட்டுள்ளனர். உண்மை அறிவோம்: மேற்குறிப்பிட்ட செய்தியை முதலில் தமிழ் ஊடகங்கள்தான் வெளியிட்டன. ஆனால், பிறகு, இதனை தமிழக பாஜக நிர்வாகி வானதி ஸ்ரீனிவாசன் மறுப்பு […]

Continue Reading

1954ம் ஆண்டு அமெரிக்காவில் நேருவுக்கு கிடைத்த வரவேற்பு: ஃபேஸ்புக் படம் உண்மையா?

இந்தியாவுக்காக 3259 நாட்கள் சிறையில் வாடிய நேரு, அமெரிக்கா சென்றபோது கிடைத்த வரவேற்பு என்று ஒரு ட்வீட் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link காங்கிரஸ் கட்சியின் எம்.பி-யும் முன்னாள் மத்திய அமைச்சருமான சசிதரூர் வெளியிட்ட ட்வீட்டின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “1954ம் ஆண்டு நேருவுக்கும் இந்தியா காந்திக்கும் சிறப்பான வரவேற்பு அளித்த அமெரிக்க மக்கள்… எந்த ஒரு ஊடகத் தொடர்பு பிரசாரம், […]

Continue Reading

ரசீது இல்லா தங்கத்துக்கு அதிகபட்ச அபராதம் விதிக்க திட்டமா?

பொது மக்கள் வைத்திருக்கும் தங்கத்துக்கு ரசீது இல்லை என்றால் அதற்கு அதிகப்படியான அபராதம் விதிக்கும் திட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரதமர் நரேந்திர மோடி படத்துடன் கூடிய போட்டோகார்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “நடுத்தர மக்களின் சிறுசேமிப்புக்கு ஆப்பு” என்று தலைப்பிட்டுள்ளனர். மேலும், “மக்கள் ரசீது இல்லாமல் வைத்திருக்கும் தங்கத்திற்கு அதிகபட்ச […]

Continue Reading

அயோத்தி தீர்ப்பை முன்னிட்டு போலீஸ் எச்சரிக்கை வெளியிட்டுள்ளதா?

‘’அயோத்தி தீர்ப்பு வெளியாக உள்ளதால் போலீஸ் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது,’’ என்று ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வரும் தகவலை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link புதிய தேடல் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:அயோத்தி விவகாரத்தில் நவம்பர் 15ம் தேதிக்குள் இறுதி தீர்ப்பு […]

Continue Reading

மோடி கோவணம் கட்டியதால் அதிமுக வெற்றி: எச்.ராஜா பெயரில் விஷமம்!

‘’மோடி கோவணம் கட்டியதால்தான் அதிமுக வெற்றி பெற்றது,’’ என்று எச்.ராஜா சொன்னதாகக் கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு வைரல் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link  MKS For CM என்ற ஃபேஸ்புக் ஐடி, அக்டோபர் 24, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதில், பாஜக.,வைச் சேர்ந்த கே.டி.ராகவன், ‘’மோடி வேட்டி அணிந்ததால் அதிமுக வெற்றி,’’ எனக் கூறியதாகவும், இதேபோல, எச்.ராஜா, ‘’மோடி […]

Continue Reading

காரப்பன் சில்க்ஸ் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா?- ஃபேஸ்புக் வதந்தி

சிறுமுகை காரப்பன் சில்க்ஸில் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா உள்ளதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link காரப்பன் சில்க்ஸ் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை காரப்பன் சில்க்ஸ் ஜவுளிக்கடையில் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்து ஆபாசமாக பார்க்கிறார் முதலாளி” என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த பதிவை, Sabari R என்பவர் […]

Continue Reading

பாஜக முன்னாள் அமைச்சர் பங்கஜ முண்டே தேர்தல் தோல்வியில் கதறி அழுதாரா?

‘’தேர்தல் தோல்வியால் கதறி அழுத மகாராஷ்டிர அமைச்சர்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 News18 Tamil Link  Archived Link 2 இதுபற்றி ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபொழுது, ஒரே செய்தியை 3 முறை நியூஸ்18 தமிழ் ஊடகம் பகிர்ந்திருந்த விவரம் கிடைத்தது. அத்துடன், தனிநபர் ஒருவரும் பகிர்ந்திருந்தார்.  Facebook Link 1 Archived Link […]

Continue Reading

டாக்டர் பட்டம் பெற்றதற்காக எடப்பாடி பழனிசாமியை கேலி செய்தாரா தமிழிசை?

‘’டாக்டர் பட்டம் பெற்றதற்காக எடப்பாடி பழனிசாமியை கேலி செய்தார் தமிழிசை சவுந்தரராஜன்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டிருந்த வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link  Archived Video Link  Troll Mafia எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை அக்டோபர் 22, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், பாஜக தமிழக முன்னாள் தலைவரும், இந்நாள் தெலுங்கானா மாநில ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் பேசுகிறார். அவர், ‘’ஒரு […]

Continue Reading

காரப்பா சில்க்ஸில் புடவை வாங்கு… கமல் பெயரில் பரவும் வதந்தி!

சிறுமுகை காரப்பா சில்க்ஸில் புடவை வாங்கு என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ட்வீட் செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் ட்வீட் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பாரப்பா ஊரினிலே பல கடையுண்டு யாரப்பா அங்கெல்லாம் துணி வாங்குவார்? காரப்பா சில்க்கினிலே புடவை வாங்கு ஜோரப்பா விலையும் தரமும் […]

Continue Reading

கீழடியில் இந்து கடவுள்களின் சிலை கிடைத்ததாக எச்.ராஜா பேசினாரா?

கீழடியில் இந்து கடவுள்களின் சிலை கிடைத்தது என்று எச்.ராஜா பேசுகிற ஒரு வீடியோவை பலரும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர். இந்த வைரல் வீடியோவின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Video Link  காஞ்சி செந்தில் 2.0 என்பவர் இந்த வீடியோ பதிவை செப்டம்பர் 24, 2019 அன்று பகிர்ந்துள்ளார். இதில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேசும் ஒரு காட்சியை இணைத்துள்ளனர். இதன் மேலே, ‘’கீழடி பற்றிய உண்மை தெரிஞ்ச […]

Continue Reading

சீனாவில் உள்ள இந்து கோவில்களை செப்பனிட ஜின்பிங் உத்தரவு?

சீனாவில் உள்ள இந்து ஆலயங்களை செப்பனிட்டு தினமும் மூன்று வேளை பூஜைக்கு ஏற்பாடு செய்ய சீன அதிபர் ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link “சீன அதிபர் ஜின்பிங் அதிரடி உத்தரவு… சீனாவில் உள்ள அனைத்து இந்து ஆலங்களையும் செப்பனிட்டு 3 வேளை பூஜைக்கு ஏற்பாடு…” என்று ஒரு போட்டோ கார்டு பகிரப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை […]

Continue Reading

மோடி பிரதமராக இருந்தால் இந்தியா மிகப்பெரிய சக்தியாக மாறும்: ஃபேஸ்புக் வதந்தி

“2029ம் ஆண்டு வரை மோடி பிரதமராக இருந்தால் இந்தியா மிகப்பெரிய சக்தியாக மாறும். இந்தியாவை யாரும் வெல்ல முடியாது” என்று வட கொரிய அதிபர் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் படத்துடன் கூடிய பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “2029 வரை மோடி பிரதமராக இருந்தால் இந்தியா மிகப்பெரிய சக்தியாக மாறும். […]

Continue Reading